12.4.11

நீங்கள் வாக்களிக்கும் நபர்தான் வெற்றி பெறவுள்ளார்

---------------------------------------------------------------------------------
 நீங்கள் வாக்களிக்கும் நபர்தான் வெற்றி பெறவுள்ளார்

10 boys planned to propose a girl.

9 came with a rose.

But 1 came with a ring... That is confidence!

---------------------------------------------------
நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. உங்கள் வாக்கைத் தவறாமல் பதிவு செய்யுங்கள். யாருக்கு வேண்டுமென்றாலும் உங்கள் வாக்கை அளியுங்கள். நீங்கள் வாக்களிக்கும் நபர்தான் வெற்றி பெறவுள்ளார். அந்த நம்பிக்கையுடன் வாக்களியுங்கள்.

எக்காரணத்தைக் கொண்டும் வாக்குச் சாவடிக்குச் செல்லாமல் இருந்துவிடாதீர்கள். உங்கள் வாக்கைப் பதிவு செய்யாமல் இருந்துவிடாதீர்கள்!
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

16 comments:

  1. ஆம் ஐயா!ஜனநாயகக் கடமை ஆற்ற லால்குடியில் இருந்து தஞ்சை வந்து பெரியவர் கோபாலன் இல்லத்தில் தங்கியுள்ளேன்.ஓட்டுப் போடும் போது,"அன்னா ஹசாரே முனைந்துள்ள பணி வெற்றி பெற, இறைவா! அருள் புரியும்" என்ற
    பிரார்த்தனையுடன் ஓட்டுப் போட வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.

    ReplyDelete
  2. ஸ்ரீ ராம நவமி இன்று....
    ஸ்ரீ ராமனை இந்த தருணத்திலே வணங்குவோம்.

    இங்கே ஒரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்....
    நான் சில வருடங்களுக்கு முன்பு படித்தது..
    அமெரிக்காவிலே ஸ்ரீ ராமன் அவதரித்த காலத்தை ஆராய்ச்சி செய்து வெளியிட்டு இருந்தார்கள் அதாவது கி.மு பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பு (BC. 14,000) ஸ்ரீ ராமன் அவதரித்தார் என்பதாக அது. அப்போதே மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று ஆண்டவன் அவதாரம் கொண்டு உணர்த்தியதை நாம் சிந்தையில் கொண்டு; அவனின் வழியில் வாழ்வோம். நன்றி.

    வாத்தியார் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியுள்ளார்கள்.... இந்த தருணத்திலே நானும் ஒன்று வேண்டிக் கொள்கிறேன் எந்த பேதமும் பார்க்காமல், வகுப்பறை மாணவர்களே, உங்களின் தொகுதியில் நிற்கும் சேவை மனப் பான்மை கொண்ட நல்ல மனிதருக்கு உங்கள் வாக்கை அளிக்கவும். யாருமே இல்லையா!.. கொஞ்சமாவது மன சாட்சி உள்ளவர்களுக்கு வாக்கை அளிக்கவும். நன்றி.
    நன்றி ஐயா!

    ReplyDelete
  3. இதுதான் வாத்தியார்.

    எந்தச் செயலைச் செய்தாலும், எதைச்சொன்னாலும் தனது சமூகக் கடமையிலிருந்து வழுவாமல் நிற்பது..

    நன்றிகள் அய்யா..

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா,

    நிச்சயம் எங்களது கடமையை செய்வோம்..

    நன்றி

    ReplyDelete
  5. வாத்தியார் அய்யாவின், வழிகாட்டலுக்கு நன்றி!

    ReplyDelete
  6. செல்லாஓட்டு போடமுன்பு வசதியுண்டு
    செல்லாமலிருப்பதை தவிர்க்க இப்போ


    மின்சாதன ஓட்டு அவர்கள் செய்த
    விண்சாதனைகளை எண்ணியே ஓட்டு


    போடனும்னு கேட்டு
    கொடுக்கறாங்க துட்டு


    போட்டுட்டா ஓட்டு; வைச்சுருவாங்க
    போடாட்டி வேட்டு


    ஜனநாயகம்னு சொல்லியே இப்போ
    பணநாயகம் யாருன்னு..(தெரியலே)


    நல்லவங்களுக்கு ஓட்டுபோட சொல்லி
    நாளும் நடக்குது பிரச்சாரம்; ஆனா


    நல்லவங்கதான் நிக்கறதில்லே; இவுக
    நல்லாவே நிக்கிறாங்கோ..


    தேய்ந்து கொண்டிருக்கும் நிலா கூட
    தேடிக்கொண்டிருக்கிறது வானத்தில்


    அதனால்...
    அப்படியே நாமும்.. நாங்களும்..

    ReplyDelete
  7. /////kmr.krishnan said...
    ஆம் ஐயா!ஜனநாயகக் கடமை ஆற்ற லால்குடியில் இருந்து தஞ்சை வந்து பெரியவர் கோபாலன் இல்லத்தில் தங்கியுள்ளேன்.ஓட்டுப் போடும் போது,"அன்னா ஹசாரே முனைந்துள்ள பணி வெற்றி பெற, இறைவா! அருள் புரியும்" என்ற பிரார்த்தனையுடன் ஓட்டுப் போட வேண்டும் என்று எண்ணியுள்ளேன்.///////

    நன்றி உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்!

    ReplyDelete
  8. Alasiam G said...
    ஸ்ரீ ராம நவமி இன்று....
    ஸ்ரீ ராமனை இந்த தருணத்திலே வணங்குவோம்.
    இங்கே ஒரு தகவலையும் சொல்ல விரும்புகிறேன்....
    நான் சில வருடங்களுக்கு முன்பு படித்தது..
    அமெரிக்காவிலே ஸ்ரீ ராமன் அவதரித்த காலத்தை ஆராய்ச்சி செய்து வெளியிட்டு இருந்தார்கள் அதாவது கி.மு பதினான்காயிரம் வருடங்களுக்கு முன்பு (BC. 14,000) ஸ்ரீ ராமன் அவதரித்தார் என்பதாக அது. அப்போதே மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று ஆண்டவன் அவதாரம் கொண்டு உணர்த்தியதை நாம் சிந்தையில் கொண்டு; அவனின் வழியில் வாழ்வோம். நன்றி.
    வாத்தியார் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியுள்ளார்கள்.... இந்த தருணத்திலே நானும் ஒன்று வேண்டிக் கொள்கிறேன் எந்த பேதமும் பார்க்காமல், வகுப்பறை மாணவர்களே, உங்களின் தொகுதியில் நிற்கும் சேவை மனப்பான்மை கொண்ட நல்ல மனிதருக்கு உங்கள் வாக்கை அளிக்கவும். யாருமே இல்லையா!.. கொஞ்சமாவது மன சாட்சி உள்ளவர்களுக்கு வாக்கை அளிக்கவும். நன்றி.
    நன்றி ஐயா!//////

    நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  9. //////Govindasamy said...
    இதுதான் வாத்தியார்.
    எந்தச் செயலைச் செய்தாலும், எதைச்சொன்னாலும் தனது சமூகக் கடமையிலிருந்து வழுவாமல் நிற்பது..
    நன்றிகள் அய்யா..//////

    வாத்தியார் என்ற அந்தஸ்தைக் கொடுத்திருக்கிறீர்கள். அதைக் காப்பாற்ற வேண்டாமா? அதனால்தான் சமூகக் கடமை! நன்றி

    ReplyDelete
  10. /////சிவ.சி.மா. ஜானகிராமன் said...
    வணக்கம் ஐயா,
    நிச்சயம் எங்களது கடமையை செய்வோம்.
    நன்றி/////

    நல்லது. நன்றி இடைப்பாடியாரே!

    ReplyDelete
  11. ////ரம்மி said...
    வாத்தியார் அய்யாவின், வழிகாட்டலுக்கு நன்றி!/////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. //////////iyer said...
    செல்லாஓட்டு போடமுன்பு வசதியுண்டு
    செல்லாமலிருப்பதை தவிர்க்க இப்போ
    மின்சாதன ஓட்டு அவர்கள் செய்த
    விண்சாதனைகளை எண்ணியே ஓட்டு
    போடனும்னு கேட்டு
    கொடுக்கறாங்க துட்டு
    போட்டுட்டா ஓட்டு; வைச்சுருவாங்க
    போடாட்டி வேட்டு
    ஜனநாயகம்னு சொல்லியே இப்போ
    பணநாயகம் யாருன்னு..(தெரியலே)
    நல்லவங்களுக்கு ஓட்டுபோட சொல்லி
    நாளும் நடக்குது பிரச்சாரம்; ஆனா
    நல்லவங்கதான் நிக்கறதில்லே; இவுக
    நல்லாவே நிக்கிறாங்கோ..
    தேய்ந்து கொண்டிருக்கும் நிலா கூட
    தேடிக்கொண்டிருக்கிறது வானத்தில்
    அதனால்...
    அப்படியே நாமும்.. நாங்களும்..////

    நல்லது. நன்றி விசுவநாதன்!

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. அன்புடன் வணக்கம்
    வாத்தியார் ஆணைப்படி ஒட்டு போட்டாச்சு!! ஒரு மணி நேரம் வரிசைய்ல் நின்று
    இது வரை இது போன்று வரிசைய்ல் நின்று போட்டதில்லை !!! சுமார் 85 %.
    ஒட்டு பதிவாகி உள்ளது !!எனது 1 வது வார்டில்..

    ReplyDelete
  15. அன்புள்ள ஆசிரியர் அவர்ர்களுக்கு ,
    எங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர்களில் ,சமூக சேவையில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இந்த காலத்திலும் கைம்மாறு எதுவும் எதிர் பாராமல் பொதுமக்களுக்காக முகம் சுளிக்காமல் என்றென்றும் பாடு பட்டுவரும் ஒரு வேட்பாளருக்கு எனது வாக்கினை பதிவு செய்துள்ளேன்.
    தங்களின் வழி காட்டுதலுக்கும்,நாட்டுப் பற்றுக்கும் நன்றி!
    தங்களுக்கு எனது சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்.
    தங்களின் சேவை மேலும் மேலும் சிறப்படைய பிரார்த்திக்கிறேன்.
    வணக்கம்.

    ReplyDelete
  16. இந்த முறையும் சரியாக ஜனநாயகக்கடமையாற்றி விட்டேன்..
    இதுவரை அளிக்கப்பட்டுவந்த மகேசன் தீர்ப்பு இந்த முறை மாறாதா என்று ஏக்கம் வேகம் எல்லாம் இந்தத் தேர்தலில் நன்கு எதிரொலித்தது..
    எப்போதும் போலவே இந்த முறையும் முற்றிலும் புதியதொரு தேர்தல் களத்தை கட்சிகளும், வேட்பாளர்களும், மக்களும் சந்தித்துள்ளனர்..
    ஆனாலும் எனக்கென்னவோ "யார் ஆட்சி" என்பதை ஆணித்தரமாக முன்கூட்டியே கணிக்கமுடியாத அளவுக்கு இந்த அளவு கடினமானதாக இதுவரை எந்தத் தேர்தலும் இருந்ததில்லை என்றே உணர்கிறேன்..(எனக்குப் பதினெட்டு வயதிலிருந்து இதுவரை என் கணிப்பில் ஒருமுறையும் தவறாகப் போனதில்லை..இந்த முறை கணிக்கவே முடியவில்லை..)

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com