18.1.13

ஆறுமோ ஆவல்? தீருமோ ஆசை?

ஆறுமோ ஆவல்? தீருமோ ஆசை?

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய பாடலின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து இன்புறுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

--------------------------------------------------------
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
ஆயிரம் போற்றி பாடினும் ஆவல் ஆறுமோ முருகா
ஆறுமுகா ...
(ஆயிரம் ... )

தாயினும் இனித்தாய் தந்தையாய் வளர்த்தாய்
வாழ்வெல்லாம் வகுத்தாய் வரம் எனக்களித்தாய்
(ஆயிரம் ... )

நீயே எளியேன் நெஞ்சினில் நின்றாய்
நிம்மதி தந்தே அஞ்சேல் என்றாய்
நாயேன் பிழைகள் நாளும் பொருத்தாய்
நண்பனாய் வந்தே துன்பம் தவிர்த்தாய்
(ஆயிரம் ... )

ஆறுமுகா
(ஆயிரம் ... ).

- பாடலைப் பாடியவர் 'பத்மஸ்ரீ' சீர்காழி கோவிந்தராஜன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7 comments:

  1. குருவிற்கு வணக்கம்,
    நல்ல ஓர் முருகன் பாமலை,
    நன்றி

    ReplyDelete
  2. ''அப்பன் முருகனை போற்றும் பாடல் ''

    ஆறுமோ ஆவல் தீருமோ ஆறுமுகனை
    ஆரமுதனை அனுதினமும் போற்றினால்
    மாறுமே மனக் கவலை யாவுமே
    வேறெதுவும் நீ நினையாமனமே!

    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. ////Blogger kmr.krishnan said...
    Thank you Sir. It is a nice song/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  4. ////Blogger Udhaya Kumar said...
    குருவிற்கு வணக்கம்,
    நல்ல ஓர் முருகன் பாமலை,
    நன்றி/////

    நல்லது. நன்றி உதயகுமார்!

    ReplyDelete
  5. /////Blogger ஜி ஆலாசியம் said...
    ''அப்பன் முருகனை போற்றும் பாடல் ''
    ஆறுமோ ஆவல் தீருமோ ஆறுமுகனை
    ஆரமுதனை அனுதினமும் போற்றினால்
    மாறுமே மனக் கவலை யாவுமே
    வேறெதுவும் நீ நினையாமனமே!
    பகிர்விற்கு நன்றிகள் ஐயா!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆலாசியம்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com