மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.15

இக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி?


இக்கட்டில் தலை தப்பிக்க என்ன வழி?

பணம் என்றால் என்ன...? - கற்றுக்கொடுங்கள் குழந்தைகளுக்கு!

அப்பாக்கள் பணி ஓய்வு பெற்றபோது வாங்கிய சம்பளத் தைவிட இருமடங்கு, ஆரம்ப சம்பளமாகப் பெறும் தலை முறை இது. ஆனாலும், பெற்றோர்கள் அளவுக்கு அவர்களால் குடும்பப் பொருளாதாரத்தை சாமர்த்தியமாக, சமர்த்தாக நிர்வகிக்க முடிவதில்லை.

மாதம் லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கினாலும், பல இளம் தம்பதிகளுக்கு
30ம் தேதி அக்கவுண்ட் பேலன்ஸ் ‘நில்’(nil) என்பதே இன்றைய நிலைமை. காரணம் சிக்கனம், சேமிப்பு பழக்கங்களில் இருந்து அவர்கள் வெகுதூரம் சென்றுவிட்டதே!

உங்கள் வீட்டு குழந்தைகளும், நாளை மாதம் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலை வரலாம். அப்போதும் அவர்களின் அக்கவுண்ட் பேலன்ஸ்
30ம் தேதி ‘நில்’ என்றில்லாமல் இருக்க, இப்போதிலிருந்தே அவர்களுக்குப் பணம் பற்றிய பாடங்களை புரிய வைப்பது அவசியம்.

அதை முன்னெடுப்பதற்கான முக்கிய ஐந்து ஆலோசனைகள் இங்கே...

பொறுமை... பணம்!

குழந்தைகள் கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கும் வசதி உங்களுக்கு இருக்கலாம். ஆனாலும், அவர்கள் ஒரு பொருளை வேண்டும் எனக் கேட்கும்போது, ‘நிச்சயம் அடுத்த வாரம் வாங்கலாம்’, ‘எக்ஸாம் லீவ்ல
அதை உனக்கு வாங்கித் தர்றேன்’ என்று அந்தப் பொருளுக்காக அவர்களை காத்திருக்க வைத்து, பின் வாங்கிக் கொடுங்கள்.

அப்போதுதான் அந்தப் பொருளின் மதிப்பும், பணத்தின் மதிப்பும்
அவர்களுக்குப் புரியும். இன்றிரவு கேட்கும் ஸ்கேட்டிங் ஸ்கூட்டி,
இரண்டு நாட்களில் அவர்களுக்கு கிடைக்கும் என்றால், மூவாயிரம்
ரூபாய் மதிப்புள்ள அந்த விளையாட்டுப் பொருள் அவர்களுக்கு
மலிவாகவே தோன்றும். அதை பத்திரமாக வைத்துக்கொள்ளும்
பொறுப்பும் வராது.

அத்தியாவசியமா, ஆடம்பரமா..?

அத்தியாவசியத்திற்கும், ஆடம்பரத்திற்கும் உள்ள வித்தியாசத்தை அவர்களுக்குப் புரிய வையுங்கள். வேக்ஸ் கிரையான்ஸ் வாங்கித் தரச்சொல்லி உங்களை கடைக்குச் கூட்டிச் சென்று, ‘அப்படியே வாட்டர் கலரும், கார் பொம்மையும் வாங்கிக்கறேன்’ என்று கேட்டால், தலையாட்டாதீர்கள். ஒரே சமயத்தில் பல பொருட்களின் மேல் ஆசை கொள்வது குழந்தைகளின் இயல்பு. இருந்தாலும், அந்தப் பொருட்களில் முதன்மைத் தேவை எது என்பதை அவர்களைப் பரிசீலிக்கச் சொல்லி,
ஒன்றை மட்டும் தேர்ந்தெடுக்கச் சொல்லுங்கள்.

பின்நாளிலும், பார்ப்பதை எல்லாம் வாங்கும் மனோபாவத்திற்கு இந்தப் பழக்கம் அணை போடும். பல பொருட்களுக்கு மத்தியில் சிறந்தது மற்றும் தேவையானதைத் தேர்ந்தெடுத்து வாங்கும் திறனையும் அவர்களுக்கு வளர்க்கும்.

பட்ஜெட் கற்றுக் கொடுங்கள்!

வீட்டுக்கான மாத பட்ஜெட் போடும்போதும், அது தொடர்பான விஷயங்களைப் பேசும்போதும் குழந்தை களையும் அங்கு இருக்கச் செய்யுங்கள்.
செலவைக் குறைக்க அவர்களை ஐடியா சொல்லச் சொல்லுங்கள். அவர்களுக்கு வாங்கிக் கொடுக்கும் ஒவ்வொரு பொருளின் ‘பிரைஸ் டாக்’ஐயும் அவர்களுக்குக்  காட்டுங்கள்.

அவர்களுக்கு வாங்கிய புது ஸ்போர்ட்ஸ் ஷூவின் விலையானது,
ஒரு மூடை அரிசி/இரண்டு பெட் ஸ்ப்ரெட்கள்/ஐந்து லன்ச் பாக்ஸ்கள்/
ஆயிரம் சாக்லெட்டுகள் வாங்கும் விலைக்குச் சமமானது என, ஒரு பொருளின் விலையோடு, மற்றொரு பொருளின் விலையை ஒப்பிடக் கற்றுக்கொடுங்கள். இது, பொருட்களின்விலை பற்றிய தெளிவான
புரிதலை உண்டு பண்ணும்.

குடும்பத்தின் பொருளாதார நிலைமையை குழந்தைகள் அறிய வேண்டும்!
தன் நண்பன், தோழி வைத்திருக்கும் விலை உயர்ந்த ஒரு பொருளைக் குறிப்பிட்டு, அது தனக் கும் வேண்டும் என்று உங்கள் குழந்தைகள்
கேட்கலாம். ‘என் புள்ளை கேட்டதை எப்பாடுபட்டாவது வாங்கிக்
கொ டுப்பேன்’ என்று எமோஷனலாக இருக்கத் தேவையில் லை. அது
உங்கள் பட்ஜெட்டிற்கு அடக்கமானது இல்லை எனில், அதை
வெளிப்படையாக அவர்களிடம் கூறிவிடுங் கள். அப்போதுதான்,
குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு உட்பட்டு நடக்கும் பொறுப்பு
அவர்களுக்குக் கிடைக்கும்.

நாளடைவில், ‘அம்மா என் ஃப்ரெண்ட் வீட்டுல ஹோம் தியேட்டர்
இருக்காம். நம்ம வீட்டுல அதெல்லாம் முடி யாதுனு எனக்குத் தெரியும்.
இந்தப் பழைய டிவியை மாத்தும் போது எல்சிடி டிவியா வாங்கிக்கலாமா ப்ளீஸ்..?’ என்று பிராக்டிக்கலாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் பாசிட்டிவ் ஆட்டிட்யூட் அவர்களுக்கு வளரும்.

பாக்கெட் மணி கொடுங்கள்!

குழந்தைகளுக்குப் பாக்கெட் மணி கொடுப்பது தவறு என்று சிலர் நினைக்கக்கூடும். உண்மையில் அது மிகச் சிறந்த சிக்கனப் பாடம்.
ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி அந்த மாதம் முழுவதற்குமான
பாக்கெட் மணியை அவர்களிடம் மொத்தமாகக் கொடுத்துவிடுங்கள்.
30ம் தேதி வரை அது தவிர்த்து ஒரு ரூபாய் கூட கொடுக்காதீர்கள்.
வரவுக்குள் செலவழிக்கப் பழக்க, அது சிறந்த வாய்ப்பாக அமையும்; ‘
மாதக் கடைசி வரை இந்தக் காசுதான் நமக்கு’ என்ற கடிவாளம்,
அவர்களை அனாவசியமாகச் செலவழிக்க விடாது.

சேமிக்கக் கற்றுக் கொடுங்கள்!

குழந்தைகளுக்கு சேமிப்புப் பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். உண்டியல் முதல், போஸ்ட் ஆஃபீஸ் ஆர்.டி அக்கவுண்ட், வங்கிகளில் ஜூனியர் அக்கவுண்ட் என அவர்கள் சேமிப்பதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுங்கள். அவர்களின் சேமிப்புத் தொகையில், அவர்களுக்குத் தேவைப்படும் ஒரு முக்கியமான பொருளை வாங்கிக் கொடுங்கள்.


மீண்டும் சேமிப்பைத் தொடர வைத்து, அந்த சேமிப்புப் பணத்தில், அடுத்து அவர்களுக்காக அவர்களே வாங்கிக்கொள்ளப் போகும் பொருள் பற்றி அவ்வப்போது பேசி ஆர்வத்தை அதிகப்படுத்துங்கள். சேமிப்பின் ருசியை அவர்களை அறியவைத்துவிட்டால், அது ஆயுளுக்கும் தொடரும்.

சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட உலகப் பொருளாதார மந்த நிலையால் அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஆட்டம் கண்டபோதும் இந்தியா தலை தப்பிக்கக் காரணம், நம் மக்களின் சேமிப்புப் பழக்கமே! அதைப் பரிசளிப்போம் அடுத்த தலைமுறைக்கும்

இக்கட்டில் தலை தப்பிக்க அதுதான் வழி?
---------------------------------
இணையத்தில் படித்தேன். பிடித்திருந்தது. உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.9.15

பாடவந்தது ஏன் மறந்தது?


பாடவந்தது ஏன் மறந்தது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
உன்னைத்தான் பாடவந்தேன் ... வண்ணமயில் வேல்முருகா
உன்னைக்கண்டு மறந்துவிட்டேன் ... என்ன சொல்லிப் பாடுவதோ ...
என்ன சொல்லிப் பாடுவதோ
(உன்னைத்தான் ...)

பழமுதிரும் சோலை வந்தேன் ... மனமுருகி பாடி நின்றேன் 
பழநிமலை ஓடி வந்தேன் ... அழகு தமிழ் பாடி நின்றேன் 
திருத்தணிக்கு தேடி வந்தேன் ... திருக்காட்சி காணவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

தினைப்புனத்தைக் காத்துநின்ற ... அனைவரையும் கேட்டுவந்தேன் 
திருப்பபரங்குன்றூர் வந்தேன் ... தென்குமரி தேவைவந்தேன் 
ஆறுபடை வீதியெல்லாம் ... நூறுமுறை சென்றுவந்தேன் 
(உன்னைக்கண்டு ...)

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.9.15

அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்துகள்!


அர்த்த சாஸ்திரத்தில் இருந்து சில அர்த்தமுள்ள கருத்துகள்!

மிக நீளமான பதிவு. பொறுமையுடன் படியுங்கள் சாமிகளா!

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------
👍ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன்
ஆகியவர்களுடன் வாழ்வது ஒரு கொடிய விஷப் பாம்புடன் வாழ்வதை
 போன்றது,
  அது நிச்சயம் மரணத்தை தரும்
.
👍ஒருவன் தன்னுடைய கஷ்ட காலத்திருக்கு தேவையான பணத்தை முன்பே காக்க வேண்டும் அல்லது சேர்த்து வைக்க வேண்டும் வேலைக்காரனை வேலை செய்யும் போதும், உறவினர்களை கஷ்டம் வரும் போதும், நண்பனை ஆபத்து நேரும் போதும், மனைவியை நோய்வாய்ப்படும் போதும், தூரதிஷ்டமான காலத்திலும் அறியலாம்.

👍கூறிய நகங்கள் அல்லது கொம்புகள் உடைய மிருகம், ஆயுதம் ஏந்திய மனிதன், அரச குடும்பத்தில் பிறந்தவர்களை ஒரு நாளும் நம்ப கூடாது .

👍ஒரு காரியம் நிறைவேறும் வரை அவற்றை பற்றி அறிவாளி வெளியில் சொல்ல மாட்டான். அறிவுள்ளவன் தன் குழந்தைகளுக்கு சகல வித்தைகள் பயிலும் வாய்ப்பை தேடித் தருவான். ஒரு நாளும் ஒன்றையும் படிக்காமலும், ஒரு வரியாவது, ஒரு சொல்லையாவது கற்காமலும், நல்ல காரியங்களில் ஈடுபடாமலும் செல்ல வேண்டாம்.

👍நல்ல குடும்பத்தில் பிறந்தாலும், நல்ல வசதிகள் இருந்தாலும் கல்வி கற்காவிடின் ஒருவன் வாசனையற்ற மலரை போன்றவன் ஆவான்.

👍உங்கள் குழந்தையை 5 வயது வரை கொஞ்சுங்கள், 5 -15 வயது வரை தவறு செய்தல் தடியால் கண்டியுங்கள். 15 வயதுக்கு மேல் நண்பனாக நடத்துங்கள்.
கற்பது பசுவை போன்றது, அது எல்லா காலங்களிலும் பால் சுரக்கும், அது தாயை போன்றது எங்கு சென்றாலும் நம்மை காக்கும், ஆதலால் கற்காமல் ஒரு நாளும் வீணாக செல்ல வேண்டாம்.

👍கடலில் பெய்யும் மழை பயனற்றது, பகலில் எரியும் தீபம் பயனற்றது, வசதி உள்ளவனுக்கு கொடுக்கும் பரிசு பயனற்றது, நோய் உள்ளவனுக்கு கொடுக்கும் அறுசுவை உணவு பயனற்றது. அதுபோல் முட்டாளுக்கு கூறும் அறிவுரையும் பயனற்றது.

👍காமத்தை விட கொடிய நோய் இல்லை. அறியாமையை விட கொடிய எதிரி இல்லை. கோபத்தை விட கொடிய நெருப்பு இல்லை,
எவன் ஒருவனுக்கு செல்வம் இருக்கிறதோ, அவனுக்கு உறவினர்கள் உண்டு, நண்பர்கள் உண்டு. பணம் இருப்பவனைத் தான் உலகம் மனிதனாக மதிக்கிறது. அவனைத்தான் அறிவாளி, பண்டிதன் என்று உலகம் போற்றுகிறது.

👍பிறவி குருடனுக்கு கண் தெரிவதில்லை, அது போல் காமம் உள்ளவனுக்கு கண் தெரியாது, பெருமை உள்ளவனுக்கு கெடுதி தெரியாது, பணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உள்ளவனுக்கு பாவம் தெரியாது.

பேராசை கொண்டவனை பரிசு கொடுத்தும், பிடிவாதம் உள்ளவனை சலாம் போடுவதன் மூலமும், முட்டாளை நகைச்சுவை மூலமும், அறிவாளியை உண்மையான வார்த்தை மூலமும் அணுகலாம்.

👍சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறு விஷயங்களையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.

👍சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.

👍கொக்கு ஓடு மீன் ஓட உறு மீன் வரும் வரை காத்து நிற்கும், அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.

களைப்புற்றாலும் கழுதை தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டு பட்டிருக்கும். ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவர் அவர்க்கு தேவையானவற்றை பிரித்து கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.

👍கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.

ஒருவன் மேலே சொன்ன இருபது விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.

👍அறிவாளி தனக்கு ஏற்படும் அவமானங்களையும், தன் மன விரக்தியையும், தன் மனைவியின் தீய நடத்தையும், பிறரால் ஏற்படும் கடும் சொற்களையும் வெளியில் சொல்ல மாட்டான்.

ஒருவன் தனக்கு கிடைக்கும் மனைவி, உணவு, நியாமான முறையில் வரும் வருமானம் ஆகியவற்றில் திருப்தி அடைய வேண்டும். ஆனால் கற்கும் கல்வி, , தர்ம காரியங்கள் ஆகியவற்றில் திருப்தி அடையாமல் தொடர்ந்து செய்ய வேண்டும்.

👍யானையிடம் இருந்து 1000 அடி விலகி இருங்கள், குதிரையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள், கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் உங்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும், ஏமாற்றும் மக்கள் வசிக்கும் ஊரை விட்டு சென்று விடுங்கள்.

👍எல்லாம் காரியங்களிலும் உங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருக்காதீர். வளைந்து நெளிந்து வாழ கற்று கொள்ளுங்கள். காடுகளில் நீண்டு நேராக உள்ள மரங்களே முதலில் வெட்டப்படுகிறது.

👍அன்னம் நீர் உள்ள இடத்தில் தான் வசிக்கும், நீர் இல்லாது போனால் வேறு இடத்திருக்கு சென்று விடும். அது போல் மனிதர்கள் ஆதாயம் உள்ளவரை தான் நம்மிடம் பழகுவார்கள். இதை புரிந்து கொள்ளுங்கள்.

👍சிங்கத்தில் குகைக்குள் சென்றால் உங்களுக்கு மான் கொம்புகளோ, யானைத் தந்தங்களோ கிடைக்கலாம், நரியின் குகைக்குள் சென்றால் மாட்டின் வாலோ, துண்டு எலும்புகளோ தான் கிடைக்கும். ஆதலால் ஒரு காரியத்தை தொடங்கும் முன் நமக்கு என்ன கிடைக்கும் என்று ஆலோசித்து அதில் இறங்க வேண்டும்.

அறியாமை ஒரு மனிதனை வீணாக்கும். பயிற்சி செய்யாவிடின் நாம் கற்ற வித்தைகள் வீணாகும்,

👍வயதான காலத்தில் மனைவியை இழப்பது, உறவினர்களை நம்பி பணத்தை இழப்பது, உணவுக்காக அடுத்தவரை நாடி இருப்பது ஆகிய மூன்றும் மிகவும் துரதிஷ்டமான சம்பவங்கள் ஆகும்.

👍அழகு ஒழுக்கம் இல்லாத செயல்களால் கெட்டு போகும், நல்ல குலத்தில் பிறந்தவனுடைய மரியாதை கெட்ட நண்பர்களால் கெட்டு போகும். முறையாக கற்காத கல்வி கெட்டு போகும். சரியாக பயன் படுத்தாத பணம் கெட்டு போகும்.

கல்வி கற்றவனை மக்கள் மரியாதை செய்கின்றனர். கல்வி கற்றவன் கட்டளைக்கு அனைவரும் மரியாதை செய்கின்றனர். கல்வி சென்ற இடமெல்லாம் சிறப்பை தேடித் தருகிறது. ஆதலால் கல்வி கற்பதை ஒரு நாளும் நிறுத்த வேண்டாம்.

👍எருக்கம் பூ அழகாக இருந்தாலும் அது சிறப்பான வாசனை தராது. அதுபோல் நல்ல குலத்தில் பிறந்தாலும், அழகாக இருந்தாலும் ஒருவன் கல்வி கற்காவிடின் வீணான மனிதன் ஆவான்.

👍மாணவன், வேலைக்காரன், பயணம் செய்பவர்கள், பயத்தில் உள்ளவன், கருவூலம் காக்கும் காவல்காரன், மெய் காவலர்கள், வீட்டை காவல் காக்கும் நாய் ஆகிய ஏழு நபர்களும் அயர்ந்து தூங்கக்கூடாது, தேவை ஏற்பட்டால் உறக்கத்தில் இருந்து உடனடியாக எழுந்து செயல்பட வேண்டும்.

பாம்பு, அரசன் , புலி, கெட்டும் தேனீ, சிறு குழந்தை, அடுத்த வீட்டுக்காரனின் நாய், முட்டாள் ஆகிய ஏழு நபர்களை தூங்கும் போது எழுப்பக்கூடாது .

👍பணம் ஒன்றே ஒருவனை செல்வந்தன் ஆக்காது, பணம் இல்லை என்றாலும் கல்வி கற்றவன் செல்வந்தன் ஆகிறான், ஒருவன் கல்வி கற்காவிடின் அனைத்தும் இழந்தவனாகிறான்.

கஞ்சனுக்கு பிச்சைகாரன் எதிரி ஆவான், தவறு செய்யும் மனைவிக்கு கணவன் எதிரி ஆவான். அறிவுரை கூறும் பெரியவர்கள் முட்டாளுக்கு எதிரி ஆவார், பூரண நிலவு ஒளி திருடர்களுக்கு எதிரி ஆகும்.

👍கல்வி கற்க விரும்பாதவன், நல்ல குணங்கள் இல்லாதவன், அறிவை நாடாதவன் ஆகியவர்கள் இந்த பூமியில் வாழும் அற்ப மனிதர்கள், அவர்கள் பூமிக்கு பாரம்.

👍வறுமை வந்த காலத்தில் உறவினர்களின் தயவில் வாழ்வதை விட புலிகள் வாழும் காட்டில், புற்கள் நடுவில் உள்ள மரத்தடியில் வாழ்வது மிகவும் மேலானது.
பல பறவைகள் இரவில் ஒரே மரத்தில் இருந்தாலும் காலையில் ஒவ்வொன்றும் ஒரு திசையில் பறக்கிறது. ஆதலால் நம்மிடம் நெருங்கி உள்ளளோர் எப்போதும் நம்முடன் இருப்பதில்லை, இதை உணர்ந்து கவலைப்படாமல் வாழ வேண்டும்.

👍பெரிய யானை சிறிய அங்குசத்தை கண்டு பயப்படுகிறது, சிறிய மெழுகுவத்தி பெரிய இருளை விலக்குகிறது, பெரிய மலை சிறிய உலியால் வெட்டி எடுக்கப்படுகிறது. பெரிய உருவத்தினால் என்ன பயன்? உருவத்தை கொண்டு ஒருவரை எடை போடக்கூடாது.

👍வேப்ப மரத்தை கிளை முதல் வேர் வரை நெய்யும், பாலும் ஊற்றி வளர்தாலும் அதன் கசப்பு தன்மை மாறாது. அது போல் கெட்ட மனிதர்களுக்கு எத்தனை விதமாக உரைத்தாலும் அறிவு வராது.

சாராயப் பாத்திரத்தை நெருப்பில் இட்டாலும் அதன் மணம் போகாது. அது போல் எத்தனை முறை புனித நதிகளில் குளித்தாலும் மனத்துய்மை வராது.

👍கல்வி கற்கும் மாணவனன் இந்த எட்டு விஷயங்களில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும். அவை காமம், கோபம், பேராசை, இனிப்பு உணவுகள், அலங்காரம், அதிக ஆர்வம், அதிக தூக்கம், உடலை பராமரிக்க அதிக அக்கறை.

உங்கள் தேவைக்கு அதிகமான செல்வங்களை, தானம் இடுங்கள், இன்று வரை நாம் கர்ணன், பலி சக்ரவர்த்தி, விக்ரமாதித்தனை பாராட்டுகிறோம். தேனீக்களை பாத்து கற்று கொள்ளுங்கள், அது கஷ்டப்பட்டு தேடிய தேனை அது உன்பதில்லை, யாரோ ஒருவன் ஒரு நாள் அவற்றை அழித்து தேனை தூக்கி செல்கிறான். அது போல் நாம் பார்த்து பார்த்து சேர்த்த செல்வம் கொள்ளை போகும் முன் உங்களால் முடிந்த தானங்களை செய்யுங்கள்.
================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.9.15

Quiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்


Quiz: புதிர்: கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்

தீயை யார் வைத்தது? காலதேவன்தான்!

Quiz 96 விடை
--------------------------------------------------
நேற்றைய புதிரில் கொடுத்திருந்த ஜாதகத்திற்கான விடை! உங்கள் கணிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன்.

ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.

அது சம்பந்தமான ஜாதகம்தான் நேற்றுக் கொடுத்திருந்த ஜாதகம்!
-----------------------------------------------------------------------------------
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன்
 துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச்
செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது.
மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய
சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார்.
உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தியாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால்
குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?
----------------------------------------------------
முன்பு கேலக்ஸி வகுப்பில் நடத்திய பாடத்தை அப்படியே கேள்வியாக்கிக் கொடுத்திருந்தேன். சங்கரன்கோவில் கணபதியார் அதை நினைவில் வைத்திருந்து தன்னுடைய பின்னூட்டத்தில் கொடுத்துள்ளார். அவருடைய நினைவாற்றலுக்கு நன்றி

/////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    இந்த ஜாதகம் 23.08.2011.ல் கால சர்ப்ப யோகம் பற்றிய பாடத்திற்காக உதாரண ஜாதகமாக் கொடுக்க பட்டது..
    விலோமா யோகம் அதாவது கால சர்ப்ப தோஷம் உள்ள ஜாதகம் **அவ யோகம் **
    கேது கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அனைத்தும் உள்ளடங்கி...!!!.
    திருமணமாகி கணவர் இறந்து போனார் .ஜாதகி சமூக சேவையில் நாட்கடதினார்.
    Friday, September 25, 2015 6:41:00 PM//////

கேது கொடிபிடிக்கும் காலசர்ப்ப தோஷத்திற்கு இந்த ஜாதகம் ஒரு நல்ல உதாரணமாகும். அனைவரும் தெரிந்துகொள்ளட்டும் என்றுதான் பதிவில் ஏற்றினேன்

போட்டியில் மொத்தம் 30 பேர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். கலந்து கொண்டவர்களில் 19 பேர்கள் சரியான பதிலை அல்லது ஒட்டிய பதிலை எழுதியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும் எனது மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்கள் பெயருடன்
அவர்கள் எழுதிய பதில்கள் கீழே உள்ளன. அனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்

அன்புடன்
வாத்தியார்
------------------------------
----------------------------------
1
/////OpenID guest2015 said...
    Native has kalasarpa dosha/yoga. ketu in 7th is not auspicious sign. lagna lord association with rahu, saturn in 5th house, venus in 6th house sun and ketu in 7th house , 2 nd and 5th lord debilitation will complicate married life. However jupiter aspecting 7th and 9th house.
    she might have got married but due to strong malefic influences it might not have lasted for long.
    thanks
    sree
    Friday, September 25, 2015 4:34:00 AM/////
-------------------------------
2
/////Blogger selvaspk said...
    Married, not lead regular married life. Should have gone spiritual world or secluded.
    1. 7 th house receiving - Guru, lord of second, Sun yoga karaka and kendrathipathi along with 4th house lord and lagnathipathi make marriage happen.
    2. Raghu kethu-kala sarpa dosam- kethu leading and joined with Sun denotes spiritual preaching as her
    3. Mars conjucted his enemy Raghu but rule and ucha makes extremely good combination for native and getting direct aspct of Royals, Sun (natural malefic though yoga karaka) makes this person more strong personality with highest knowledge.
    4. kethu on 7th with Saturn aspect(from a good house), with neecha guru (5th aspect) and keen intelligency of kethu with Sun makes me think, marriage life not on normal terms and may not had childrens but might did extremely did well on spiritual side. Guru may kept the marriage life, but either her husband left her or taken through spiritual path.
    Friday, September 25, 2015 4:56:00 AM Delete//////
-------------------------------
3
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
    வணக்கம் வாத்தியாரே!
    Quiz 96க்கான பதில்.
    ஜாதகி பிறந்த நேரம் : 02 Jun 1937 19:00 மணி
    அமைதியற்ற திருமண வாழ்வு அமைந்தது. குழந்தை இல்லை.
    விருச்சிக லக்கினம், கும்ப ராசி. தீவிர காலசர்ப்ப தோஷ ஜாதகம். லக்கினதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே வக்கிரம் மேலும் ராகுவுடன் கூட்டு.
ஜாதகியின் வாழ்க்கை முன்னேற்றத்தை முடக்கி விட்டார்கள். ஏழில் சூரியன் கேதுவுடன் சேர்ந்து கெட்டு விட்டார். அதன் மீது 5ல் இருக்கும்
சனியின் 3ம் பார்வை. ஏழாம் இடத்திற்கு வக்கிர குரு பார்வை உள்ளதால் அதீத தாமததிற்க்கு பின் திருமணம்.
அப்படி ஒரு திருமணம் நடக்காமலே இருக்கலாம்(ஒன்றும் பிரயோஜனம் இல்லை).
    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.
    Friday, September 25, 2015 10:08:00 AM/////
------------------------------------
4
/////Blogger amuthavel murugesan said...
    Answer to Quiz.95
    திருமண வாழ்வு பிறிவில் முடித்து இருக்கும்(விவாகரது அல்லது கணவன் இழப்பு)
    1. 7 ல் இருக்கும் கேது
    2. குரு நீச்சம்
    3. 7ஆம் அதிபதி ஆகிய சுக்கிரன் ஏழுற்கு 12ல்.
    4. குழந்தை இருப்பதற்கு வாய்ப்பும் கடுமை.
    5. 5 ஆம் இடத்திற்கு 24 பரல். 5 ஆம் இடத்து அதிபதி இருக்கும் இடத்திற்கு 2 பரல். 5 ஆம் இடத்து அதிபதி நீச்சம்.
    இப்படிக்கு,
    மு.சாந்தி
    Friday, September 25, 2015 10:52:00 AM/////
-----------------------------------
5
/////Blogger sundar said...
    lagna-7th place(raghu-kethu),7th lord is in 6th house with 8th lord and morever sani and sevvai 
aspecting 7th place where sevvai also 6th lord.these are not good for prosperous marrige life.
so marraige may not happen or if its happpen she should be widow
    Friday, September 25, 2015 11:31:00 AM//////
---------------------------------------
6
/////Blogger kmr.krishnan said...
    த‌சா இருப்பு கொடுக்கப்படவில்லை. எனவே சரியான நட்சத்திரம், தசா காலங்களைக் கணிக்க முடியவில்லை.
    ஏழாம் இடம் கேது சூரியனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது;ராகு, செவ்வாய், சனியால் பார்க்கப்பட்டூள்ளது.ஏழாம் இடத்துக்காரனான சுக்கிரன் ஆறாம்
இட‌த்திலும், எட்டாம் இடத்துக்காரனான புதனும் ஆறாம் இடத்திலும் இருக்கிறார்கள்.ஏழாம் இடத்துக்கரனையும் எட்டாமிடத்தூக்காரனையும்
சனி கேது சூரியன் சூழ்ந்துள்ளனர்.கால சர்ப தோஷத்தில் அனைத்து கிரகங்களும்.
    குருபார்வை ஏழாம் இட‌த்திற்கு என்பதால் மிகத்தாமதத் திருமணமாகி கைம்பெண் ஆகியிருப்பார் அல்லது விவாக ரத்து ஆகியிருக்கும்
.குரு பார்வையால்,திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் என்று சொல்ல முடியவில்லை.
    தங்கள் பழைய பாணிப் புதிருக்கு மீண்டும் திரும்பிவிட்டீர்கள் என்று தோன்றுகிறது.எனவே இம் முறை பதில் அளிப்போர் எண்ணிக்கை குறையும்.
    Friday, September 25, 2015 12:54:00 PM/////
-------------------------------------------
7  
/////Blogger katu raj said...
    1) 7,12ம்(களத்திர,சயன-போகம்) வீட்டதிபதி 6ல் மறைவு அது அந்த வீட்டிற்கு 12ல்
    2) களத்திர அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கரன் 8ம் அதிபதியுடன் கூட்டு
    3) லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்றாலும் அவனே ஆறாம் அதிதிபதியாகி, ராகுவுடன் சேர்க்கை பெற்று 7ம் வீட்டை பார்க்கிரான், 7ல் கேது
    4) 7ம் வீட்டிலும் 2ம் வீட்டிலும் சனியின் பார்வை.மணவாழ்க்கை சுகப்படாது
    5) காலசர்ப தோஷம் முடிந்தாலும் கேது கொடிபிடிக்கும் ஜாதகம்!!!.
    6) 2ம் வீட்டதிபதி குரு 7ம் வீட்டை பார்க்கும் அமைப்பால் திருமணம் நடந்தாலும் மற்ற அமைப்பால் பிரிவில் முடிந்திருக்கும்
    Friday, September 25, 2015 1:45:00 PM////////
----------------------------------
8
/////Blogger GOWDA PONNUSAMY said...
    அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
    புதிருக்கான விளக்கம்.
    “செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?” - வாடிப்போயிருக்கும்.
    இது ஒரு துரதிருஷ்டமான ஜாதகியாயிருந்திருப்பார்.
    கேது கொடி பிடிக்கும் கால சர்ப்ப தோஷ ஜாதகம்.
    விருச்சிக லக்னம், லக்னாதிபதி செவ்வாய் லக்கினத்தில் ஆட்சி பெற்றிருந்தாலும், உச்சம் பெற்ற ராகுவுடன் இணைவு.லக்கினாதிபதி செவ்வாயே 6க்கும்
அதிபதியாகி லக்கினத்தை கெடுத்ததுடன், 7ம் இடத்தையும் நேர்ப் பார்வையால் பார்த்துகெடுத்துவிட்டார். 7ம் வீட்டில் அமர்ந்த கர்மாதிபதி சூரியனோ
கேதுவால் பாதிக்கப் பட்டு 7ம் பாவத்தை சிதைத்துவிட்டார்.    7ம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிற்க்கு 12ல், 6மிடத்தில் அமர்ந்து 8ம் அதிபதி புதனுடன்
கூட்டு. களத்திர காரகன் சுக்கிரன் பாப கர்த்தாரி யோகத்தில். குடும்பாதி குரு மறைவிடமான 3ல் அமர்ந்து நீச்சம் பெற்று, ஜாதகியை சந்தோஷமில்லாத
ஒரு வாழ்க்கையில் தள்ளி விட்டார்.
    கேது கொடி பிடித்தால் என்ன ஆகும் என்பதை குரு (வாத்தியார் அவர்கள்) விளக்கமாக சொல்லியுள்ளார்.
    குரு கெட்டா என்னவாகும்? வாழ்வு பாழாகும்.
    7ம் பதி ஆறில் 8ம் பதியுடன் - வாழ்க்கைத் துணையை இழந்திருப்பார். நோய் பாதிப்பால்.
    குரு சனி பரிவர்த்தனை.சனியின் கொடூர பார்வை 7ம் வீட்டின் மீது.
    ஒட்டு மொத்த தோஷ ஜாதகம்.
    ஆனாலும் சனி தசா முடிவில் 32 வயதில் திருமணம் நடந்து புதன் தசை ஆரம்பித்திலேயே கணவரை இழந்திருப்பார்.
    8,12 அதிபதிகள் புதன் சுக்கிரன் 6ல் இணைந்ததால் விபரீத ராஜயோகம் ஏற்ப்பட்டு பின்னர் கெடுத்திருக்கும்.
    சுக்கிரன் புதன் இணைவு 6ல் இருப்பதால், ஜாதகியே நோய்வாய்ப் பட்டிருப்பார்.
    எதுக்குமே குருவின் அருள் வேண்டுமே!!!!!!!.
    அன்புடன்,
    - பொன்னுசாமி.
    Friday, September 25, 2015 4:11:00 PM//////
----------------------------------
9
////Blogger Gouthaman R said...
    ஜாதகியின் திருமண வாழ்வில் நிம்மதி குறைவு. காரணம், 2 ம் வீட்டு அதிபதி குரு நீச்சமாகி உள்ளார், மேலும்,
7ம் வீடதிபதி 7ம் வீட்டுக்கு 12ல் மறைவு. ரிஷபத்தில் உள்ள கேது அவ்வப்போது நன்மை செய்திருப்பார், இருப்பினும் மன நிறைவு & நிம்மதி குறைவே.
    -ரா. கௌதமன்.
    Friday, September 25, 2015 5:49:00 PM ///////
----------------------------------
10
/////Blogger Goutham Mylsamy said...
    Native marriage life is a troubled one
    1,seventh lord in 6th house & sun,ketu in 7th house - very bad placement in horoscope this 
combination leads to divorce or
    2, 2nd and 5th lord guru also debliated,leads to disturbed family life
    Friday, September 25, 2015 5:58:00 PM /////
----------------------------------
11
/////Blogger saravanan said...
    கேது கொடி பிடித்து முன் செல்லும் கால சர்ப தோஷ ஜாதகம்...7 ம் வீட்டு அதிபன் அந்த
    வீட்டுக்கு 12ல்....மேலும் 7ம் வீட்டை மூன்றாம் பார்வையாக சனி....2ம் வீட்டுக்காரன்
    நீசமாக 3 ம் வீட்டில்... மற்றும் சனியின் 9 ம் பார்வை லக்னத்தின் மேல்...
    திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம்...அப்படியே திருமணம் நடந்தாலும் விவாக ரத்தாகி இருக்கும்...சூரியனுடன் இணைந்த கேது தடையை உண்டாக்குவான்,,
    7 ம் வீடுக்குரியவன் 8 ம் அதிபதியோடு இணைந்த மோசமான நிலை...என்ன சொல்ல...!!!
    வாத்தியார் பாணியில் சொன்னால் எல்லாம் வாங்கி வந்த வரம்..
    அன்புடன்
    R.Saravanan
    Friday, September 25, 2015 6:08:00 PM//////
-----------------------------------------------
12
//////Blogger Chandrasekaran Suryanarayana said...
    வணக்கம்
    01/06/1937 ஆம் ஆண்டு செவ்வாய் கிழமை மாலை 6.43.03 மணிக்கு சதய நட்சத்திரத்தில், விருச்சிக லக்கினத்தில் ஜாதகி பிறந்தார்.
(இடம் - சென்னை).யோககார்கள் : குரு , சந்திரன் யோகமில்லாதவர்கள் : புதன் , சுக்கிரன்
    திருமணவாழ்வு சில காலம் மட்டுமே . திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார்.
    1. கால சர்ப்ப தோஷம் - கேது கொடிபிடித்துக் கொண்டு , மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன.
    2. 7ம் வீட்டிற்கு உரிய சுக்கிரன் (4 பரல்) 6ம் வீட்டில். 7ம் வீட்டிற்க்கு பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். (7ம் வீடு - 21 பரல்),
சனியின் 3ம் பார்வை 7ம் வீட்டின் மீது. ஜாதகியின் 30 வயதில் சனி தசை ஆரம்பம்.
    3. 8ம் வீட்டு அதிபதி புதன் 6ம் வீட்டில் சுக்கிரனுடன் கூட்டு சேர்ந்த புதன் கணவர் இல்லாமல் செய்து விட்டார்.
    4. 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்க வில்லை. 14 வயது முதல் 30 வயது வரை குரு தசை.
நவாம்சத்தில் குரு உச்சம். ராசியில் குருவின் 5ம் பார்வை 7ம் வீட்டில் இருப்பதால் சூரிய புக்தியில் திருமணம் நடைபெற்றது.
    5. 9ம் வீடு பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தார்.
    6. 4ம் வீட்டில் அமர்ந்துள்ள சந்திரனின் 7ம் பார்வை 10ம் வீட்டில் உள்ளதால் ஜாதகி சமூக சேவை செய்தார்.
    Friday, September 25, 2015 7:48:00 PM /////
-------------------------------------
13
/////Blogger Siva Radjane said...
    ஜாதகி ஒரு விதவை... இரண்டாம் திருமணம் புரிந்தவர்.
    1.லக்கினத்திற்கு 7 ல் நீச கேது உடன் சூரியன் மற்றும் ராகு ,செவ்வாய் சனி பார்வை.
    2.குடும்பஸ்தானதிபதி குரு’ நீசம்.7,11 ல் நீச பார்வை.
    3.7 ம் அதிபனும் களத்திரகாரகனுமான சுக்கிரன் மற்றும்8 ம் அதிபதி புதன் 6 ல் மறைவு.
    பொதுவாக பெண்களீன் ஜாதகத்தில் செவ்வாய்,சூரியன் ,கேது சம்பந்தம் ஏற்படுவது விதவை,மற்றும் பிரிவைக்குறீக்கும். இந்த ஜாதகிக்கு 7 ல் இம்
மூன்று கிரகங்களும் இணைந்து சனியின் பார்வையும் உள்ளதால் இந்த ஜாதகி விதவை இருந்திருப்பார்.
    மேலும் 7ம் அதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 11 ம் அதிபதியான புதனுடன் இணைவு, 11 ம் இடத்திற்கு சனி’யின் பார்வை மற்றும்
நீச குருவின் பார்வை உள்ளதால் ஜாதகிக்கு இரண்டாம் திருமணம் நடந்திருக்கும்.
    G.SivaRajan, Pondicherry
    Saturday, September 26, 2015 3:30:00 AM/////
---------------------------------------------
14
/////Blogger jayakumar M said...
    அய்யா,
    கேது கொடி படித்து செல்லும் காலசர்ப தோசம் உள்ள ஜாதகம். பழைய பாடம்..... சோகமான திருமண வாழ்க்கைக்கு இந்த தோசம் மட்டுமே
காரணமாக இருக்க முடியுமா....
    குரு, சனி பரிவர்த்தனை, சுக், புதன் விபரீத ராஜ யோகம்...
    DOB: 01.06.1937
    பரல்கலும் நன்றாக உள்ளது.
    செவ்வாய் ஆட்சி பெற்று 7ஆம் வீட்டை பார்க்கிறது. செவ்+சூரி( 1&10)
    Saturday, September 26, 2015 5:19:00 AM /////
---------------------------------------------
15
/////Blogger sriram1114 said...
    காலஸர்பதோஷம் உள்ளது, ஏழில் கேது,சூரியனை லக்னத்திருந்து ராகு பார்வை, சனி ஏழாம் வீட்டை 3ஆம் பார்வை,
களத்ரஸ்தானாதிபதி & களத்ரகாரகன் 6ல் 8ஆம் வீட்டு புதனுடன் 7ற்கு 12ஆம் வீட்டில் மறைவு ,குரு மற்றும் லக்னாதிபதி பார்வையால்
திருமணம் நடந்தது ஆனால் குடும்ப வாழ்கை மகிழ்ச்சிகரமாய் இல்லை
    Saturday, September 26, 2015 5:22:00 AM/////
----------------------------------------------
16
////Blogger Ramesh said...
    தாமத திருமணம் ..திருமணத்தில் நிம்மதியின்மை ...மொத்தத்தில் திருமணத்தால் சுகமில்லை...
    Saturday, September 26, 2015 8:15:00 AM/////
------------------------------------------------
17
/////Blogger bala said...
    Vanakkam Iyya,
    Viruchiga lagna jathagi. Pirantha neram 2 - 6 -1937 5.30 PM chennai endru veithu konden.
    Thirumana vazhkai + kudumba vazhkai : 2am idam paarka padavendum + 7aam idamum paarka pada vendum.
    Intha jathagathil - 2aam+5aam athipathi guru neecham adainthu ullar + sanium guruvum parivarthani 
pertrullanar. thangaladhu paadathil "parivarthanai perum grahangal valimai perum" endru koori ullirgal. 
melum guruvum saniyum intha jathagathirku theeya idangaluku (6/8/12) idangaluku athipathigal kidayathu.
Athanal guru neecham petrum, parivarthanai valimayodu ullar. Melum avarin 5aam paarvai 7aam idathiruku irukirathu.
    7aam idathirku athipathi sukran(+ kalathira kaaragaanum kooda) avan laganthirku 6il(+8aam athipathi 
serkaiyum kooda), 7aam veetiruku 12il.
    Jaathagiku kaala sarba dhosam petra jaathagam athanal kaalaam kadantha thirumanam thaan.
    30 vayathiruku mel thirumanam nadaipetru irukum aanaal athu nilaithu illamal vivagarathuku aagirukum 
(7aam idathu athipathi lagnathiruku 6il amarnthathal). Thirumana vazhai vivagarathu aagi, migavum sogama irukum.
    Sendra vaaram veliyur sendrathal puthir potiyil pangu pera vilai.
    nandri,
    Bala
    Saturday, September 26, 2015 8:39:00 AM////////
----------------------------------------------
18
//////Blogger venkatesh r said...
    குடும்ப ஸ்தானாதிபதி குரு 3ல் நீசமடைந்து வக்கிர கதியிலுள்ளார். களத்திர பாவமான 7ல் சூரியன்+ கேது(21 பரல்).
களத்திராதிபதியும் களத்திரகாரகனுமான சுக்கிரன் 6ல் மறைந்துவிட்டார். லக்கினாதிபதி செவ்வாய் லக்கினத்திலேயே இருந்தாலும்.
ராகுவுடன் சேர்ந்து வலுவிழந்து வக்கிரகதியிலுள்ளார். களத்திர பாவத்திற்கு குருவின் பார்வையுள்ளது.மேற்கண்ட காரணங்களால்
ஜாதகி திருமணமாகி சில மாதங்களில் கணவனை இழந்த கைம்பெண்ணாகியிருப்பார்.
    Saturday, September 26, 2015 10:18:00 AM//////
--------------------------------------
19  
//////Blogger selvam velusamy said...
    வணக்கம் குரு,
    இந்த ஜாதகி கணவனை இழந்தோ அல்லது பிரிந்தோ வாழும் நிலை அல்லது திருமண வாழ்க்கை அவதி நிறைந்ததாக இருக்கும் அல்லது கணவன்
நோயாளிய இருப்பார். காரணங்கள்,    காலத்திற ஸ்தானாதிபதி சுக்கிரனும், மாங்கல்ய ஸ்தானாதிபதி புதனும் களத்திர ஸ்தானத்திற்கு 12லும்,
லக்னத்திற்கு 6லும், அவருக்களுக்கு இரு புறமும் பாவ கிரகங்கள் சூழ்ந்தும் மறைந்துள்ளர்கள். களத்திர ஸ்தானத்தை சனி, ராகு பார்க்கிறார்கள்
மற்றும் களத்திர ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் அமர்ந்துள்ளார்கள். ஆனால் குருவும் 7மிடத்தை பார்கிறார். அதனால்தான் திருமணம் நடந்திருக்கும்
என எடுத்துக்கொண்டேன்.
    நன்றி
    செல்வம்
    Saturday, September 26, 2015 3:16:00 PM/////
===========================================================
தலைப்புப் பாடலின் முழு வரிகள்:

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே மூவரும் போவோம்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றி
தேரையும் ஓட்டி தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

(காகித)

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

(காகித)

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

(காகித)
படம்: மறக்க முடியுமா?
----------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25.9.15

Quiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?


Quiz: புதிர்: செம்பருத்திப் பூவைப் போல செவந்திருந்தவளுக்கு என்ன ஆயிற்று?

Quiz.95

18.9.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். அது ஒரு பெண்மணியின் ஜாதகம். ஜாதகியின் திருமண வாழ்வைப் பற்றி உங்கள் கணிப்பை எழுதுங்கள்.


பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.9.15

கவிதை: மனித உடம்பின் அவலம்!

கவிதை: மனித உடம்பின் அவலம்!

தன் உடம்பைப் பற்றியும். தன் தோற்றத்தைப் பற்றியும்தான் மனிதன் அதிகமாகக் கவலைப்படுவான்.

அதிலும் ஆண்களைவிடப் பெண்கள்தான் உடல் அழகிற்கும் புறத்தோற்றத்திற்கும், அதிகமான நேரத்தைச் செலவிடுகிறார்கள்.

ஆனால் நமது புராணங்களும், மறைநூல்களும் உடல் அழியக்கூடியது. அதற்கு முக்கியத்துவம் கொடுக்காதே. ஆன்மாவிற்கே முக்கியத்துவம்
கொடு என்கின்றன!

மரணமடைந்தவுடன் மனிதனுக்கும், மனித உடலிற்கும் என்ன நேர்கிறது என்பதைத் திருமூலர் மிக அற்புதமாக இப்படிச் சொன்னார்.

"ஊர்கூடி ஒன்றாகி உரக்க அழுதிட்டு
பேரினை நீக்கிப் பிணமென்று கூப்பிட்டு
சூரியன் காட்டிடையே கொண்டுபோய் சுட்டுவிட்டு
நீரில் மூழ்கி நினைப்பு ஒழிவார்கள்"

ஆமாம்! உயிர் நீங்கியவுடன் பெயரும் நீங்கிவிடும் கெட்கிறவன் Body ஐ எப்போது எடுக்கப் போகிறீர்கள் என்றுதான் கேட்பான்.

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் இந்த உடலின் அவலத்தை வேறு விதமான சிந்தனையோடு நமக்கு எடுத்துச் சொன்னார்.

பாடலைப் பாருங்கள்:
---------------------------------------------------
"பாத்தா பசுமரம் படுத்துவிட்டா நெடுமரம்
சேத்தா வெறகுக்காகுமா - ஞானத் தங்கமே
தீயிலிட்டா கரியும் மிஞ்சுமா?
(பாத்தா)

கட்டழகு மேனியைப் பார் பொட்டும் பூவுமா - நீட்டி
கட்டையிலே படுத்து விட்டா காசுக்காகுமா?
வட்டமிடும் காளையைப் பார் வாட்ட சாட்டமா - கூனி
வளைஞ்சிவிட்டா உடம்பு இந்த ஆட்டம் போடுமா?
(பாத்தா)

பொன்னும் பொருளும் மூட்டைகட்டி போட்டு வச்சாரு - இவரு
போன வருஷம் மழையை நம்பி வெதை வெதச்சாரு
ஏட்டுக் கணக்கை மாத்தி மாத்தி எழுதி வச்சாரு - ஈசன்
போட்ட கணக்கு மாறவில்லை போய் விழுந்தாரு
(பாத்தா)

அறுவடையை முடிக்கு முன்னே வெதைக்க லாகுமா - அட
ஆண்டவனே உன் படைப்பில் இத்தனை வேகமா?
பத்துப் பிள்ளை பெத்த பின்னும் எட்டு மாசமா - இந்தப்
பாவி மகளுக் கெந்த நாளும் கர்ப்ப வேஷமா?
(பாத்தா)

படம் - திருவிளையாடல் - வருடம் 1965

சாதாரண மரம் கூட எரிந்து தணியும் போது கரியாவது மிஞ்சும். மனித உடம்பில் எதுவும் மிஞ்சாது என்று எழுதியது இந்தப் பாடலின் சிறப்பு. அதுபோல நீ எதை மூட்டைகட்டி வைத்தாலும் இறைவன் உனக்குள்ள கணக்கை முடிக்கும்போது நீ எதையும் எடுக்காமல் போய்ச்சேர வேண்டியதுதான் என்று எழுதியது இந்தப் பாடலின் மற்றுமொரு சிறப்பு!
----------------------------------------------------------
மற்றுமொரு பாடல்:

பாதி உள்ளமும், பாதி கள்ளமும் கொண்ட மனித உருவத்தைப் பற்றிக் கவியரசர் எழுதிய பாடல். இந்தப் பாடல் வரிகள் முழுவதும் தன்னிலை விளக்கம் கொண்டவை - அதுதான் இந்தப் பாடலின் சிறப்பு!

"இங்கே தெய்வம் பாதி - மிருகம் பாதி
மனிதன் ஆனதடா - அதிலே
உள்ளம் பாதி கள்ளம் பாதி
உருவம் ஆனதடா!

ஆசையிலே காக்கையடா
அலைவதிலே கழுதையடா
காசு இல்லாத வேளையிலே
கடவுளுக்கே பூசையடா!

தந்திரத்தில் நரிகளடா
தன்னலத்தில் புலிகளடா
அந்தரத்தில் நிற்கையிலே
மந்திரத்திலே ஆசையடா!

இங்கே கூட்டமாக வாழச் சொன்னால்
ஓட்டை சொல்லுமடா - எதிலும்
ஓட்டை சொல்லுமடா - நாட்டில்
வாட்டம் வந்து சேரும்போது
கூட்டம் கூடுமடா - நன்றாய்ப்
பாட்டுப் பாடுமடா!

முகத்தில் பாதி வாய் இருக்கும்
முழு நீளம் நாக்கு இருக்கும்
முதுகிலே கண் இருக்கும்
மூளையிலே மண் இருக்கும்!

மனதிலே பேய் இருக்கும்
மறையாத நோய் இருக்கும்
வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!"

படம் - சித்தி - வருடம் 1966

இந்தப் பாடலில் உள்ள கருத்து மற்றும் சொல் விளையாட்டைப் பாருங்கள்.

அதோடு,
"வனத்திலே விட்டு விட்டால்
மிருகமெல்லாம் வரவேற்கும்
வனத்திலே விடுவதற்கு
வால்மட்டும் இல்லையடா!"
என்று எழுதிய அவருடைய நகைச்சுவை
உணர்வையும் பாருங்கள்.
=======================================================================
அன்புடன்
வாத்தியார்

======================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.9.15

வீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா!


வீட்டில A/C இருக்கா...எச்சரிக்கையாக இருங்க சாமிகளா!

உங்க வீட்டுல A/C இருக்கா... உபயோகமான எச்சரிக்கையான தகவல்கள்,// படித்து பகிரவும் //

நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை கூடிக்கொண்டே போக...
இனி, குடிசைகளிலும் கூட ஏ.சி. மெஷின் பொருத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிற அளவுக்கு நிலைமை போய்க் கொண்டிருக்கிறது.

விடிந்துவிட்டாலும் கூட, ஏ.சி. மெஷினை அணைக்க மனமில்லாமல்,
குதூகல தூக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பலரும்.
 இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு வந்த பத்திரிகை செய்தி,
ஏ.சி-க்கார பார்ட்டிகளை எல்லாம் திகிலில் ஆழ்த்தியிருக்கிறது.

சென்னை, சிட்லபாக்கத்தைச் சேர்ந்த ஸ்ரீவள்ளி, முதல் நாள் இரவு தன்
இரண்டு குழந்தைகளுடன், ஏ.சி. அறையில் தூங்கச் சென்றதுதான் தெரியும்.
மறுநாள் காலையில் அந்த வீட்டிலிருந்து புகை மட்டும் வந்து

கொண்டிருக்க... ஆள் அரவம் எதையும் காணோம். அக்கம் பக்கத்தினர்
ஓடோடி வந்து, கதவை உடைத்துக் கொண்டு போய் பார்த்தால்..
ஸ்ரீவள்ளியும் அவர் மகனும் மயங்கிக் கிடக்க.. ஒன்றரை வயது
பெண் குழந்தை மோனிஷா கட்டிலிலேயே பரிதாபமாக இறந்து கிடக்க... இந்தக் காட்சியைக் கண்ட அத்தனை பேருமே அதிர்ந்துதான் போனார்கள்.

'ஏ.சி-யில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம்' என்று சொல்லியிருக்கிறது போலீஸ். இந்தச் செய்தியையும், புகைப்படங்களையும் பார்த்த பலரும்,
அந்தக் குடும்பத்துக்கு இரண்டு நிமிட அனுதாபத்தை வஞ்சகம்
இல்லாமல் செலுத்திய அதேநிமிடம், 'ஆகா... ஏ.சி. மேல ஒரு கண் வெச்சிக்கிட்டேதான் தூங்கணும் போல...' என்று பதைபதைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டங்கள் என்றாலே எச்சரிக்கை தேவைதான். அதற்காக நிம்மதியான உறக்கத்தை தரும் ஏ.சி., உயிருக்கே உலை
வைக்கும் சாதனமாக மாறுமா? இந்தக் கேள்விக்கு... ஏ.சி.
மெஷின்களைப் பொருத்துவது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவரும் சென்னையைச் சேர்ந்த 'ஃபெர்ஃபெக்ட் ஏ.சி. சர்வீஸ்' நிறுவனத்தின் உரிமையாளர் மைக்கேல் பதில் சொல்கிறார்...

''அந்தச் செய்தியை படிச்சதும் எனக்கும் திக்னு ஆயிடுச்சு. எரிஞ்சு
போனது ஸ்பிளிட் ஏ.சி. எனக்கு தெரிஞ்சு, ஸ்பிளிட் ஏ.சி. கோளாறு
காரணமா இப்படி ஒரு சோக சம்பவம் நடந்ததுங்கிறதே இதுதான்
முதல் தடவை.

ஸ்பிளிட் ஏ.சி-யில்மூணு விதமான ஒயர் கனெக்ஷன் கொடுக்கப்
பட்டிருக்கும். அது சரியா பொருத்தப்படாம இருந்தா, ஒண்ணோட
ஒண்ணு உரசி விபத்து நடந்திருக்கலாம். பொதுவா... ஸ்பிளிட்டை
விட, விண்டோ ஏ.சி-யி லதான் பாதிப்பு அதிகம்'' என்று சொன்னவர்,
ஏ.சி. மெஷின்களை பயன்படுத்துவோருக்கு உதவும் வகையில்
பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு டிப்ஸ்களை வாரி வழங்கினார்...

புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக்
கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்
பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட
அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய
ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.உதிரிபாகங்களை குறைந்த
விலையில் வாங்காதீர்கள்.

நல்ல விலையில் தரமானவற்றை வாங்குங்கள். ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். மலிவான விலைகளில் வாங்கினால், உங்கள்
உயிருக்கு ஆபத்தாக முடியும். உதாரணத்துக்கு ஸ்பிளிட் ஏ.சி. 1.5 டன்
எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள்.
இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர்
தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.ஏ.சி. வாங்கும்போது இலவசமாகக் கொடுக்கப்படும் ஸ்டெபிலைசர்கள் தரம் குறைந்தவையாக இருக்கக் கூடும். தரமான நிறுவனங்களின் ஸ்டெபிலைசர்களை
வாங்குங்கள்.

எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும்
23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக்
 கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லா
பகுதியும் சூடாகிவிடும். இதனாலும் தீப்பிடிக்க அதிக வாய்ப்பு
இருக்கிறது. எக்காரணம் கொண்டும் 16 டிகிரியில் ஏ.சி-யை கொண்டு போகாதீர்கள்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும்.
ஸ்பிளிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித
இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு.

பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கி,
சீக்கிரத்தில் மெஷினை ரிப்பேராக்கிவிடும்.நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்
============================================================
2
அடுத்த எச்சரிக்கை!



ஐஸ் வாட்டர் குடிக்கறீங்களா? இதை படிச்சுட்டு குடிங்க...

உணவு உட்கொண்ட உடன் ஜில் தண்ணீரோ குளிர்பானமோ குடிப்பவர்களுக்கு இதயபாதிப்பு ஏற்படும் ஆபத்து அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இதற்கு காரணம் உண்ட உணவில் உள்ள எண்ணெய். கொழுப்புகளை ரத்த நாளங்களில் இந்த கொழுப்பு படியச் செய்வதே இதற்கு காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆசியா கண்டத்தைச் சேர்ந்தவர்களான ஜப்பானிய பெண்களின் சராசரி அதிகபட்ச ஆயுட்காலம் 92. ஆண் ஜப்பானியர்கள் 84 வயது வரை உயிர் வாழ்கின்றனர். இதற்குக் காரணம் அவர்களின் உணவுப் பழக்கம்.

பச்சைக் காய்கறிகளையும் பழங்களையும் உணவில் சேர்த்துக்கொள்கின்றனர்.

உணவு உண்ட உடன் வெதுவெதுப்பான வெந்நீர் உட்கொள்வதும் கிரீன் டீ அருந்துவதும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

நம் நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்றைக்கு பெரும்பாலும் பிரிட்ஜில் வைத்த ஜில் தண்ணீரை அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கிராமமோ நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீர்தான். கோடை காலம் தொடங்கிவிட்டால் காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும்
நம் நாட்டவர்கள் உபயோகிப்பது ஜில் தண்ணீர்தான்.

இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.

இது இதயத்தை பாதிக்கிறது புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால்
அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய் துகள்களை
கெட்டியாக்கி விடுகிறது.

இதனால் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது.

அதுமட்டுமன்றி உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதிகரிக்கவும்
அது காரணமாகி விடுகிறது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதயநோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது கூல் தண்ணீரை தொடவே கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றார்கள்.

ஜில் தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

நெஞ்செரிச்சல், உயர் ரத்தஅழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம்,வயிற்றுவலி,மைக்ரேன் தலைவலி, மூளை உறைவு நோய்,
பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

டாக்டர்களின் இந்த எச்சரிக்கை உண்மைதானா? என்பதை நீங்களே ஆய்வு செய்து நிரூபித்துக் கொள்ளலாம். நீங்கள் அடிக்கடி அல்வா சாப்பிடும் பழக்கம் உள்ளவர் என்றால், அதில் சிறு பகுதியை எடுத்து அப்படியே

பிரிட்ஜில் வைத்து விடுங்கள்.

அரை மணி நேரம் கழித்து அதை எடுத்துப் பாருங்கள். அல்வா கெட்டியாகி இருக்கும். ஏற்கனவே அதில் இருந்த எண்ணெய்ப் பசை சுத்தமாக காணாமல் போய் இருப்பது போன்று தோன்றும். ஆனால், அந்த எண்ணெய்

அல்வாவில் அப்படியே ஆங்காங்கே படிந்து திண்ணமாக வெள்ளை நிறத்தில் மாறியிருக்கும்.

உங்கள் விரலை அதில் வைத்தால் உடனே அது உருகிவிடும். சாப்பிட்டு முடித்ததும், நம் உடலுக்குள் ஐஸ் வாட்டர் சென்றால், எண்ணெய்த்
துகள்கள் இதுபோன்றுதான் மாறி சிக்கலை ஏற்படுத்தி விடுகின்றன.

எனவே ஜில் தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்தியுள்ளனர் மருத்துவர்கள்.

இனி ஐஸ் வாட்டர் குடிக்க யோசிப்பீங்க தானே  தண்டோரா  போட்டு சொல்லுங்க... எல்லோருக்கும். புரியும்படியாக!
======================================================
அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.9.15

பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?


பூமாலை போட்டவன் என்ன கேட்டான்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
வேல் வந்து வினை தீர்க்க ... 
மயில் வந்து வழிகாட்ட
கோயிலுக்குள் சென்றேனடி ... 
குமரன் கொலுவிருக்கக் கண்டேனடி
(வேல் வந்து ... )

பால் கொண்டு நீராட்டிப் 
பழம் தந்து பாராட்டி 
பூமாலைப் போட்டேனடி ...
பூமாலைப் போட்டேனடி ... 
திருப்புகழ் மாலை கேட்டேனடி 
(வேல் வந்து ... )

பங்குனியில் உத்திரத்தில் ... 
பழநி மலை உச்சியினில் 
கந்தன் என்னைக் கண்டேனடி ...
கந்தன் என்னைக் கண்டேனடி ... 
எந்தன் சிந்தையில் நின்றானடி 

வேலழகும் மயிலழகும் ... 
வீற்றிருக்கும் பேரழகும் 
காலமெல்லாம் இருக்குமடி ... அந்த ... 
காட்சி என்றும் இனிக்குமடி 
(வேல் வந்து ... ).

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21.9.15

கற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்


கற்பிக்கும் முறையும் கற்றுக்கொள்ளும் முறையும்
----------------------------------------------------------------------------------

ஒரு கிராமத்தில் ஞானி ஒருவர் இளைஞர்களுக்கு கல்வி போதித்து வந்தார்.

அவர் இலக்கு மதிப்பெண்களோ தர நிர்ணயமோ அல்ல. முழுமையான
கற்றல் மட்டுமே…எனவே நிதானமாகவும் அதே சமயம் சீடர்கள் மனதில் நன்கு பதியுமாறும், அவர் சொல்லிக் கொடுத்தார்.

ஆனால் குருவின் இந்த ‘வேகம்’ மாணவர்களில் ஒருவனுக்குப் பிடிக்கவில்லை. ஒரே சமயத்தில் எல்லாவற்றையும் சொல்லிக்
கொடுப்பதை விட்டு விட்டு மெதுவாக நாள் கடத்திக் கொண்டே
இருக்கிறாரே’ என்று குற்றம் சாட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட ஞானி அந்த மாணவனை அழைத்தார். பக்கத்திலிருந்த ஒரு பெரிய விறகுக் கட்டைக் காண்பித்து ‘அதைத்
தூக்கி வெளியே கொண்டு போய் வை’ என்றார்.

விறகுக் கட்டைத் தூக்க முயன்ற மாணவன், அதன் கனம் தாங்காமல்
தடுமாறி விழுந்தான். எழுந்து கையைத் தட்டிக் கொண்டு, ‘தூக்க முடியவில்லை குருவே… மிகவும் கனமாக உள்ளது’ என்று தன்
தோல்வியை ஒப்புக் கொண்டான்.

‘சரி… அந்தக் கட்டைப் பிரித்து விறகுகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்
கொண்டு போய் வை’ என்றார் ஞானி.

அட… நான்கைந்து முறை எடுத்து வைத்ததில், விறகுகள் விரைவில் இடம்பெயர்ந்தன!

‘கண்ணா… உனக்குக் கற்பிப்பதும் இப்படித்தான். ஒரேடியாக உன்
மூளைக்குள் திணித்தால் நீ திணறி விழுந்துவிடுவாய். கொஞ்சம்
கொஞ்சமாக அதே சமயம் முழுமையாகக் கற்றுக் கொண்டாயானால்
அது நிரந்தரமாக உன் மனதில் தங்கிவிடும்.. நீ கற்ற கல்வி தரமாகவும்
 இருக்கும்’ என்று விளக்கினார் ஞானி.

மாணவனுக்கு மிக நல்ல பாடமாக அது அமைந்தது!

தொடர்ந்து ஞானி இப்படிச் சொன்னார்…

நீங்கள் எல்லோரும் இப்போது படித்துக் கொண்டிருக்கின்றீர்கள். படிப்பது சுகமானதா? சுமையானதா? என்ற ஒரு கேள்வி கேட்டால் சுமையாக இருக்கிறது என்றுதான் பலரும் சொல்வீர்கள்.

ஆனால் படிப்பதை சுகமாக மாற்றிக் கொள்ளலாம் என்பதற்கு ஒரு
குட்டிக் கதை சொல்கிறேன்…

ஓர் அழகான ஊர். அந்த ஊரில் உள்ள ஓர் இளைஞன் நல்ல கனமாக
வளர்ந்த ஒரு பசுமாட்டை எந்தச் சிரமமுமின்றி தன் தோல் மேல் போட்டு
கொண்டு தூக்கிக் கொண்டு ஊரைச் சுற்றி வந்தான். ஊரே அவனை
பிரமிப்புடன் பார்த்தது. நல்ல பலசாலி என்றது.

எப்படி உன்னால் இவ்வளவு பெரிய மாட்டைத் தூக்கிச் சுமக்க
முடிகிறது என்று பலரும் கேட்டனர்.

ரொம்பவும் சுலபம் என்றான் அவன்.

எப்படி?

‘இந்தப் பசு கன்றுக்குட்டியாக இருந்த நாளிலிருந்து தினம் தினம் தூக்கிச் சுமந்து கொஞ்சுவேன். அதனோடு விளையாடுவேன். அதுவே பழகிவிட்டது. இப்படி தினம் தூக்கிப் பழகியதால் அதன் கனம் எனக்குப் பெரியதாகத் தெரியவில்லை, என்றான்.

பாடம் படிப்பதும் இப்படித்தான். அன்றாடப் பாடங்களை அன்றாடம்
 படித்து விட்டால் எவ்வளவு கனம் கூடினாலும் அது சுமையாகத்
தெரியாது. சுகமாகத் தெரியும்.

அத்துடன் ஈடுபாடும் சாதிக்க வேண்டும் என்ற தாகமும் இருக்க
வேண்டும். ஈடுபாடு என்பது தனித்து திகழ்வது அல்ல. எல்லாவற்றின்
மீதும் அக்கறை கொள்பவர்களுக்குத்தான் உழைப்பில் ஈடுபாடு பிறக்கும்.
இது ஏதோ படிப்பதற்காக உங்களுக்கு சொல்லப்பட்ட கதை அல்ல.
படித்த பின்னும் உங்களுக்கு உதவும் பாடம்,” என்றார்.
-------------------------------------------
ஜோதிடப் பாடங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இதுதான்
முறை சாமிகளா!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.9.15

Quiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்?


Quiz: புதிர்: நமது கணிப்பு எப்போது தவறும்?

20.9.2015

சில ஜாதகங்களை அலசும்போது, ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை வைத்து, அது சராசரி ஜாதகம் போல தோன்றும். ஆனால் உண்மை நிலை மாறாக இருக்கும். ஜாதகர் பிரபலமானவராக இருப்பார். நமது கணிப்பு தவறாகிவிடும்.

நேற்றையப் புதிரில் கொடுத்திருந்த ஜாதகமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.

ஜாதகர் உலகில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்கள் மூவரில் ஒருவர். 
அதைச் சொன்னால்தான்தான் தெரியும்.

ஆனால் ஜாதகத்தைச் சட்டென்று பார்த்தால் தெரியாது. குழப்பும். ஆமாம் இரண்டில் உள்ள சனீஷ்வரன் குழப்புவார்.

விருச்சிக லக்கின ஜாதகர்.
லக்கினாதிபதி செவ்வாய் எட்டில்!
பாக்கியநாதன்  (9th Lord) சந்திரன் நீசம்
இரண்டில் (தன ஸ்தானத்தில்) சனி
மூன்று நிலைப் பாடுகளுமே சரியில்லை

சுகாதிபதி சுக்கிரன் நீசம் (ஆனாலும் அவன் உச்சமான புதனுடன் சேர்ந்து நீசபங்க ராஜ யோகத்துடன் இருக்கிறான்)
இரண்டில் சனி இருந்தாலும், அந்த வீட்டின் மேல் அதன் அதிபதியும், தனகாரகனுமான குருவின் பார்வை உள்ளது.

ஆகவே ஓரளவு நிதித் தட்டுப்பாடு இல்லாத ஜாதகம் என்று சொல்லத் தோன்றும். ஆனால் ஜாதகர் மிகப் பெரிய செல்வந்தரானது எப்படி?

ஜாதகத்தில் 26 யோகங்கள் உள்ளன. அவை அனைத்தும் வேலை செய்து 
ஜாதகரை செல்வத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றன.

யோகங்களின் முக்கியத்துவம் அப்போதுதான் நமக்குப் பிடிபடும்

ஜாதகர் யார் தெரியுமா?

வாரன் பஃபெட் (Warren Buffet) உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர்.



இந்த ஜாதகத்தை இன்னொரு நாள் விரிவாக அலசுவோம்.

இப்போது சொல்ல வந்த செய்திக்கு வருகிறேன்.

யோகங்களைப் பற்றியும், அதாவது முக்கியமான யோகங்களைப் பற்றி நாம் அறிந்து வைத்திருப்பது அவசியம்.

வாரம் ஒன்று அல்லது இரண்டு யோகங்களைப் பற்றிய பாடங்களை நடத்தலாம் என்று உள்ளேன். இப்போது அல்ல! அடுத்தடுத்து 3 புத்தகங்களை அச்சிட்டு வெளியிட்ட பிறகு! பொறுத்திருங்கள்
---------------------------------------------------------------
நேற்றைய போட்டியில் கலந்து கொண்டவர்கள் மொத்தம் 36 பேர்கள்
அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். Participation is important. அவர்களில்
 25 பேர்கள் ஜாதகர் ஓட்டை அண்டா/நிதி நெருக்கடி உள்ளவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இப்போது உண்மை நிலையை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

திருவாளர் கெளடா போனுசாமி அவர்கள், ஜாதகம் யாருடையது என்று கண்டுபிடித்து எழுதியுள்ளார். அவருடைய சமயோசிதத்திற்கு பாராட்டு. அவருடைய பின்னூட்டத்தைக் கீழே கொடுத்துள்ளேன்.

///////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
நல்ல அண்டா. திருவாளர். வாரென் பஃபெட் அவர்கள் எப்படி ஓட்டை அண்டாவாக முடியும்.
அன்புடன்,
-பொன்னுசாமி.
Saturday, September 19, 2015 7:45:00 PM /////

அதேபோல ஸ்ரீனிவாச ராஜுலு அவர்களும் வாரன் பஃபெட்டும் அதே தேதியில் பிறந்தவர் என்பதை மட்டும் குறிப்பிட்டுள்ளார்.
--------------------------------------
சரியான விடையை அல்லது ஒட்டிய விடையை எழுதியவர்கள் மொத்தம்
9 பேர்கள். அவர்கள் அனைவருக்கும் மனம் உவந்த பாராட்டுக்கள். அவர்களின் பெயரும் எழுதிய பின்னூட்டமும் தொகுத்துக் கீழே கொடுக்கப்பெற்றுள்ளது.

அன்புடன்
வாத்தியார்
======================================
1
Blogger Hello Hello said...
thanakaragan guru lapakaragan sevaiudan kuttani kasu thangum
Friday, September 18, 2015 5:50:00 AM 
---------------------------------------
2
/////Blogger KJ said...
Respected Sir,
Native can be a Rich person.
1.Lagnathypathy with Guru aspects second house
2.Though Saniswaran in second house, Due to Guru's aspect he will play quiet music :-)
3.11th place Neesabangam Raja yogam.. Budan with Sukran (Nibuna yogam)
4. May be he become Rich due to hard work , Sevvai aspects third house also.
5. 10th house owner in tenth place (Suriyan), may be investor, or Government official
Thanks,
Sathishkumar GS
Friday, September 18, 2015 12:21:00 PM //////
------------------------------------------------
3
/////Blogger asbvsri said...
Quiz No: 95 Answer
இரண்டாம் வீடு அண்டா. இரண்டாம் வீட்டுக்காரர் இரண்டாம் வீட்டை லக்னாதிபதி செவ்வாயுடன் சேர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
11 ஆம் அதிபதி புதன் உச்சத்தில் ஆட்சி / மூலத்திரிகோண வீட்டில்.
7 ஆம் / 12 ஆம் அதிபதி சுக்ரன் நீச்ச வீட்டில் நீச்ச பங்கமாகி வலுவாகியுள்ளார்.
சனி இரண்டாம் வீட்டில். 9 ஆம் அதிபதி சந்த்ரன் நீச்சமாகி லக்னத்தில். பிறப்பில் ஏழையாக இருந்திருப்பார்.
பிறப்பு சனி மஹாதசை 7 வயதில் முடிந்தபின் உச்ச புதனின் 17 ஆண்டுகள் ஜாதகர் சிற்ப்பாக வாழ்ந்திருப்பார். பின்னர் வந்த 7 வருடங்களில் கேதுவின் சிறிய சலசலப்பிற்கு பிறகு 20 வருடங்கள் சுக்ரனின் தசையில் 30 வயதிற்கு மேல் பணம் சேர்த்து பணக்காரராகியிருப்பார்.
K R Ananthakrishnan - Chennai
Friday, September 18, 2015 12:48:00 PM //////
-------------------------------------------------
4
//////Blogger kmr.krishnan said...
ஜாதகர் 30 ஆகஸ்டு 1930ல் பிறந்தவர். அனுஷ நட்சத்திரம்.கொடுக்கப்பட்டுள்ள லக்கினத்திற்காக, பிறந்த நேரத்தை காலை 11 45 என்று எடுத்துக் கொண்டால்
தசா இருப்பைச் சரி செய்ய முடியவில்லை.
30 வயதிற்கு மேல் வந்த சுக்கிர தசாவில் சுயமாகச் சம்பாதித்து பணம் கையில் தங்கியது. சுக்கிரன் நீச மடைந்தாலும் நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் ஏறினால் நீசபங்க ராஜ யோகம் என்பதனாலும், ஆறாம் இடத்தில் இருந்த ராகுவாலும் பணவரவு இருந்தது.லக்கின அதிபனும், குருவும் சேர்ந்து இரண்டாம் இடத்தினைப் பார்த்ததால் சேமிக்க முடிந்தது.சனியின் காலில் பிறந்தவராதலால் இரண்டில் நின்ற சனி தடுக்கவில்லை.
முற்றிலும் ஓட்டை அண்டா அல்ல. தண்ணீர் பிடித்து வைக்கலாம்.
Friday, September 18, 2015 12:56:00 PM ///////
-------------------------------------------------
5
//////Blogger Narayanan V said...
Nee cha panga rajayougam is there.
He would have come up step by step well
v narayanan
advocate
Friday, September 18, 2015 9:11:00 PM ////////
-----------------------------------------------
6
//////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 95க்கான பதில்.
ஜாதகர் பிறந்த நேரம் : 30 Aug 1930 பகல் 12:30 மணி
விருச்சிக லக்கினம், விருச்சிக ராசி. லக்கினதிபதி செவ்வாய் எட்டில் மறைந்தாலும் அவர் அங்கு குருவுடன் கூடி இரண்டாம் இடத்திலுள்ள வக்கிர சனியை கட்டுக்குள் வைத்திருப்பதால், ஜாதகரின் ஓட்டை அண்டா குணத்தை சற்றே மாற்றி பணத்தை சேமிக்கும் குணத்தை வழங்கி மேலும் முன்னேற வைத்திருப்பார். 11ம் இடத்தில் 33பரல் அதற்கு கை கொடுத்திருக்கும். அங்கு புதன் உட்சமாகி சுக்கிரன் நீச பங்கம் அடைந்துள்ளார் என்பது கவனிக்கதக்கது.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Saturday, September 19, 2015 9:53:00 AM /////
---------------------------------------------
7
////OpenID guest2015 said...
saturn in 2nd house aspected by mars and jupiter. lagna lord and dhana karaka jupiter in 8th house. Debilitated moon in 1st house. However 11th lord exalted mercury and venus gives neecha bhanga raja yoga. This aspect might have given him a decent wealth during their respective dasa bhukti.
thanks
Saturday, September 19, 2015 10:44:00 AM /////
--------------------------------------------
8
////Blogger Radha Sridhar said...
குரு வணக்கம்.
இரண்டாம் அதிபதி எட்டில் லக்கினதிபதியுடன் அமர்ந்து தன/தன் வீட்டை பார்க்கிறார். நன்மை. சுக ஸ்தானாதிபதி சனீஸ்வரர் இரண்டாம் வீட்டில் அமர்வது நன்மை. நல்ல அண்டா.
Saturday, September 19, 2015 11:47:00 AM /////
------------------------------------------------------
9
////Blogger Gouthaman R said...
ஜாதகர் நன்கு பணம் சம்பாதிக்கும் ஆற்றலை பெற்றுள்ளார். காரணம், 11ம் வீட்டதிபதி புதன் 11ல் உச்சம் & 10ம் வீடான ஜீவன ஸ்தானத்தில் சூரியன் & 2ம் வீட்டில் குருவின் சிறப்பு பார்வை.
பிழையிருந்தால் மன்னிக்கவும், அடியேன் இப்போதுதான் தொடக்க கல்வி நிலையில் உள்ளேன்.
-ரா. கௌதமன்.
Saturday, September 19, 2015 7:53:00 PM /////
--------------------------------------------------
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.9.15

Quiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா?


Quiz: புதிர்: ஓட்டை அண்டாவா அல்லது நல்ல அண்டாவா?

Quiz.95

18.9.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகர் கையில் காசு தங்குமா?
அல்லது தங்காதா? அதாவது ஜாதகர் பிறந்ததில் இருந்து கைக்கும்
வாய்க்குமாக ஏழையாகவே இருக்கிறாரா? அல்லது அடித்துப் பிடித்துப்
பணம் சேர்த்து பணக்காரராக ஆனாரா?

ஜாதகர் ஓட்டை அண்டாவா அல்லது தண்ணீரைப் பிடித்து
வைக்கலாம் என்னும்படியான நல்ல அண்டாவா? எந்த
நிலைமையில் இருந்தாலும் பரவாயில்லை
(நாம் என்ன செய்ய முடியும் சாமிகளா?)
ஜாதகப்படி அதற்கு என்ன காரணம் என்பதை எழுதுங்கள்.



பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன்
எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.9.15

வாழை மரமும் சவுக்கு மரமும்!

இன்று விநாயகருக்கு சதுர்த்திவிழா. அனைவரும் தவறாமல்
விநாயகரை வழிபடுங்கள். நமது துன்பங்களைக் குறைப்பவர்
அவர். நமக்கு காரிய சித்தியை நல்குபவர் அவர்.
--------------------------------------------------------------
2

வாழை மரமும் சவுக்கு மரமும்!

நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் தன்னம்பிக்கை மிக்க
அருமையான வார்த்தைகள்...‬

- வானொலிப் பேட்டியொன்றில் நாகேஷ் அவர்கள் சொன்னது:

வானொலிக்காரர்கள் கேட்ட கேள்வி:: நியாயமாக உங்களுக்கு
வரவேண்டிய நல்ல பெயர் மற்றவர்களுக்குச் செல்லும் போது
உங்களுக்கு எப்படி இருக்கும்?

நாகேஷ்: நான் கவலையே படமாட்டேன் சார்.
ஒரு கட்டடம் கட்டும் போது, சவுக்கு மரத்தை முக்கியமா வச்சு சாரம்
கட்டி, குறுக்குப் பலகைகள் போட்டு, அதன் மேல பல சித்தாள்கள் நின்னு, கைக்குக் கை கல் மாறி கட்டடம் உயர்ந்து கொண்டே போய் பல ஆண்டுகளுக்குப் பிறகு அது முடிந்த பிறகு, அந்தக் கட்டிடத்துக்கு
வர்ண ஜால வித்தைகள் எல்லாம் அடிச்சு, கீழ இறங்கும் போது
ஒவ்வொரு சவுக்கு மரமாக அவிழ்த்துக் கொண்டே வருவார்கள்.

கட்டடம் முடிந்து கிரஹப் பிரவேசத்தன்று எந்தக் கட்டடம் கட்டுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததோ அந்தச் சவுக்கு மரத்தை யார் கண்ணிலும் படாமல் பின்னால் எங்கயோ மறைத்து வைத்துவிட்டு, வேறெங்கேயோ வளர்ந்த வாழை மரத்தை முன்னால் நட்டு கிரஹகப் பிரவேசம் நடத்தி அனைவரையும் வரவேற்பார்கள்.

அத்தனை பெருமையும் வாழை மரத்துக்குப் போய் விடும்.
இதில் உள்ள உண்மை என்ன தெரியுமா? அந்த வாழை மரம்
மூன்று நாள் வாழ்க்கை தான் வாழும். ஆடுமாடுகள் மேயும்.
குழந்தைகள் பிய்த்தெடுப்பார்கள். பிறகு குப்பை வண்டியிலே
போய்ச் சேரும்.

மறைந்து கிடக்கிறதே அந்தச் சவுக்கு மரம் கண்ணீர் விடுவதில்லை.
அடுத்த கட்டடம் கட்டுவதற்கு தயார் நிலையில் என்றைக்கும்
சிரித்துக;் கொண்டேயிருக்கும்.!!!

நான் வாழை அல்ல...! சவுக்கு மரம்....
==============================================
என்னவொரு அசத்தலான பதில் பார்த்தீர்களா?

இப்போது சொல்லுங்கள் - நீங்கள் வாழை மரமா? அல்லது சவுக்கு மரமா?

அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.9.15

வாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா?


வாழ்க்கையின் சுவாரசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா?

கால்பந்தின் மீது இருந்த ஆர்வத்தால் மாதவனை அவனது அப்பா
மாவட்ட கால்பந்து அணியில் சேர்த்து விட்டார். அவனுக்கு கால்பந்து
விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஒரு வித சோம்பலும் அவனிடம் ஒட்டியிருந்ததால் அவனது அணியில் இருக்கும் சக வீரர்களோடு போட்டியிட்டு அணிக்குள் இடம்பெற முயற்சி செய்யாமலே இருந்தான். களத்தில் இறங்கும் 11 பேரில் ஒருவராக இடம்பெற முயற்சிக்காமல் ரிசர்விலே இருந்து  வந்தான்.

சில நேரங்களில் மாதவனின் அப்பா அவனது விளையாட்டை காண மைதானத்துக்கு வருவார். ஆனால் அவன் களத்தில் விளையாடாமல் அணியின் ரிசர்வ் வீரராக இருப்பது கண்டு மிகவும் வருந்துவார்.

அன்று தேசிய அளவில் நடைபெற வேண்டிய போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள வீரர்கள்
தயார் நிலையில் இருந்தனர். மாதவன் பயிற்சியாளரிடம் சென்று தன்னையும் களத்தில் விளையாடும் அணியில் சேர்த்துக் கொள்ள கெஞ்சினான்.

"இது இறுதிப் போட்டி. தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு. இதில் அனுபவம் உள்ள வீரர்களையே
களம் இறக்க வேண்டும். அப்போது தான் அணி வெற்றி பெற முடியும்"
என்றார் அணியின் பயிற்சியாளர்.

"எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். அணியின் வெற்றிக்காக
உயிரையும் கொடுக்க காத்திருக்கிறேன். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்"

என மாதவன் பயிற்சியாளரிடம் மன்றாடினான்.

மாதவனின் செயலைப் பார்த்து பயிற்சியாளருக்கு வியப்பாக
இருந்தது. இதுவரை இப்படி எப்போதும் அவன் மன்றாடியதில்லை.
"இது இறுதிப் போட்டி. கவனமுடன் விளையாடு" என ஆடும்
11 வீரர்களில் ஒருவராக சேர்த்துக் கொண்டார்.

மாதவன் ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்தைக் கொண்டு
தனியொருவனாய் சீறிப்பாய்ந்தான். பந்தை லாவகமாக கடத்தி
தொடர்சியாக கோல் போட்டான். அணியினர் போட்ட 19 கோல்களில்
17 கோல்கள் மாதவனால் போடப்பட்டது. அவனுடைய அணி
இறுதிப் போட்டியில்  வெற்றிப்ப்பெற்றது.

இது எப்படி சாத்தியமாயிறு என்று பயிற்சியாளர் கேட்டார்.

" இன்று என் தந்தை எனது ஆட்டத்தைக் காணவந்தார்" என்று கூறினார்.

"வழக்கமாக அவர் அமரும் இடத்தில் இன்று இல்லையே? அவர் எங்கே அமர்ந்திருந்தார்? " என்று பயிற்சியாளர் கேட்டார்.

அதற்கு மாதவன்," நான்கு நாட்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். இன்று அவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்" என்று கூறினான்.

அவன் கண்ணில் ஊற்றெடுத்த கண்ணீர் பயிற்சியாளர் கண்களில் அருவியாய் கொட்டியது.

மனமாற்றம் ஏற்படும் நொடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.

சிலருக்கு மகிழ்ச்சியில். சிலருக்கு வேதனையில்.

அந்த நொடியை கண்டுபிடிப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே அடங்கியிருக்கிறது.
--------------------------------------------------------
2
யார் முட்டாள்?

ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த வைரத்தை வழியில் கண்டெடுத்தான் அதன் மதிப்பு என்னவென்று தெரியாமலே அதை தன்னுடன் இருந்த
கழுதையின் காதில் மாட்டிவிட்டான்.

அதை கண்கானித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம்
சென்று ” இந்த கல்லை என்க்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம்
தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள் ” என்றான்.

உடனே பிச்சைக்காரன் “ அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக்ககல்லை வைத்துக்கொள் ” என்றான்.

அதற்கு வைரவியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன்
” ஒரு ரூபாய் அதிகம்! நான் உனக்கு 50 பைசா தருகிறேன் இல்லை
என்றால் வேண்டாம் என்றான்.

பிச்சைக்காரன், "அப்படியானல் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்றவாறே நடக்கலானான்.

வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 பைசாவிற்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.

அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம்
1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.

இதை சற்றும் எதிர்பாராத முதல் வைரவியாபாரி அதிர்ச்சியுடன்
“ அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்துக்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோசமாக செல்கிறாயே!
நன்றாக ஏமாந்துவிட்டாய் “ என்றான்.

அதைகேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்புடன் “ யார் முட்டாள்..?,
எனக்கு அதன் மதிப்புத் தெரியாது அதனால் அதை இந்த விலைக்கு
விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை
எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன் , அதன் மதிப்புத்
தெரிந்தும் வெறும் 50  பைசாவிற்காக அதை இழந்துவிட்டாய்
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் “  என்றவாறே நடக்கலானான்.

ஓஷோ சொன்ன குட்டிக்கதை இது!
-------------------------------
இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.9.15

தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!


தினமும் செய்ய வேண்டிய முதல் வேலை!

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து
மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14.9.15

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!


தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

திருநெல்வேலி - அல்வா

ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

கோவில்பட்டி - கடலைமிட்டாய்

பண்ருட்டி - பலாப்பழம்

மார்த்தாண்டம் - தேன்

பவானி - ஜமுக்காளம்

உசிலம்பட்டி - ரொட்டி

நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

பொள்ளாச்சி - தேங்காய்

வேதாரண்யம் - உப்பு

சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா

சாத்தூர் - காராசேவு, மிளகாய்

மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து

மாயவரம் - கருவாடு

திருப்பூர் - பனியன், ஜட்டி

உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை

கும்பகோணம் - வெற்றிலை, சீவல்

தர்மபுரி - புளி, தர்பூசணி

ராஜபாளையம் - நாய்

தூத்துக்குடி - உப்பு

ஈரோடு - மஞ்சள், துணி

தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை

நீலகிரி - தைலம்

ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - ஓலைக்கூடை

செட்டிநாடு - பலகாரம்

திருபுவனம் - பட்டு

குடியாத்தம் - நுங்கு

கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்

ஆலங்குடி - நிலக்கடலை

கரூர் - கொசுவலை

திருப்பாச்சி - அரிவாள்

காஞ்சிபுரம் - பட்டு, இட்லி

நாகப்பட்டினம் - கோலா மீன்

திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்

பத்தமடை - பாய்

பழனி - பஞ்சாமிர்தம், விபூதி

மணப்பாறை - முறுக்கு, மாடு

உடன்குடி - கருப்பட்டி

கவுந்தாம்பட்டி - வெல்லம்

ஊத்துக்குளி - வெண்ணெய்

கொடைக்கானல் - பேரிக்காய்

குற்றாலம் - நெல்லிக்காய்

செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா

சங்கரன் கோவில் - பிரியாணி

அரியலூர் - கொத்தமல்லி

சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை

கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்

திருச்செந்தூர் - கருப்பட்டி

குளித்தலை - வாழைப்பழம்

ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..

ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி

ஓசூர் - ரோஜா

நாமக்கல் - முட்டை

பல்லடம் - கோழி

குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா

திருச்சி - லால்கடை பூந்தி

வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்..
===============================================================
ஏதாவது விடுபட்டிருந்தால் கவலை வேண்டாம். வேப்பிலை சுவாமி வந்து சொல்லுவார்

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.9.15

Half quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும்போது, குழந்தை எப்படிப் பிறக்கும் ராசா?


Half quiz: பாதிப்புதிர்: கர்ப்பப் பையில் கோளாறு இருக்கும்போது, குழந்தை எப்படிப் பிறக்கும் ராசா?

Quiz.94. பதில்

13.9.2014

நேற்று ஒரு ஜாதகத்தைக் கொடுத்து அலசச் சொல்லியிருந்தேன். ஜாதகிக்குக் குழந்தையில்லை. ஜாதகப்படி என்ன காரணம் என்று கேட்டிருந்தேன். நிறையப் பேர்கள் ஆரவத்துடன் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் 
பதிலை எழுதியுள்ளார்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். 

நல்லபடியாகத் திருமணமாகியும் கருத்தரிக்க முடியாமல் சோகமாகிப் போனது அந்தப் பெண்ணின் வாழ்க்கை. ஜாதகப்படி அதற்கு என்ன
காரணம் என்று இன்று அலசுவோம்



1. கும்ப லக்கின ஜாதகம். லக்கினாதிபதி சனி 9ல் உச்சம்.
2. ஏழாம் வீட்டில் ஆறாம் வீட்டுக்காரன் சந்திரன் வந்து அமர்ந்துள்ளான். வில்லன். அத்துடன் சந்திரன் தேய்பிறைச் சந்திரன். அது நன்மையான அமைப்பு அல்ல
3. 2ஆம் வீட்டில் (குடும்பஸ்தானத்தில்) மாந்தி. அதுவும் நன்மையானதல்ல. குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் உண்டாகும்
4. குழந்தை பாக்கிய ஸ்தானத்தில் ராகு.

முக்கியமான மேட்டர்:

7ஆம் வீடு பெண்களுக்குக் கருப்பைக்கான இடம். அங்கே ஆறாம்
வீட்டுக்காரன் வந்து அமர்ந்தது கருப்பைக் கோளாருக்கு வழி வகுக்கும். அத்துடன் 12ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயின் 8ஆம் பார்வை
(விஷேசப் பார்வை) சந்திரனின் மேல் விழுகிறது. செவ்வாயின்
பார்வையால் கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகிக்கொண்டே
இருந்தது. சிகிச்சை செய்ய முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் உருவாகி ஜாதகிக்கு கர்ப்பம் தரிக்க முடியாத
நிலையை ஏற்படுத்தியது.அதனால் ஜாதகிக்குக் குழந்தை இல்லை.

பதில் எழுதிய அனைவரும் பின்னூட்டட்த்தில் இருக்கும் தங்கள்  
பதிலுடன் இந்தப் பதிலையும், மற்றவர்களின் பதிலையும் 
ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டுகிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!