மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.2.17

திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறதா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!


திருமணம் தடைப்பட்டுக்கொண்டே போகிறதா? அப்படியென்றால் இதைப் படியுங்கள்!!!!

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில்

சேரன்மகாதேவி அம்மைநாதர் கோவில் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியிலுள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம் நவகைலாயங்களில் இரண்டாவதாக சந்திரனுக்குரியத் தலமாகக் கருதப்படுகிறது.

தலச் சிறப்புகள் :

உரோமச முனிவர் தாமிரபரணி தென்கரையை அடைந்து, அங்கு ஆலமரத்தடியில் சிவலிங்கத்தை வைத்து வழிபாடு செய்த போது, சிவபெருமான் முனிவருக்குக் காட்சி கொடுத்ததாக கூறப்படுகிறது.

கோவில் மணிமண்டபத் தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமச முனிவர் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது. சகோதரிகள் இருவர் நெல் குத்தி, அரிசி புடைக்கும் சிற்பம் காட்சி வடக்கு ஒரத்தூணில் உள்ளது.

கோவில் கல்வெட்டுகளில் சேரன்மகாதேவி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகள் பாண்டியர் காலத்துக் கல்வெட்டுகள்.

இக்கோவிலை நந்தனார் தரிசித்ததற்கு அடையாளமாக இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க, நந்தி சற்று விலகியிருக்கிறது. கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தியையும், சிவனையும் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

தலப்பெருமை :

சிவதரிசனம் பெற விரும்பிய உரோமச முனிவர், அகத்தியரின் ஆலோசனைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை இட்டார். அதில் இரண்டாவது மலர் இத்தலத்தில் கரை ஒதுங்கியது. இங்கு, உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில், அந்த லிங்கம் ஒரு அரசமரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர், நெல் குத்தி, அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே, தங்கள் வேலையை துவங்குவர். இந்த லிங்கம், கோவிலில் இல்லாமல், மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று ஆதங்கப்பட்டு சிவனுக்கு கோவில் கட்ட நினைத்தனர். ஆனால் அவர்களிடம் போதிய வருமானம் இல்லை.

அவர்கள் தங்களது உழைப்பின் மூலம் கிடைக்கும் பணத்தை சேர்க்க ஆரம்பித்தனர். அவர்களது பக்தியை கண்டு மகிழ்ந்த சிவன், ஒருசமயம் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து, உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக்காட்டி மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிடமாட்டேன் என்று எழுந்தார். சகோதரிகள் பதறிப்போய் அவசரத்தில் விளக்கை தேடினர். விளக்கு தென்படாததால் சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு, விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு, சுயரூபத்தில் காட்சி தந்தார். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோவில் எழுப்பினர்.

பிரார்த்தனை :

அரிசி வியாபாரம் செழிக்க, இங்கு வந்து அரிசி தானம், அன்னதானம் செய்கின்றனர்.

திருமண தோஷம் உள்ளவர்கள், மாதுளம் பழச்சாறு அபிஷேகம் செய்து, அம்பாள் சன்னதி முன்பு தட்டில் அரிசியை பரப்பி, அதன் மத்தியில் உடைத்த தேங்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றுகின்றனர்.

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

திருவிழா :

இக்கோவிலில் ஐப்பசி மாதத்தில் திருக்கல்யாண உற்சவம் மற்றும் திருவாதிரைத் திருநாளும், சிவராத்திரி விழாவும் சிறப்பாக நடைபெறுகிறது.
=============================================
படித்ததில் பிடித்தது.
அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.2.17

உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!


உங்களுக்கு 50 வயதாகிவிட்டதா? அப்படியென்றால் இதை அவசியம் படியுங்கள்!!!!

ஒஷோவின் அறிவுரைகள்: (50 வயதைக் கடந்தவர்களுக்கு)


நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. சனீஷ்வரன் போர்டிங் பாஸ் கொடுத்தால், போக வேண்டியதுதான்.

அதுபோல போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை. ஆகவே கஞ்சத்தனமாக - உங்கள் மொழியில் சொன்னால் சிக்கனமாக
இருக்காதீர்கள். செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.
உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!

எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும்
நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்! நாம் இறந்த பிறகு, நமது
உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ
உங்களுக்குத் தெரியப் போவதில்லை. சிம்ப்பிள்-நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு
வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.  உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின்
வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை! children will have their own 
destiny and should find their own way.Life should have more to it than working from the cradle to the grave!!*


ஐம்பதைத் தாண்டிவிட்டீர்களா? சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள்.
பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம். பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது! ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு
அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது. அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே
போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!

ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்?
ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். பணம், புகழ்,
சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும்
இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!

யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள்.
அதனால் உங்களின் நேரமும் ஆரொக்கியமும்தான் கெடும். அதை
மனதில் வையுங்கள். நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி,
அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும் ஒவ்வொரு நாளும்
உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவிட்டுப் போகும். மாறாக மகிழ்ச்சியில்லாமல் கழியும் ஒவ்வொரு நாளும் உங்கள் அரோக்கியத்தைப் பதம் பார்த்துவிட்டுப் போகும். அதை மனதில் வையுங்கள். மன மகிழ்ச்சிதான் ஆரோக்கியத்திற்கு அடிப்படை !

உற்சாகத்தோடு இருக்கும்போது நோய் நொடிகள் குணமாகும். அனுதினமும் உற்சாகத்தோடு இருப்பவர்களை நோய் நொடிகள் அண்டாது!!!

நல்ல மனநிலை, உடற்பயிற்சி, சூரிய ஒளி, நல்ல உணவு, தேவையான விட்டமின்கள் ஆகியவை இன்னும் 20 அல்லது 30 ஆண்டுகள் உங்களை
வாழவைக்கும்!! அதற்கு மேல் என்ன வேண்டும் சொல்லுங்கள்?

எல்லாவற்றிற்கும் மேலாக, உங்களைச் சுற்றி நடப்பவை  நல்லவைகளாகவே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் மனைவி, மக்கள்,
நண்பர்கள் என்ற பெரிய வட்டம் உங்களுக்கு அதைக் கொடுக்கும். அவைகள்தான் (அவர்கள்தான்) உங்களை இளைமையாகவும்,
அனைவரும் விரும்புபடியாகவும் வைத்துக்கொள்வார்கள்!!!!

வரும் நாட்கள் நலமாக இருக்க வாழ்த்துக்கள்!!!!!

ஆக்கம் ஓஷோ
தமிழாக்கம்: அடியவன்

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.2.17

Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!


Astrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!

Denial of happiness - மகிழ்ச்சி இல்லாத மனிதர்களும் மனுஷிகளும்!!!

நம் கிராமங்களில் சொல்வார்கள்: “நாயை வைக்கற்போரில் கட்டிவைத்தால், அதுவும் திங்காது. மற்ற ஜீவராசிகளையும் திங்கவிடாது!”

அதுபோல சில மனிதர்கள், மனுஷிகள் உள்ளார்கள். அவர்களும் சந்தோஷமாக இருக்க மாட்டார்கள்.. அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் சந்தோஷமாக இருக்க விடமாட்டார்கள்.

எப்போதும் எதையோ பறி கொடுத்தவர்கள் போல இருப்பார்கள்.
உம்’ மென்று இருப்பார்கள். சிடு சிடுவென்று எரிந்து விழுவார்கள்.
யாரையும் பக்கத்தில் அண்டவிட மாட்டார்கள். எதையும் ரசிக்கும் மனப்பான்மை இருக்காது. எதிலும் positive thinking இருக்காது.

மொத்தத்தில் மகிழ்ச்சியை அறியாத அதிசயப் பிறவிகளாக இருப்பார்கள். தனிமை விரும்பிகளாக இருப்பார்கள்.

அவர்களுக்குத் திருமணம் செய்துவைத்தால் என்ன ஆகும். பெண்ணாக இருந்தால், கணவனையும், ஆணாக இருந்தால் மனைவியையும் ஆட்டி
வைத்துவிடுவார்கள்.

அவர்களுடைய திருமணவாழ்வு மகிழ்ச்சியில்லாத திருமண வாழ்வாக இருக்கும்.

அதற்கு என்ன காரணம்?

எல்லாம் ஜாதகக் கோளாறுதான்!

அது சம்பந்தமாக இப்பொது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.
1. துலா லக்கின ஜாதகம். லக்கினத்தில் ராகு. அத்துடன் 6ம் அதிபதி குரு.
2. லக்கினாதிபதி சுக்கிரன் பகைவீட்டில், அதுவும் 12ஆம் அதிபதி புதனுடன் சேர்க்கை
3. லாபாதிபதி சூரியன் 12ல்
4. லக்கினத்தில் ராகு & 6ம் அதிபதி குரு. குணக்கேட்டைக் கொடுக்கும்
5. இரண்டாம் அதிபதி செவ்வாய், எட்டாம் வீட்டில் இருக்கிறார். சுபக்கிரகங்களின் பார்வையின்றி. எட்டாம் வீடு தீய வீடு. அத்துடன் சனியின்
பார்வை.

Second lord in the 8th will not give happiness 
from women to men and from men to women!

உங்கள் மொழியில் சொன்னால், எட்டாம் வீட்டில் அமரும் 2ஆம் அதிபதி பெண்ணால் ஏற்படும் மகிழ்ச்சியை ஆணுக்கும், ஆணால் ஏற்படும்
மகிழ்ச்சியைப் பெண்ணிற்கும் கொடுக்கமாட்டார்!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.2.17

இறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!


இறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை!

ஒரு செயற்கை பல் வைக்க - ரூ 6,000

மாற்று இதயம் பொறுத்த - ரூ 11/2 கோடி

செயற்கை இதயத்தின் விலை - ரூ 80 லட்சம்

ஒரு கிட்னி - ரூ 30 லட்சம் ( பொறுத்த ஆகும் செலவு ரூ 20 லட்சம் )

செயற்கை முடி வைக்க - ரூ 2 லட்சம்

ஒரு செயற்கை விரல் வைக்க - ரூ 1 1/2 லட்சம்

செயற்கைக் கால் வைக்க - ரூ 2 லட்சம்

கண்ணுக்கு லென்ஸ் பொறுத்த - ரூ 50, 000

எலும்புக்கு பதிலாக plate வைக்க -ரூ 50,000

கிட்னி க்கு பதிலாக ஒரு முறை டயாலிசிஸ் பண்ண - ரூ 3,000

இதயத்தை ஒரு மணி நேரம் செயற்கையாக இயங்க வைக்க -ரூ 45, 000

ஈரலை ஒரு மணி நேரம் செயற்கையாக சுவாசிக்க வைக்க - ரூ 50, 000

இரத்தம் ஒரு Unit வாங்க - ரூ 2,000

மேலும் உயிருக்கு விலை மதிப்பே இல்லை.

கெட்ட பழக்கங்களினாலும், பொறுப்பற்ற விபத்துக்களினாலும் ஆரோக்கியமான உறுப்புக்களை சேதமாக்கிக் கொள்வதைத் தவிருங்கள்.

கோடி கோடியாக செலவழித்து செயற்கை உறுப்புகள் பொருத்தினாலும் அவற்றால் இயற்கை உறுப்புகள் போன்று நமக்கு உதவ முடியாது.

நம் மேல் அளவில்லா அன்பு வைத்த இறைவனுக்கே புகழனைத்தும்....அவருக்கே நன்றி சொல்வோம். அவரைத் தினமும் வணங்குவோம்!
-----------------------------------
படித்ததில் அதிர்ந்தது!
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.2.17

சீமைக் கருவேல மரங்கள் படுத்தும் பாடு!


சீமைக் கருவேல மரங்கள் படுத்தும் பாடு!

இந்த பதிவை படிப்பவர்கள் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்த்து ஒரு சிறிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்..

1950 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது விறகிற்கு பயன்படும் என்று வெளிநாட்டிலிருந்து சீமை கருவேலம் (Prosopis Juliflora) விதைகள்
கொண்டுவரப் பட்டு இங்கே தூவப்பட்டன..

இதன் விஷத்தன்மை பற்றி முழுதாய் தெரியாமல்…!

கடந்த 62 ஆண்டுகளில் இவை தமிழகம் முழுவதும் கிளை படர்ந்து ஏறத்தாழ 25 சதவித  விளை நிலங்களை ஆக்கிரமித்து பாழ்படுத்திக்
கொண்டிருக்கின்றன.

இதை வேருடன் களையாவிட்டால் நிலத்தடி நீரும் விஷமாகி விடும்.
சீமைக் கருவேல மரங்கள்…

இந்த மரத்தினை பார்க்காத ஒரு தமிழன் தமிழ் நாட்டில் இருக்க முடியாது.
தமிழ்நாட்டின் எல்லா மாவட்டங்களிலும் வளர்ந்துக் கொண்டு இருக்கிற ஒரு மரம்.

எந்த ஒரு வறண்ட நிலத்திலும் எந்த ஒரு தட்ப வெப்பத்திலும் இது தழைத்து வளர்ந்து கொண்டு இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்.

சாலை ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல் வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் இது .தமிழகத்தின் இன்றைய வறட்சியான
நிலைக்கு இந்த மரங்கள் தான் காரணம் என்று உறுதியாக சொல்ல முடியும்.

இந்த கருவேல மரங்கள் எந்தவித வறட்சியிலும், கடும் கோடையிலும் நன்கு வளரக்கூடியது. மழை பெய்யாமல் போனாலும், நிலத்தில் நீரே இல்லாமல்
இருந்தாலும் இவை கவலைப்படாது.

ஏனெனில் ஒரு கருவேலமரம் தனது வேர்களை பூமியின் ஆழத்தில் நாற்பது அடி, அகலத்தில் நாற்பது அடி வரையில் அனுப்பி மண்ணின் நீரை

உறிஞ்சி, தன் இலைகளை வாடவிடாமல் பார்த்துக் கொள்கிறது.
இதனால் நிலத்தடி நீர் முற்றிலுமாக வற்றி அந்த பூமியே வறண்டு விடுகிறது.

இதன் கொடூரம் அத்துடன் நிறைவு பெறுவது இல்லை, ஒருவேளை நிலத்தில் நீரே கிடைக்கவில்லை என்றாலுமே தன்னை சுற்றி இருக்கும் காற்றில்
இருக்கும் ஈரப்பதத்தையும் இம்மரம் உறிஞ்சி விடுகிறது.

காற்றில் ஈரப்பதம் இருந்தால் கூட உறிஞ்சி விடுகிற இம்மரம்
மனிதர்களையும் விட்டு வைப்பதில்லை.தன்னை சுற்றி இருக்கிற மனிதர்களின் உடலில் இருக்கிற ஈரப்பசையையும், எண்ணெய்ப்
பசையையும் கூட உறிஞ்சி விடுவதால் இந்த மரத்தின்
அருகாமையில் வசிக்கிறவர்களின் உடல் தோல்கள் வறண்டு போய் விடுகிறது.

தமிழகத்தில் விருதுநகர், ராமநாதபுரம். கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் போன்ற மாவட்டங்களின் வறட்சிக்கு இந்த மரங்களே முக்கிய காரணம்
என்பது யாருக்கும் இது வரை புரியவில்லை.

ஆனால், இதை அறியாமல் தமிழ் மக்கள் இன்னும் புதிதாக இம்மரங்களை வளர்த்து பராமரிக்கிறார்கள்.

தங்கள் வீடுகளுக்கும், வயல்களுக்கும் வேலியாக இம்மரத்தை நட்டு வைக்கிறார்கள்.வணிக ரீதியாகவும் இதை நம் தமிழ்நாட்டில் விறகிற்காக இந்த மரத்தை வளர்த்து வருகின்றனர்.

இது பேராபத்தை இந்த மண்ணுக்கு செய்கிறது என்பதை அவர்கள் அரியாது இருக்கிறார்கள்.

இந்த மரத்தின் இலை, காய், விதை என எதுவுமே எந்த உயிரினத்துக்கும் பயன்படாது.முக்கியமான விஷயம் ஒன்றும் உள்ளது ஆச்சரியமாக இருந்தாலும் உண்மை அது தான்.

இந்த மரத்தில் கால்நடைகளை கட்டி வைத்து வளர்த்தால் அவை மலடாகி விடும், அதாவது சினை பிடிக்காமலேயே போய்விடும், ஒருவேளை மீறி
கன்று ஈன்றாலுமே அது ஊனத்துடன் தான் பிறக்கும்.

ஒருபுறம் இதன் வேர் நிலத்தடி நீரை விஷமாக மாற்றி விடுகிறது மற்றொரு புறம் இதன் நிழலில் மற்ற உயிரினங்கள் வாழ முடியாத நிலை இருக்கிறது.
இதன் பக்கத்தில் வேறு எந்த செடியும் வளராது, தவிர இம்மரத்தில் எந்த பறவை இனங்களும் கூடுகட்டுவதும் இல்லை.

காரணம் என்னவென்றால் இந்த சீமைக் கருவேல மரங்கள், பிராணவாயுவை மிக குறைந்த அளவே உற்பத்தி செய்கிறது.

ஆனால் கரியமிலவாயுவை மிக அதிக அளவில் வெளியிடுவதால் சுற்றுப்புற காற்று மண்டலமே நச்சுத் தன்மையாக மாறிவிடுகிறது.

நமது அண்டை மாநிலமான *கேரளாவில்* இந்த மரத்தை பற்றிய விழிப்புணர்வை வனத்துறையினர் மக்களிடம் ஏற்படுத்தி உள்ளனர்.
அதனால் கேரளாவில் இந்த மரத்தை ஓர் இடத்தில் கூட காண முடியாது

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு திட்டமிடலுடன் செயல் பட்டு இந்த மரத்தை அவர்கள் தேடி தேடி அழித்து இருக்கிறார்கள்.வெட்டி போட்டு கொளுத்தி விட்டு சுற்றி நின்று கூத்தாடி இருக்கிறார்கள்.

அதனால் தான் இன்று கேரளா நீர் வளத்தில் அபரிமிதமான நாடாக இருக்கிறது.
அங்கே நீரானது பூத்துக் குலுங்குகிறது. இப்போதும் இந்த மரத்தை அவர்கள் எங்கேயாவது கண்டு விட்டால் சாத்தானை கண்டு விட்டது போல் அலறி, அதை வெட்டி தீயிலிட்டு கொளுத்தி விட்டு தான் அப்பால் நகருகிறார்கள்.

கேரளாவில் தொழில்சாலைகளுக்கு விறகுக்கு என்ன செய்கிறார்கள் தெரியுமா?நம் தமிழ் நாட்டிலிருந்து தான் விறகு செல்கிறது.

அவர்கள் தங்கள் ஆறுகளை பாதுகாக்க அதில் மண் அள்ள மாட்டார்கள்,
ஆனால் நம் ஆறுகளில் இருந்து மண் அங்கே போகும்.கருவேல மரங்களை முற்றிலும் அழித்துவிட்டார்கள் ஆனால் அவர்களின்  தேவைகளுக்கு மரம் இங்கே இருந்து செல்கிறது…!

சீமை கருவையை அழித்துவிட்டால் நம் நாடும் கேரளா
போல் குளுமை பெறும்.

இந்த மரங்களை நீங்கள் சிறிய செடியாக இருந்தால் கூட புடுங்கி எறியுங்கள் !

அது வளரும் வரை காத்திருக்க வேண்டாம்.

நம் அடுத்த தலை முறை குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துங்கள்

*இந்த பதிவை படிப்பவர்களும் முடிந்தவரை இந்த செய்தியை மற்றவர்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் ஒரு சிறிய விழிப்புணர்வை
ஏற்படுத்துங்கள்*.

மரங்களை வளர்ப்பது எவ்வளவு அவசியமோ அதை விட இந்த மரத்தில் ஒன்றையாவது வெட்டி அழிப்பது அதை விட அவசியம்..
வெட்டுவதோடு மட்டும் நில்லாமல்..

நம் பாரம்பரிய பூ அரச மரம், புங்கை மரம் , வேப்பம் மரம் போன்றவற்றை அந்த இடத்திலேயே நட்டு பராமரிப்போம்..

*இந்த மரத்தை வெட்டி வீழ்த்துவோம்*.....!
நம் மண்ணின் மாண்பை காப்போம்!!
------------------------------------------
படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.2.17

எதை அடக்க வேண்டாம்?


எதை அடக்க வேண்டாம்?

"சிறுநீரை அடக்க வேண்டாம்.."

ஒரு உண்மை சம்பவம்...

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.

என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.

அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

எவ்வாறு இந்த பெரிய சங்கடம் உருவானது என்று மருத்துவர் அறிய அச்சிறுமியிடம் விசாரித்தபோது தான் தெரிந்தது அச்சிறுமி பள்ளி செல்லும்
பொதெல்லாம் சிறுநீரை கழிக்கவே மாட்டாராம்.

ஏனெனில் சிறுநீர் கழிக்க அச்சிறுமிக்கு இருந்த தயக்கமும் அப்பள்ளியில் அதற்கான வசதி வாய்ப்புகள் குறைவாக இருந்ததுமே இதற்கு முக்கிய
காரணமாக இருந்துள்ளது.

சிறுநீரை அடக்கும் இந்த  பழக்கத்தால் அச்சிறுமியின் சிறுநீர்ப்பாதையில் தொற்று ஏற்பட்டு இறுதியில் சிறுநீரகமே செயலிழந்து போனது தான்
கொடூரத்தின் உச்சம்.

அதைவிட கொடூரம் என்னவெனில் நான் சந்தித்த இரண்டாவது நாள் அச்சிறுமி மரணத்தையும் தழுவி விட்டாள் என்பது மிகுந்த மன
வேதனைக்குள்ளாக்கி விட்டது.

பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கழிவறைகளை கண்டீர்களானால் நம் வயிற்றுக்குள் உணவு செல்லாது.
அவ்வளவு கொடூரமாக இருக்கிறது கழிவறைகள்.

அது மட்டுமில்லாமல் பல அரசு மற்றும் தனியார் பள்ளிகள் சிறுநீர் கழிக்கும் இடைவெளியை வெறும் 10 நிமிடத்திற்கு ஒதுக்கி 400 மாணவர்களை
அங்கு தள்ளுகின்றனர்.

இதனால் பல மாணவர்கள் கூச்சப்பட்டுக் கொண்டு இயற்கை உபாதைகளை கழிக்காமலே அடக்கிக் கொள்கின்றனர்.

இதனால் குழந்தைகள் சிறுநீர் தொற்றிற்கு உள்ளாகி உயிரை இழக்கும் அபாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.

அன்பர்களே தயவு செய்து இந்த பதிவை முடிந்த அளவு உங்கள் நண்பர்கள் மற்றும் குழுக்களுக்கு பகிர்ந்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வை
ஏற்படுத்த உதவுங்கள்.

மேலும் அரசிற்கும், பள்ளி கல்வித்துறைக்கும், அனைத்து பள்ளிகளுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் மாணாக்கர்களுக்கும் இப்பதிவின் மூலம்
கோரும் வேண்டுகோள் என்னவெனில்

1. ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் மாணவர்கள் சிறுநீர் கழிப்பதை முறையாக கொண்டுள்ளனரா என்பதை அக்கறையுடன் வினவ வேண்டும்.

2. ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை தங்கள் குழந்தை போல் பாவித்து இம்மாதிரியான அபாயத்திற்குள் சென்று விடாமல் பாதுகாக்க முனைய
வேண்டும்.

3. அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு பள்ளிக் கல்வித்துறை மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை விட்டு கழிப்பறை இல்லாத
பள்ளிகளின் கல்லூரிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆவண செய்ய வேண்டும்.

மேலும் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டிய நேரத்தை மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கவும் ஆணையிட வேண்டும்.

4, பெற்றோர்கள் தவறாது குழந்தைகள் இயற்கை உபாதைகளை சரியான நேரத்தில் கழிக்கின்றனரா என்பதை தீர ஆராய வேண்டும்.

5. பெற்றோர்கள் இவ்விஷயத்தை பற்றி பள்ளிகளிடமும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.

நமது நாடு மற்றம் வீட்டின் வருங்காலத் தூண்களை சிறுநீரகமற்ற தூண்களாக மாற்றி வளரும் பயிர்களை முளையிலேயே கருகவிட்டு விடாதீர்கள்.

*"சிறுநீர் மட்டுமல்லாமல் இயற்கை உபாதைகள் (மலம், தும்மல், இருமல், தாகம், பசி, விக்கல், அபான வாயு...) எதையும் அடக்க கூடாது."*

தயவுசெய்து நண்பர்களே இப்பதிவை சாதாரண பதிவாக எண்ணிவிடாமல் அனைவரும் முக்கியத்துவத்துடன் பகிருமாறும் நம் குழந்தைகளையும் தீர
கவனிக்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻

படித்ததில்_உறைத்தது !!!
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.2.17

என்ன பாவம் செய்தேனோ?




என்ன பாவம் செய்தேனோ? 

 பாடல் வரிகளைக் கேளுங்கள். அருமையான பாடல். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அவர்கள் எழுதியது. உங்கள் வசதிக்காக பாடல் வரிகளையும் கொடுத்துள்ளேன். மேலும் பாடலின் ஒலி வடிவத்தையும் கொடுத்துள்ளேன்.

 அன்புடன்
 வாத்தியார்
---------------------------------------------------------------------------------------
“நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
வலிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ!
தானங் கொடுப்போரைத் தடுத்து நின்றேனோ!
கலந்த சினேகரைக் கலகஞ் செய்தேனோ!

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்தேனோ!
குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொண்டேனோ!
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ!
தருமம் பாராது தண்டஞ் செய்தேனோ!

மண்ணோரம் பேசி வாழ்வழித்தேனோ!
உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்தேனோ!
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ!
பொருளை இச்சித்துப் பொய் சொன்னேனோ!

ஆசை காட்டி மோசஞ் செய்தேனோ!
வரவுபோக் கொழிய வழியடைத்தேனோ!
வேலை யிட்டுக் கூலி குறைத்தேனோ!
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ!

இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்றேனோ!
கோள் சொல்லிக் குடும்பங் குலைத்தேனோ!
நட்டாற்றிற் கையை நழுவ விட்டேனோ!
கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுத்தேனோ!

கற்பழிந்தவளைக் கலந்திருந்தேனோ!
காவல் கொண்டிருந்த கன்னியை அழித்தேனோ!
கணவன்வழி நிற்போரைக் கற்பழித்தேனோ!
கருப்ப மழித்துக் களித்திருந்தேனோ!

குருவை வணங்கக் கூசி நின்றேனோ!
குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ!
கற்றவர் தம்மைக் கடுகடுத்தேனோ!
பெரியோர் பாட்டிற் பிழை சொன்னேனோ!

பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைத்தேனோ!
கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைத்தேனோ!
ஊன்சுவை யுண்டு உடல் வளர்த்தேனோ!
கல்லும் நெல்லும் கலந்து விற்றேனோ!

அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்தேனோ!
குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ!
வெய்யிலுக் கொதுங்கும் விருக்ஷ மழித்தேனோ!
பகை கொண்டு அயலோர் பயிரழித்தேனோ!

பொது மண்டபத்தைப் போயிடித்தேனோ!
ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ!
சிவனடியாரைச் சீறி வைதேனோ!
தவஞ்செய் வோரைத் தாழ்வு சொன்னேனோ!

சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்தேனோ!
தந்தைதாய் மொழியைத் தள்ளி நடந்தேனோ!
தெய்வ மிகழ்ந்து செருக்கடைந்தேனோ!
என்ன பாவம் செய்தேனோ! இன்னதென் றறியேனே!
(மநு முறை கண்ட வாசகம்)
- வள்ளலார்
Vallalar Song - Enna Paavam Seitheno - Mazhaiyur Sadasivam



=====================================================
வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

17.2.17

Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?


Astrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும் என்பது எப்படித் தெரிந்தது?

அலசல் பாடம்!

ஒரு இளைஞனின் வீட்டில், அவனை ஒரு ஐ.ஏ.எஸ் பட்டதாரியாக்கி, மாவட்ட ஆட்சியாளர் வேலையில் அமரவைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். அவர்கள் ஆசை நிறைவேறியதா? பையன் ஐ.ஏ.எஸ்சில் தேர்ச்சி பெறவில்லை ஜாதகத்தைக் கொண்டுபோய் ஒரு ஜோதிடரிடம் கொடுத்து, ஜாதகப்படி எந்த வேலை கிடைக்கும்? என்று கேட்டபோது, அவர் ஜாதகத்தை நன்கு ஆராய்ந்து விட்டு, ஜாதகப்படி பையனுக்கு வாத்தியார் வேலைதான் சிறப்பாக இருக்கும் என்றும் அவன் அதில் படிப்படியாக முன்னுக்கு வருவான் என்றும் சொன்னார்

எப்படிச் சொன்னார்?

வாருங்கள் ஜாதகத்தை நாமும் பார்ப்போம்!



மீன லக்கின ஜாதகம். பூராட நட்சத்திரம்

1. உயர் கல்விக்கு உரிய ஐந்தாம் வீட்டு அதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு ஆறில் அமர்ந்துள்ளார். உடன் செவ்வாயும் ராகுவும் உள்ளார்கள். அதனால் 2. உயர்கல்விக்கான (அதாவது I.A.S அல்லது I.F.S அல்லது I.PS போன்ற படிப்புக்கள்) அமைப்பு ஜாதகத்தில் இல்லை.
3. பத்தாம் வீட்டில் செவ்வாய் இருப்பது நிர்வாக வேலை அமைவதைக் குறிக்கும். ஆனால் உடன் ராகு இருப்பதால் நிர்வாக வேலயில் தொடர்ந்து பிரச்சினைகள் உண்டாகும்
4. பத்தாம் அதிபதி பதினொன்றில், ஆகவே பார்க்கும் வேலையில், அது எந்த வேலையாக இருந்தாலும் உயர்வு இருக்கும்
5. ஐந்தாம் அதிபதி சந்திரனும் பத்தில் இருக்கிறார். அதுவும் நன்மையானதே!
6. லக்கினம் குருவுடையதாக இருப்பதாலும், பத்தாம் வீடும் குருவுடையதாக இருப்பதாலும் வாத்தியார் வேலைதான் ஜாதகனுக்குச் சிறந்ததாக இருக்கும். அதுவே அமைந்தது.

அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
========================================================

16.2.17

வாரணாசியின் வரலாறு!


வாரணாசியின் வரலாறு!

*காசியை பற்றி உங்களுக்கான சில சுவாரிசியமான தகவல்கள் :*

பனாரஸ் என்று இன்று நாம் சொல்லும் ஊர் கங்கை கரைக்கு அப்பால் விரிந்து கிடக்கும் மாநகரம்.

 பட்டுநெசவும், பாத்திரங்கள் உற்பத்தியும் பெருகிய தொழில்நகரம். அதற்கும் கங்கை கரையோரம் இருக்கும் பழைய காசிக்கும் தொடர்பில்லை.

பனாரஸ் வாசிகள் பழைய காசிக்கு வருவதில்லை. இங்கே உள்ளவர்கள் பெரும்பாலும் வேறு பகுதியைச் சார்ந்தவர்கள். அன்றாடம் வந்து குவியும்
பயணிகள். அவர்களுக்குச் சடங்குகள் செய்து வைக்கும் புரோகிதர்கள். சிறுவணிகர்கள். பெரும்பாலும் எல்லா இந்திய சாதியினருக்கும் காசியில் தனியான மடங்கள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போது தங்குவதற்காக. தமிழகத்தின் முக்கியமான சைவ மடங்களுக்கு காசியில் கிளைகள் உண்டு. முன்பெல்லாம் இளைய தம்புரான் காசியில்தான் இருப்பார். பெயருடன் காசிவாசி என்று போட்டுக் கொள்வார்கள். குமரகுருபரர் நெடுங்காலம் காசியில் வாழ்ந்தவர். குமரகுருபரர் மடம் என்றே தனியாக இருக்கிறது.

 எல்லா மாநிலத்தவர்களுக்கும் அவர்களுக்குரிய பிராமணர்கள் உண்டு. தமிழ் அய்யர்களின் ஒரு சமூகமே காசியில் இருக்கிறது. காசி அழகற்ற
நகரம். அதன் நெரிசலுக்கு ஈடு இணையே கிடையாது. காரணம் இன்றைய வண்டிகள் ஏதும் பழக்கத்துக்கு வராத மிகப் பழங்காலத்தில் அதன்

பெரும்பகுதி உருவாக்கப்பட்டுவிட்டது. மிக மிக குறுகலான சந்துகளான் ஆனது காசி. சந்துகள் எல்லாம் எப்படியோ கங்கையின் படிக்கட்டு ஒன்றை
நோக்கி சென்று இறங்கும். தெருக்கள் கடப்பைக்கல் பாவப்பட்டவை. பெரும்பாலான சந்துகளில் மனிதர்கள் மட்டுமே நடக்க முடியும். சற்றுப் பெரிய

சந்துகளில் சைக்கிள் ரிக்ஷாக்கள் நகரும். சைக்கிள் ரிக்ஷாக்கள் தான் இப்பகுதியின் அதிகமாக உள்ள வாகனங்கள். ஆனால் காசியளவுக்கு சுவாரஸியமான இன்னொரு நகரம் இந்தியாவில் இல்லை. பலவகையான மக்கள் வந்து குழுமியபடியே இருக்கிறார்கள்.

தெருக்களில் எப்போதும் ஆர்வமூட்டும் ஒரு விசித்திர முகம் தென்படும். சின்னச்சின்ன சந்துகளில் வாழ்க்கை நுரைத்துக் கொந்தளிக்கிறது. மக்கள்
மீது பாசம் கொண்ட ஒருவன் காசியை எப்படியோ விரும்ப ஆரம்பித்துவிடுவார்.

காசி மரணத்தின் நகரமும் கூட. இங்கே மரணம் தான் முக்கியமான தொழில் முக்கியமான பேசு பொருள். பொழுதுபோக்கும் மரணம் தான். காசி
என்றாலே பிரபலமான *மணிகர்ணிகா கட்,* *அரிச்சந்திர கட்* என்ற இரு பெரும் சுடலைப் படிக்கட்டுகள் தான் நினைவுக்கு வரும்.

 காசியில் ஒருபோதும் சிதை அணையக்கூடாது என்று ஒரு வரம் உள்ளதாம். காசிவாசி காலபைரவ மூர்த்திக்கு சிதைதான் பலி. அந்த வரம் இன்று
வரை இல்லாமல்லாகவில்லை. எப்போதும் சுடலைப்படிகளில் பிணங்கள் எரிந்து கொண்டிருக்கும். பிணங்கள் எரிய பிணங்கள் மஞ்சள் சரிகை மூடி
காத்து கிடக்கும். பிணங்களை சைக்கிளில் வைத்து கட்டியபடி சந்துகளில் ஓட்டி வருவார்கள். ஆட்டோ ரிக்ஷாக்களின் மேலே ஏற்றி வருவார்கள்.

சாற்றி வைத்து விட்டு அமர்ந்து டீ குடிப்பார்கள். காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.

காசி அன்னியர்களின் நகரம். இந்தியாவெங்கும் இருந்து சாமியார்களும் பைராகிகளும் காசிக்கு தான் வந்து கொண்டிருக்கிறார்கள். விதவிதமான
சாமியார்களை இங்கே காணாலாம். அஹோரிகள் என்று சொல்லப்படும் கரிய உடை தாந்த்ரீகர்கள், நாகா பாபாக்கள் என்று சொல்லப்படும்
நிர்வாணச் சாமியார்கள் அவர்களில் உக்கிரமானவர்கள்.

 இதைத்தவிர உலகம் முழுக்கவிருந்து ஹிப்பிகள் நாடோடிகள் ஓரினச்சேர்க்கையாளர்கள் போதை அடிமைகள் காசிக்கு வந்தபடியே இருக்கிறார்கள்.

அவர்கள் அனைவருக்கும் காசியில் இடமிருக்கிறது.

காசி போதையின் நகரம். போதை என்றால் கஞ்சா அல்லது சரஸ் அல்லது ஃபாங். கஞ்சாகுடிக்கும் சிலும்பிகளை தெருவில் போட்டு விற்கிறார்கள்.

எங்கே கைநீட்டினாலும் கஞ்சா கிடைக்கும். மேலும் தீவிரமான போதைப் பொருட்களும் சாதாரணமாகக் கிடைக்கும் என்று சொல்கிறார்கள்..

காலையில் கடுங்குளிரில் நடக்கச்சென்றால் படித்துறை ஓரமாக சாமியார்கள் கஞ்சாவுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். காசி வைராக்யத்தின்
துறவின் நகரம். காசி பைத்தியத்தின் நகரம். காசி சுடலைச் சாம்பல் பூசிய பித்தனின் வாசஸ்தலம்.

காசியில் கலைகளும் இலக்கியமும் தத்துவமும் செழித்திருந்தன. இன்றும் காசி இவற்றின் தலைநகர் தான். கபீர் ரவிதாஸ், முன்ஷி பிரேம்சந்த்
போன்ற பல கவிஞர்கள் எழுத்தாளர்கள் இங்கே வாழ்ந்தார்கள். உஸ்தாத் பிஸ்மில்லா கான், ரவிசங்கர் போன்ற இசைமேதைகளின் நகரம் இது.

காசியின் தத்துவ சதஸுகள் புகழ்பெற்றவை.

 காசிவித்யாபீடம் இன்று காசி பல்கலைகழகமாக பெருகி வளர்ந்துள்ளது. பாரதி தன் தத்துவக் கல்வியை காசியிலேயே பெற்றார்.

காசியின் மொழி இந்தியாக இருந்தாலும் இங்குள்ள பூர்வீக மொழி போஜ்புரி தான். போஜ்புரி சம்ஸ்கிருதத்தின் அபப்பிரம்ஸ மொழி என்பார்கள்.

அவிமுக்தகா, ஆனந்தகானனம், மகாமசானம், சுரந்தானனன், பிரம்ம வர்த்தம், ரய்மகம் போன்ற பல பெயர்கள் காசிக்கு புராணங்களில் உண்டு.

 *ரிக் வேதத்திலேயே சிவருத்ரனின் இருப்பிடமாக காசி* குறிப்பிடப்பட்டிருக்கிறது.

*வாரணாசியின் வரலாறு:*

வாரணாசி மேல் படையெடுத்த முதன் அன்னிய ஆட்சியாளர் முகமது கஜினி [1033] பின்னர் முகமது கோரி. [1193] இவர்களால் இந்நகரம் முழுமையாக
அழிக்கப்பட்டு விட்டது.. சில வருடங்களுக்குள் மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது. அக்பர் காலத்தில் இந்நகரத்தை புதுப்பிக்க நிதியுதவியும் ஊக்கமும்

அளிக்கப்பட்டது. முகலாய கட்டிடக்கலை பாணியிலான படித்துறைகளும் அரண்மனைகளும் அமைந்தன. ஆனால் ஔரங்கஜீப் இந்நகரை அழித்து
இதன் பெயரையும் முகம்மதாபாத் என்று மாற்றினார்.

பின்னர் மராட்டியர்கள் காசியைக் கைப்பற்றினார்கள். இன்றுள்ள காசி மராட்டியர் காலத்தில் இடிபாடுகளில் இருந்து மீண்டும் கட்டி எழுப்பப்பட்டது.

மராட்டிய வம்சத்தவரான மன்னர் காசியின் சிற்றரசரானார். இவர்கள் காசியின் மறுகரையில் ராம்நகர் என்ற ஊரை நிறுவி காசியை ஆண்டனர்.
 பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்து சுதந்திரம் கிடைப்பதுவரை நீடித்தனர்.

இப்பொழுது இருக்கும் விஸ்வநாதர் கோயில் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டது தான்..

 சிவப்புச்சாயமிடப்பட்ட சிறிய கோயில் அப்பகுதி இடிபாடுகளாகக் கிடந்து தன்னிச்சையாக உருவாகி வந்ததாகையால் மிகமிக நெரிசலானது.

கோயிலுக்கு இருவர் மட்டுமே இடிக்காமல் செல்லக்கூடிய சந்து வழியாகவே செல்லவேண்டும். கடுமையான போலீஸ் சோதனை. செல் ஃபோன்கள்
அனுமதி இல்லை.. அதிக கூட்டம் இல்லை என்றாலும் நெரிசல் இருக்கும்.

 காசியில் நாமே லிங்கத்துக்கு நேராக பூஜை செய்யலாம் என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் எந்த விதமான ஒழுங்கும் முறையும் இல்லாத இடம் இது. நெடுங்காலம் இடிபாடுகளாகக் கிடந்த பின் மீட்கப்பட்டு தன் போக்கில் உருவாகி வந்தது. இந்த இடத்தை கைப்பற்றி வைத்திருந்த

படகோட்டும் குகா சாதியினருக்கு இப்பகுதி மீது மேலாதிக்கம் உள்ளது. பாரம்பரியமான சடங்குகள் முறைகள் எல்லாம் மறைந்துவிட்டன.

நாடெங்கும் இருந்து வந்த பல்வேறு இன மக்கள் அவர்களுக்கு தோன்றிய வகையில் வழிபடுகிறார்கள். தொட்டு வணங்குவது தழுவ முற்படுவது
மேலேயே விழுந்துவிடுவது எல்லாம் உண்டு.

காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஔரங்கஜீப் பழைய கோயிலை இடித்துக் கட்டிய பழைய மசூதியின் கும்பம் உள்ளது. அதற்கு கடுமையான
போலீஸ் காவல் போடப்பட்டிருக்கிறது.

அருகே விசாலாட்சி அன்னபூரணி ஆலயங்கள் இருக்கிறது..

தஸாஸ்வமேத காட்டில் ஏழரை மணிக்கு கங்கா ஆர்த்தி சடங்கு உண்டு. கங்கையை தெய்வமாக உருவகித்து அப்படித்துறையை கருவறையாக ஆக்கி செய்யபபடும் விரிவான பூஜைதான் அது. சங்கு ஊதி மலரும் தூபமும் காட்டி விளக்கால் ஆரத்தி எடுக்கிறார்கள். ஐந்து இளம் பூசாரிகள் ஒரு நடனம் போல நிதானமாக ஒத்திசைவுடன் செய்யும் இந்த பூஜை ஒரு அழகிய கலைநிகழ்ச்சி போலவும் இருக்கும். ஏராளமான பேர் கூடுவார்கள். கங்கையின் பழைமையும் அதன் மாட்சியும் நம் நினைவில் இருந்தால் இது ஒரு உணர்ச்சிகரமான நிகழ்ச்சியே.
--------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.2.17

நமது நிலைமை - சில உண்மைகள்!

நமது நிலைமை - சில உண்மைகள்!

கேவலமான உண்மைகள்!!!!!!

1. அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ
40 லிருந்து 50 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!!

2. பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்டணம் மூன்று ரூபாய்..!!

3. வங்கிகளில் வாகனக் கடன்களுக்கான வட்டி 5 சதவிகிதம்.
ஆனால் கல்விக்கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!!

4. Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது பாதி நேரத்தில் கூட ஆம்புலன்சும், தீயணைப்பு வாகனங்களும் வந்து சேர்வதில்லை..!!

5. ஒரு கிரிகெட் குழுவையே கோடிக்கணக்கான பணத்தைக் கொடுத்து விலைக்கு வாங்கக்கூடிய செல்வந்தர்கள் இருக்கிறார்கள். அதே பணத்தில் பத்தில் ஒரு பங்கைக்கூட நாட்டு நலப்பணிகளுக்குச் செலவு செய்யக்கூடிய செல்வந்தர்கள் மட்டும் இல்லை..!!

6. அணியும் ஆடைகளும், காலணிகளும் குளிரூட்டப்பட்ட கடைகளில் விற்கப்படுகின்றன.
ஆனால் உண்ணும் காய்கறிகளும், பழங்களும் நடைபாதைக்  கடைகளில் விற்கப்படுகின்றன..!!

7. குடிக்கும் Lemon Juice,Orange juice...etc இவையெல்லாம் செயற்கையான ரசாயனப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன.
பாத்திரம் கழுவ உதவும் நீர்க் கலவை இயற்கையான எழுமிச்சையில் (லெமனில்) தயாரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது..!!

8. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது.
சாராயம் விற்று கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

9. கோதுமைக்கு வரியில்லை. அது விளைபொருள். கோதுமையை மாவாகத் திரித்தால் வரியுண்டு.
கோதுமை மாவை சப்பாத்தியாக செய்து விற்றால் வரியில்லை...அதே மாவை பிஸ்கட், கேக், பிரெட்டாகச் செய்து விற்றால் வரி உண்டு..!!

10. விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!
             
11.  வாழ்க்கையில் உயரச் செல்வதற்கான வாய்ப்பு, சிலருக்கு படிக்கட்டாகவும், சிலருக்கு எஸ்கலேட்டராகவும்,  சிலருக்கு லிஃப்டகாவும் அமைகிறது..

12.   பியூட்டி பார்லரை ஏளனச் சிரிப்போடு கடந்து செல்லும்  ஏழைப்பெண் தான் கொள்ளை அழகு.!

13.  தோற்றுப்போய் வீடு திரும்புகையில், தலை கோதி மடி சாய்க்க ஒருவர் இருந்தால் போதும், வாழ்க்கையை ஜெயித்துவிடலாம்.

 14. முதியோர் இல்லத்திற்கு
பணம் கொடுங்க,
பொருள் கொடுங்க,
உணவு கொடுங்க,
உடை கொடுங்க..
ஆனா உங்க பெற்றோரை மட்டும் கொடுத்துடாதீங்க..

15. 20 வயசு வரைக்கும்தான் வேளா வேளைக்கு சோறு.. அதுக்கு மேல வேலைக்கு போனால் தான் சோறு..

16.  டாக்டரை மறந்து விட்டு நர்சுகளை ஞாபகம் வைத்திருக்கும் விசித்திரமான உலகம் இது.!

17. ரெண்டையும் பொண்ணுங்களா பெத்தவங்கள விட,  ரெண்டையும் பசங்களா பெத்தவங்கதான் பெரும்பாலும் முதியோர் இல்லத்துல இருக்காங்க.!

18. கடவுள் சிற்பத்தை 'கல்' என ஒத்துக்கொள்பவர்கள், பணத்தை 'காகிதம்' என ஒத்துக்கொள்வதில்லை.

19.  அன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்தார்கள்..   இன்று சங்கம் வைத்து சாதி வளர்க்கிறார்கள்...

20 .கடவுளாக வாழ கல்லாயிருந்தால் போதும்.. மனிதனாக வாழத்தான் அதிகம் மெனக்கெட வேண்டியிருக்கிறது.!              

21. மழையை நிறுத்த தமிழர்கள் இரண்டு யுக்திகளைக் கையாளுகிறார்கள்..
ஒன்று, ஃபேஸ்புக்கில் கவிதை எழுதுகிறார்கள்..
மற்றொன்று ஸ்கூலுக்கு லீவு விடுகிறார்கள்..

 21.  மழைக்காக விடப்பட்ட விடுமுறையில் ஒருபோதும் மழை பெய்வது இல்லை..
அவை குழந்தைகள் மீதான கடவுளின் மனிதாபிமானம்..

 22.  ஷாப்பிங் மால்களில் பேரம் பேச வக்கில்லாத நாம்தான்,
சாலையோரத்து ஏழை வியாபாரியிடம் வெட்கமே இல்லாமல் பேரம் பேசுகிறோம்.

23.  ஆளே இல்லாத செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுறீங்க  - சரிதான்.. ஆள் இருக்கிற எங்க ஊருக்கு எப்படா பஸ் விடுவீங்க?

24.  அறிவார்ந்த நண்பர்களே! இது போன்ற விழிப்புணர்வு கருத்துக்களை எப்போதும் ஆதரிக்க வேண்டுமாய் மனமுவந்து வேண்டுகின்றேன்!!!
-----------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.2.17

சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!


சனீஷ்வர பாதிப்பிற்கான பரிகாரம்!

யாரும் சனியோட கடுமையால் கடுமையாக பாதிக்க படக் கூடாது என்பதற்காக சித்தர்கள் பரிந்துரைக்கும் மிக எளிய பரிகாரம்...

சனிக்கிழமை அன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அரிசியாக அல்லது அதை நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்து விட்டு, அரசமரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை மூன்று சுற்று சுற்றி விட்டு அந்த அரிசியை விநாயகரை சுற்றிப் போட்டால்,அதை எறும்பு தூக்கிச் செல்லும்.

அப்படித் தூக்கி சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மை விட்டுப் போய் விடும். வன்னி மரத்தடி விநாயகராக இருந்தால் ,அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதைச் செய்யவும்.

அப்படி தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழை காலத்திற்காக சேமித்து வைத்துக் கொள்ளும்.

எறும்பின் எச்சில் அரிசி மாவின் மீது பட்டதும் அதன் கெடும் தன்மை நீங்கி விடும்.இந்த பச்சரிசிமாவை சாப்பிடுவதற்கு இரண்டரை வருடங்கள்
எடுத்துக் கொள்ளும்.

இப்படி இரண்டே கால் வருடங்கள் வரை எறும்புக் கூட்டில் இருப்பதை முப்பத்து முக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள்.இரண்டரை
ஆண்டிற்கு ஒருமுறை கிரக நிலை மாறும்.அப்படி மாறியதும்,அதன் வலு இழந்து போய் விடும்.இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை
எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பேர்களுக்கு அன்னதானம் செய்ததற்குச் சமம்.

எனவே இது எத்தனை புண்ணியம் வாய்ந்த செயல் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதனால்,சனிபகவானின் தொல்லைகள் நம்மைத் தாக்காது.

ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,அர்த்தாஷ்டகச்சனி,சனி மகா தசை நடப்பவர்களுக்கு , இந்த செயல் ஒரு மிக பெரிய வரப்ரசாதம் ஆகும்.
====================================================
படித்தேன்; பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.2.17

உங்களின் ஜாதகம் சரியா எழுதப் பெற்றுள்ளதா?

உங்களின் ஜாதகம் சரியா எழுதப் பெற்றுள்ளதா?

பஞ்சாங்கத்தில் இரண்டு முறைப் பஞ்சாங்கள் உள்ளன.
1.வாக்கியப் பஞ்சாங்கம். 2. திருக்கணிதப் பஞ்சாங்கம்.
இரண்டுமே அதிகாலத்தவைதான். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடுகள் உள்ளது.

தமிழ் நாட்டில் பெரும்பாலும் எல்லா ஜோதிடர்களுமே வாக்கியப் பஞ்சாங்கத்தைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள். அதுவும் தென் மாவட்டங்களில் மிக அதிகமாக வாக்கியப் பஞ்சாங்கமே பயன் படுத்தப்படுகிறது,

இரண்டிலுமே ஏராளமான பஞ்சாங்க புத்தகங்களை ஆண்டு தோறும் வெளிடுகிறார்கள். அவற்றுள் பாம்பு வாக்கிய பஞ்சாங்கமும், வாசன்
திருக்கணிதப் பஞ்சாங்கமும் பிரபலமானவை!




தமிழ் நாட்டைத் தவிர அகில இந்திய அளவில் கேரளா, கர்நாடகா, 
ஆந்திரா உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலுமே திருக்கணிதத்தைதான் பயன் படுத்துகிறாகள், தமிழ் நாட்டில் மட்டும்தான் வாக்கிய பஞ்சாங்கத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வாக்கிய பஞ்சாங்கத்தில் உள்ள அயனாம்சக் குளறுபடிகள் இன்னும் சரி செய்யப்படவில்லை. திருக்கணிதம் கணித அடிப்படியில் கணிக்கப்
படுவதால் மிகத் துள்ளியமாக இருக்கும்

ஆனால் கணினி ஜாதகங்களில் கணித்தால் இந்த இரண்டு முறைகளிலுமே உங்கள் ஜாதகம் கிடைக்கும். ஆனால் உங்கள் வீட்டில், உங்கள்
பெற்றோர்கள் எழுதிவைத்துள்ளது போலவே உங்களுடைய ஜாதகம் வேண்டுமென்றால், கண்ணை மூடிக்கொண்டு வாக்கியத்தில் கணிப்பதே உங்கள் விருப்பப்படி இருக்கும்.

இந்திய அரசும் (Ministry of Earth Sciences) , நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும் திருக்கணிதத்தைதான் பயன் படுத்துகின்றன.



வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திம் உள்ள வேறு பாட்டினால் மாற்றி எழுதும்போது, சிலருக்கு லக்கினமே மாறிவிடும். சிலருக்கு கிரகங்களின் நிலைப்பாடுகள் மாறியிருக்கும், சிலருக்கு நட்சத்திரம் மாறியிருக்கும். ஆகவே  குழம்பிப் போய்விடுவீர்கள்.

உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்:


   வாக்கியத்தில் கணிக்கப்பெற்றது


திருக்கணிதத்தில் கணிக்கப்பெற்றது

இந்த இரண்டும் ஒருவருடையதுதான். பிறப்பு விபரங்களைக் கவனியுங்கள். இரண்டிலுமே ஒன்றாகத்தான் இருக்கும் தேதி: 5-11-1990 - நேரம்: மதியம் 2.40 

ஆனால் வாக்கியத்தில் ரோஹிணி என்று வரும் நட்சத்திரம், திருக்கணிதத்தில் மிருகசீர்ஷம் என்று மாறியிருக்கும். அதுபோல நட்சத்திரம் மாறியதால் பிறப்பு மகா திசை இருப்புக்களும் மாறியிருக்கும். முன்னதில் சந்திர மகா திசை இருப்பு 1 வருடம் 9 மாதங்கள் 28 நாட்கள் என்றுள்ளது அடுத்ததில் செவ்வாய் மகா திசை 6 வருடம் 8 மாதங்கள் 9 நாட்கள் என்று மாறியிருக்கும்.

அதுபோல ஐந்தாம் அதிபதி புதனின் இருப்பிடம் மாறியிருக்கும். முன்னதில் 5ம் வீட்டிற்கு 6ம் இடத்தில் - விருச்சிகத்தில் இருக்கும் புதன் அடுத்ததில் 5ம் அதிபதி தன் வீட்டிற்கு 5ல் - துலாமில் இருப்பார்

இதுபோல சிலருக்கு லக்கினமே மாறிவிடும். வாக்கியத்தில் சிம்மம் என்று வருவது, திருக்கணிதத்தில் கடகம் என்று வரும். 

லக்கினம் மாறினால் என்ன ஆகும்? எந்த லக்கினத்தை  வைத்துப் பலன் சொல்வது?

ஆகவே உங்கள் ஜாதகத்தை சரியாக கணித்து வைத்துக்கொள்ளுங்கள். திருக்கணிதம்சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

என்னிடம் உரிய மென்பொருள் உள்ளது. 33 பக்கங்கள் விரிவான ஜாதக நிலைகள் கொடுக்கப்பெற்றிருக்கும். இராசி, நவாம்சம், மற்றும் 10 உபரி அட்டவணைகள். அஷ்டகவர்க்கம், செவ்வாய் தோஷ நிர்ணயம், கிரக யுத்த நிர்ணயம், முழு தசா & புத்தி விபரங்கள் எல்லாம் இருக்கும். அத்துடன் உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கள், அவை எதனால் - அதாவது எந்த கிரக அமைப்புக்களால் ஏற்பட்டுள்ளது, அந்தந்த யோகங்களுக்கான பலன்களுடன் இருக்கும்.

விருப்பப் பட்டால் எழுதுங்கள். உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் வீட்டிலுள்ளவர்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் கூட முழு ஜாதகம் கிடைக்கும். பி.டிஎஃப் கோப்பு வடிவில் கிடைக்கும். கணினியில் வைத்துக் கொள்லலாம் அத்துடன் அச்செடுத்துக் கையிலும் வைத்துக்கொள்ளலாம்

அது விலை கொடுத்து வாங்கிய மென் பொருள். ஆகவே நீங்கள் சிறிது கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்.

விருப்பம் உள்ளவர்கள் மட்டும் எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி classroom2007@gmail.com சப்ஜெக்ட் பெட்டியில் திருக்கணித ஜாதகம் என்பதை மட்டும் தவறாமல் குறிப்பிடுங்கள்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

10.2.17

திருமணத் தடையா? இதைப் படியுங்கள்!


திருமணத் தடையா? இதைப் படியுங்கள்!

திருமண தடை உள்ள ஆண்களுக்கு:

பல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா ?? வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்!

ஒரு ஊரில் இருந்த குடியானவருக்கு மூன்று மகள்கள்!

அவரின் சகோதரியும், சகோதரியின் கணவரும் இறந்த காரணத்தால், அவர்களின் மகனை தன்னோடு வைத்து கொண்டு தன்னிடம் இருந்த
விவசாய பூமியில் பாடுபட்டார்!

அந்த இளைஞர், அதாங்க அவரின் அக்கா மகனுக்கு இந்தக் குடியானவர் எந்தவொரு கூலியும் கொடுப்பது இல்லை!!!!

மாப்பிள்ளை, உனக்கென்று மூன்று முறைப்பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று உறுதி மொழி கொடுத்து வேலை வாங்கினார்.

அந்த இளைஞனும் கடுமையாகப் பாடுபட்டார்.

முதல் பெண்ணை வெளியூரில் இருந்த பெரிய பணக்கார வீட்டிற்கு
திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.

இளைஞனும்  தன் மாமாவிடம், ”என்ன மாமா எனக்கு ஒருத்தியை கட்டி கொடுப்பதாக சொன்னீர்கள்" என்று கேட்க அந்த குடியாவனும்,
"இல்லை மாப்பிள்ளை இன்னமும் ரெண்டு பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களில் ஒருத்தி உனக்குத்தான்”"என்று சொல்லிட்டார்

சரி,  மாமாவே சொல்லிட்டாரே என்று அந்த இளைஞனும் பொறுத்து கொண்டார்

அப்புறம் அடுத்ததாக இருந்த இரண்டாவது பெண்ணை வேறு ஒரு நல்ல வசதியான இடத்தில் பேசி முடித்து விட்டார்!

கூலியும் கொடுக்காமல் இருந்ததால், குடியாவரும் நல்ல வசதியுள்ளவராக ஆகிட்டார்.

முறைப் பையனும், “இந்தப் பெண்னையாவது கட்டி வைப்பீங்கன்னு பார்த்தேனே மாமா” என்றார்!

குடியாவரும், “என்ன மாப்பிள்ளை இன்னொருத்தி இருக்காள் அவளை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்றார்!

அந்த இளைஞனும், “அதுக்கு என்ன சாட்சி?  முன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே?” என்று கேட்டார்.

அந்த விவசாய பூமிக்கு பக்கமாக மலைப்பாங்கான ஏரியாவில் ...அந்த சமயத்தில் *ஒரு கரடி* அந்த பக்கமாகப் போய் கொண்டு இருந்தது.
இந்த குடியாவரும் அந்த முறைப் பையனிடம், “அதோ அந்தக் கரடி சாட்சியாக சொல்கிறேன், மாப்பிள்ளை, கடைசிப் பெண்ணை உனக்கே கட்டி வைக்கிறேன்” என்று சொல்லி அப்போதைக்குக்கு மேட்டரைத் தள்ளிப் போட்டார்.

ஆனால் சொன்னபடி நடக்காமல் மூன்றாவது பெண்ணையும் வேறு இடத்திற்கு சம்பந்தம் பேசி விட்டார்.

கூலி வாங்காமல் உழைத்து கொடுத்த இளைஞர் மன்னனிடம் சென்று முறையிட்டார்!

சபைக்கு அழைக்கப்பட்டார் குடியாவர்.

மன்னர் விசாரிக்க, “தான் தன் பெண்ணை கட்டி கொடுப்பதாக சொல்லவில்லை” என்று குற்றத்தை மறுத்தார்

"அவன் என் அக்கா மகன். அவனுக்கு உழைத்த கூலி என்னிடம் உள்ளது. அவனுக்குத் திருமணம் அமையும்போது கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்!

இளைஞனோ எனக்கு பெண்ணைத்தான் கட்டி வைக்கவேண்டும். கூலி வேண்டாம் என்று மறுத்தார்.

அப்போது அந்த குடியாவரும் ”நான் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னதிற்கு யார் சாட்சி?” என்று கொக்கி போட்டார்.

மன்னரும், ”ஆமாம், சாட்சி இல்லாமல் வழக்கு தீர்வாகாது. உன் சாட்சிகள் இருந்தால் நாளைக்கு ஆஜர் செய் "என்று சொல்லிட்டார்

அந்த இளைஞர் ”மாமா சொன்னதிற்கு கரடிதான் சாட்சி மன்னா” என்று சொல்ல அரசவையில் ஏக சிரிப்பு

ஆனால் மறுநாள் அந்த அரசவையில் நேரடியாக கரடி சாட்சி சொல்ல வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி அந்த பையனும் மூன்றாவது முறை பெண்ணின் கழுத்தில் தாலி யைக் கட்டினார்.

கரடியாக அந்த மலையில் வாழ்ந்த திருமூலர்தான் அங்கே சாட்சி சொன்னது!!!!

அந்த திருமணம் நடந்த இடம்: சேலம், உத்தமசோழபுரம்!

அவ்வூரில் *கரபுரநாதர் சன்னதி* என்ற சித்தரின் சந்நதி உள்ளது.

திருமணம் கூடிவராமல் இருக்கும் வாலிபர்கள் அங்கே கோயிலின் உள்ளே இருக்கும் *கரடிசித்தரை'(திருமூலர்)* வழிபட்டு பின்னர் ஈஸ்வர தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்!

மேலதிகத் தகவலுக்கு இதையும் படியுங்கள்: http://karapuranathar.blogspot.in/2014/12/3000.html

படித்தேன், பகிர்ந்தேன்
பதிவிட்ட நண்பருக்கு நன்றி
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.2.17

வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?


வாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - எது சரியானது?

கீழே உள்ள கட்டுரை ஒரு பத்திரிக்கையில் வந்தது. உங்களின் தகவலுக்காக அதை அப்படியே கொடுத்துள்ளேன்!
---------------------------------------------------------------------------------------------------------------------
அதிசாரம் எனப்படும் இந்த சனியின் நகர்வு திருக்கணிதப்படி மட்டுமே நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கப்படி சனிபகவான் இன்னும் விருச்சிக ராசியிலேயே ஜென்மச்சனியாக நிலை கொண்டிருக்கிறார்.

வாக்கியப் பஞ்சாங்கங்கள் பிழையானவை. கிரகங்களின் உண்மை இருப்பு நிலையை அவை சொல்லவில்லை என்பதை அடிக்கடி எழுதி வருகிறேன். பொதுவாக அனைத்து பெயர்ச்சிகளிலும் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கங்களுக்கு இடையே வித்தியாசங்கள் உண்டு. இவற்றில் சனி விஷயத்தில் அதிகமான வித்தியாசங்கள் ஏற்படும்.

எந்தவிதமான பஞ்சாங்கமாக இருந்தாலும் அவற்றை வெளியிடுபவர்கள் கிரகங்களின் அருகில் போய் நின்று கொண்டு அதன் இயக்கத்தை கண்டுணர்ந்து குறிப்பது இல்லை. இதற்கென சில கூட்டல், கழித்தல் முறைகள் இருக்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு மூலச் சமன்பாடு என்ற ஒன்று இருக்கிறது. அதை ஜோதிடப்படி சித்தாந்தம் என்று சொல்லுவோம்.

அதன்படி முந்தைய ஆண்டுகளில் சனி இந்த இடத்தில் இருந்தது, பூமி இங்கே இருந்தது. இந்த வருடம் சனி இவ்வளவு நகர்ந்திருக்கிறார், பூமி இவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது. எனவே சனி, பூமியில் இருந்து இவ்வளவு தூரம் இருக்கிறார் என்பதை மூலச் சமன்பாட்டின் தொடக்கத்தை வைத்து கணக்கீட்டு முறையிலேயே வாக்கிய, திருக்கணித, பஞ்சாங்க கர்த்தாக்கள் கிரக நிலையை அறிவிக்கிறார்கள்.

இதில் வாக்கிய பஞ்சாங்கத்தில் ஆதியில் ஏற்பட்ட சிறு வித்தியாசங்கள் திருத்தப்படாமல் கூடிக் கொண்டே போய், அதாவது நூற்றாண்டுகளுக்கு முன்பு நிமிடக் கணக்கில் ஆரம்பித்த ஒரு வித்தியாசம் இன்றைக்கு ஒவ்வொரு வருடமும் கூடிக் கொண்டே போய் நிமிடம், மணியாகி, மணி நாளாகி, நாட்கள் மாதங்கள் என்ற நிலையில் வந்து நிற்கிறது.

இவைதான் திருக்கணிதத்திற்கும், வாக்கியத்திற்கும் கிரகநிலைகள் மாறுபடுவதற்கான காரணம். சமன்பாடுகளின் மூலங்களில் மட்டுமே கிரக வித்தியாசத்தை திருத்த முடியும் என்பதால் இதை எப்படி நேர் செய்வது என்ற குழப்பத்தில் வாக்கியப் பஞ்சாங்கள் தெளிவற்ற ஒரு நிலையில் இருக்கின்றன.

சில ஜோதிடர்கள் வாக்கியம் ஞானிகள் அருளியது. திருக்கணித முறைகள் சமீபத்தில் உருவாக்கப்பட்டது. எனவே ஞானிகள் உருவாக்கிய வாக்கியத்தை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் அருகதை இல்லை என்று தவறாக நினைக்கிறார்கள்.

உண்மையில் வாக்கியத்தை விட திருக்கணிதமே காலத்தால் முற்பட்டது. திருக்கணிதமே பழமையானது. ஜோதிடத்தின் ஆதி பிதாமகர்களான ஆரியபட்டர் வராகமிகிரர் போன்ற ஞானிகள் உபதேசித்தது திருக்கணித முறையைத்தான்.

நமது வானவியல் சாஸ்திரத்தின் ஆதிஞானிகளில் ஒருவரான ஆரியபட்டர் தன்னுடைய பெருமைமிகு நூலான சூரியசித்தாந்தத்தின் முதல் ஸ்லோகத்திலேயே தான் பிரம்மாவின் வழித்தோன்றல் எனவும் இரண்டாவதில் மயன், நம்முடைய மேலான இந்துமதத்தின் ஆதிநாயகனான சிவம் எனும் சூரியனை நோக்கித் தவமிருந்து இந்த பிரபஞ்சத்தின் சூட்சுமங்களையும், சூரியனைச் சுற்றி வரும் கிரகங்கள் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது போன்ற விவரங்களையும் தெரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார். இந்த மயன்தான் மேற்குறிப்பிட்ட பிரபஞ்ச ரகசியங்களை நாரதர் உள்ளிட்ட ஏழு ரிஷிகளுக்கும் தெரியப் படுத்தினார் என்றும் ஆரியபட்டர் தெளிவாகச் சொல்கிறார்.

13-ம் நூற்றாண்டு வரை ஆரியபட்டரின் திருக்கணித முறையே நம்முடைய பாரதத்தில் இருந்து வந்தது. 13-ம் நூற்றாண்டுக்குப் பிறகே தவறான வாக்கிய முறை இங்கே கையாளப்பட்டது. ஆரியபட்டரை அடுத்து வந்தவரான வரருசி அன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ப தன்னுடைய வாக்கிய சித்தாந்தத்தை வெளியிட்டார். இந்த வாக்கியத்திலும் காலத்திற்கேற்ப மாறுதல்களை செய்து கொள்ளவும் சொன்னார்.

ஒவ்வொரு கால கட்டத்திலும் கிரக இருப்பில் ஏற்படும் மாறுதல்களை மாற்றிக் கொள்ள ஞானிகள் நம்மை அனுமதிக்கவே செய்திருக்கிறார்கள். ஆனால் வரருசியின் வாக்கிய சித்தாந்தம் அவ்வப்போது திருத்தப்படாமல் விடப்பட்டதால் இன்றைக்கு திருத்தவே முடியாத ஒரு தவறான நிலையில் வந்து நிற்கிறது.

விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா திருக்கணிதப்படியான கிரக இருப்புகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளது. உண்மையைச் சொல்லப் போனால் நாசாவிற்கே விண்வெளி சமன்பாடுகளில் மூலக்கணிதங்களை அளித்தது திருக்கணித முறைகள்தான்.

வாக்கியத்திற்கும், திருக்கணிதத்திற்கும் உள்ள முரண்பாட்டை இன்னும் துல்லியமாக ஆராயப் போவோமேயானால், பூமி ஒரு வருடத்தில் சூரியனைச் சுற்றி வரும் நிரூபிக்கப்பட்ட துல்லியமான கால அளவான 365 நாட்கள், 6 மணி, 9 நிமிடம் என்பதை, வாக்கியங்களில் 3 நிமிடத்தை கூட்டி 365 நாட்கள், 6 மணி, 12 நிமிடம் என கணக்கிடுவதால் வித்தியாசம் வருகிறது.

தங்களுடைய கணிப்புகள் தவறுவதை உணர்ந்து வாக்கிய பஞ்சாங்க தயாரிப்பாளர்கள் தங்கள் முறையின் ஆதார கர்த்தரான வரருசியின் மூல முறையில் கணிப்பதை இப்போது கைவிட்டு விட்டனர். இது கிட்டத்தட்ட வாக்கிய முறை தவறு என்பதை ஒத்துக்கொண்டதற்கு சமம்தான்.

ஆனால் பலநாள் தவறை ஒரே முறையில் திருத்துவது எப்படி என்பதுதான் தற்போது பெரிய குழப்பத்தில் உள்ளது. இதுபோன்ற குழப்பங்களினால் சனிப்பெயர்ச்சி சில சமயம் இரண்டு பஞ்சாங்கங்களிலும் மூன்றரை மாத வித்தியாசம் வர ஆரம்பித்து விட்டது. எனவே அனைவரும் கிரக இருப்பின் உண்மையான நிலைமையை கூறுகின்ற திருக்கணித முறைக்கு மாறி அதனைக் கடைப்பிடிப்பது மட்டுமே இதற்கு ஒரு தீர்வாக இருக்கும்.

இந்த குழப்பங்களால் பாதிக்கப்படுவது ஜோதிடம் அறியாத பொதுமக்கள் தான். நட்சத்திர இறுதி நேரங்களில் பிறக்கும் ஒரு குழந்தைக்கு இரண்டு பஞ்சாங்கங்களும் வேறு வேறு நட்சத்திரத்தை சொல்லும் போது சாதாரண பொது மக்கள் ஜோதிடத்தையே குறை சொல்லும் நிலைமை ஏற்படுகிறது.

தவறான கணிப்பால் வாக்கிய பஞ்சாங்கப்படி சில நேரம் ஜாதகரின் லக்னமே மாறி விடுகிறது. இது சாஸ்திர துரோகம். இதை மாற்ற அனைத்து ஜோதிடர்களும் துல்லியமான கிரக இருப்பை சொல்லும் திருக்கணித பஞ்சாங்கங்களை மட்டுமே பின்பற்றுவது நல்லது.

மற்ற மாநிலங்களில் வாக்கியமா? திருக்கணிதமா? எது நடைமுறையில் உள்ளது?

கடந்த 2010-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாரத்தில் இந்தியாவில் இருக்கும் வான சாஸ்திர நிபுணர்கள், பஞ்சாங்க கணிதர்கள் ஆந்திர மாநில திருப்பதியில் ஒன்று கூடி இனி இந்தியாவில் திருக்கணித அடிப்படையில் மட்டும்தான் பஞ்சாங்கங்களை வெளியிட வேண்டும். திருக்கணிதமே சரியானது மற்றும் துல்லியமானது என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

அதையொட்டி இப்போது தமிழ்நாட்டை தவிர்த்து அனைத்து மாநிலங்களிலும் திருக்கணித முறை மட்டுமே பின்பற்றப்படுகிறது. உலகிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் தவறு என்று தெரிந்தும் வாக்கிய பஞ்சாங்கங்கள் பின்பற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நமது பக்கத்து மாநிலங்களான கேரளத்திலும், ஆந்திரத்திலும் கூட திருக்கணித முறைப்படிதான் கோவில் திருவிழாக்கள், ராகு-கேது, குரு, சனி ஆகிய பெயர்ச்சிகள் நடத்தப்படுகின்றன. வாக்கியப் பஞ்சாங்கத்தை கோவில்களில் பின்பற்றும் முறை தமிழ்நாட்டை தவிர்த்து மற்ற மாநிலங்களில் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டது.

ஜன.27, 2017 மாலைமலரில் வெளியான கட்டுரை!

நமக்கு அறியத் தந்தவர் நமது வகுப்பறை மாணவரான ஆனந்தமுருகள்
பத்திரிக்கைக்கும், அறியத்தந்த மாணவருக்கும் நமது நன்றி உரித்தாகுக!
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.2.17

எட்டுத் திசைகளிலும் எப்போது புகழ் கிடைக்கும்?


எட்டுத் திசைகளிலும் எப்போது புகழ் கிடைக்கும்?

ஸ்ரீ நரசிம்மரை வழிபடுங்கள்: அப்போது கிடைக்கும்!

ஸ்ரீ நரசிம்மர் வழிபாடு:-
--------------------------------
1. நரசிம்மரைத் தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும்.

2. நரசிம்மரை உபாசனா தெய்வமாக ஏற்றுக் கொள்பவர்களுக்கு 8 திசைகளிலும் புகழ் கிடைக்கும்.

3. நரசிம்ம அவதாரம் காரணமாகவே மறந்து போன வேதங்களும், பொருள் புரியாத மொழிகளும், விடுபட்ட யாகங்களும் சாதாரண நிலை நீங்கி, உயர் நிலையைப் பெற்றன.

4. நூற்றி எட்டு திவ்ய தேசங்களில் ``சிங்கவேள்குன்றம்'' என்பதும் ஒன்று. இத்தலம் மீது பாடப்பட்டுள்ள பதிகங்கள், பாசுரங்கள், செய்திகள் அனைத்தும் நரசிம்ம அவதாரம் மட்டுமே இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

5. நரசிம்ம அவதாரத்தின் முதல் குறிப்பு பரிபாடலில் காணப்படுகிறது.

6. நரசிம்மருக்கு நரசிங்கம், சிங்கபிரான், அரிமுகத்து அச்சுதன், சீயம், நரம் கலந்த சிங்கம், அரி, ஆனரி ஆகிய பெயர்களும்
உண்டு.
.
7. திருமாலின் பத்து அவதாரங்களில் பரசுராமன், பலராமன் இருவரும் கோபத்தின் வடிவமாக திகழ்பவர்கள். இதனால் அந்த இரு அவதாரங்களும் வைணவர்களால் அதிகம் வணங்கப்பட வில்லை. ஆனால் நரசிம்ம அவதாரம் உக்கிரமானதாக கருதப்பட்டாலும் பக்தர்கள் அவரை விரும்பி வணங்குகிறார்கள்.

8. நரசிம்ம அவதாரம் பற்றி முதன் முதலில் முழுமையாக சொன்னவர் கம்பர்தான்.

9. திருத்தக்கதேவர் தனது சீவக சிந்தாமணியில், ``இரணியன்பட்ட தெம்மிறை எய்தினான்'' என்று நரசிம்ம அவதாரம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

10. இரணியனின் ரத்தத்தை குடித்ததால் சீற்றம் பெற்ற நரசிம்மரின் ரத்தத்தை சிவன் சரபப்பறவையாக வந்து குடித்தார். இதன்பிறகே நரசிம்மரின் சீற்றம் தணிந்ததாக சொல்வார்கள். இந்த தகவல் அபிதான சிந்தாமணியில் கூறப் பட்டுள்ளது.
.
11. சோளிங்கரின் உண்மையான பெயர் சோழசிங்கபுரம். நரசிம்மரின் பெருமையை பெயரிலேயே கூறும் இந்த ஊர் பெயரை ஆங்கிலேயர்கள் சரியாக உச்சரிக்க இயலாமல், அது சோளிங்கர் என்றாகிப் போனது.

12. சிங்க பெருமாள் கோவில், மட்டப்பள்ளி, யாதகிரிகட்டா, மங்கள கிரி ஆகிய தலங்களில் நரசிம்மர் சன்னதிகள் குகைக் கோவிலாக உள்ளன.

13. கீழ் அகோபிலத்தில் நாம் கொடுக்கும் பாகை நைவேந்தியததில் பாதியை நரசிம்மர் ஏற்றுக் கொண்டு மீதியை அவர் வாய் வழியே வழிய விட்டு நமக்கு பிரசாதமாக தருவதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

14. நங்கநல்லூர் நரசிம்மர் ஆலயம் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்திய தொல்பொருள் ஆய்வாளர்கள் இதை 1974-ம் ஆண்டு கண்டுபிடித்து வெளிப்படுத்தினார்கள்.

15. சிவனை கடவுளாக ஏற்ற ஆதிசங்கரர், ஸ்ரீலட்சுமி நரசிம்மரைப் போற்றித் துதித்ததும் அவருக்கு உடனே நரசிம்மர் காட்சி கொடுத்தார்.

16. நரசிம்ம அவதாரத்தை எப்போது படித்தாலும் சரி, படித்து முடித்ததும் பானகம், பழவகைகள், இளநீரை நிவேதனமாக படைத்து வணங்குதல் வேண்டும்.

17. "எல்லா பொருட்கள் உள்ளேயும் நான் இருக்கிறேன்'' என்பதை உணர்த்தவே பகவான், நரசிம்ம அவதாரம் எடுத்தார். எனவே நரசிம்மரை எங்கும் தொழலாம்.

18. திருமாலின் அவதாரங்களில் நரசிம்ம அவதாரமே திடீரென தோன்றிய அவதாரமாகும்.

19. நரசிம்மரின் வலது கண்ணில் சூரியனும், இடது கண்ணில் சந்திரனும், இடையில் புருவ மத்தியில் அக்னியும் உள்ளனர்.

20. நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம்.

21. நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

22. நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர் கூறுகையில், `An Electric Phenomenon' என்று கூறியுள்ளார்.

23. இரண்யகசிபுவை வதம் செய்த போது எழுந்த நரசிம்மரின் சிம்ம கர்ஜனை 7 உலகங்களையும் கடந்து சென்றதாக குறிப்புகள் உள்ளது.

24. மகாலட்சுமிக்கு பத்ரா என்றும் ஒரு பெயர் உண்டு. இதனால் நரசிம்மனை பத்ரன் என்றும் சொல்வார்கள். பத்ரன் என்றால் மங்களமூர்த்தி என்று அர்த்தம்.

25. பகவான் பல அவதாரங்களை எடுத்தாலும், அவனுடைய நாமங்கள் இறுதியில் நரசிம்மரிடத்திலேதான் போய் முடியும் என்று கருதப்படுகிறது.

26. சகஸ்ரநாமத்தில் முதன் முதலாக நரசிம்ம அவதாரம்தான் இடம் பெற்றுள்ளது.

27. நரசிம்ம அவதாரத்தை எதைக் கொண்டும் அளவிட முடியாது என்ற சிறப்பு உண்டு.

28. ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

29. நரசிம்ம மந்திரம் ஒரு எழுத்தில் தொடங்கி, ஒரு லட்சத்து நூற்றி முப்பத்திரண்டு என்று விரிந்து கொண்டே போய் பலன் தரக்கூடியது.

30. நரசிம்மர் எங்கெல்லாம் அருள் தருகிறாரோ, அங்கெல்லாம் ஆஞ்சநேயர் நிச்சயம் இருப்பார்.

31. வேதாத்ரியில் உள்ள யோக நரசிம்மர் இடுப்பில் கத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் இவரை வணங்கி சென்றால் நல்ல பலன் கிடைக்கும்.

32. வாடபல்லி தலத்தில் உள்ள நரசிம்மரின் மூக்குக்கு எதிரில் ஒரு தீபம் ஏற்றப்படும். அந்த தீபம் காற்றில் அசைவது போல அசையும், நரசிம்மரின் மூச்சுக் காற்று பட்டு அந்த தீபம் அசைவதாகக் கருதப்படுகிறது. அதே சமயத்தில் நரசிம்மரின் கால் பகுதியில் ஏற்றப்படும் தீபம் ஆடாமல் அசையாமல் நின்று எரியும்.

33. மட்டபல்லியில் உள்ள நரசிம்மரை வணங்கினால் மன சஞ்சலங்கள் நீங்கும்.

34. நரசிம்மரை வழிபடும் போது "ஸ்ரீநரசிம்ஹாய நம'' என்று சொல்லி ஒரு பூ-வைப் போட்டு வழிபட்டாலே எல்லா வித்தையும் கற்ற பலன் உண்டாகும்.

35. "அடித்த கை பிடித்த பெருமாள்'' என்றொரு பெயரும் நரசிம்மருக்கு உண்டு. அதாவது பக்தர்கள் உரிமையோடு அடித்து கேட்ட மறு வினாடியே உதவுபவன் என்று இதற்கு பொருள்.

36. நரசிம்மனிடம் பிரகலாதன் போல நாம் பக்தி கொண்டிருக்க வேண்டும். அத்தகைய பக்தி இருந்தால் அதைகொடு, இதை கொடு என்று கேட்க வேண்டியதே இல்லை.

37. எல்லா வற்றிலுமே நரசிம்மர் நிறைந்து இருக்கிறார். எனவே நீங்கள் கேட்காமலே அவர் உங்களுக்கு வாரி, வாரி வழங்குவார். நரசிம்மரை ம்ருத்யுவேஸ்வாகா என்று கூறி வழிபட்டால் மரண பயம் நீங்கும்.

38. ஆந்திராவில் நரசிம்மருக்கு நிறைய கோவில் இருக்கிறது. சிம்ஹசலம் கோவிலில் மூலவரின் உக்கிரத்தை குறைக்க வருடம் முழுவதும் சிலையின் மீது சந்தனம் பூசி மூடி வைத்திருப்பார்கள். வருடத்தில் ஒரு நாள் மூலவரை சந்தனம் இல்லாமல் பார்க்க முடியும்.

39. மங்களகிரி கோவிலில் உக்கிரத்தை குறைக்க பானகம் ஊற்றி கொண்டே இருப்பார்கள். மூலவரின் பெயரும் பானக லட்சுமி நரசிம்ம சுவாமி.

படித்தேன்: பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.2.17

ஓட்ஸ்ஸூம், நூடூல்ஸூம், பெப்சியும் எப்படி வந்தது?


ஓட்ஸ்ஸூம்,  நூடூல்ஸூம், பெப்சியும் எப்படி வந்தது?

நாமும் நம் முன்னோர்களும்!

நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல: விவசாயத்தை நன்கு அறிந்த மேதைகள்!

ஒரு விவசாயி ஒரு இடத்தை வாங்கும் முன்பாக, முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் அங்கே தங்குவார்.

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உயிர்’ இருக்கிறதென்று அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லையென்று
அர்த்தம்.

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர். இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால், சேவல் மண்ணைக் கீறி அதனுள்
உள்ள புழுக்களைத் தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்குள் மேய
விடுவாராம். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுமாம்.

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத்தில் தோண்டினால்
வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.

”அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவர்கள் உயிரைக் காப்பாற்ற
அவர்களையே மிரட்டிக் காசு பறிப்பது எப்படி உண்மையான அறிவியல் வளர்ச்சியாகும்?

ஆனால் இயற்கையை கடவுளாகப் பாவித்து வணங்கி, இயற்கையோடு வாழும் மனிதனை படிப்பறிவில்லாதவன் என்கின்றார்கள். அது எப்படி நியாயம்!

நம் முன்னோர்கள் பல விஷயங்கள் நாம் கற்றுக்கொண்டு செய்வதற்காக அள்ளித் தெளிவித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். நாம்தான் கற்றுக்கொள்ள
வேண்டும்!

களி சாப்பிடுவதைப் பெருமையாக நினைத்திருந்தால், ஓட்ஸ்ஸூம்,  நூடூல்ஸூம் வந்திருக்காது.

கூழையும்,  மோரையும் பருகியிருந்தால் கோக்கும் பெப்சியும் வந்திருக்காது.

கடலை மிட்டாயையும்,  எள்ளு உருண்டையையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் 5 ஸ்டார் சாக்லேட்ஸ் வந்திருக்காது.

வேட்டி கட்டி பழகி இருந்தால் பீட்டர் இங்கிலாண்ட் வந்திருக்காது.

தாவணி கட்டி பழகியிருந்தால் ஜீன்ஸ் வந்திருக்காது.

மஞ்சள் பூசிப் பழக்கியிருந்தால் பன்றி கொழுப்பில் தயாரான முக கிரீம்கள் வந்திருக்காது.

எல்லாம் நம்மை அறியாமல் நம்மைப் பிடித்துக் கொண்டதாகும்.

மாற்றத்தின் விழைவு ஜல்லிக்கட்டில் வந்து நிற்கிறது. விவசாயம் தழைக்க இனியேனும் சூளுரைக்க வேண்டும்.  கலாச்சாரம் சார்ந்து பழக்கங்களை
மாற்றுவோம். ரோட்டோரங்களில் சீம வாத நாரயண மரத்திற்குப் பதிலாக வேப்பமரம் , புளியமரங்களை நடுவோம்.

இனியேனும் விழித்துக் கொண்டு, கடைக்குச் சென்று ப்ரஷ் என்பதை விட வாசலில் வரும் பாட்டியிடம் கீரை, காய்கறிகளை வாங்கலாம்.

வாடியிருந்தாலும் உண்மையில் அதுதான் ப்ரஷ். (Fresh)
--------------------------------------------------------------------------------
படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியா

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.2.17

எடுத்துக் கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்?

எடுத்துக் கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்?

பழநிமலை முருகப் பெருமானைப் பற்றிய சில அதிசயத் தகவல்கள்

1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கப்படுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவைகளில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றப்படுகிறது. அதாவது

முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசு விபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்கபடுகிற ஒரு பிரசாதம் அது கிடைப்பது மிக புண்ணியம்.

2. ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும்.

3. அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது.

4. இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சார்த்தபடுகிறது.

5. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தனம் வைக்கப்படும். முன்னொரு காலத்தில் சந்தன காப்பை முகத்திலும் சார்த்திக் கொண்டிருந்தனர். பின்னாளில் இந்த முறை மாற்றப்பட்டது.

6. தண்டாயுதபாணி விக்ரகம் மிகுந்த சூடாக இருக்கும். ஆதலால் இரவு முழுவதும், அந்த விக்கிரகத்திலிருந்து நீர் வெளிப்படும். இந்த நீரை அபிஷேக தீர்த்ததுடன் கலந்து, காலை அபிஷேகம் நடக்கும் போது, அங்கு இருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகம் செய்கிறார்கள்.

7. தண்டாயுதபாணி சிலையில், நெற்றியில் ருத்ராக்ஷம், கண், மூக்கு, வாய், தோள்கள், கை, விரல்கள் போன்றவை மிக அற்புதமாக உளியால் செதுக்கபட்டது போல் தெளிவாக இருக்கும் இது போகரின் கை வண்ணம்.

8. அந்த சிலையை சுற்றி எப்போதும் ஒரு வித சுகந்த மணம் (இதுவரை ஒரு போதும் வெளியே உணர்ந்திராத) பரவி நிற்கும்.

9. இந்த சிலையை செய்ய போகர் எடுத்துக்கொண்ட நாட்கள் – ஒன்பது வருடம்.

10. அம்பாள், முருகர், அகத்தியர் இவர்களுடைய உத்தரவுக்கு பின் தான் போகர் இப்படி ஒரு சக்தி வாய்ந்த சிலையை செய்ய முயற்சியே எடுத்தார். இதற்காக 4000 மேற்பட்ட மூலிகைகளை பல இடங்களிலும் சென்று தெரிவு செய்து கொண்டு வந்தார். 81 சித்தர்கள் இந்த நவபாஷாணத்தை போகர் சொற்படி
தயார் பண்ணினர். இது பொது நல எண்ணத்துடன் செய்யப்பட்டதால் காலமும், இயற்கையும் தன் சீற்றத்தை குறைத்துக் கொண்டு சித்தர்களுக்கு உதவி செய்ததாக இன்னொரு துணுக்குத் தகவல் உண்டு.

11. அகத்தியர் உத்தரவால், ஒரு அசுரன், இரு மலைகளை காவடி போல் சுமந்து பொதிகை நோக்கி கொண்டு செல்ல, முருகர் அவனை தடுத்து நிறுத்தி, போரில் தோற்கடித்து, இரண்டு குன்றையும் இப்போது இருக்கும் இடத்தில் வைக்க செய்தார் என்று ஒரு புராண தகவல் உண்டு.

12. போகர், இகபரத்தில் இருக்கும் போது தன் மனைவிக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற, முருகனை மேற்கு திசை நோக்கி பிரதிஷ்டை செய்தார். இதனால், மலை நாட்டில் உள்ளவர்களுக்கு பழனி முருகன் குல தெய்வம் ஆனார்.

13. கல்லில் சிலை செய்து பிரதிஷ்டை செய்து கட்டிய எத்தனையோ கோயில்கள் சிதிலமடைந்து போயும், நவபாஷணத்தில் சிலை செய்த இந்த கோயில் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணம் சித்தர்களின் மகிமை தான் என்பது பலரின் எண்ணம்.

14. தண்டாயுதபாணி சிலைக்கு இடது பக்கத்தில் ஒரு சின்ன மரகதலிங்கம் உள்ளது. அவரை தரிசிக்க வலதுபக்கமாக சென்று, தீபம் காட்டுதல் வேண்டும். ஏனெனில் தீப ஒளி இல்லாமல் அந்த லிங்கத்தை தரிசிக்க இயலாது.

15. பழனியில் இரண்டு மரகதலிங்கம் உள்ளது. ஒன்று முருகர் சன்னதியில், இன்னொன்று போகர் சமாதியின் மேல் இந்த இரண்டையுமே போகர் பூஜை செய்ததாக ஒரு துணுக்குத் தகவல் உண்டு

பழநிமலை முருனுக்கு அரோகரா...

படித்தேன்; பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.2.17

ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?


ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?

எல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.

கவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:

போனால் போகட்டும் போடா! - இந்த
பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா?
(போனால்)

வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!
வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த
மண்ணில் நமக்கே இடமேது?

வாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்
ஜனனம் என்பது வரவாகும் - வரும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை
இல்லையென்றால் அவன் விடுவானா?
உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?

கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

நமக்கும் மேலே ஒருவனடா - அவன்
நாலும் தெரிந்த தலைவனடா - தினம்
நாடகம் ஆடும் கலைஞனடா
போனால் போகட்டும் போடா...!
(போனால்)

போனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர்,  கூக்குரலாலே உயிர்  திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில்  நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்!

அதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக  இருக்கிறாயா? இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி!” என்றார்.

அப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்?

நூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே!

எமனிடம் தாவா செய்ய முடியுமா?

எமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா?

“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு விஷயங்கள்  கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம்! அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு!”

இல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா?

கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்!

மரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.

என்ன காரணம்?

எந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை! அதுதான் காரணம்
-------------------------------------------------------------------------------------------
ஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.

மேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)

என்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.

தமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர் மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்!
------------------------------------------------------------------------------------------
இதயம் துடிப்பது நின்றுவிட்டால் அதைத்தான் மரணம் என்று நாம் குறிப்பிடுவோம். ஆனால் மருத்துவ உலகம்  என்ன சொல்கிறது?

உடல் செல்களின் இயக்கம் நின்று போவதுதான் மரணம் என்கிறது மருத்துவம். இதயம் செயல்படாமல் நின்று விட்ட பிறகும், மூளையானது இயங்கிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் 2 மணி நேரம் வரை கூட மூளை இயங்கிக் கொண்டிருப்பது உண்டு. இது கிளினிக்கல் டெத் என்று அழைக்கப்படுகிறது. பின்னர்தான் மூளையின் இயக்கமும் நின்று போகிறது. இதை செரிபரல் டெத் என்று குறிப்பிடுகிறார்கள்.

இப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே மரணம் அடைந்ததாக கருதப்படுகிறது.

விபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தவர்களுக்கு சில சமயங்களில் மூளை தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கும். ஆனால் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்களது உடல்கள்தான் தானமாக  அளிக்கப்படுகிறது. எனவே, மூளையும், இதயமும் தங்களது இயக்கத்தை நிறுத்துவதே மரணமாகும்.

Death is the termination of the biological functions that define a living organism. The word refers both to a particular process and to the condition that results thereby.
----------------------------------------------------------------------------------------------
மரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன?

Died - சாவு, மரணம்

Expired - காலாவதியாகுதல். இறந்து போதல்

killed - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Murdered - The unlawful killing of one human by another - கொலை செய்யப்பட்டு இறப்பதைக் குறிக்கும் சொல்

Assassination - An assassination is the targeted killing of a public figure, usually for political purposes. பிரபலங்கள், தலைவர்கள் கொல்லப்பட்டு இறக்கும்போது இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்

Strangled to death - To kill by squeezing the throat so as to choke or suffocate; throttle. கழுத்தை நெறித்துக் கொல்லப்படும் நிலைமை

Suffocated to death - To kill or destroy by preventing access of air or oxygen. மூச்சுத்திணறி இறக்கும் நிலைமை

Drowned to death - To kill by submerging and suffocating in water or another liquid. தண்ணீரில் மூழ்கி இறத்தல்

Killed in a stampede - A sudden headlong rush or flight of a crowd of people. கூட்ட நெரிசலில் சிக்கி இறத்தல்

Deceased - a more formal word for dead  - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்

Died in the fire accident - தீ விபத்தில் இறத்தல்

Shot dead - சுடப்பட்டு இறத்தல்

Hanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்

Suicide - The act or an instance of intentionally killing oneself. உயிரை மாய்த்துக்கொள்ளுதல். தற்கொலை

Poisoned to death -  விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்

Electocuted - killed by an electric current - மின்சாரம் தாக்கி இறத்தல்

இன்னும் பல சொற்கள் உள்ளன: homicide, infanticide, fratricide, sororicide, matricide,patricide, parricide regicide.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க!
=====================================================
சரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.

Which is the greatest of all human blessings?

மரணம்தான் அது.

உரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா?  அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு!

“சாவை, வரம் என்கிறீர்களா? என்ன சொல்ல வருகிறீர்கள்?”

நான் சொல்லவில்லை சுவாமி! அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே  கொடுத்துள்ளேன்

அதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:

Death may be the greatest of all human blessings.  ~ Socrates

மரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்!
--சாக்ரட்டீஸ்

இந்தக் கட்டுரையும், இதைத் தொடர்ந்து பத்துப் பகுதிகளாக எட்டாம் வீட்டைப் பற்றிய பாடங்களும் ‘வகுப்பறை ஜோதிடம் - பகுதி 2’ நூலில் வெளிவர உள்ளன. மேலும் பல பாடங்கள் வரவுள்ளன. புத்தகம் தொகுக்கும் வேலை அதாவது முறையாகப் படிப்பதற்கு வசதியாகத் தொகுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அச்சாக்கம் செய்ய வேண்டும், இரண்டும் முடிந்த பிறகு புத்தகம் உங்களுக்குக் கிடைக்கும்.

இந்த மாத இறுதிக்குள் வெளியிட எண்ணியுள்ளேன். முறையான அறிவிப்பு பதிவிலேயே வரும். அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.2.17

சில உளவியல் உண்மைகள்!


சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்..... தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

 பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

 7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

 8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

9. குழந்தைகளோடு பேசும்போது,  அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .

10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.  நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
 யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....   நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள்.  ...  உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..
 
3. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்..,   அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்...  எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....
 
5. உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்...  இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..
 
6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்....  உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

7. அழும் போது தனியாக அழுங்கள்...  நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!
 கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...
 
8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,.  நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

படித்தேன்; பகர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!