24.12.12

நகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்!


மாயன்  காலெண்டர்  மேட்டர்  ஊற்றிக்  கொண்டு  விட்டது. பலரும்  (நாமல்ல) எதிர்பார்த்தது போல  உலகத்திற்கு எந்தவிதக் கேடும் நிகழவில்லை.

இந்தியாவிற்கு ஒன்றும் நேராது, இது ஞான பூமி, பல மகான்கள் அவதரித்த பூமி, நமக்கு ஒன்றும் நேராது என்று நான் முன்பே பதிவு ஒன்றில் எழுதியிருந்தேன். 21.11.2011 அன்று “உலகம் அழிந்தால் அழியட்டும் போடா!” என்னும் தலைப்பில் எழுதியுள்ளேன். அதற்கான சுட்டி (URL)
http://classroom2007.blogspot.in/2011/12/astrology_21.html
படித்துப் பாருங்கள்

மாயன், அவர்கள் கணக்குப்படி ஒரு யுகம் முடிந்து, இன்னொரு யுகம் ஆரம்பிப்பதை அவ்வாறு எழுதியிருக்கலாம். அதைப் புரிந்து கொள்ளாமல், அந்தப் பகுதி மக்களும், ஊடகங்களும் பரவலாகக் கலவரத்தை ஏற்படுத்தி விட்டன!

போகட்டும், நாம் 337 டானிக்கில் தினமும் 10 மிலி லிட்டர் (இரண்டு மூடி அளவு) ஊற்றித் தண்ணீர் கலக்காமல் குடித்துவிட்டு எப்போதும் போல மகிழ்ச்சியோடு இருப்போம் நம் மகிழ்ச்சியைக் கொண்டாடும் விதமாக இன்றையப் பதிவு நகைச்சுவைப் பதிவாக மலர்கிறது!!!!

அன்புடன்
வாத்தியார்
 -------------------------------------------------------------------------------



 1



 2



 3



 4


 5



 6



 7



 8



 9



 10


11



 12



 13



 14



 15



 16



 17


இவற்றுள் எது நன்றாக உள்ளது?
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10 comments:

  1. எல்லாம் சரிதான்.. ஆனால்
    எதுவுமில்லை மின்சார தடைக்கு

    தட்டுப்பாடு இங்கேயுமா என
    தட்டி பாடுகிறோம்.. இந்த பாடலினை

    சுழல விட்டபடி நாம்
    சுவைத்து மகிழ..

    உங்கள் மகிழ்ச்சியில்
    நாங்களும் பங்கு கொள்வதில் மகிழ்ச்சி

    விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி

    தேனாண்டாளை விருந்துக்கழைச்சு காட்டப் போறேண்டி

    பொஞ்சாதி, புருஷன் இல்லாம
    புள்ளையும், குட்டியும் பொறக்குறாப்புல

    அஞ்ஞானத்தை அழிக்க போறேண்டி
    அணு சக்தியால ஆயுள் விருத்தி பண்ணப் போறேண்டி

    வீட்டுக்கென்ன செய்ய போறீங்க,
    நெல்லுகுத்த, மாவரைக்க, நீர் இறைக்க மிஷினு
    அல்லும்,பகலும் அரிசி அரைக்க அதுக்கொரு மிஷினு,

    கொல்ல புரத்தில குழாய் வைக்கணும், குளிரு மிஷினும் கூட வைக்கணும், பள்ளிக்கூடத்துக்கு புள்ளைங்க போனாலே படிக்க கருவி பண்ணியும் வைக்கணும்..

    முடிஞ்சுதா?.

    ஒண்ணை மறந்துட்டேன்
    பட்டனை தட்டி விட்டா ரெண்டு தட்டிலே
    இட்டிலியும், காப்பி நம்ம பக்கத்தில் வந்திடணும்

    கட்டிலுக்கு மேலே பேன் காத்து சுத்தணும்
    காலம் காட்டும் கருவியும் வேணும்

    ReplyDelete
  2. அனைத்தும் அருமை ..

    kid -3000 - லேயே பிறந்திருக்கலாம் ..

    ReplyDelete
  3. எல்லாக் கற்பனைகளும் நன்றாகத்தான் இருக்கிறது!

    எதுவும் நடக்கலாம். நடக்காது என்று சொல்வதற்கு இல்லை.

    விஞ்ஞானம் நூறு ஆண்டுகளில் சாதித்ததே வியப்பில் ஆழ்த்தும் போது இன்னும் தொள்ளாயிரத்து தொண்ணூறு வருடம் இருக்கிறது அல்லவா! :) அதற்குள் இப்போதைய மக்கள் பத்து பன்னிரெண்டு பிறவிகளைக் கண்டு விடுவார்கள் இல்லையா!::)))

    நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம்,வாத்தியார்!எல்லாமே சாத்தியம் தான்!கவியரசு வரிகள் நினைவுக்கு வருகின்றன! 'பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்'......................

    ReplyDelete
  5. பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு அகில உலகமும் சுற்றி வரலாம்.நன்றி அய்யா!

    ReplyDelete
  6. பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு அகில உலகமும் சுற்றி வரலாம்.நன்றி அய்யா!

    ReplyDelete
  7. அனைத்தும் மிகவும் நன்றாக இருக்கிறது. ஐயரின் அவர்களின் பின்னூட்டத்தைப் பார்த்தால் மின் தடையால் மிகவும் நொந்துப் போய் இருக்கிறார் போல் தெரிகிறது. குஜராத் போன்ற மாநிலங்களில் மின் தட்டுப் பாடு இருந்த காலம் போய் மின் மிகை மாநிலமாக இருக்கிறது. எப்போது தமிழ் நாடு வரும் என்றுதான் தெரியவில்லை. குஜராத், சோலார் மின் உற்பத்தியில், (2,000 மெகாவாட்) நாட்டில் முன்னணியில் உள்ளது என்றும் தெரிய வருகிறது.

    ReplyDelete
  8. sir,
    i am very much sad about the content regarding the article about steeling of your article by others. realy shame about the publishers who is doing it.

    my humble request you please continue ur job lessor important to astrology. and publish other articles which is most useful to the human lives.

    ReplyDelete
  9. ////kmr.krishnan has left a new comment on your post "நகைச்சுவை: ஏக்கத்தைப் போக்கும் எதிர்காலம்!":
    பறக்கும் வீடு சாத்தியமானால் அடிக்கடி இடத்தை மாற்றிக்கொண்டு அகில உலகமும் சுற்றி வரலாம்.நன்றி அய்யா!////

    இன்கம்டாக்ஸ் அல்லது சி.பி.ஐ.ரெய்டு வரும்போது வீட்டோடு பறந்து போய்விடுவார்களே? அதற்கு என்ன செய்வது சுவாமி?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com