மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.16

மனத்தெளிவு எப்போது பிறக்கும்?

மனத்தெளிவு எப்போது பிறக்கும்?

ஒரு உண்மையான.... இறைபக்திக்கு எது முக்கியம்?

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும் வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட,அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை.ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என வணங்கினர் அம்மையும்  அப்பனும்.
முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான்.
மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள்
விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள்

'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத்  தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார். வரமா! உங்கள்  தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.

அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம்  கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால்  வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி மாசறு காட்சியவர்க்கு.

நீதி!

தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.     🔯🙏🙏
-------------------------------------------------
2

காந்தி சொர்க்கதில் கடவுளிடம் போய் நான் பூமியில் விட்டு வந்த 3 குரங்கும் என்ன ஆச்சு எனக் கேட்டார்.

கடவுள்  சொன்னார்:

கண்ணை பொத்தியபடி இருந்த குரங்கு நீதியாகி விட்டது,
காதை பொத்தியபடி இருந்த குரங்கு அரசாங்கமாகி விட்டது.
வாயை பொத்தியபடி இருந்த குரங்கு மக்களாகி விட்டது🙊🙉🙈

======================================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

30.5.16

Humour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது?

Humour: நகைச்சுவை: குழந்தை எதில் பிறந்தது?

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------
1
வாசனை வராம கோழிக்குழம்பு வைக்கணுமா, ஏங்க?

பக்கத்து வீட்டுக்காரன் கோழியை தேடிட்டு இருக்கான்…!

--------------------------------------------
2
Wife : நீ தான் husband டா வர போறேனு  school படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

Husband : அப்படியா ..ஆச்சிரியம்மா இருக்கே ..!!

Wife : ஆமா .!! நீயேல்லாம் பெரியவளாகி பன்னி மேயக்கதான் லாயக்குனு சொல்லுவாங்க...!!

--------------------------/-----//------
3
என்கிட்ட ட்ரீட்மென்ட் எடுத்த பிறகு சேஞ்ச் இருக்கா?

பஸ்ல போகக் கூட சேஞ்ச் இல்ல டாக்டர்.!

- --------------------------/-----//------
4
என் மனைவிக்கு கோபம் வந்தா பத்திரகாளியாயிருவா!”

“என் மனைவி ‘பாத்திர’ காளியாயிருவா!”

-------------------------------------------/-
5
ஏங்க, நான் சாம்பார்ல புளி போடறதுக்கு மறந்திட்டேன்…கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க..!

பரவாயில்லை, நீ சமைக்கப் போறேன்னு சொன்னதுமே ஏற்கனவே வயித்திலே புளிய கரைச்சிடுச்சி…!
--------------------------/-----//------
6
தொழிற்சாலைக்குப் பக்கத்திலே கிளினிக் ஓப்பன் பண்ணாதேன்னு சொன்னேனே, கேட்டியா..?
-
பாரு..நீ ஆபரேசன் பண்ணும்போதெல்லாம் சங்கு ஊதறாங்க...!
--------------------------/-----//------
7
எவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”

“நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”

------------------------------------------/-
8
கட்டுன பொண்டாட்டியை கை நீட்டி அடிக்கிறியே நீயெல்லாம்
ஒரு மனுஷனா?

கயிறால கட்டாம விட்டிருந்தா, அவ என்னை அடிச்சிருப்பா.…!!

------------------------------------------/-
9
உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கிறதை
ஏன் என்கிட்ட சொல்லல?"

"சொல்லலையா.... உன்னை ராணி மாதிரி வச்சுப்பேன்னு அன்னைக்கே சொன்னேனே"

------------------------------------------/-
10
எனக்கு ’98’ லே குழந்தை பொறந்தது…!, உனக்கு?
-
‘108’_லே..!

------------------------------------------/-
11
"என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

"அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து
வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

"உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

"கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "

------------------------------------------/-
12
மன்னா ! அண்டை நாட்டரசன் குதிரையில் வந்து நம் அரசியை கடத்திச் சென்று விட்டான்...!

ராணி சத்தம் போடவில்லையா?

''சீக்கிரம்..சீக்கிரம்..'' என்று அலறினார்கள், மன்னா..!

------------------------------------------/-
13
பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு

வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா..

------------------------------------------/-!”
-படித்ததில் சிரித்தது -

இவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.5.16

வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

வறுமையை ஒழிக்க என்ன செய்ய வேண்டும்?

வறுமையை ஒழிக்க என்ன செய்யலாம் என்று சூப்பராக ஒருவர் அறிவுரை சொல்கிறார். காணொளியாக உள்ளது. பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்

கார் திருடர்கள் எப்படி லாகவமாகச் செயல்படுகிறார்கள் என்பது ஒரு காணொளி வடிவில் உள்ளது. அதையும் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

ஆக மொத்தம் 2 காணொளிகளை இன்று உங்களுக்காக வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்

1
2


Our sincere thanks to the person who uploaded these clippings in the net
=========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.5.16

செவ்வாழைப்பழமும், குழந்தைப் பேறும்!


செவ்வாழைப்பழமும், குழந்தைப் பேறும்!

திருமணமாகி நீண்ட நாட்களாக உங்களுக்கு குழந்தை இல்லையா ?

திருமணமான தம்பதியர் குழந்தை பேறுக்காக மருத்துவரையோ, ஜோசியரையோ நாடுவர்.அவர்களுக்கு செவ்வாழை அருமருந்தாகும்.

குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.

வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.

பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.

இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.

இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.

செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.

இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.

கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.

கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்.பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.
==============================================================

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.5.16

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?

எந்த ஊரில் என்ன வாங்கலாம்...?

நிச்சயம் அனைவரும் அறிய வேண்டிய விசயம்...
சுற்றுலா செல்லும் போது ரொம்ப உதவியாக இருக்கும்....

👍ஆரணி&களம்பூர் உலகதரம் வாய்ந்த  அரிசி (திமலை மாவட்டம்)
👌கோயமுத்தூர் - மோட்டார் உதிரிப் பாகங்கள், காட்டன்
👌திருநெல்வேலி - அல்வா
👌ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா
👌கோவில்பட்டி - கடலைமிட்டாய்
👌பண்ருட்டி - பலாப்பழம்
👌மார்த்தாண்டம் - தேன்
👌பவானி - ஜமுக்காளம்
👍உசிலம்பட்டி - ரொட்டி
👌நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்
👌பொள்ளாச்சி - தேங்காய்
👌ஐதராபாத் - முத்து, வளையல், கழுத்து மணிகள்
👌வேதாரண்யம் - உப்பு
👌சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா
👌சாத்தூர் - காராசேவு, மிளகாய்
👍மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து
👌திருப்பதி - லட்டு
👌மாயவரம் - கருவாடு
👌திருப்பூர் - பனியன், ஜட்டி
👌உறையூர் - சுருட்டு
👌கும்பகோணம் - வெற்றிலை, சீவல்
👌தர்மபுரி - புளி, தர்பூசணி
👌ராஜபாளையம் - நாய்
👌தூத்துக்குடி - உப்பு
👌ஈரோடு - மஞ்சள், துணி
👌தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை
👌பெல்லாரி - வெங்காயம்
👌நீலகிரி - தைலம்
👌மங்களூர் - பஜ்ஜி
👌கொல்கத்தா - ரசகுல்லா
👌ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி
👌கல்லிடைக்குறிச்சி - அப்பளம்
👌காரைக்குடி - ஓலைக்கூடை
👌செட்டிநாடு - பலகாரம்
👌திருபுவனம் - பட்டு
👌குடியாத்தம் - நுங்கு
👌கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்
👌ஆலங்குடி - நிலக்கடலை
👌கரூர் - கொசுவலை
👌திருப்பாச்சி - அரிவாள்
👌காஞ்சிபுரம் - பட்டு, இட்லி
👌மைசூர் - சில்க், பத்தி, சந்தனம்
👌நாகப்பட்டினம் - கோலா மீன்
👌திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்
👌பத்தமடை - பாய்
👌பழனி - பஞ்சாமிர்தம், விபூதி
👌மணப்பாறை - முறுக்கு, மாடு
👌உடன்குடி - கருப்பட்டி
👌கவுந்தாம்பட்டி - வெல்லம்
👌ஊத்துக்குளி - வெண்ணெய்
👌கொடைக்கானல் - பேரிக்காய்
👌குற்றாலம் - நெல்லிக்காய்
👌செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா
👌சங்கரன் கோவில் - பிரியாணி
👌அரியலூர் - கொத்தமல்லி
👌சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை
👌கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்
👌பாண்டிச்சேரி - ஒயின், மதுபானங்கள்
👍திருச்செந்தூர் - கருப்பட்டி
👍குளித்தலை - வாழைப்பழம்
👌காஷ்மீர் - குங்குமப்பூ
👌ஆம்பூர் - பிரியாணி
👌ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய், தக்காளி
👌ஓசூர் - ரோஜா
👌நாமக்கல் - முட்டை
👌பல்லடம் - கோழி
👌உடுப்பி - பொங்கல்
👌குன்னூர் - கேரட்
👌பாலக்காடு - பலாப்பழம்...
👌 ஆற்காடு - மக்கன்பீடா
👌 வாணியம்பாடி - தேனீர்
====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

24.5.16

அசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்!


அசைவ பிரியாணிக்கு ஒரு புது விளக்கம்!

என்னைக்கவர்ந்த பகிர்வு!

*நான் நல்லவன் என்பதற்கு சாட்சி, நான் செய்த எந்தத் தவறுக்கும் சாட்சி இல்லை என்பதே*

*கடைசியில் இது சரியாகும் என்று நம்புங்கள். சரியாகாவிட்டால் இது கடைசி இல்லை என்று நம்புங்கள்.*

*ஆசையை கட்டுப்படுத்த புத்தனாக பிறக்கத் தேவையில்லை. நடுத்தர குடும்பத்தில் ஆணாக பிறத்தலே போதுமானதாகிறது.*

*சீதையின் தீக்குளிப்பில் நிரூபிக்கப்பட்டது இராவணனின் கற்பு.*

*வெள்ளி இரவுப் பேருந்துகள் கனவுகளையும், ஞாயிறு இரவுப் பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்கின்றன.*

*வாழ்ந்து முடித்த கோழியும் வாழ வேண்டிய முட்டையும் ஒரே தட்டில் செத்துக் கிடப்பதையே பிரியாணி என்கிறோம்.*

*ஒரு நாளைக்கு ஐந்து டிரெஸ் மாற்ற வேண்டுமானால் பணக்காரனாக இருக்க வேண்டிய அவசியமில்லை, கைக்குழந்தையாக இருந்தாலே போதும்.*

*உயிர் மட்டுமே உலகின்  சிறந்த வாசனைப் பொருள். அது இல்லையேல் உடல் நாற்றமெடுக்கும்.*

*ஏமாற்றங்கள் பழகிவிட்டன. இந்த முறை அதில் என்ன புதுமை இருக்கப் போகிறது என்ற ஆவல் தான் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது.*

*உலகத்தின் குறைகளை எல்லாம் கண்டு பிடிக்கும் சிலருக்கு தன் குறைகள் மட்டும் தெரியாமல் போவதற்கு பெயர் தான் சுயநலம்.*

*நெருக்கமானவர்களிடம் நாம் நம்பி சொன்ன வார்த்தைகளை மூன்றாம் மனிதர் வாயால் கேட்கையில் அவமானப் படுகிறது நம் நம்பிக்கை.*

*கழன்று விழும் வரை சிலரது முகமூடிகளை முகம் என்றே நம்பித் தொலைக்கிறோம்.*
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.5.16

நீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்


நீங்களும் உங்களின் சொந்த வீடு கனவும்

சொந்த வீடு வாங்கும் யோகம் யாருக்கு உண்டு?

 சொந்த வீட்டில் வாழ்வதென்பதே ஒரு தனி மகிழ்ச்சிதான். எலி வலை என்றாலும் தனி வலை வேண்டும் என்பார்கள். அதுபோல நமக்கென ஒரு வீடு இருப்பதென்பது மனநிறைவை தரக்கூடியதுதானே. தற்போதுள்ள சூழ்நிலையில் சொந்த வீடு என்பது எட்டாக்கனியாக இருக்கின்றது.

சொந்த வீடு அமைய :

☆ சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் நிறைவேறுமா? வீடு வாங்குவதற்கு வசதி இருந்தாலும் ஜாதகத்தில் அவர் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற யோகம் வேண்டும்.

☆ சொந்த வீடு வாங்க வேண்டும் அல்லது சொந்த வீடு ஒருவருக்கு நிலைக்க வேண்டும் என்றால் ஒருவருக்கு ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் வலுவான நிலையில் இருக்கவேண்டும்.

☆ சிலர் மூதாதையர் சேர்த்து வைத்த சொத்துக்களை வைத்துக் கொண்டு சொந்த வீட்டில் வாழும் யோகத்தைப் பெறுகிறார்கள். ஒரு சிலர் சிறுக சேமித்து ஒரு சொந்த வீட்டிற்கு அதிபதியாகவும் ஆகிவிடுகிறார்கள்.

பரிகாரங்கள் :

☆ ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் பலமற்று இருந்தால் வீடு அமையும் யோகம் தடைப்படும். அத்தடை நீங்க, சிவப்பு நிற மலர்களால் செவ்வாயை பூஜித்து வர விரைவில் சொந்தவீடு அமையும்.

☆ நிலம் அமைந்து, வீடு அமைய தாமதமாக ஆகும்போது ஒரு முறை “திருச்செந்தூர் சென்று செந்திலாண்டவரை” வணங்கி “ஓம் சரவண பவ” எனும் மந்திரத்தை உச்சரித்து, ஆலயத்திலே ஆறு மணி நேரம் தங்கி, அந்தக் கடல் நீரை எடுத்து வந்து மஞ்சளுடன் கலந்து, நீங்கள் வீடு கட்டுகின்ற நிலத்தைச் சுற்றி நீங்கள் தெளிக்க வேண்டும்.

☆ வீடு அமையாதவர்கள், நிலங்களே கிடைக்காதவர்கள், வீடு அமைவதே கஷ்டம் என்று ஏங்குபவர்கள் ஒரு முறை “சிறுவாபுரி முருகனை” ஒன்பது செவ்வாயன்று வணங்கி வர வீடு கட்டும் கனவு நிஜமாகும்.

☆ நிலம், வீடுவாங்கு யோகம் அமைய பூமிக்காரகனான செவ்வாயின் அதிதேவதையான சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டு வரவேண்டும்.

☆ வீடு, வாசல் இல்லாமல் தெருத்தெருவாக அலைபவர்களுக்கு செம்புப் பாத்திரங்களைத் தானம் கொடுக்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்தால் நிச்சயம் வீடு வாங்குவீர்கள்.

☆ ராம நாமத்தை செங்கல்லில் எழுதி பெருமாள் ஆலயம் அமைக்கக் கொடுத்தால் வீடு வாங்கவும், கட்டவும் முடியும் என்பது ஐதீகம்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.5.16

வீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்?


வீட்டைச் சுற்றி என்ன இருக்க வேண்டும்?

ஒவ்வொரு வீட்டை சுற்றியும் பத்து வகை மரங்கள் இருக்க வேண்டும்.

வீட்டுக்கு முன் ஒரு வேப்பமரம் இருக்க வேண்டும். பக்கத்தில் ஒரு முருங்கை மரம் இருக்க வேண்டும். ஒரு பப்பாளி மரம் இருக்க வேண்டும்.

குளிக்கும் தண்ணீர் போகும் இடத்தில் வாழை மரம் இருக்க வேண்டும்.

பாத்திரங்கள் கழுவும் இடத்தில் தென்னை மரம் இருக்க வேண்டும். ஒரு எலுமிச்சை மரம் இருக்க வேண்டும். அதன் நிழலில் ஒரு கறுவேப்பிலை செடி இருக்க வேண்டும். ஒரு நெல்லிச் செடி இருக்க வேண்டும்.

வேலியில் நான்கு இடத்தில் சீதா மரம் இருக்க வேண்டும். இடம் இருந்தால் ஒரு பலா மரம் இருக்க வேண்டும். ஒரு மா மரம் வைக்க வேண்டும்.

இப்படி இருந்தால் ஒருவர்கூட பசியுடன் தூங்க மாட்டார்கள்
----------------------------------------------------------------
சொந்த வீட்டுடன் பின்பக்கம், முன்பக்கம் காலி இடம் இருப்பவர்களுக்குத்தான் இது சாத்தியம். மற்றவர்களுக்குக் குறிப்பாக நகரங்களில் ஒண்டிக்குடித்தன வீடுகளிலிலும், அடுக்குமாடிக் குடியிருப்புக்களில் இருப்பவர்களுக்கும் இது சாத்தியமில்லை!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.5.16

கடவுளைக்காண தேவைப்படும் கண்ணாடி!


தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணையில் ஏறியிருக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையார் அவர்களை நமது வகுப்பறையின் சார்பாக வாழ்த்துகிறேன்

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
💃1st time in India....
💃In north- Mehbooba
💃South- Jayalalita
💃East- Mamta 
💃West- Anandiben

(All four directions... Women CM....Without Husband...)

😱In centre Narendra Modi without wife.😀😀
-====================================================

கடவுளைக்காண தேவைப்படும் கண்ணாடி!

சொற்பொழிவிலிருந்து...... கடவுளைக் காண தேவைப்படும் கண்ணாடி!
.
ஒரு பெரியவர் அரசமரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும்,

சொல் துடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான். “ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்”

என்றான்.
.
“தம்பி! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கிறேன்.”
.
“ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம். ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள், கடவுள் என்று கூறுவது

மூடத்தனம். கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?”
.
“தம்பி, காண முயலுகின்றேன்.”
.
“கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா?”
.
“இல்லை.”
.
“கடவுள் மீது வீசும் மணத்தை மூக்கால் முகர்ந்திருக்கின்றீரா?”
.
“இல்லை.”
.
“ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால்

முகர்ந்தீரில்லை; கையால் தொட்டீரில்லை; காதால் கேட்டீரில்லை; இல்லாதவொன்றை இருப்பதாகக் கற்பனை செய்துகொண்டு அரிய நேரத்தை

வீணடிக்கிறீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப் படுகிறேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம்போன்றவர்களைக்

காட்சிச் சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே? அது கறுப்பா, சிவப்பா?”
.
“அது சரி, தம்பி! உன் சட்டைப் பையில் என்ன இருக்கின்றது?”
.
“தேன் பாட்டில்.”
.
“தேன் இனிக்குமா, கசக்குமா?’
.
“என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாதா? சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று

வினாவுகின்றீரே, உணவுப் பொருள்களிலேயே தேன் தலைமை பூண்டது. இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக

இருந்தேன் என்பான். தேன் தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.”
.
“தம்பி! தித்திக்கும் என்றனையே, அந்த இனிப்பு கறுப்பா, சிவப்பா! சற்று விளக்கமாக விளம்பு, நீ நல்ல அறிஞன்.”
.
மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால், இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.
.
“ஐயா! தேனின் இனிமையை எப்படி இயம்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது! உண்டவனே உணர்வான்.”
.
பெரியவர் புன்முறுவல் பூத்தார். “அப்பா! இந்தப் பௌதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனின் இனிமையையே உரைக்க முடியாது,

உண்டவனே உணர்வான் என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவவஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால் தான் உணர்தல் வேண்டும்.
.
“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
 வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
 தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
 ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!”
என்கிறார் பரம ஞானியாகிய திருமூலர்.
.
மாணவன் வாய் சிறிது அடங்கியது. “பெரியவரே! எனக்குப் பசிக்கிறது. சாப்பிட்டு விட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.”
.
“தம்பி! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால் கண்டிருக்கின்றனையா?”

 “இல்லை.”
.
“என்ன தம்பி! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்கிறாய். பசியைக் கண்ணால் கண்டாயில்லை, மூக்கால் முகர்ந்தாயில்லை; கையால்

தொட்டாயில்லை; அப்படியிருக்க அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய். பசி என்று ஒன்று கிடையவே

கிடையாது. இது சுத்தப்பொய். பசி என்று ஒன்று இருக்கிறது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி என்ற ஒன்று அநுபவப்

பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல்தான் கடவுளும் அநுபவப் பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால் உணர்தல்

வேண்டும்.”
.
மாணவன் உடம்பு வேர்த்தது, தலை சுற்றியது. பெரியவர் கூறுவதில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்தான்.
.
“என் அறியாமையை உணர்கின்றேன். இருந்தாலும் ஒரு சந்தேகம், கடவுளைக் கண்ணால் காண முடியுமா?”
.
“உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பி! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?”
.
“என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து

வருகிறேன்.”
.
“தம்பி! நான் உன்னை மூடன் என்று ஒரு போதும் கருதமாட்டேன். நீ அறிஞன்தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால்

மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால்

மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும். உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத்

தெரிகின்றதா?”
.
“ஆம். நன்றாகத் தெரிகின்றது.”
.
“அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?”
.
“என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது?”
.
“அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?”
.
“ஆம்! தெரிகின்றன.”
.
“முழுவதும் தெரிகின்றதா?”
.
அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் “முழுவதும் தெரிகின்றது” என்றான். “தம்பி! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?”
.
மாணவன் விழித்தான்.
.
“ஐயா! பின்புறம் தெரியவில்லை.”
.
“என்ன தம்பி! முதலில் தெரிகின்றது, தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறம் தெரியவில்லை என்கின்றாய். நல்லது, முன்புறம்

முழுவதுமாவது தெரிகின்றதா?” “முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.”
.
“அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றனையோ? நிதானித்துக் கூறு….”
.
“எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.”
.
“தம்பி! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.”
.
“ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.”
.
“தம்பி! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றா?
.
மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.
.
தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், “ஐயனே! முகம் தெரியவில்லை!” என்றான்.
.
“குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டனை. கண்டேன்,

கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், சொல்.”
.
“ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.”
.
“தம்பி! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இரு நிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவதுபோல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக்

காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.”
.
“ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள். இப்போதே வாங்கி வருகின்றேன். பெல்ஜியத்தில் செய்த

கண்ணாடியா?”
.
“அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று. வேதாகமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும். ஒரு

கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக்

காணலாம். “தம்பி! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனை குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண

இன்றியமையாதவை.”
=============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.5.16

அங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்!


அங்கே செல்வதற்கான மறைமுகமான விலைகள்!

அமெரிக்கா செல்வதற்கு கொடுக்கும் மறைமுகமான விலைகள் சில உண்டு. அவற்றைப் புரிந்துகொண்டு செல்லுங்கள். அவை இவை:

1. திரும்ப வரமாட்டீர்கள்… இது கட்டாயம், நூறு சதவிகிதம் நிகழும் ஒரு விளைவு. போய்விட்டு படிப்பு முடித்துவிட்டு உடனே வருகிறேன் என்று சொல்வதெல்லாம் பொய். அந்த நாடு உங்கள் மேல் படரும் நாடு. ஒரு ஆக்டோபஸ், அல்லது மலைப்பாம்பின் இறுக்கம் போல அது உங்களை விடாது. அதன் கிரெடிட் கார்டு சமூகத்தில் உங்களை மூன்றாவது தலைமுறை வரை கடன் வாங்க வைத்துவிடுவார்கள். மீளவே முடியாத கடன் சொர்க்கம் அது. அதைத் தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.

2. அங்கே போனபின் உறவு, பாசம் இவற்றுக்கெல்லாம் புதிய அர்த்தங்கள் தோன்றும். எதற்காக அப்பா அம்மாவைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கடமையைச் செய்தார்கள். வருஷம் ஒரு முறை ஃபாதர்ஸ் டே, மதர்ஸ் டே கார்டு அனுப்பினால் போதுமே… அல்லது அவ்வப்போது நூறு டாலர், இருநூறு டாலர்… - இப்படித் தோன்றும் இந்த எண்ணத்தையும் தவிர்க்க முடியாது. குறிப்பாக, பிசுநாரித்தனம் அங்கு கொஞ்சம் அதிகமாகும்.

3. அங்கே போய் நிறைய சம்பாதிக்கத் தொடங்கியதும் இந்திய விஷயங்கள் மேல் ஒரு ஏளனம் தோன்றும். என்னப்பா உங்க ஊர்ல சரியா ஒரு டாய்லெட் கட்டமாட்டாங்களா. வாட் ட்ராஃபிக்! ஐம் கெட்டிங் ம்யாட். ரோடுல ஒண்ணுக்கு போறவரைக்கும் உங்க தேசம் உருப்படாது… (கவனிக்கவும் உங்க ஊர். உங்க தேசம்)

4. தமிழ் பேசும் வழக்கத்தையும் மெல்ல இழக்க வேண்டியிருக்கும். நாங்கள் தமிழில் பேசினால் நீங்கள் இங்கிலீஷில் பதில் சொல்வீர்கள். நாளடைவில் தமிழ் படிக்கவே மறந்து போய்விட்டது என்று புளுகுவீர்கள்.

இந்தப் பக்கவிளைவுகள் எல்லாம் பரவாயில்லை என்றால் தாராளமாக வெளிநாடு செல்லுங்கள்.

அண்மையில் நான் ஹாசன் சென்றிருந்தேன். கர்நாடக
மாநிலத்தின் மத்தியில் உள்ள சிறிய டவுன். அங்கே இன்சாட்
2-இ செயற்கைக்கோளின் கட்டுப்பாட்டுக் கேந்திரம் உள்ளது. பல இளம் இன்ஜினீயர்களைச் சந்தித்தேன்.

24 மணி நேரமும் இந்தியாவின் செயற்கைக்கோளை திசை பிசகாமல் கட்டுப்படுத்தும் ஷிஃப்ட் வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ஒருவரைக் கேட்டேன். அமெரிக்கா போயிருக்கலாமே…அவர், போயிருக்கலாம். அட்மிஷன் கூட கிடைத்தது, ஸ்காலர்ஷிப்புடன் என்றார்.

ஏன் போகலை?

எல்லாரும் போய்ட்டா எப்படி? ஒன்றிரண்டு பேர் தங்கி நாட்டுக்கு சேவை செய்ய வேண்டாமா? என்றார்.

கார்கிலிலிருந்து துவங்கி நம் பிற்பட்ட கிராமங்களில் வயற்புறங்கள் வரை பணிபுரியும் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் மேல்தான் எனக்கு மரியாதை. என்னைக் கேட்டால் இங்கேயே இருந்துகொண்டு எல்லா அசௌகரியங்களுக்கு மத்தியிலும் எதாவது சாதிக்கும் இளைஞர்கள் இந்நாட்டின் கண்கள்… நீங்களோ, நீங்கள் அனுப்பப்போகும் டாலரோ அல்ல! தாராளமாக செல்லுங்கள். சம்பாதியுங்கள். ஆனால், இந்தியாவைக் கேலி செய்யாதீர்கள்.

- எழுத்தாளர் சுஜாதா
--------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.5.16

தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்!


தாமதத்திற்கு என்ன காரணம்? தலைவர் சொன்ன காரணம்

பெருந்தலைவர் காமராஜர், முதல்வராக இருந்த போது,  சென்னை தாம்பரம் குடிசைவாசிகளுக்கு  பட்டா வேண்டும் என்று ஜீவா போராடினார்.

அப்போது,  தாம்பரத்தில் ஓர் ஆரம்பப்பள்ளியை திறந்து வைக்கச் சென்றார் காமராஜர்.போகும் வழியில் தான் ஜீவாவின் வீடு இருந்தது.

அந்தப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டியவர் ஜீவா என்பதால், அவரையும் அழைத்துச் செல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைத்து,
காரை ஜீவாவின் வீட்டுக்கு விடச் சொன்னார்.

ஒழுகும் கூரை வீடு ஒன்றில் குடியிருந்தார் ஜீவா.

திடீரென தன்னுடைய வீட்டுக்கு காமராஜர் வந்ததைக் கண்டு ஆச்சர்யப்பட்டு "என்ன காமராஜ்" என்று கேட்டார்

" ஜீவா."என்ன நீங்க இந்த வீட்டுல இருக்கீங்க..?" என்று கேட்டு  ஆதங்கப்பட்டார் காமராஜர்
.
உடனே ஜீவா,"நான் மட்டுமா..? இங்கே இருக்கிற  எல்லோரையும் போலத்தான் நானும் இருக்கேன்”, என்று சர்வ சாதாரணமாக சொன்னார்.

காமராஜரை, உட்கார வைக்க,ஒரு நாற்காலி கூட இல்லாததால், இருவரும், நின்று கொண்டே பேசினார்கள்.

"நீ அடிக்கல் நாட்டிய,  பள்ளிக் கூடத்தைத் திறக்கணும்.
அதான் உன்னையும் கூப்பிட்டுப் போக வந்தேன்" என்றார் காமராஜர்.

"காமராஜ், நீ முதலமைச்சர், நீ திறந்தா போதும்" என்று ஜீவா மறுக்க,
"அட... ஆரம்பிச்ச  நீ இல்லாம, நான் எப்படிப் போக, கிளம்பு போகலாம்" என்று அழைத்தார்,  காமராஜர்,

"அப்படின்னா, நீ முன்னால போ. நான் அரை மணி நேரத்துல வந்துடுறேன் " என்று அனுப்பி வைத்தார்.

"கண்டிப்பாக வரணும்" என்றார் காமராஜர்.

விழாவுக்கு, அரை மணிக்கு மேல் தாமதமாகவே வந்தார் ஜீவா.

"என்ன ஜீவா, இப்படி லேட் பண்ணிட்டியே...? " என்று காமராஜர் உரிமையுடன் கடிந்து கொண்டார்.

உடனே ஜீவா, "நல்ல வேட்டி ஒண்ணுதாம்பா இருக்கு. அதை உடனே துவைச்சு, காய வைச்சு, கட்டிட்டு வர்றேன். அதான் தாமதம்.
தப்பா நினைச்சுக்காதே"... என்றார்.

உடனே கண் கலங்கி விட்டார் காமராஜர்.

விழா நல்ல படியாக முடிந்தது. ஆனால் ஜீவாவின் வறுமை,  காமராஜரை மிகவும் வாட்டியது. அதனால் ஜீவாவுக்கு தெரியாமல், அவரது கம்யூனிஸ்ட் நண்பர்களை அழைத்துப் பேசினார்.
"ஜீவாவுக்கு வீடு கொடுத்தா போக மாட்டான்.காரு கொடுத்தாலும் வாங்க மாட்டான். ஆனா,அவனைப் போல தியாகிகள் எல்லாம்
இத்தனை கஷ்டப் படக்கூடாது என்ன செய்யலாம்"....? என்றார்.

கூட்டத்தில் இருந்த ஒருவர்,"ஜீவாவின் மனைவி படித்தவர். அதனால்
அவருக்கு ஏதாவது பள்ளியில் அரசு வேலை கொடுத்தா, அந்த குடும்பம் நிம்மதியாக இருக்கும்" என்றார்.

உடனே காமராஜர், "ரொம்ப நல்ல யோசனை ஆனா,நான் கொடுத்தா,  அவன் பொண்டாட்டியை வேலை செய்ய விட
மாட்டான்.அதனால நீங்களா ஜீவா மனைவியிடம் பேசி,
"வீட்டுக்குப் பக்கத்துல பள்ளிக்கூடத்துல ஒரு வேலை காலியாக இருக்குன்னு சொல்லி மனு போடச் சொல்லுங்க. உடனே, நான் வேலை போட்டுத் தர்றேன்...ஆனா,இந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியக்கூடாது அவன் முரடன்,உடனே வேலையை விட வைச்சுடுவான் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அதன்படியே ஜீவாவுக்குத் தெரியாமல், அவருடைய மனைவிக்கு அரசு வேலை கொடுத்தார் காமராஜர்.

அதற்குப் பின்னரே ஜீவாவின் வாழ்க்கையில் வறுமை ஒழிந்தது.

காமராஜர், ஜீவா இருவருடைய நட்பும் வார்த்தைகளால்
வடிக்க முடியாதது.

நோய் வாய்ப்பட்டு சென்னை அரசு பொது மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார் ஜீவா.

தனக்கு முடிவு வந்து விட்டதைத் தெரிந்து கொண்டவர், கடைசியாக உதிர்த்த வார்த்தைகள்... காமராஜருக்கு போன் பண்ணுங்கள்"...
என்பது தான்.

இனி எங்கே காணமுடியம் இது போன்ற தலைவர்களை?
அடித்தட்டு மக்களோடு மக்களாக, வறுமையை உணர்ந்த,
பகிர்ந்த தலைவர்கள், கர்மவீரர் காமராஜர்,ஜீவா, கக்கன் போன்ற தலைவர்கள்.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
==============================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

17.5.16

மனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்


மனதை டச்சிங் டச்சிங் பண்ணிய வரிகள்

மனதைத் தொட்ட வரிகள்
Lines that touched our heart

1.ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.!

2.தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.!

3. பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.!

 4.அதிர்ஷ்டத்திற்காக  காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும்ஒன்றே!.

5. மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.!

6.ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.!

 7.மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும் ,பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.!

8.வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி> !

9.வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது !

10.நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை.

11.நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்  நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்...!!!

12.சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்

13.வீட்ல ஃப்ரிட்ஜ் வாங்கின பிறகு, தினமும் நான்கு வகையான சட்னி கிடைக்குது. காலைல வச்சது, நேற்று வச்சது, முந்தாநாள் வச்சது...!!

14.கொஞ்சம் படித்தால் கிராமத்தை விட்டு வெளியேறுகிறோம்.
நிறையப்படித்தால் சொந்த நாட்டை விட்டே வெளியேறுகிறோம் !

15.நாய் நம்மளை இழுத்துக்கிட்டுப்போனா அது வாக்கிங், தொரத்திக்கிட்டுவந்தா அது ஜாக்கிங் !

16.பணத்தின் மதிப்பு தெரிய வேண்டுமென்றால் செலவு செய்யுங்க . உங்களின் மதிப்பு தெரியவேண்டுமானால் கடன் கேளுங்க !

17.ஆட்டோகாரனுக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரனுக்கு தூரம் கூட பக்கம்தான் !

எல்லாம் சரிதானா? எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.5.16

வாத்தியாரின் விடுமுறை அறிவிப்பு



வாத்தியாரின் விடுமுறை அறிவிப்பு

இன்று நடைபெறும் தமிழக சட்ட மன்றத் தேர்தலை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று ஒருநாள்  விடுமுறை!

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.5.16

அளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது?

அளவிட முடியாத பெருமை வாய்ந்தது ஏது?

ஆன்மிகம்

தில்லை [சிதம்பரம்]

1 தில்லை எனும் தாவரம் நிறைந்து காணப்பட்டதால் இத்தலம் திலலைவனம் எனப்படுகிறது சிதமபரம் என்பது வடமொழிச்சொல்
சிற்றம்பலம் என்பது தமிழ்ச்சொல்

2 ஆன்மாக்களின் எல்லாபற்றுகளையும் போக்குமிடம் 'பெறும்பற்றப்புலியூர்'

3 புலிக்கால் முனிவர் வழிபட்டதால் புலியூர என மற்றொரு பெயரும் உண்டு

4 இத்தலத்தில் உள்ள நடராஜர் சன்னதிக்குப் பின்புறம் உள்ள ஆலயம் திருமூலத்தானம் எனப்படுகிறது

இங்கு எழுந்து அருளியுள்ள இறைவர்; திருமூலநாதர் இறைவி: உமைஅம்மை

கனகசபை : நடராஜப்பெருமான் = சிவகாமி அம்மை

தலத்தின் அருமையும் பெருமையும்

1 சம்பந்தர் அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் ஆகியோரால் பாடல் பெற்றது

2 பன்னிரண்டு தமிழ் வேதங்களிலும் போற்றப்பட்டுள்ள அரிய தலம்

3 இங்குள்ள நடராஜப்பெருமானார் அசைந்தால்தான் உலக உயிர்கள் அசையும் இவர் தமது ஆட்டத்தை நிறுத்தும்போது உலக இயக்கமே

நின்றுவிடும்

4. ஐம்பூதங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது. மண் நீர் நெருப்பு காற்று ஆகிய நான்கு பூதஙகளும் ஆகாயத்திற்குள் அடங்குவதுபோல அனைத்து
சிவாலங்களிலுள்ள சிவகலைகள் யாவும் இரவு வழிபாட்டிற்கு பிறகு [அர்த்தயாம பூஜைக்குப்பிறகு] தில்லையில் வந்து ஒடுங்கும்

5. இவ்வாலயத்தில்தான் மாணிக்கவாசகர் ஊமைப்பெண்ணை பேசவைத்தார் புத்தர்களை வாதில் வென்றார்

6 சேக்கிழார் பெரியபுராணாம் பாடுவதற்கு உலகெலாம் என அடியெடுத்துககொடுத்த இடம் தில்லையே ஆகும்

7 பன்னிரண்டாது வேதமாக திகழும் பெிரியபுராணம் அரங்கேற்றப்பட்டதும் தில்லை ஆயிரங்கால் மண்டபத்திலேயே ஆகும்

8 தில்லைப்பெருமானின் தேர் ஒடாமல் சகதியில் சிக்கியபோது சேந்தனார் திருப்பல்லாண்டு பாட தேர் தானே ஓடிய நிலையில் நின்றது

9 உபமன்யு முனிவர் சிறுகுழந்தையாய் இருந்தபோது அழுதார் அக்குழந்தைக்கு தில்லை திருமூலநாதப்பெருமானார் பாற்கடலையே வரவழைத்தார்

10 பதஞ்சலி முனிவர் வழிபட்டு பேறுபெற்ற தலம்

11 முருகப்பெருமான், திருமூலநாயனார், திருநீலகண்ட நாயனார், திருநாளைப்போவார், இராஜராஜசோழன், சேந்தனார், உமாபதிசிவனார் போன்ற

கணக்கற்ற அருளாளர்கள் இத்தலததை வழிபட்டு பேறு பெற்றுள்ளார்கள்

12 வியாசமுனிவர் சுகமுனிவர் சுதமுனிவர் சைமினிமுனிவர் குருநமசிவாயர் முதலாமவரகுணபாண்டியன் ஆகியேயார் வழிபட்டு பேறுபெற்றுள்ளனர்

13 இத்தலம உலகத்தின் இருதயமாகும்

14 தென்கயிலை என போற்றப்படுகின்றது

தில்லையின் பெருமை எல்லை இல்லாதது எழுத்தினால் எழுதிவிடமுடியாது

திருசிற்றம்பலம்

நன்றி-தமிழ்வேதம் இதழ்-மே மாதம் 2016
--------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.5.16

பாவங்கள் எத்தனை விதம்?


பாவங்கள் (Sins) எத்தனை விதம்?

பாவங்களின் 42 வகை. வள்ளலார் பாவங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுக் கூறுகிறார்.

அவை வருமாறு:

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.
2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.
4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.
6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.
7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.
8. தருமம் பாராது தண்டிப்பது.
9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.
10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.
11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசம் செய்வது.
14. போக்குவரவு கூடிய வழியை அடைப்பது.
15. வேலை வாங்கிக்கொண்டு குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.
17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.
19. நட்டாற்றில் கை நழுவுவது.
20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.
22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.
23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.
24. கருவைக் கலைப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.
27. கற்றவர் தம்மிடம் கடுகடுப்போடு நடப்பது.
28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.
30. ஊன் சுவை (மாமிசம்) உண்டு உடல் வளர்ப்பது.
31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.
33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.
34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.
35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.
36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.
37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.
38. சிவனடியாரைச் சீறி வைவது.
39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
40. சுத்த ஞானிகளைத் தூஷணம் செய்வது.
41. தந்தை தாய் மொழியைத் (அறிவுரைகளை) தள்ளி நடப்பது.
42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

படித்ததில் பிடித்தது!. இதில் எந்தப் பாவத்தையும் நாம் செய்யாமல் இருப்போம்!.
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

9.5.16

நகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது!


நகைச்சுவை: மாற்றங்கள் தவிர்க்க முடியாது!

நகைச்சுவையை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!

திருமணமான புதியதில் பெண்கள்...
========================================
1. கணவர் கூப்பிடாத போதே...என்னங்க கூப்பிட்டீங்களா? இதோ வரேன்.
2. எங்கம்மாவைப் பார்க்கணும் போல இருக்கு. வாங்க இரண்டு நாள் அம்மா வீட்டிற்கு போய் விட்டு வரலாம்
3. உங்களுக்கு பிடிக்காத முட்டைகோஸ் எனக்கும் வேண்டாம். இனிமேல் செய்ய மாட்டேன்.
4. எனக்கு புடைவையை நீங்கதான் செலக்ட் செய்யணும்.
5. அத்தை லெட்டர் போட்டு இருக்காங்க.
6 .உங்க ஹேர்ஸ்டைல் ரொம்ப நல்லா இருக்கு.
7. நீங்க சிரிக்கும் போது பல் வரிசையாக அழகா இருக்கு.
8. உங்க வீட்டுல எல்லோரும் கலகலப்பான டைப். நல்லா பேசுறாங்க.
9. ஓகே. நான் சினிமாவிற்கு ரெடி.போகலாம் பா.

சிறிது ஆண்டுகள் கழித்து
=======================
1.நான் வேலையா இருக்கேன். அலறாதீங்க.பக்கத்தில்
வந்து சொல்லிட்டு போனா என்ன?
2. நானும் குழந்தைகளும் போறோம்.10 நாள்கள் கழித்து வந்தால் போதும் புரியுதா??
3. எனக்கு கோஸ் பொரியல்.உங்களுக்கு ஒன்றும் பண்ணவில்லை. ஊறுகாய் போதும்ல?
4. இது ஒரு கலர்னு எப்படிதான் இந்த சேலையை எடுத்தீங்களோ.
5. ம்ம்ம்.உங்க அம்மாகிட்ட இருந்து தான் லெட்டர்.
6. எவ்வளவு நேரம் தான் தலையை வாருவீங்களோ. நல்லாதான் இருக்கு.
7. எது சொன்னாலும் சிரிச்சே மழுப்புவீங்களே!
8. உங்க வீட்டு மனிதர்களிடம் வாய் கொடுத்து ஜெயிக்க முடியுமா?
9. கிரைண்டர் போடுற அன்றைக்கு தான் சினிமாவுக்குக் கூப்பிடுவீங்க. நீங்க போங்க.

பல ஆண்டுகள் கழித்து
=====================
1. காதில் வாங்குவதே இல்லை.
2. போறவளுக்கு வர்ற வழி தெரியும்.யாரும் வர வேண்டாம்
3. இன்னைக்கு கோஸ் மட்டும் தான். பிடிச்சா தின்னுங்க. இல்லாட்டி போங்க.
4. ஒரு 5000 ரூபாய் மட்டும் வெட்டுங்க. புடைவையெல்லாம் நான் பார்த்துக்கிறேன்.
5. உங்களை பெத்த இம்சை மகராசி தான் லெட்டர்.
6. போதும்.போதும் வாரி வாரி தலை சொட்டை ஆனது தான் மிச்சம்.
7. எப்ப பார்த்தாலும் என்ன ஈ...? வாயை மூடுங்க. கொசு போய்டபோது.
8. உங்க பரம்பரையே ஓட்டை வாய்தானோ?
9. சினிமாவும் வேண்டாம். டிராமாவும் வேண்ட்டாம். என் பொழைப்பே சினிமா எடுக்கிறாப்புல இருக்கு.

எல்லா பெண்களும் இப்படியல்ல! சில பெண்கள் மட்டும்தான் இப்படி. ஆகவே யாரும் சண்டைக்கு வரவேண்டாம்!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

6.5.16

நீ எப்படி இருக்க வேண்டும்?


நீ எப்படி இருக்க வேண்டும்?

ஆனந்தவேதம் சொல்கிறது........ நீ நீயாக இரு...
°=°=°=°=°=°=°=°=°=°=

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் மனம் கொண்டு
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவரின் ஆசையில்
நீ சுகப்படாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கண் கொண்டு
உலகைப் பார்க்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் கனவை
நீ காணாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் ஆசையை
உனதாக்கிக்கொள்ளாதே...
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வாழ்வை
நீ வாழாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் சிந்தனை கொண்டு
நீ சிந்திக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் வழியை
உனதாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

 நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் நிழலை
உன் நிழலாக ஆக்காதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு !
அடுத்தவர் பாணியை
உன் பாணியாக்கிக் கொள்ளாதே . . .
நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாக இரு . . .
உனக்கென்று தனித்தன்மை உண்டு . . .
அதை இழந்துவிடாதே . . .

நீ . . .நீயாக இரு !
அடுத்தவராய் நீ மாறினால்,
உன்னால் ஆனந்தப்படமுடியாது . . .

நீ . . .நீயாக இரு !
நீ நீயாக இருப்பதில்
நேர்த்தியைக் கொண்டு வா . . .

நீ . . .நீயாக இரு !
அப்பொழுதுதான் நீ
உலகில் அபூர்வமாகத் தெரிவாய் . . .

நீ . . .நீயாக இரு !
சூரியன் சந்திரனாவதில்லை . . .
சந்திரன் நட்சத்திரமாவதில்லை . . .

நீ . . .நீயாக இரு !
தங்கம் விலை அதிகம்தான் . . .
தகரம் மலிவு தான் . . .

ஆனால் தகரத்தைக் கொண்டு
செய்யவேண்டியதை
தங்கம் கொண்டு செய்யமுடியாது . . .

அதனால் தகரம் மட்டமில்லை . . .
தங்கமும் உயர்ந்ததில்லை . . .

எனவே நீ . . .நீயாக இரு !

கங்கை நீர் புனிதம் தான் . . .
அதனால் கிணற்று நீர் வீண் என்று
அர்த்தமில்லை . . .

தாகத்தில் தவிப்பவருக்கு
கங்கையாயிருந்தால் என்ன ?
கிணறாகயிருந்தால் என்ன ?

நீ . . .நீயாக இரு !

காகம் மயில் போல் அழகில்லை தான் . . .

ஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் !

நீ . . .நீயாக இரு !

நாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .

ஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் !

நீ . . .நீயாக இரு !

பட்டு போல் பருத்தி இல்லை தான் . . .

ஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் !

நீ . . .நீயாக இரு !

ஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .

ஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் !

நீ . . .நீயாக இரு !

நேற்று போல் இன்றில்லை . . .

இன்று போல் நாளையில்லை . . .

அதனால் ஒவ்வொன்றும் அற்புதம்தான் !

எனவே நீ . . .நீயாக இரு !

அதில் வெட்கப்பட ஒன்றுமில்லை !

அதில் வருத்தப்பட ஒன்றுமில்லை !

அதில் நொந்துபோக ஒன்றுமில்லை !

அதில் பாபம் ஏதுமில்லை !

அதில் அசிங்கம் ஒன்றுமில்லை !

 உன்னை உரசிப் பார் . . .
உன்னை சரி செய்து கொண்டே வா . . .

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் போல் வாழ ஆசைப்படும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்
உன்னை உதாரணமாகக் கொள்ளும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன்னைப் பாடமாக ஏற்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

உலகம் ஒரு நாள்,
உன் வழி நடக்கும் ! ! !

நீ . . .நீயாக இரு !

நீ . . .நீயாகவே இரு !

நீ . . .நீயாக மட்டுமே இரு
===============================
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.5.16

மண்ணும் மனிதனும்

மண்ணும் மனிதனும்

"தத்துவமசி" என்பது இயற்கை இயங்கும் விதம், அனைத்தின் உயிர் இறைவன் என்பதன் அறிவு விளக்கம்......

ஆன்மிக்தில் விஞ்ஞானமும், மெய் ஞானமும்…...காண்பதே மனிதனும் இயற்கையும் இனைந்து, சுகமாக வாழும் கலையாகும்

இறைவனும்… ஓர் அற்புத ஆன்மிக பட்டறிவு(அனுபவ அறிவே இறைவன்......அறிவு கோட்பாடு (the theory of intelligence)
"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு"- தமிழ் மறை
பிரம்ம ஞானம்..! ) na tural philosophy

குரு: உன் பெயர் என்ன?

சீடன்: என் பெயர் செந்தில்.

குரு: செந்தில் எனும் பெயர் எதற்கு வைத்திருக்கிறது?

சீடன்: அப்பெயர் இவ்வுடலுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

குரு: உடல் என்ற பெயர் நிலையானதா?

செந்தில் எனும் பெயர் நிலையானதா?

சீடன்: .இந்தத் தேகத்துக்கு வேறு பெயரும் வைக்கலாமாகையால் செந்தில் எனும் பெயர் நிலையற்றது. உடல் எனும் பெயர் நிலையானது.

குரு; சரி ! கை வேறு, கால் வேறு, தலை வேறு, முண்டம் வேறு ஆகப் பிரித்து விட்டால் உடலென்ற பெயரேது? உடல் எனும் பெயரும் நிலை இல்லையே?

சீடன்; ஆம்! குருவே! அப்போது உறுப்புகாளான கை, கால் எனும் பெயர் தான் மிஞ்சி நிற்கிறது.

குரு: உறுப்புகளான கை, கால் தலை, முண்டம் என்கிற பெயராவது நிலையானதா? உறுப்புக்களைக் கண்ட துண்டமாகச் சிதைத்து தூள் தூளாக்கிவிட்டால் குவித்தால் என்ன பெரிட்டழைப்போம்? மாமிசப் பிண்டம் என்று தானே கூறுவோம்?

சீடன்: ஆம் ஐயனே! என்ன ஆச்சரியம்! எல்லாம் மாமிசப் பிண்டம்!

குரு: சரி இந்த மாமிசப் பிண்டத்தை மண்ணில் புதைத்து விட்டு, ஒரிரு ஆண்டுகள் சென்ற பின் பார்க்க அங்கே என்ன இருக்கும்?

சீடன்; சிவகுருவே! அங்கு மண் தான் இருக்கும். செந்தில் எனும் நான், உடலாகிப் பின் உறுப்பாகி, மாமிசப் பிண்டமாகி முடிவில் மண்ணாகி விட்டேனே. எல்லாம் மண்! மண்! மண்ணே,..!

குரு: உடலாகிய மண் எங்கே இருக்கிறது?

சீடர்: பூமியாகிய மண்ணின் மேல் மாமிசப் பிண்டமான மண் இருக்கிறது.

குரு; இந்த மாமிசப் பிண்டமான மண், எங்கிருந்து வந்தது? இந்த மண் புதய மண்ணா? பழைய மண்ணா?

குசவன் திரிகையில் ஏற்றிய மண்ணைக்
குசவன் மனதுற்ற தெல்லாம் வனைவன்
குசவன் போல் எங்கள் கோன்(இறைவெளி) நந்தி(மனம்) வேண்டில்
ஆசையில் உலகம் அது விது வாமே-திருமூலன்

சீடன்: பழைய மண் என்று தான் சொல்ல வேண்டும், புது மண் என்றால் அது எவ்விடத்திருந்து வந்தது? எனும் வினா எழும், அவ்விடத்தைச் சொல்ல வேண்டும்? முடியுமா?

குரு; பழைய மண் என்பது சரியே! இந்த மண் எப்படித் தோன்றிக் கொண்டிருந்தது? எவனித்துப் பதில் சொல்- படி

சீடர்; இந்த மண்தான் மாமிசப் பிண்டமான என் உடலாக இருந்தது, மாமிசம் முதலானவைகளைத் தவிர, உடம்பென்பது கிடையாது, அப்படியே தான்.. மண்ணைத்தவிர, மாமிசம் மிண்டம் முதலானவை கிடையாது, செந்தில்- உடம்பு- உறுப்புகள்- மாமிசப் பிண்டம் ஆகிய எல்லாம் வெறும் தோற்றம் மாத்திரமே தான். இருப்பது மண்ணே! ஆ!! இவ்வித ஆராய்ச்சியால் மண்ணே ஆகிவிட்டேன், .இவ்வுடல் மண்ணிலிருந்து உண்டாகி முடிவில் மண்ணே ஆகி விடுகிறது. என்னே மாயம்!

குரு; அப்படியானால் முன்னும் மண்ணே ! பின்னும் மண்ணே! இடைக் காலத்தில் கொஞ்ச காலம் உடலாகத தானே இருந்தது?

சீடர்; ஆம்! சிவகுருநாதா! என்னே என் அறியாமை!

குரு; மண் என்பது, இந்த ஓர் உடல் தானா? அல்லாது? எல்லா உடல்களும் தானா? மக்கள், விலங்கு, தாவரம் ஆகிய எல்லாச் சீவர்களும் தானா?

சீடர்; எழுவகைத் தோற்றங்களான மக்கள்-மிருகம், பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் யாவும் அவ்வண்ணமே மண்தான், இதுவுமின்றி தங்கம், இரும்பு முதலான கனிம பொருள்களும், நவமணிகளும் மற்றவைகளும் மண்ணாகவே ஆகிவிடுகிறது. மண்ணைத் தவிரவேறில்லை, இடையிலே பலவகைத் தோற்றங்களாக உண்டாகி யிருக்கிறதே! இந்தப்படியாக எல்லாமே தோற்றம் மாத்திரமாக இருக்க இவைகளைப் பொருள்கள் என மதித்து மயங்கி, மண்ணான உடல் முதலானவைகளை ‘நான்” என்றும்- எனது என்றும் மதித்து ஆணவத்தால்(அறியாமை) மதி மயங்கினேனே! எல்லாம் மண்ணே!

“மண்ணாசைப் பட்டேனை மண்ணுண்டு போட்டதேடா”-பட்டினத்தார்”

குரு: மாணவா! இதோடு நின்று விடாதே! இன்னும் கேள், இந்த பூமியாகிய மண்: ஆகாய வெளியில் மிதந்து கொண்டிருக்கும் மண். கடினமானதா? பிரிக்கக் கூடாதத? பிரிக்கக் கூடிய உதிரி மண்ணாக உள்ளதா?

சீடர்: இந்தப் பூமி உதிரியானது தான், மேலும் அணு அணுவான சேர்க்கையாகவும் இந்தப் பூமி உதிரி மண்ணாக உள்ளதா?

குரு: சரிதான். இந்த பூமியாகிய மண்ணை அணுவாக்கி, மேலும் நுண்ணிய அணுவாக்கி நசுக்க முயன்றால் அது நீர் அணுக்காளாகும். அந்த நீர் அணுக்களையும். நுண்ணிய அணுவாக்கி நசித்தால் நெருப்பு அணுக்களாகும். அந்த நெருப்பணுக்களையும் நுண்ணிய அணுக்களாக நசிக்குங்கால் வாயு அணுக்களாகும். அந்த வாயு அணுக்களையும் நுண்ணிய அணுக்களாகி நசித்தால் அது ஆகாயம் ஆகும். இந்த ஆகாய வெளியையும், சூக்கும அறிவினால் நசிப்பிக்கச் செய்யுங்கால் சூன்யாகாசம் ஆகி, அதுவும் நுண்ணணுவுக்கு அப்பால் நசிப்பிக்கும் போது “பரவெளி ஆகும். ஆகாய வெளி –சூன்யவெளி- பரவெளி –ஆகிய முப்பாழும் கடந்த அப்பாலான, எல்லையற்ற (அகண்ட) பெருவெளியே –வெட்டவெளி – சித்தர்கள், ஞானிகள் சொன்ன ஏக சிவமே உலகம்..! உணர்தால், நோய்கள், முதுமை, மரணமில்லா பேரின்பம் தான்…

சிந்திக்க இதுதான் நேரம்…

அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ... இந்த கோட்பாட்டுக்கு big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு) என்று.... தொகுப்பாக உள்ளது; பல அணுக்கள் சேர்ந்து நட்சத்திரங்களாகவும் பல...

வெளி மற்றும் காலம் சார்ந்த நீள அளவீடுகள் போதுமான அளவு ...

அண்டம் என்பது நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் குறிக்கின்ற ஒரு சொல்லாகும்.

இந்த நிலவுருண்டை (பூமி), நிலவு, வானம், சூரியன், சூரியனைச் சுற்றி வரும் கோள்கள், விண் மீன்கள், விண் மீன்களுக்கு இடையுள்ள விண் துகள்கள் (cosmic dust), அவற்றின் இயக்கம், இவற்றை எல்லாம் சூழ்ந்துள்ள வெட்ட வெளி (empty space), கண்ணுக்குத் தெரியாத தொலைவில் உள்ள விண்மீன்களுக்கும் அப்பால் உள்ள விண்மீன் குழுக்கள் (galaxy ) ஆக்கியன அனைத்தும் அண்டம் என்ற சொல்லில் அடங்கும்.

இத்துடன் காலம் என்ற கருத்தும் அது தொடர்பான முறைமைகளும் (laws ) இதில் அடங்கும்.

big bang theory (பேரிடித் தோற்றக் கோட்பாடு
“வெங்காய தத்துவம்” life means onion..! The inner meaning is spirituality..!

"உண்மையை உணர்ந்து கொள்"

"எல்லாம் சிவமயம்"
---------------------------------
படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

3.5.16

நடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்!


நடக்காததை நடத்திக் காட்டும் மந்திரம்!

எல்லா காரியங்களும் தடை பட்டுக் கொண்டே இருக்கின்றதா?
அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான்!!!
நடக்காததை நடத்திக்காட்டும் நரசிம்ம மந்திரம்:

நீங்கள் ஒரு முயற்சி எடுக்கிறீர்கள்! என்னவெல்லாமோ செய்து பார்க்கிறீர்கள். ஆனால், ஏதோ தடங்கல், இடைஞ்சல் என்று தலை தூக்கி அந்த முயற்சி நிறைவேறாமல் போய்விட்டது. நீங்கள் மனவருத்தத்துடன் இருக்கிறீர்கள்.

அப்படியானால், நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரம் இதுதான். இந்த மந்திரம் நடக்காததையும் நடத்திக்காட்டும் தன்மையுடையது.

"யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்துபித்ருத்வம்
அந்யேஷு அவிசார்ய தூர்ணம்ஸ்தம்பே
அவதார தம் அநந்ய லப்யம்லக்ஷ்மி
ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே."

இந்த ஸ்லோகத்தைச் சொல்ல முடியாதவர்கள் பொருளைச் சொல்லுங்கள்.

“பக்தியற்றவர்களால் அடைய முடியாதவனே!
தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால்
தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவனே!
நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின்
துன்பத்தைப் போக்குபவனே!
லட்சுமி நரசிம்மனே! 
--------------------------------------
இணையத்தில் படித்தது. உங்களுக்கு பயன்படும் என்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

2.5.16

சிறுகதை: மாமனாரும் மாப்பிள்ளையும்


சிறுகதை: மாமனாரும் மாப்பிள்ளையும்

அப்பச்சி சொன்ன கதைகள் - பகுதி 11

மாத இதழ் ஒன்றில் சென்ற மாதம் வெளியான அடியவன் எழுதிய சிறுகதை. நீங்கள் படிப்பதற்காக அதை இன்று வலையில் ஏற்றியுள்ளேன்!              

   எங்கள் அப்பச்சி  சட் சட்டென்று நிறைய குட்டிக் கதைகளைச் சொல்வதில் வல்லவர். அவரை வைத்துத்தான் எனக்கு கதைகளில் ஆர்வம் வந்தது.

அவர் சொன்ன 10 வரி அல்லது 15 வரிக் கதைகளை விரிவு படுத்தி எனது நடையில் எழுதிக்கொண்டு வந்துள்ளேன். பல கதைகள் ஆச்சி வந்தாச்சு மாத இதழ்களில் வெளியாகியுள்ளது. அந்த வரிசையில் இது அடுத்த கதை. அனைவரும்  படித்து மகிழுங்கள்!
-----------------------------------------------------------------------
அது 1943ம் ஆண்டு. சுமார் 72 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம்.

வதனமே சந்திர பிம்பமோ?
வதனமே சந்திர பிம்பமோ மலர்ந்த சரோஜமோ?
வதனமே சந்திர பிம்பமோ?

என்ற எம்.கே.தியாகராஜ பாகவதரின் பாடல் ஒலித் தட்டுக்கள் மூலம் எங்கும் ஒலித்துக் கொண்டிருந்த காலம்.

ஆனால் அந்தப் பாடல்களை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் சாத்தப்ப செட்டியார் இல்லை. தன் மகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முனைப்பில் அவர் இருந்தார். மகள் மீனாட்சிக்கு 20 வயது. அந்தக் காலத்தில் பெண்களுக்கு 18 வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிடுவார்கள்.வயது  ஏறிக்கொண்டே போகிறதே என்று சாத்தப்ப அண்ணனுக்குக் கவலை.

அவள் அவருக்கு ஒரே பெண். தாயில்லாத பெண். அவளுடைய தாயாருக்கு ஆஸ்த்மா நோய் வந்து, மதுரை பசுமலையில் வைத்து, சிரத்தையாக வைத்தியம் பார்த்தும் அவர் பிழைக்கவில்லை. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சாத்தப்ப அண்ணன் தன் மகளின் நலன் கருதி மறுமணம் செய்து கொள்ளவில்லை.

அந்தக் காலத்து வழக்கப்படி தன் மகள் சடங்கானவுடன், 7ம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தவளின் படிப்பை நிறுத்தி வீட்டோடு வைத்துக்கொண்டு விட்டார். மிகவும் அன்பானவள். வீட்டில் இருந்த மற்ற பங்குக்காரர்கள் எல்லாம் போட்டி போட்டுக்கொண்டு சொல்லிக் கொடுக்க அவள் சமையலில் கெட்டிக்காரியாகி விட்டாள். கருணைக் கிழங்கு கெட்டிக் குழம்பும், முழுக் கத்திரிக்காய் புளிக்குழம்பும் வைத்தாள் என்றால் இலையை
விட்டு எழுந்திரிக்க மனசு வராது. அத்தனை சுவையாக இருக்கும்.

அவளுக்குத்தான் தற்போது வரன் தேடிக்கொண்டிருந்தார். கடைசியில் உள்ளூரிலேயே இருந்த உறவுக்காரப் பையன் ஒருவனுக்கு அவளைக் கட்டிக் கொடுத்துவிட்டார். மாப்பிள்ளை சோமசுந்தரம் பள்ளி இறுதியாண்டுவரை படித்தவர். மதுரையில் இருந்த மொத்த மருந்து வணிகர் ஒருவரிடம் வேலையில் இருந்தார்.

திருமணம் ஆனவுடன் மதுரை வக்கீல் புதுத் தெருவில் ஒரு சின்ன வீட்டை வாடகைக்குப் பிடித்ததுடன் மனைவியையும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்.

புறப்பட்டுப் போகும் போது மீனாட்சி அந்த அழுகை அழுதிருக்கிறாள். அப்பச்சி, இனி சாப்பாட்டிற்கு என்ன செய்வார் என்பதுதான் அவளுடைய கவலை மற்றும் சொல்லமுடியாத  வருத்தம் எல்லாம். சாத்தப்ப அண்ணனும் அவளைச் சமாதானப் படுத்தி அனுப்பிவைத்தார்.

திருமணமாகி முதல் 6 மாதங்கள் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். மீனாட்சியும் உண்டாகியிருந்தாள். அதற்குப் பிறகுதான் பிரச்சினை ஆரம்பமானது. மீனாட்சிக்கு அவளுடைய தந்தையார் ஸ்ரீதனமாகப் போட்டுக் கொடுத்திருந்த பத்தாயிரம் ரூபாய்களைக் கேட்டு மாப்பிள்ளை நச்சரிக்க ஆரம்பித்தார். பத்தாயிரம் என்பது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. பவுன் 43 ரூபாய் விற்ற காலம்.

வேலைக்குச் சென்றால் வருகின்ற சம்பளம் கைக்கும் வாய்க்குமாகத்தான் இருக்கிறது. ஒன்றும் மிஞ்சவில்லை. குழந்தை வேறு பிறந்தால் அதிகப் படியான செலவுக்கு என்ன செய்வது என்பது அவருடைய பிரச்சினை. அதனால் நண்பன் ஒருவனுடன் கூட்டாகச் சேர்ந்து மதுரை சிம்மக்கல் பகுதியில் சில்லறை மருந்துக்கடை ஒன்றைத் துவங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அதற்குத்தான் மீனாட்சியின் ஸ்ரீதனப் பணம்
அவருக்குத் தேவைப்பட்டது.

தன் தந்தையைக் கேட்டுவிட்டு, வைப்புத் தொகையாக இருந்த அந்தப் பணத்தைத் தருவதாகச் சொன்ன மீனாட்சி, தன் தந்தைக்குக் கடிதம் எழுதினாள். அவரும் புறப்பட்டு வந்துவிட்டார். ”ஸ்ரீதனப் பணம் என்பது பெண்ணின் தற்காப்புக்காகக் கொடுக்கப்படும் பணம், வேறு எதற்கும் பயன் படுத்தக்கூடாது. இல்லை என்று சொல்லிவிடு’ என்று சொல்லிவிட்டு வந்த வேகத்திலேயே அவர் திரும்பிச் சென்று விட்டார்.

பெண்ணை நம்பிக் கொடுத்தவர், பணத்தை நம்பிக் கொடுக்க மறுத்துவிட்டாரே என்று மாப்பிள்ளைக்கு அதீதமான கோபம். மாமனாரைத் திட்டித் தீர்த்துவிட்டார். மீனாட்சியால் ஒன்றும் பதில் சொல்ல முடியவில்லை.

அடுத்த நாளே ஊருக்குக் கிளம்பிச் சென்றவர், தன் பெற்றோர்களிடம் பேசி,  மேலூரில் இருந்த தங்கள் குடும்ப நிலத்தில் தன் பங்கை மட்டும் விற்கச் சொல்லிப் பணத்தை வாங்கிக் கொண்டு வந்து, நினைத்தபடி கடையைத் துவக்கிவிட்டார். அவருடைய நல்ல நேரம் கடையும் அமோகமாக
நடக்கத்துவங்கியது.

அதற்குப் பிறகு தன் மாமனாருடன் பேசுவதை நிறுத்தியதோடு, அவர் தங்கள் வீட்டிற்கு வந்தால் கூட மரியாதை கொடுப்பது இல்லை. வாருங்கள் என்று ஒப்புக்குக்கூடச் சொல்வதில்லை. தரக்குறைவாக விமரிசனம் செய்வார்.  அவரைப் பயல் என்பார். தன் மனைவியை பய மகளே என்பார்.

மீனாட்சிக்கு மிகுந்த வருத்தம். அவர் மாமனார் என்பதற்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் வயதில் பெரியவர் என்பதற்காவது மரியாதை கொடுக்க வேண்டாமா என்பாள். மாப்பிள்ளை அதைக் காதிலே வாங்கிக் கொள்வதில்லை.

சாத்தப்ப அண்ணன் தன் மகளைப் பார்க்க வேண்டும் என்றால், நகர விடுதியில் வந்து தங்கி மாப்பிள்ளை இல்லாத நேரத்தில் வந்து மகளைப் பார்த்துவிட்டுபோவார்.

பழநி அப்பன்தான் அவரைத் திருத்த வேண்டும் என்று மீனாட்சி பழநியில் உறையும் பழநியாண்டவரை வேண்டிக்கொள்வாள்.

பழநி அப்பன் திருத்தினாரா?

திருத்தாமல் விடுவாரா? எப்படித் திருத்தினார் என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

                  *************************************************

காலம் வேகமாக ஓடியதில் 20 ஆண்டுகள் கடந்து போனதே தெரியவில்லை. மாப்பிள்ளை சோமசுந்தரம்  நன்றாக சம்பாதித்து மதுரை கோரிபாளையத்தில் சொந்தமாக ஒரு வீட்டையும் வாங்கி செட்டிலாகி இருந்தார். ஆனால் குணம் மட்டும் மாறவில்லை. அவருடைய மகளும் பள்ளி இறுதியாண்டில் நல்ல மதிப்பெண்களும் பெற்றுத் தேறி, திருமணத்திற்குத் தயாராக இருந்தாள்.

மும்மரமாக மாப்பிள்ளை தேடியதில் மதுரை கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக இருக்கும் வரன் ஒன்றைத் தேடிப் பிடித்துவிட்டார். ஆனால் நெருக்கிப் பேசும்போதுதான், அவர்களுக்குத் தோது கொடுப்பதற்குத் தேவையான பணம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்து தலையைப்
பிடித்துக்கொண்டு வீட்டில் அமர்ந்துவிட்டார். ஐம்பதாயிரம் குறைந்தது. அது அந்தக் காலகட்டத்தில் பெரிய தொகை

விஷயத்தைக் கேள்விப்பட்ட சாத்தப்ப அண்ணன், தன் மகள் வீட்டிற்குச் சென்று, அது நல்ல சம்பந்தம், அதையே பேசி முடியுங்கள். என்ன பணம் பத்தவில்லையோ அதை நான் தருகிறேன் என்று வாக்குறுதி தந்தார். தன்னிடம் சேமிப்பில் உள்ள பணம் பேத்தியின் திருமணத்திற்குப் பயன் படுவதில் தனக்கு மிக்க மகிழ்ச்சி என்றும் சொன்னார்.

அப்புறம் என்ன? கதையின் நீளம் கருதி நடந்ததை சுருக்கமாகவே செல்கிறேன்.

அடுத்து வந்த முகூர்த்த நாளில் இரு வீட்டாராலும் திருமணம் கெட்டி செய்யப்பெற்றது.

மாப்பிள்ளை சோமசுந்தரம் தன் மாமனாரின் மேன்மையை அப்போதுதான் உணர்ந்தார். தன் மனைவியிடம் சொல்லி நகரவிடுதியில் தங்கியிருந்த அவரை வரச் சொல்லி மதிய விருந்திற்கு ஏற்பாடு செய்யச் சொல்லிவிட்டு,  விளக்குத்தூண் பகுதியில் உள்ள பெரிய ஜவுளிக் கடை ஒன்றில் தன்
மாமனாருக்கு அன்பளிப்பாகக் கொடுப்பதற்கு ஃபின்லே மல் வேஷ்டி ஒன்றையும், அதே கம்பெனியின் மேல் துண்டு ஒன்றையும் வாங்கிக் கொண்டு, வீட்டிற்குத் திரும்பினார்.

அவர் வீட்டிற்குள் வந்தது தெரியாமல், சாத்தப்பண்ணனும் அவர் மகளும் உற்சாகமாகப் பேசிக் கோண்டிருந்தார்கள்

“ஆத்தா நம் மாப்பிள்ளையும் பயலாகி விட்டார், தெரியுமா?”

“என்ன அப்பச்சி சொல்கிறீர்கள்?” இது மகள்

“ இத்தனை ஆண்டுகளாக என்னைப் பயல் பயல் என்று சொல்லிக்கொண்டிருந்தார் இல்லையா? இப்போது அவரைப் பயல் என்று சொல்ல ஒருத்தன் கிடைத்து விட்டான் பார்த்தாயா?”

மீனாட்சி களுக்கென்று வாய்விட்டுச் சிரித்துவிட்டாள்.

பின்னால் நின்று கேட்டுக் கொண்டிருந்த சோமசுந்தரத்திற்கு செவிட்டில் அரைந்ததைப் போன்று இருந்தது.

பத்தடி முன்னால் வந்து, தன் மாமனாரின் இரு கரங்களையும் பற்றிக் கொண்டு பேசத்துவங்கினார்.

“அம்மான் என்னை மன்னித்துவிடுங்கள். ஏதோ சின்ன வயதில் கோபத்தில் தவறாகப் பேசியது. பின்னால், நடுத்தர வயது வந்த பிறகாவது, மட்டு மரியாதை தெரிந்து உங்களை அப்படி அழைத்திருக்கக்கூடாது. என் மனைவி மீனாட்சியையும், பல ஆண்டுகளாக தரக்குறைவாக அழைத்ததும் தவறுதான். அவள் பொறுமையின் சிகரம். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு என்னோடு குடும்பம் நடத்தினாள். நீங்கள் இருவரும் என்னை
மன்னித்துவிடுங்கள்.....”

என்று சொல்லிக் கொண்டே வந்தவர், திடீரென்று தன் மாமனாரின் காலில் விழுந்து வணங்கிவிட்டு எழுந்து நின்றார். அவர் கண்களில் நீர் கோர்த்திருந்தது.

மீனாட்சிக்கும் அளவில்லாத மகிழ்ச்சி. இப்போதாவது தன் கணவர் தன் தந்தையின் அருமை பெருமைகளை உணர்ந்து திருந்தினாரே என்ற மகிழ்ச்சி!

எல்லாம் பழநி அப்பனின் மகிமை என்று மனதிற்குள் நினைத்துக் கொண்ட அவள் மனமார பழநியாண்டவரை வணங்கி மகிழ்ந்தாள்!

                                        ***************************************************
அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!