17.6.10

அடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்புக் கிடையாது!

அடுத்த தலைமுறைக்கு அந்த வாய்ப்புக் கிடையாது!

எந்த வாய்ப்பு?

அதை நீங்களே பாருங்கள்!

V
V
V
V
V
V
பக்கத்தைக் கீழே இறக்குங்கள்
V
V
V
V
V
V














================================================
அடுத்த தலைமுறையினர் என்றில்லை, கூ...சிக்கு .சிக்கு... என்று நீராவி இஞ்சின் பூட்டப்பெற்ற புகைவண்டியில்

பயணிக்கும் இனிய வாய்ப்பு இனி யாருக்குமே கிடைக்காது!

உண்மைதானே?
-------------------------------------------
வாத்தியார் வெளியூர்ப் பயணம். அடுத்த வகுப்பு சனிக்கிழமையன்று! அனைவரும் பழைய பாடங்களைப் புரட்டிப் படியுங்கள்!

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!

20 comments:

  1. அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    நீராவி இஞ்சின் பூட்டப்பெற்ற புகைவண்டியில்

    பயணிக்கும் இனிய வாய்ப்பு இனி யாருக்குமே கிடைக்காது!
    = = = = = = = = = = = = = =
    உண்மைதான்.
    * * * * * * * * * * *
    புகைவண்டி படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.

    இது போன்ற படங்களை இதுவரையில் பார்த்ததில்லை.அருமையான படங்களை
    அளித்த
    தங்களுக்கு மிக்க நன்றி.

    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்

    வ.தட்சணாமூர்த்தி

    2010-06-17

    ReplyDelete
  2. கல்லூரி நாட்களில் நம்மை சுமந்த நீராவி ரயில் வண்டிகளை, இப்போது மலரும் நினைவுகளில் அதனைச் சுமக்கிறோம் நாம்!. அதிகாலைப் பொழுதில்; வசந்தமான பதின்ம கால நினைவுகள். வசந்தப் பயணம் அந்த வாலிபப் பயணம் வகுப்பறை மூலம்!!. காத்திருந்த காலங்கள், ஓடித் தாவிப் பயணித்த நேரங்கள், காலைக் கதிரவனையும், மதிமயக்கிய மாலைச் சூரியனையும் காணும் நேரங்களில், வண்டி கடக்கும் ஊர்களில் இருந்து வரும் அக்கால தேன் ததும்பும் அற்புத இசையுடன் இளங்கோவின் (இளையராசா) இசையை அருந்தியக் காலம். வண்டி கடக்கும் பாதைகளில் தாமரை பூத்து, சூரியக் கதிர்கள் எதிரொளிக்கும் குளங்களும்; அந்தத் தாமரை மலர்களுடனே கார்குழல்களுடன் சில சந்திரன்களும் மிதக்கப் பார்த்து ரசித்ததுண்டு, தாமரை மலர்களிலே மகரந்த சேர்க்கை செய்யும் கருவண்டுகளுக்கும், கார்குழலுடன் வானம் நோக்கி மிதக்கும் செந்தாமரை முகங்களில் சுழலும் கருவிழிகளுக்கும் வித்தியாசம் தெரியாது குழம்பியதுண்டு!?!?.... ஏர் உழும் உழவர்களையும், ஏற்றமிடும் பெண்டிரையும், நாற்று நாடும் மக்களையும், ஏன்? நடனமிடும் மயில்களையும், தன் பெட்டையோடு கொஞ்சி குலாவும் புறாக்களையும் கண்டு ஏங்கியதுண்டு...... இன்னும் சொல்ல ஆயிரம்... வகுப்பறை ஜன்னலின் வழியே; குளிர் தென்றலோடு மல்லிகையின் மனம் வந்து மயக்கும்!!... இப்போது முகப்பின் வழியே வந்து மையல் கொண்டது, மலர்ந்த நினைவுகளில் ரயில் வண்டிகளோடு பயணிக்கிறேன். பயணச் சீட்டுடன், பச்சைக் கோடி காட்டியமைக்கு, நன்றிகள் ஐயா!

    ReplyDelete
  3. புகை வண்டித் தொடரைப் பெண்பாலாகக் குறிப்பிடும் வழக்கம் ஆங்கிலேயக்
    கலாச்சாரம். ஏன் அப்படி என்பது நீங்கள் வெளியிட்டுள்ள படங்க‌ளைப் பார்த்தவுடன் தான் புரிந்தது.அப்பப்பா என்ன அழகு!!!

    ReplyDelete
  4. இழந்தால்தானே பெறமுடியும்?

    ReplyDelete
  5. புகைபடம் அருமை...

    ReplyDelete
  6. கவிஞர் கண்ணதாசனுடைய நெஞ்சைத் தொட்ட வரிகள் படித்ததும் எனக்கு மகாகவி பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. மேதைகள் சிந்தனை ஒரே மாதிரித்தான் இருக்கும் அல்லவா? பாரதியின் வரிகள் இதோ:‍

    இன்பமும் ஓர்கணத் தோற்றம் ‍ இங்கு
    இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்
    துன்பமும் ஓர்கணத் தோற்றம் ‍ இங்குத்
    தோல்வி முதுமை ஓர்கணத் தொற்றம்.

    தோற்றி அழிவது வாழ்க்கை ‍ இதில்
    துன்பத் தோடின்பம் வெறுமை யென்றோதும்
    மூன்றில் எது வருமேனும் ‍ களி
    மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி.

    ReplyDelete
  7. ஆசிரியரைப் போல் நானும் விடுமுறையில் போய் விடலாம் என்று பார்க்கிறேன். ஒரு வாரம் கழித்து சந்திக்கலாம்.

    ReplyDelete
  8. ஐயா என் குழந்தைக்கு நீராவி ரயில் வண்டியை உங்கள் வகுப்பறை வலை தலத்தில் தான் காண்பித்தேன் . மிக நன்றி

    இந்த பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
  9. //////V Dhakshanamoorthy said...
    அன்புள்ள ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    நீராவி இஞ்சின் பூட்டப்பெற்ற புகைவண்டியில்
    பயணிக்கும் இனிய வாய்ப்பு இனி யாருக்குமே கிடைக்காது!
    = = = = = = = = = = = = = =
    உண்மைதான்.
    * * * * * * * * * * *
    புகைவண்டி படங்கள் மிகவும் நன்றாக உள்ளது.
    இது போன்ற படங்களை இதுவரையில் பார்த்ததில்லை.அருமையான படங்களை
    அளித்த தங்களுக்கு மிக்க நன்றி.
    வணக்கம்.
    தங்களன்புள்ள மாணவன்
    வ.தட்சணாமூர்த்தி/////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி தட்சணாமூர்த்தி

    ReplyDelete
  10. ////astroadhi said...
    happy journey sir.....////

    நன்றி!. பயணம் முடிந்து திரும்பிவிட்டேன். நாளை மீண்டும் பயணிக்க உள்ளேன்!

    ReplyDelete
  11. /////Alasiam G said...
    கல்லூரி நாட்களில் நம்மை சுமந்த நீராவி ரயில் வண்டிகளை, இப்போது மலரும் நினைவுகளில் அதனைச் சுமக்கிறோம் நாம்!. அதிகாலைப் பொழுதில்; வசந்தமான பதின்ம கால நினைவுகள். வசந்தப் பயணம் அந்த வாலிபப் பயணம் வகுப்பறை மூலம்!!. காத்திருந்த காலங்கள், ஓடித் தாவிப் பயணித்த நேரங்கள், காலைக் கதிரவனையும், மதிமயக்கிய மாலைச் சூரியனையும் காணும் நேரங்களில், வண்டி கடக்கும் ஊர்களில் இருந்து வரும் அக்கால தேன் ததும்பும் அற்புத இசையுடன் இளங்கோவின் (இளையராசா) இசையை அருந்தியக் காலம். வண்டி கடக்கும் பாதைகளில் தாமரை பூத்து, சூரியக் கதிர்கள் எதிரொளிக்கும் குளங்களும்; அந்தத் தாமரை மலர்களுடனே கார்குழல்களுடன் சில சந்திரன்களும் மிதக்கப் பார்த்து ரசித்ததுண்டு, தாமரை மலர்களிலே மகரந்த சேர்க்கை செய்யும் கருவண்டுகளுக்கும், கார்குழலுடன் வானம் நோக்கி மிதக்கும் செந்தாமரை முகங்களில் சுழலும் கருவிழிகளுக்கும் வித்தியாசம் தெரியாது குழம்பியதுண்டு!?!?.... ஏர் உழும் உழவர்களையும், ஏற்றமிடும் பெண்டிரையும், நாற்று நாடும் மக்களையும், ஏன்? நடனமிடும் மயில்களையும், தன் பெட்டையோடு கொஞ்சி குலாவும் புறாக்களையும் கண்டு ஏங்கியதுண்டு...... இன்னும் சொல்ல ஆயிரம்... வகுப்பறை ஜன்னலின் வழியே; குளிர் தென்றலோடு மல்லிகையின் மனம் வந்து மயக்கும்!!... இப்போது முகப்பின் வழியே வந்து மையல் கொண்டது, மலர்ந்த நினைவுகளில் ரயில் வண்டிகளோடு பயணிக்கிறேன். பயணச் சீட்டுடன், பச்சைக் கோடி காட்டியமைக்கு, நன்றிகள் ஐயா!/////

    உங்களுடைய மலரும் நினைவுகளுக்கு ....அல்ல...மலர்ந்த நினைவுகளுக்கு, நன்றி ஆலாசியம்!

    ReplyDelete
  12. //////kmr.krishnan said...
    புகை வண்டித் தொடரைப் பெண்பாலாகக் குறிப்பிடும் வழக்கம் ஆங்கிலேயக்
    கலாச்சாரம். ஏன் அப்படி என்பது நீங்கள் வெளியிட்டுள்ள படங்க‌ளைப் பார்த்தவுடன் தான் புரிந்தது.அப்பப்பா என்ன அழகு!!!/////

    ஆங்கிலேயக் கலாச்சாரத்தில் புகைவண்டிக்குப் பெண்பால் என்று குறிப்பிட்டு, நல்லதொரு தகவல் தந்தமைக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. ////Eswari said...
    Happy Journey//////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Madumitha said...
    இழந்தால்தானே பெறமுடியும்?/////

    பெற்றதையும் சூநிலையால் இழக்க நேரிடும். அதில்தான் சோகம் அதிகம் சகோதரி!

    ReplyDelete
  15. //ராசராசசோழன் said...
    புகைப்படம் அருமை.../////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ///Thanjavooraan said...
    கவிஞர் கண்ணதாசனுடைய நெஞ்சைத் தொட்ட வரிகள் படித்ததும் எனக்கு மகாகவி பாரதியின் பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன. மேதைகள் சிந்தனை ஒரே மாதிரித்தான் இருக்கும் அல்லவா? பாரதியின் வரிகள் இதோ:‍
    இன்பமும் ஓர்கணத் தோற்றம் ‍ இங்கு
    இளமையும் செல்வமும் ஓர்கணத் தோற்றம்
    துன்பமும் ஓர்கணத் தோற்றம் ‍ இங்குத்
    தோல்வி முதுமை ஓர்கணத் தொற்றம்.

    தோற்றி அழிவது வாழ்க்கை ‍ இதில்
    துன்பத் தோடின்பம் வெறுமை யென்றோதும்
    மூன்றில் எது வருமேனும் ‍ களி
    மூழ்கி நடத்தல் பரசிவ முக்தி./////

    பாரதியின் பாடல்களில் மூழ்கி பல முத்துக்களை எடுத்துவைத்திருப்பவர் நீங்கள். அவ்வப்போது இப்படி ஒப்புவமை செய்து நல்ல வரிகளை எங்களுக்குத்தாருங்கள் சார்!

    ReplyDelete
  17. ////ananth said...
    ஆசிரியரைப் போல் நானும் விடுமுறையில் போய் விடலாம் என்று பார்க்கிறேன். ஒரு வாரம் கழித்து சந்திக்கலாம்.////

    அடியேனும் ஒருவாரம் லீவு போடலாம் என்று உள்ளேன். எங்களூரில் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறவுள்ளது ஆனந்த்!

    ReplyDelete
  18. ////raji said...
    ஐயா என் குழந்தைக்கு நீராவி ரயில் வண்டியை உங்கள் வகுப்பறை வலை தலத்தில் தான் காண்பித்தேன் . மிக நன்றி இந்த பயணம் மேலும் தொடர வாழ்த்துகள்/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com