4.6.08

வகுப்பறைக் கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள்!

வகுப்பறைக் கண்மணிகளுக்கு ஒரு வேண்டுகோள்!

வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது
இணைய வகுப்பாக இருப்பதனால் இடப் பிரச்சினை இல்லை!
சேர்ந்து படிக்கும் மாணவர்களின் ஆர்வமும் திகைக்க வைக்கிறது
உங்கள் ஆர்வம் வாழ்க!

பாடம் நடத்தும் உத்தியில் சிறிது மாற்றம் செய்து பல உதாரண ஜாதகங்களையும்
(பிரபலங்களின் ஜாதகங்களையும்) பல பேப்பர் கட்டிங்குகளையும், பல Scan செய்யப்
பட்ட சுவரசியமான தகவல்களையும் உங்களுக்குக் கொடுத்து வகுப்பை மேலும்
பயனுள்ளதாகச் செய்ய ஆவல்!

அதற்கு Special Class என்று பெயர் வைத்துக்கொள்ளுங்களேன்

இங்கே அவற்றை எல்லாம் செய்வதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன!

அதாவது அந்த Special Classஐ இங்கே நடத்தினால் பல வீண் குறுக்கீடுகள்
இருக்கும்

அதனால் அதற்கென்று தனியாக ஒரு களம் வேண்டும்.

ஒரு குழுமம் (Group) துவங்கலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

1, உங்கள் கருத்து என்ன?
2. துவங்கலாம் என்றால் எது Best? Google Groups or Yahoo Groups?
3. குழுமத்திற்கு என்ன பெயர் வைக்கலாம்?

உங்கள் பதிலை என்னுடைய தனி மின்னஞ்சலுக்குத் தெரியப் படுத்துங்கள்

முகவரி spvrsubbiah@gmail.com

இங்கே வழக்கப்படி பாடம் தொடர்ந்து நடக்கும். அதில் ஒன்றும் மாற்றம் இல்லை!

விசேசப் பாடங்கள் மட்டும் குழுமத்தில்!

அன்புடன்,
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

8 comments:

  1. நீங்க அந்த மாதிரி குழும special class வைத்தால் எல்லாம், எல்லாரும் சொல்றபடி ஆகிவிடும் அப்பறம் தடி எடுத்தவெரெல்லாம் தண்டல்காரர் ஆகிவிடுவர். தனித்தனியாக இழைகள் (threads) ஓடும் எல்லா நேர்த்திகளும் கெட்டு விடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து!

    ReplyDelete
  2. மடலிட்டு விட்டேன். :)

    ReplyDelete
  3. வாத்தியரே எனது கருத்தை பதிவு செய்துவிட்டேன் உங்கள் மின்னன்சலில்.

    ReplyDelete
  4. நல்ல யோசனைதான்.
    ஆனால் சில தெளிவுகள் தேவைப்படுகின்றன.

    1.இதன் தேவை என்ன? இது ஒரு interactive session போல இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? எனில் குழுமம் அதற்கு உதவுமா என சந்தேகங்கள் இருக்கின்றன.இது பற்றிய சரியான புரிதல் தேவை.Interactive session ஆக வேண்டும் என்றால் பதிவுதான் சிறந்தது என்பது என் கருத்து.

    2.பலவிதமான மொக்கைப் பின்னூட்டங்கள் வருகின்றன;அதனால் அடுத்த தளத்திற்கு செல்ல முடியவில்லை என உணர்கிறீர்களா? மொக்கைகளை ஒரு சீரிய குறிப்பின் மூலம் பெருமளவு தடுக்கலாமே...இது உங்கள் கையில்தான் இருக்கிறது !சமயத்தில் நீங்களும் சேர்ந்து பின்னூட்ட மொக்கையில் ஈடுபடுவதாகத் தோன்றுகிறது.
    Sorry,for my very direct,cryptic comment.
    :-).

    3.குழுமம்தான் தேவை என் நீங்கள் உணர்ந்தால் அதை எப்படி உபயோகிக்கப் போகிறீர்கள் என தெளிவு படுத்துவது நல்லது;ஏனெனில் நோக்கங்கள் சரியான விதத்தில் புரியாத போது,முயற்சி வியர்த்தமாகும் அபாயம் இருக்கிறது.

    4.அனைத்தையும் மீறி-குழுமம் தான் தீர்வு என்றால்-என் ஓட்டு யாஹூவுக்கே..அஸ்ட்ரோதமிழ் அல்லது கோவைஅஸ்ட்ரோ அல்லது ஜாதககோவை என் பரிந்துரைகள்..

    ReplyDelete
  5. பழய வகுப்பில் எனக்கு ஒரு பெஞ்ச்
    இங்கயாவது முதல் பெஞ் வேண்டும்!

    பிறகு குழுமம் என்றால் சிலர் மட்டுமே படிக்கமுடியும், அதிக மெயில் வருவதும் , அதன் பின் விவாதத்துக்கு மெயில் வருவதும் சில சமயம் போர் அடிக்கும்!

    அன்புடன்
    சின்சியர் சிகாமணி
    குசும்பன்

    ReplyDelete
  6. தங்களின் முடிவை வரவேற்கிறேன்.குழுமம் தொடங்குங்கள்.
    yahoovai vida goole orkut நல்லது. விரிவான
    மின்னஞ்சல் அனுப்பியுளேன் சார்

    ReplyDelete
  7. வாத்தியாரய்யா,

    நானும் என் கருத்தை சொல்லிவிட்டேன். நன்றி.

    ReplyDelete
  8. I did e-mail you regarding this.

    -Shankar

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com