மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.8.15

யார் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.?

யார் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.?

" The Monk who sold his Ferrari " புத்தகம் எழுதிய ராபின் ஷர்மாவின் மற்றொரு புத்தகம் " நீங்கள் இறந்த பின் யார் அழப் போகிறார்கள்?" (Who will cry when you die?).

“நீ பிறந்த போது நீ அழுதாய்; உலகம் சிரித்தது. நீ இறக்கும் போது பலர் அழுதால் தான் உன் ஆத்மா மகிழும்" என செண்டிமெண்டாக பேசும் ராபின் ஷர்மா இந்த புத்தகத்தில் சொல்லியுள்ள சில விஷயங்கள் உங்கள் பார்வைக்கும், சிந்தனைக்கும்:

1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்.

2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே கவனத்தையும், நேரத்தையும் அதிகம் செலுத்துங்கள். மற்ற விஷயங்களுக்காக அதிக நேரம் செலவழிக்காதீர்கள்.

3. அடிக்கடி கவலைப் படாதீர்கள். தேவை எனில் கவலை படுவதற்கென ஒவ்வொரு நாளும் மாலை நேரம் முப்பது நிமிடம் ஒதுக்குங்கள். அந்த நேரம் அனைத்து கவலையும் குறித்து சிந்தியுங்கள்.

4. அதிகாலையில் எழப் பழகுங்கள். வாழ்வில் வென்ற பலரும் அதிகாலையில் எழுபவர்களே.

5. தினமும் நிறைய சிரிக்க பழகுங்கள். அது நல்ல ஆரோக்கியத்தையும் நண்பர்களையும் பெற்று தரும்.

6. நிறைய நல்ல புத்தகம் படியுங்கள். எங்கு சென்றாலும் ஒரு புத்தகத்துடன் செல்லுங்கள். காத்திருக்கும் நேரத்தில் வாசியுங்கள்.

7. உங்கள் பிரச்சனைகளை ஒரு தாளில் பட்டியலிடுங்கள். இவ்வாறு பட்டியலிடும்போதே உங்கள் மன பாரம் கணிசமாக குறையும். அதற்கான தீர்வு இதன் மூலம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

8. உங்கள் குழந்தைகளை உங்களுக்கு கிடைத்த மிக சிறந்த பரிசாக ( Gift ) நினையுங்கள். அவர்களுக்கு நீங்கள் தர கூடிய சிறந்த பரிசு அவர்களுடன் நீங்கள் செலவிடும் நேரமே.

9. தனக்கு வேண்டியதை கேட்பவன் சில நிமிடங்கள் முட்டாளாய் தெரிவான். தனக்கு வேண்டியதை கேட்காதவன் வாழ்நாள் முழுவதும் முட்டாளாய் இருக்க நேரிடும்.

10. உங்கள் தினசரி பிரயாண நேரத்தை உபயோகமாக செலவழியுங்கள். உதாரணமாய் நல்ல புத்தகம் வாசிப்பதிலோ, நல்ல விஷயம் யோசிப்பதிலோ செலவழிக்கலாம்.

11. எந்த ஒரு புது பழக்கமும் உங்களுக்குள் முழுதும் உள் வாங்கி, அது உங்கள் வாடிக்கையாக மாற 21 நாட்களாவது ஆகும்.

12. தினமும் நல்ல இசையை கேளுங்கள். துள்ளலான நம்பிக்கை தரும் இசை, புன்னகையையும் உற்சாகத்தையும் தரும்.

13. புது மனிதர்களிடமும் தயங்காது பேசுங்கள். அவர்களிடமிருந்து கூட உங்களை ஒத்த சிந்தனையும் நல்ல நட்பும் கிடைக்கலாம்.

14. பணம் உள்ளவர்கள் பணக்காரர்கள் அல்ல. மூன்று சிறந்த நண்பர்களாவது கொண்டவனே பணக்காரன்.

15. எதிலும் வித்யாசமாய் இருங்கள். பிறர் செய்வதையே நீங்களும் செய்யாதீர்கள்.

16. நீங்கள் படிக்க துவங்கும் எல்லா புத்தகமும் முழுவதுமாய் படித்து முடிக்க வேண்டியவை அல்ல. முதல் அரை மணியில் உங்களை கவரா விட்டால் அதனை மேலும் படித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.

17. உங்கள் தொலை/கை பேசி உங்கள் வசதிக்காக தான். அது அடிக்கும் ஒவ்வொரு முறையும் நீங்கள் எடுத்து பேச வேண்டும் என்பதில்லை. முக்கியமான வேளைகளில் நடுவே இருக்கும் போது தொலை பேசி மணி அடித்தாலும் எடுத்து பேசாதீர்கள்.

18. உங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகளை அவசியம் புகைப்படம் எடுங்கள். பிற்காலத்தில் அந்த இனிய நாட்களுக்கு நீங்கள் சென்று வர அவை உதவும்.

19. அலுவலகம் முடிந்து கிளம்பும் போது சில நிமிடங்கள் வீட்டிற்கு சென்றதும் மனைவி/ குழந்தைக்கு என்ன செய்ய வேண்டுமென யோசியுங்கள்.

20. நீங்கள் எவ்வளவு வெற்றி அடைந்தாலும் எளிமையான (humble) மனிதராயிருங்கள். வெற்றிகரமான பல மனிதர்கள் எளிமையானவர்களே

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28.8.15

குட்டிக்கதை: மாட்டைவைத்து மனைவியை அடக்கியவன்


குட்டிக்கதை: மாட்டைவைத்து மனைவியை அடக்கியவன்

ஒரு கிராமத்து கதை.

ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க
போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கன்டிசன் போட்டுக்
கொண்டிருந்தாள்.

அந்த கன்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக்
கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.

நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு
இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம்
அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.

அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.

இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என
அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.

போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”

அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.

பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான். ஆனால் அவன்
அன்னை நொந்து போய்விட்டதோடு,,மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.

மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று
திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.

திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்
கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.

வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.
இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை
அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..

அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால்
அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில்
படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.

அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக்
கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின்
தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.

இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்துபோனதோடு, தான் போட்ட கன்டிசன்களை
எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.

இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை!
=================================================================
படித்ததில் பிடித்தது
-------------------------------------
ஜோதிடப் புத்தகத்தை, அனைவருக்கும் கிடைக்கச் செய்வதில் முனைப்பாக இருப்பதால், புதிருக்குப் புதிதாக எதையும் எழுதிப் பதியமுடியவில்லை.
பொறுத்துக்கொள்ளுங்கள். செப்டம்பர் 4ம் தேதியில் இருந்து புதிர் பாடங்கள் மீண்டும் வெளியாகும்

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.8.15

Short Story சிறுகதை: இந்தியன் ஆயா சர்வீஸ் (I.A.S)


இந்தியன் ஆயா சர்வீஸ் (I.A.S)

சிறுகதை
---------------------------------------------
கதிரேசன் தேசப்பற்று மிக்கவர். நம் நாட்டைப் பற்றி யாராவது குறையாகச் சொன்னால் அவர்களுடன் சண்டைக்குப் போய்விடுவார்.

மக்களிடம் கட்டுப்பாடின்மை, பரவலாகக் காணப்படும் லஞ்சம், ஊழல், என்று யாராவது சொன்னால், அதெல்லாம் குறைபாடுகள். அதைவைத்து ஒட்டு
மொத்த தேசத்தையும் மோசமாகச் சொல்லாதீர்கள் என்று வாதம் செய்யத் துவங்கிவிடுவார்.

இது ஆன்மீக பூமி. எத்தனை ஆயிரம் கோயில்கள் உள்ளன. தஞ்சை பிரஹதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில் போன்று கருங்கல் திருப்பணியில் ஜொலிக்கும் ஒரு கோயிலையாவது நீங்கள் வேற்று நாட்டில் காட்ட முடியுமா என்பார்?

"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"

என்ற பாரதியின் வரிகளை உரக்கச் சொல்லுவார்.

”இட்லி, சாம்பாருக்கு இணையான உணவைக் காட்டுங்கள் பார்க்கலாம்” என்பார். ”தயிர் சாதம், மாங்காய் ஊறுகாய்க்கு ஈடு எது?” என்பார்.

அப்படிச் சொல்பவர், அமெரிக்காவை யாராவது பாராட்டிச் சொன்னாலும், அவர்களுடன் சண்டைக்குப் போய்விடுவார்.

”எதற்காக அமெரிக்கபுராணம் பாடுகிறீர்கள்? அமெரிக்காவில் என்ன இருக்கிறது? 500 ஆண்டுகளுக்கு முன்பு கொலம்பஸ் என்னும் மாவீரன்
கண்டுபிடித்த பின்புதான் அமெரிக்கா. இத்தாலி, ஸ்பானிஷ், பிரெஞ்ச், ஜெர்மனி, இங்கிலாந்து என்று பல தேசத்து மக்கள் குடியேறியதால்
உருவான நாடு அது. கலவையான நாடு அது. நமக்குள்ள நீண்ட வரலாறு, இதிகாசங்கள், இலக்கியங்கள் எல்லாம் அவர்களிடம் இல்லை. அவர்கள் தேசத்துப் பணமான டாலர் மதிப்பு உச்சத்தில் இருப்பதால், எல்லோருக்கும், அதாவது பணத் தேடலில் உள்ள எல்லோருக்கும் அமெரிக்கா உயர்வாகத்
தெரிகிறது. அவ்வளவுதான்.  கரிகால்சோழன் திருச்சி கல்லணையை கட்டி கிட்டத்தட்ட 13 நூற்றாண்டுகள் ஆகிறது. அதை மனதில் வையுங்கள். ”
என்பார்.

”என்ன அண்ணே, அப்படிச் சொல்லிவிட்டீர்கள், நம் செட்டிநாட்டு
ஊர்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஏராளமான பேர்கள், அங்கே சென்று
பெரும்பொருள் ஈட்டிக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத்திற்கு ஒருவராவது இப்போது அங்கே இருக்கிறார்கள்.”

”போனவர்களில் ஒருவராவது சம்பாதித்தது போதும் என்று திரும்பி வருகிறார்களா?” அதைச் சொல்லுங்கள்.

”திரும்பி வராததற்கு பணம் மட்டும் காரணமில்லை. அங்கே உள்ள
ஒழுக்கம் (Discipline) கட்டுப்பாடு, போன்றவைகளும் காரணமாகும்.
எத்தனை பெரிசுகள் அவர்கள் அனுப்பும் பணத்தை வைத்து இங்கே செளகரியமாக இருக்கிறார்கள் தெரியுமா? அத்துடன் எத்தனை பேர்கள், அங்கே சென்று மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் என்று தங்கிவிட்டு வருகிறார்கள் தெரியுமா?”

”அங்கே என்ன சுற்றுலா பயணத்திற்கா செல்கிறார்கள்? இல்லையே!
தங்கள் பிள்ளைகளின் மகப்பேறு சமயத்தில் உதவிக்காகச் செல்கிறார்கள்.
அங்கே பிரசவத்திற்கு பத்து லட்சம் ரூபாய் செலவாகும். அத்துடன்
போகின்ற ஒவ்வொருவருக்கும் குறைந்தது இரண்டு லட்ச ரூபாய்களாவது
செலவாகும். எல்லாம் எதற்காக? அங்கே பிறக்கும் குழந்தைகளுக்கு உடனடியாக அமெரிக்கக்  குடியுரிமை கிடைத்துவிடும். அதற்காகத்தான்
அங்கே பிரசவம். இங்கே இருந்து செல்கிறவர்களை ஆறு மாதங்களுக்கு
மேல் தங்க அங்கே அனுமதிக்க மாட்டார்கள். ஆகவேதான் பெண்ணின்
பெற்றோர்களும்,  பையனின் பெற்றோர்களும் மாறி மாறி ஷிப்ட்
முறையில் சென்று திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆயா வேலை
பார்க்கச் சென்று கொண்டிருக்கிறார்கள். பச்சைக் குழந்தையை,  முதல் ஒரு வருடம் பார்த்துக் கொள்ளும் வேலை. அப்படிப் போகிறவர்களுக்கு அங்கே  உள்ள அவதிகள் உங்களுக்குத் தெரியுமா?”

“அவதிகளா? என்ன அவதிகள்?”

“முதலில் சுதந்திரமாக வெளியே செல்ல முடியாது. வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டியதுதான். அங்கே உங்களை விசா அனுப்பி
அழைத்துக் கொண்ட மகராசனோ அல்லது மகராசியோ உங்களைக் கூட்டிக்கொண்டு போனால்தான் நீங்கள் வெளியே செல்ல முடியும்.
அவர்கள் தங்களுடைய விடுமுறை நாட்களில்தான் அதைச் செய்வார்கள். திருவான்மியூரில் உள்ள மகன் வீட்டில் தங்கிக் கொண்டு, பையில் சில்லறையை அள்ளிப் போட்டுக்கொண்டு, பஸ்ஸில் ஏறி பாரீஸ்
கார்னர்வரை ஒரு ரவுண்டு அடித்துவிட்டுத் திரும்புவீர்களே அதுபோல
அங்கே செல்ல முடியாது.

கணவனும் மனைவியும் வேலைக்குப் போகிற வீடுகளில், வேளா
வேளைக்கு வித விதமான சமையல் எல்லாம் இருக்காது. வாரத்திற்கு
ஒரு நாள்தான் சமையல் செய்வார்கள். செய்தவற்றை எல்லாம்
ஃபிரிட்ஜில்  அடுக்கிவைத்து விடுவார்கள். வேண்டும்போது ஓவனில்
சூடு பண்ணி நீங்கள் சாப்பிட வேண்டும். திங்கட்கிழமை ஊற்றிக்
கொள்கிற சாம்பார்தான் மீண்டும் வியாழக் கிழமைக்கு வரும்.
செவ்வாய்க் கிழமை ஊற்றிக்  கொள்கிற புளிக் குழம்பைத்தான்
மீண்டும் வெள்ளிக்கிழமை ஊற்றிக் கொள்ள வேண்டும். புதன்
கிழமைக்கு வரும் ரசத்தைத்தான் சனிக்கிழமை நீங்கள் ஊற்றிக்
கொள்ளவேண்டும். பொரியலும் இப்படித்தான் அடுக்கு முறையில்
வரும். சூடான சமையல் சாப்பாடு எல்லாம் ஞாயிற்றுக்கிழமைகளில்
தான்!”

“ஓஹோ.....”

“அதைவிட அவதி ஒன்று உள்ளது. டாய்லெட்டிற்குப் போனால் தண்ணீர் ஊற்றிக் கழுவிவிட்டு ஆனந்தமாக வெளியே வரமுடியாது. எல்லாம்
பேப்பர்தான். துடைத்துப் போட்டுவிட்டு வரவேண்டும். நாத்தம் பிடித்த
ஊர்கள்”

இதற்குமேல் தாங்காது என்று வந்தவர்கள் ஓட்டம் பிடித்துவிடுவார்கள். கதிரேசனும் வசை புராணத்தை அத்துடன் நிறுத்திக் கொள்வார்.
                         
                                        ****************************************

மனித மனம் மகத்தானது. மனதை இரண்டாகப் பிரிக்கலாம். அறிவு மனம் (conscious mind), ஆழ்மனம் (Sub-conscious mind) என இரு பிரிவுகளாக
பிரிக்கலாம். அறிவுமனதிற்கு ஐம்புலன்களின் நேரடித் தொடர்பு உண்டு. கண்ணால் கண்ட காட்சிகள், காதால் கேட்ட வார்த்தைகள், சப்தங்கள்,
மூக்கால் நுகர்ந்த வாசனைகள், நாக்கால் அறிந்த சுவைகள், தொட்டு
உணர்ந்த புரிதல்கள் அனைத்தும் செய்திகளாக அறிவு மனத்தில் பதிவு
பெறுகின்றன. அதற்கு நல்லது கெட்டது தெரியும். சிலவற்றை நாம் ஒதுக்குவோம். பலவற்றை விரும்புவோம். கிடைத்த அனுபவத்தை
வைத்து சிந்தித்து சீர்தூக்கி  நம் செயல்களைத் தொடரவைப்பது அறிவு மனம்தான். அதாவது வெளிமனம்தான்.

ஆனால் ஆழ்மனம் அல்லது உள்மனம் என்பது ஒரு பெட்டகத்தைப்
போன்றது. தன்னிச்சையாக இயங்கக்கூடியது. அறிவு மனத்திற்குக்
கிடைக்கும் செய்திகள் எதையும் அது ஏற்காது. அதற்கு நல்லது கெட்டது
என்று எதுவும் தெரியாது, கிடையாது. வெற்றி,தோல்வி என்றும் எதுவும் கிடையாது. உண்மையான அனுபவத்திற்கும், கற்பனையான அனுபவத்திற்கும் இடையே உள்ள வேறுபாட்டை அது அறியாது.

இத்தகைய பண்புகளைக் கொண்ட ஆழ்மனம் என்ன செய்யும்?

சமயங்களில் வக்கிரமாக நம்மைப் பேசவைக்கும். தேவையில்லாததை செய்ய வைக்கும்.

கதிரேசன் அண்ணன் வாழ்க்கையிலும் அதுதான் நடக்கிறது. அவருக்கு அமெரிக்காவைப் பிடிக்காமல் போனதற்கு அவருடைய அண்ணன்
சிவராமன் செட்டியாரும் அவருடைய மனைவி செல்லம்மை ஆச்சியும்
தான் காரணம். அண்ணனுக்கும் தம்பிக்கும் பத்து வயது வித்தியாசம். இடையில் இரண்டு சகோதரிகள்.

சிவராமன் செட்டியாருக்கு இரண்டு மகன்கள். இருவருமே அமெரிக்காவில் நல்ல வேலையில் இருக்கிறார்கள். மைக்ரோசாஃப்ட், ஆரக்கிள் என்று
பெரிய நிறுவனங்களில் வேலை. கை நிறையச் சம்பாத்தியம். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பத்தாயிரம் டாலர்கள் பணம் அனுப்பிக்
கொண்டிருக்கிறார்கள். அதாவது இன்றைய பணபறிமாற்றத்தில் சுமார்
ஆறு லட்சத்தி முப்பத்தாறாயிரம் ரூபாய்கள். சராசரியாக மாதம் இரண்டு
லட்ச ரூபாய்கள் என்று வைத்துக் கொள்ளுங்களேன். காரைக்குடியைச்
சுற்றி இந்தப் பக்கம் கோட்டையூர்வரை அந்தப் பக்கம் மானகிரி,
நாச்சியாபுரம்வரை இடமாக வாங்கிப் போட்டுக்கொண்டிருக்கிறார்.

அத்துடன் நான்கு பேரக் குழந்தைகள். அமெரிக்க மண்ணிலேயே
எல்லாப் பிரசவமும். அதற்கு ஆச்சியும், செட்டியாரும் அடிக்கடி
போய் வந்தார்கள்.

ஆச்சிக்கு பத்து வருட விசா. நினைத்தால் புறப்பட்டுப் போய்விடுவார்.
போய் வந்து விட்டு சும்மா இருக்காமல் வருகிறவர்கள் போகிறவர்களிடம்
எல்லாம் அமெரிக்கப் பெருமையையே பேசிக் கொண்டிருப்பார். ஆச்சியின் அளப்பறை ஓவராக இருக்கும். அதில் மனம் நொந்த கதிரேசனின்
ஆழ்மனதில் எல்லாம் தங்கிவிட்டது.

கதிரேசனுக்கு ஒரே ஒரு பெண் மட்டும்தான். வயது இருபத்தி மூன்றாகிறது. மதுரை தியாகராஜர் பொறியியற் கல்லூரியில் படித்தவளுக்கு
இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து சென்னையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறாள். அம்சமாக இருப்பாள். பார்த்தவர்களைத்
திரும்பிப் பார்க்க வைக்கும் அழகு. பெண் கேட்டும், செய்யச் சொல்லியும் நிறையப் பேர்கள் நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கதிரேச
அண்ணன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன்களை எல்லாம்
வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு உள்நாட்டு வரனையே தேடிக்கொண்டிருந்தார்.

நல்ல வரன் கிடைத்ததா?

கிடைத்தது. ஆனால் அவர் திருமணத்தை நிச்சயம் செய்த போது,
பின்னால் வரவிருக்கும் இடையூறு தெரியாமல் போய்விட்டது. அதைக்
காலதேவனின் சேட்டை அல்லது விளையாட்டு என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.

                                     ****************************************

கதிரேசன் செட்டியாரின் மகளுக்கு நல்ல வரனாக அமைந்து திருமணமும் தடபுடலாய் நிறைவேறியது. மாப்பிள்ளையின் தந்தையாருக்கு
சென்னையில் உள்ள கனரகத் தொழிற்சாலை ஒன்றில் மேலாளர்
வேலை. அவருடைய நிறுவன வளாகத்திலேயே அவருக்கு வீடு.
அவர்களுக்கு சென்னையில் இரண்டு இடங்களில் சொந்த வீடுகள்
உள்ளன. அதில் ஒரு வீட்டில் தன் மகனையும், மருமகளையும்
குடியிருக்கச் சொல்லிவிட்டு, புதுக்கார் ஒன்றையும் வாங்கிக் கொடுத்துவிட்டார்.

பூவெல்லாம் உன் வாசம் என்பதுபோல கதிரேசன் செட்டியாருக்கு  மனமெல்லாம் மகிழ்ச்சி நிரம்பி வழிந்தது.

ஆனால் அந்த மகிழ்ச்சி இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கவில்லை.

அவருடைய மாப்பிள்ளைக்கு, அவர் வேலை பார்த்த நிறுவனத்தார்,
பதவி உயர்வு கொடுத்ததோடு, அமெரிக்காவில் உள்ள தங்கள்
கிளைக்குச் செல்லும்படி உத்தரவை அடித்துக் கையில் கொடுத்து
விட்டார்கள்.

புதிதாகத் திருமணமானவன் என்று சொல்லியபோது, மனைவிக்கும் வேலைபோட்டுக் கொடுத்துக் கூடவே கூட்டிக் கொண்டு செல்லுங்கள்
என்று சொல்லிவிட்டார்கள். சொல்லியதோடு அல்லாமல், பத்தே
நாட்களில் விசா, விமானப் பயணத்திற்கான சீட்டுக்கள் என்று எல்லாவற்றையும் கையில் திணித்து வலுக்கட்டாயமாக வழியனுப்பி வைத்துவிட்டார்கள். அவர்கள் அவசரம் அவர்களுக்கு.

கதிரேசன் செட்டியாருக்கு மட்டும்தான் மிகுந்த வருத்தம். அரை மனதுடன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் மீனம்பாக்கம் விமான நிலையத்தில்
வழியனுப்பி வைத்தார்.

வருத்தம் அதோடு முடிந்ததா? அதெப்படி முடியும்? அதற்குப் பிறகுதான் அதிகமானது.

                                  **********************************************

மகளும் மாப்பிள்ளையும் அமெரிக்கா சென்ற ஆறாவது மாதமே மகள் மாதமாக இருக்கிறாள் என்று தகவல் வந்தது. மாப்பிள்ளை, பிரசவத்தை
அமெரிக்காவிலேயே வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டார்.
அதனால் அடுத்து வந்த சில மாதங்களிலேயே கதிரேசன் செட்டியாரும்
அவருடைய மனைவியும் அமெரிக்காவிற்குப் புறப்பட்டுச் செல்லும்படியாகிவிட்டது.

விசா, மற்றும் டிக்கெட்டுகளை எல்லாம் மாப்பிள்ளை ஏற்பாடு செய்து
வாங்கி அனுப்பிவிட்டார். கதிரேசன் செட்டியாரின் மனைவி பிள்ளை
பிறந்தவுடன் அதற்குப் போடுவதற்காக தங்கச் சங்கிலி , வைரத்தோடு,
ஜீரோ சைஸ்ஸில் குழந்தை ஆடைகள் என்று எல்லாவற்றையும்
வாங்கிச் சேர்த்துவிட்டார்.

காரைக்குடியைவிட்டுப் புறப்பட வேண்டிய நாளும் வந்தது.
இன்னோவா டாக்ஸி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.
இருவருக்கும் சேர்த்து 4 பெரிய பெட்டிகள், ஹாண்ட் லக்கேஜ்
என்று சாமான்களும் இருந்தன.

சென்னை விமான நிலையம்வரை வருகிறேன் என்று கதிரேசன்
செட்டியாரின் நெருங்கிய நண்பரான ஏகப்ப செட்டியாரும் அவர்களுடன்
செல்வதற்குத் தயாராக இருந்தார்.

அப்போதுதான் அது நடந்தது.

கதிரேசன் செட்டியாரைப் பார்ப்பதற்காகப் புதுக்கோட்டையில் இருந்து வந்திருந்த அவர்களுடைய உறவினர் மாணிக்கம் செட்டியார்
ஆச்சரியத்துடன் கேட்டார்.

“என்ன பயணமா? எந்த ஊருக்கு? பெட்டிகளெல்லாம் பலமாக இருக்கிறதே!”

ஏகப்ப செட்டியார்தான் குறுக்கிட்டுச் சொன்னார்.” ஐ.ஏ.எஸ் படிப்பதற்காக அண்ணன் அமெரிக்க செல்கிறார்கள்”

“ஐ.ஏ.எஸ்ஸா? இந்த வயதிலா? படித்து என்ன செய்யப் போகிறார்?”

“படித்துவந்தவுடன் இங்கே உள்ள மற்ற நகரத்தார்களுக்குப் பாடம் நடத்துவார்”

வந்தவருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏகப்ப செட்டியார் விளக்கிச் சொன்னார்.

தங்கள் பிள்ளைகளின் பிரசவத்திற்காக அமெரிக்கா செல்பவர்களை யெல்லாம், நக்கலாக, ஆயா வேலைக்குச் செல்கிறார்கள் என்றும்
இந்தியன் ஆயா சர்வீஸ் படிக்கச் செல்கிறார்கள் என்றும் கதிரேசன்
இதுவரை சொன்னதையும், இப்போது அவரே தன் மனைவியுடன்
ஆயா வேலை செய்யச் செல்கிறார் என்பதையும் லாவகமாக விளக்கிச் சொன்னார். கேட்டவருக்குப்  புரிந்தது. தன்னை மறந்து சிரித்தார்.

கதிரேசன் செட்டியாருக்கு நெத்தியடியாக ஒன்று மட்டும் விளங்கியது. புரிந்தது. யாரையும் கேலி செய்யக் கூடாது. எள்ளி நகையாடக் கூடாது.

முற்பகல் செய்தால் பிற்பகல் நமக்கே அது வரும் என்ற ஆன்றோர்களின் அர்த்தமுள்ள சொற்களெல்லாம் மனதில் வந்து போயின!

இதெல்லாம் நடந்து ஒருவருடம் ஆன பிறகு கதிரேசன் செட்டியார் இந்தியாவிற்குத் திரும்பிவந்தவுடன் செய்த முக்கியமான வேலை.

அமெரிக்காவையோ அல்லது அங்கே செல்லும் பெற்றோர்களையோ
கேலி செய்வதை அறவே நிறுத்திவிட்டார்.

காலன் நடத்தும் பாடத்தில் அதுதானே முக்கியம். அதாவது அனுபவப்பட்டுத் திருந்துவதுதானே முக்கியம்!
-------------------------------------------------------------------------
மாத இதழ் ஒன்றிற்காக அடியவன் எழுதிய சிறுகதை இது. அதில்
வெளிவந்து வரவேற்பைப் பெற்றகதை. நீங்கள் படித்து மகிழ வேண்டும்
என்பதற்காக அக்கதையை இன்று வலை ஏற்றியிருக்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்                                            ==============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.8.15

தொழில் நுட்பத்தால் வேறு என்னென்ன கிடைக்கும்?


தொழில் நுட்பத்தால் வேறு என்னென்ன கிடைக்கும்? 

 தொழில் நுட்பத்தால் வேறு என்னென்ன கிடைக்கும்? 11 நிமிடங்கள் ஓடக் கூடிய குறும்படம் உள்ளது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்

 அன்புடன், 
வாத்தியார் 
=========================================================
Tamil Short Film - டெக்னாலஜி


Our sincere thanks to the person who uploaded this in the net ============================================================ வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

25.8.15

கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!


கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல் அது!

பக்தி மலர்

இன்றையப் பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் அலங்கரிக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------------------------------------------------
ஆறுமுகன் வாசம் செய்யும் ஆலயத் திருவாசல்
அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
(ஆறுமுகன் ... )

அலைக்கரம் கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள்வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல் 
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல் 
(ஆறுமுகன் ... )

ஏழைமுகம் பார்த்திறங்கும் ஈராறு விழி வாசல் 
இன்முகம் காட்டி நெஞ்சை இழுக்கின்ற மனவாசல் 
வாழையடி வாழை என வாழ வரம் தரும் வாசல் 
வானவரும் வந்திறங்கி வணங்கி நலம் பெரும் வாசல் 
(ஆறுமுகன் ... )

பொங்கும் சரவணப்பொய்கை போகின்ற தனி வாசல்
புலவோர்கள் நா துதிக்கும் புகழ் திருப்புகழ் வாசல் 
சங்கும் முரசும் முழங்கும் சங்கீதம் தவழ் வாசல் 
சக்திவடிவேல் முருகன் சன்னிதியைத் தொழும் வாசல் 

இளைத்தாரும் களைப்பாற இளம் தென்றல் வரும் வாசல்
நீலவர்க்கும் ஞானியர்க்கும் இன்பம் தரும் ஒரு வாசல்
மலைத்தேனும் தினைமாவும் மணம் வீசும் மலர்வாசல்
மால்மருகன் திருச்செந்தூர் மகராசன் எழும் வாசல் 
(ஆறுமுகன் ... )

அலைக் கரம்கொட்டிக் கடல் அழைக்கின்ற அருள் வாசல்
ஏறுமயில் ஏறிவரும் இறைவனின் தலை வாசல்
எண்ணற்றக் காவடிகள் எடுத்தாடும் எழில் வாசல்
(ஆறுமுகன் ... ).

பாடிப்பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள்!
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

23.8.15

வாத்தியாரின் ஜோதிட நூலிற்கு மாணவரின் மதிப்புரை!

வாத்தியாரின் ஜோதிட நூலிற்கு மாணவரின் மதிப்புரை!

நம் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் ஒருவரான திரு.கே.முத்துராமகிருஷ்ணன் அவர்கள், வாத்தியாரின்
"வ‌குப்பறை ஜோதிடம்‍ தொகுதி‍‍=1" ஐப் பார்த்துப் படித்துவிட்டு
தனது மேலான மதிப்புரையை  நல்கியுள்ளார். உங்களின்
பார்வைக்காக அதைக் கீழே கொடுத்துள்ளேன்.

அத்துடன் நம் வகுப்பறையின் சார்பில் நமது நன்றியையும்
அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------


KMRK அவர்களின் கடிதம்:

நம் மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களின் "வ‌குப்பறை ஜோதிடம்‍ தொகுதி‍‍=1" வெளியாகிவிட்டது.

முதல் காப்பியை அடியேனுக்கு அனுப்பி வைத்து, என்றும் அவருடைய மாணவனாகிய எனக்கு  சிறப்பினை அளித்துள்ளார்கள். அதற்காக
அவ‌ருக்கு என் அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இங்குள்ள நூலகத்திலிருந்து வாரம் இரண்டு அல்லது மூன்று முறை புத்தகங்கள் எடுத்து வருகிறேன்.அதனால் தமிழகத்தில் உள்ள
அனைத்து பதிப்பக்கங்களின் தரம் என்ன என்பது எனக்கு
ஆராயாமலேயே விளங்கியது. அட்டையை மட்டும் நல்ல
'வழு வழு' காகிதத்தில் போட்டுவிட்டு உள்ளே சாணித்தாளில் படிக்க
மிகவும் சிரம‌மாக இருக்கும் ழுத்துருக்களில்,மங்கலான மையில்
அச்சடித்து ஒப்பேற்றும் பதிப்பகங்களே அதிகம்.

ஆனால் நமது வாத்தியாரின் இப்புத்தகம் மட்டுமல்லாமல், முன்னர்
அவரது கதைத் தொகுதிகள் அனைத்துமே நல்ல விலையுயர்ந்த தாளில், கண்ணுக்கு இதமான எழுத்துருக்களில், ஒரே சீரான மையில் உருவாக்கப்பட்டுள்ளன‌. இலாபம் என்பதை மனதில் கொள்ளாமல்,
தரத்திற்கே முன்னுரிமை அளித்து புத்தகம் வெளியிடுவதற்காக
உமையாள் பதிப்பகத்திற்கு ஒரு சிறப்பான பாராட்டுக்கள்.

320 பக்கங்களையுடைய இப்புத்தகம்,அடிப்படை சோதிடப்பாடங்களை
கற்றுக் கொடுக்கிறது.வகுப்பறைக்கு தொடர்ந்து வருபவர்களுக்கு இப்பாடங்கள் பரிச்சயமான ஒன்றுதான் என்றாலும், சந்தேகம் வரும்
போது புத்த‌கத்தை எடுத்து பார்த்துக்கொள்ள மிகவும் உதவும்.
புதியவர்களுக்கு 'லக்கினத்தை எப்படி ஆய்வு செய்வது?' 'நீச பங்க
ராஜயோகம் என்றால் என்ன?''கர்பச்செல் இருப்பு என்றால் என்ன?'
போன்ற அடிப்படைப் பாடங்கள் மிகவும் பயனுள்ளவை.

மேலும் 'பிரபலங்களின் ஜாதகங்கள்'  என்ற அத்தியாயத்தில்
33 பிரபலங்களின் பிறந்த தேதி, நேரம், அட்ச,தீர்க ரேகை விவரங்கள் கொடுத்துள்ளது மிக மிக‌ பயனுள்ளதாகும்.வாத்தியாரின் இந்த
உதவியால் பயிற்சி எடுப்போருக்கு மிகவும் செளகர்யம்.

இன்னும் புத்தகத்தைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.
அப்புறம் புத்தகத்தின் சிறப்பினைப் பற்றி  இன்னொரு புத்தகம்
போட வேண்டியதுதான்.

புத்தகம் வெளியிடுவதில் ஏற்படும் பொருள் இழப்பு அதில்
ஈடுபட்டோருக்குத் தெரியும்.நமது வாத்தியாருக்குக் கைப்பிடிப்பு
ஏற்படாமல் நாம் அனைவரும் அச்சிட்ட புத்தகம் அனைத்தையும்
வாங்கிப் பயன் படுத்துவதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை.

அடுத்த தொகுதிகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

KMRK, லால்குடி
மின்னஞ்சல் முகவரி,kmrk1949@gmail.com
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

சரஸ்வதி வந்தாள், ஜோதிட நூலைத் தந்தாள்!


சரஸ்வதி வந்தாள், ஜோதிட நூலைத் தந்தாள்!

வாத்தியாரின் ஜோதிட நூல் வந்துவிட்டது. குறிப்பிட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டது. வெளியூர்ப் பயணத்தின் காரணமாக உடனே அறிவிக்கவில்லை. 17.8.2015 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வந்தது.

வந்தவுடன் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் இருவருக்கு அப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பெற்றது.

1
அவர்கள் திரு.கே.முத்துராமகிருஷ்ணன்,
ஆங்கரை அஞ்சல்,‍=621703
இலால்குடி தாலுகா,
திருச்சி மாவட்டம்
கைபேசி:90475 16699
------------------------------------
2
S.N.Ganapathi.,
Sankarankovil - 627756.
Mobile.no.,99 94 63 88 63
---------------------------------------

மேலும் முன்பணம் அனுப்பி பதிவு செய்து வைத்திருந்தவர்களில் வரிசைப்படியாக இருந்த எட்டு பேர்களுக்கும்  புத்தகம் அனுப்பி வைக்கப்பெற்றது.

அவர்கள்:

1. K.R. MALATHI 
THANJAVUR -613007 
2
Ashwin kumar N
Chennai 600078
Mob :8124494515
3
L.R. KANNAN
DINDIGUL -  624003
Mobile no ; 9789307424,9488247424
4.
S.Baskaran
Chennai - 600 081.
Mobile: 9551722505.

5
Praveen Kumar Govindarajan
Chennai - 600 072
Mobile: 919962247515
6
S.Mohan
Karaikal - 609 602
Mobile: 9367990099
7
Selvaraj M
Kalasapakkam,
Tiruvannamalai DT,
Pin Code - 606751
Mobile Number: 9597401799
8
K.P.Shanmuga Sundaram
Dharmapuri-636705
Ph-9944262726

புத்தகம் கிடைத்தவர்களில் மூவர் தங்களுடைய மகிழ்ச்சியையும், விமர்சனத்தையும் பின்னூட்டங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். முன் பதிவுகளில் அவைகள் வெளியாகியுள்ளன.

சரஸ்வதி தேவியின் அருளால் புத்தகம் நல்ல விதமாக வந்துள்ளது. அதைத்தான் தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன்.

மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.8.15

வாத்தியாரின் அறிவிப்பு!


வாத்தியாரின் அறிவிப்பு!

19.8.2015

வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு 3 நாட்கள் விடுமுறை.
அடுத்த வகுப்பு 24.8.2015 திங்கட்கிழமையன்று!

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

18.8.15

குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!


குன்றெல்லாம் ஆள்பவன் அவன்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன.
அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
----------------------------
அழகெல்லாம் முருகனே

அழகெல்லாம் முருகனே ... 
அருளெல்லாம் முருகனே
தெளிவெல்லாம் முருகனே ... 
தெய்வமும் முருகனே
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

பழஞானப் பசியாலே ... 
பழநிக்கு வந்தவன் 
பழமுதிர்ச்சோலையிலே ... 
பசியாறி நின்றவன் 
... பசியாறி நின்றவன்
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே

குன்றெல்லாம் ஆள்பவன் ... 
குகனாக வாழ்பவன் 
குறவள்ளிக் காந்தனவன் ... 
குறிஞ்சிக்கு வேந்தனவன் 
பூவாறு முகங்களிலே ... 
பேரருள் ஒளிவீசும் 
நாவாறப் பாடுகையில் ... 
நலம்பாடும் வேலனவன் 
(அழகெல்லாம்)
... தெய்வமும் முருகனே.

பாடிப் பரவசப் படுத்தியவர்கள்: சூலமங்கலம் சகோதரிகள் 
----------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.8.15

நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா அகலத்தைச் சொன்னீங்களா?


நகைச்சுவை: பெண்ணோட உயரத்தைச் சொன்னீங்க, ஆனா 
அகலத்தைச் சொன்னீங்களா?

1.
மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க!
கணவன்: ஏன் .. .. ?
மனைவி: அதைப் பார்த்துட்டுத் தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
----------------------------------------
2.
டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்குன்னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
------------------------------------------
3.
என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
-----------------------------------------
4.
தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படிச் செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்ன்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்ன்னு சொன்னீங்களா..?
------------------------------------------
5.
நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
---------------------------------------------
6.
கணவன் ; சாமி கிட்ட என்னம்மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும்னு வேண்டிகிட்டேன்ங்க... நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்னு வேண்டிகிட்டேன்...
-----------------------------------------------
7.
உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணனும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
-------------------------------------------------
8.
டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்...
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
-------------------------------------------------
9.
பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்கு கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
--------------------------------------------
10.
என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
-------------------------------------------
11.
எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
--------------------------------------------------
12
நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
---------------------------------------------------
17.
பல்லு எப்படி விழுந்திச்சு?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
-----------------------------------------------------
18. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
------------------------------------------------------------------
19
டாக்டர்-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
-----------------------------------------------------------
20
வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
------------------------------------------------------
21.
நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
-----------------------------------------------------
22.
நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதர்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
-------------------------------------------------------------------
23.
மனைவி : என்னங்க செத்துட்டா சொர்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
--------------------------------------
இவற்றில் எது நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.8.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!



மாணவக் கண்மணிகள், மற்றும் பதிவுலகத் தோழர்கள் 
அனைவருக்கும்  இனிய சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.8.15

கண்டிஷன்ஸ் அப்ளைஸ் கடவுளிடமும் உண்டு!

கண்டிஷன்ஸ் அப்ளைஸ் கடவுளிடமும் உண்டு!

நிறுவனங்களின் விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். நிறைய சலுகைகளை அறிவித்துவிட்டு உடன் கண்டிஷன்ஸ் உண்டு (conditions may apply)  என்று போட்டிருப்பார்கள். அதுபோல வேறு எதெதற்கு எல்லாம் என்று தோராயமாகத் தொகுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளது

படித்துப் பாருங்கள்
************************
🐊👗 Life is similar to Boxing Game.
Defeat is not Declared when U Fall Down.
It is Declared when U Refuse to Get Up.
************************
🐊👗 Always WRONG PERSONS Teach the RIGHT LESSONS in Life.
That is called LIFE EXPERIENCE.
*************************
🐊👗 Everything is Valuable only at 2 Times:
1: Before Getting It.
&
2: After Losing It.
************************
🐊👗 Two Places are most Valuable in the World:
1: The NICEST Place is to be in
Someone's Thoughts.
&
2: The SAFEST Place is to be in
Someone's Prayers.
************************
🐊👗 'FEAR' has 2 Meanings:
1: Forget Everything & Run.
&
2: Face Everything & Rejoice.
Choice is Ours.
************************
🐊👗 'EGO' is the only Requirement
to Destroy any Relationship.
Be a Bigger Person,
Skip the 'E' & let it 'GO'.
************************
🐊👗 As long as We do not Forgive People who have Hurt Us,
They Occupy a 'RENT-FREE-SPACE'
in our Mind.
************************
🐊👗 I asked GOD: If everything is already Written in Destiny, then
why should I Pray ?
GOD Smiled & said: I have also Written 'CONDITIONS APPLY'.
************************
🐊👗 Empty Pockets Teach Millons of Things in Life. BUT Full Pockets
Spoil Us in Million Ways.
************************
🐊👗 TRUST is like a Sticker.
Once it is Removed, it may Stick again, but not as Strong as it Holds
when U First Applied.
************************
🐊👗 Never Win People with Arguments. Rather Defeat Them with Ur
Smile.
Because People who always Wish to
Argue with U, cannot Bear Ur SILENCE.
************************
🐊👗 'MEMORIES' are always Special.
Sometimes, We Laugh by
Remembering the days We Cried.
&
Sometimes, We Cry by
Remembering the days We Laughed.
Thats LIFE.
************************
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.8.15

நெஞ்சைத் தொட்ட பதில்!

நெஞ்சைத் தொட்ட பதில்!

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரைவிற்றுகொண்டு செல்கிறாள் ஒருபெண். வீட்டு வாசலில் மகனோடுஅமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளைக் கூப்பிடுகிறாள்.

" ஒரு கட்டு கீரை என்ன விலை....?"

" ஓரணாம்மா"

"ஓரணாவா....? அரையணாதான்தருவேன். அரையணான்னு சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா".

" அதெல்லாம் முடியாது.அரையணாதான்". பேரம் பேசுகிறாள் அந்தத் தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்தபெண் கூடையை எடுத்துக்கொண்டுசிறிது தூரம் சென்றுவிட்டு,
"மேல காலணா போட்டு கொடுங்கம்மா"என்கிறாள்

"முடியவே முடியாது. கட்டுக்குஅரையணாதான் தருவேன்"... என்று தாய் பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு "சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையைக் கொடுத்துவிட்டு ரெண்டணா காசை
வாங்கிக் கொண்டு கூடையை தூக்கிதலையில் வைக்க போகும் போது கீழேசரிந்தாள்.

"என்னடியம்மா காலை ஏதும் சாப்பிடலையா...?" என்று அந்த தாய் கேட்க,

"இல்லம்மா போய்தான் கஞ்சி காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்றுகூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லிகளையும், அவற்றிற்குத் தேவையான சட்னியையும் வைத்துக் கொண்டு வந்தாள். "
”இந்தா சாப்பிட்டுவிட்டுப்  போ" என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும்பார்த்துகொண்டிருந்த அந்தத் தாயினுடைய மகன்" ஏம்மா அரையணாவுக்கு பேரம் பேசுனீங்க..ஒரு இட்லி அரையணான்னு வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு ரெண்டரையணா வருதும்மா.....? என்றுகேட்க

அதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்ககூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்ககூடாதுப்பா" என்று நெத்தியடியாகக் கூறினாள்.

நெஞ்சைத் தொட்ட அந்தப் பதில், அன்று முழுவதும் மனதையே சுற்றி வந்தது
========================================================================
படித்ததில் பிடித்தது

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.8.15

காலை இளம் கதிரில் என்ன தெரியும்?

காலை இளம் கதிரில் என்ன தெரியும்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------
காலை இளம் கதிரில் உந்தன் காட்சி தெரியுது
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

மாலை வெயில் மஞ்சளிலே உன் மேனி மின்னுது
அந்த கோலம் கண்டு உள்ளம் கொள்ளை உறுதிகொள்ளுது 
குமரா உனை மனம் நாடுது கூத்தாடுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

சோலை மலர்க் கூட்டம் உந்தன் தோற்றம் கொள்ளுது
சிவ சுப்ரமண்ய சுப்ரமண்யம் என்று சொல்லுது 
சுகமாகுது ... குக நாமமே ... சொல்லாகுது
முருகா ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
சக்தி வேல் சக்தி வேல் என்றே சேவல் கூவுது
சக்தி வேல் வேல் சக்தி வேல் வேல் என்றே சேவல் கூவுது

வேலை ஏந்தும் வீரம் வெற்பு சிகரமாகுது
வெற்றி வேல் சக்தி வேலா என்றே சேவல் கூவுது
வினை ஓடுது வடி வேலது துணையாகுது
ஆகுது ...
(காலை இளம்)

கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
முருகா ...
(காலை இளம்)

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம்
முருகா ... முருகா ...
பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
முருகா ...

பார்க்கின்ற காட்சியெல்லாம் நீயாகவே
நான் பாடுகின்ற பாட்டெல்லாம் நினக்காகவே
உருவாகுது திருவாகுது குருநாதனே
முருகா ...
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
கலையாதது நிலையாகுது கதியாகுது
(காலை இளம்)

நீல ...
கடலலையில் மயில் எழுந்து நடனம் புரியுது
குருநாதனே முருகா 

பாடலைப் பாடிப் பரவசப் படுத்தியவர்: பத்மஸ்ரீ சீர்காழி கோவிந்தராஜன்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.8.15

நகைச்சுவை: அப்படிப் போடு ராசா!


நகைச்சுவை: அப்படிப் போடு ராசா!

1
மனைவி: கண்ணாளா, முதன் முதலில் என்னைப் பார்த்தபோது, அதாவது பெண் பார்க்க வந்தபோது, நான் என்ன கலர் சேலை கட்டிக்கொண்டிருந்தேன் என்பது உங்கள் நினைவில் இருக்கிறதா?

கணவன்: இல்லை!

மனைவி: என் மேல் உங்களுக்கு அக்கறையோ, அன்போ இல்லை!

கணவன்: அப்படியில்லை ராசாத்தி. தண்டவாளத்தில் தலையைக் கொடுக்கப்போகிறவன், வரப்போவது, சதாப்தியா அல்லது ராஜ்தானி எக்ஸ்பிரஸ்ஸா என்று பார்ப்பானா? நீயே சொல்!
===========================================================
2
குஜராத்தில், ஒரு தொழில் அதிபரிடம், கேட்ட கேள்வியும் அவர் அளித்த பதிலும்!

கேள்வி: உங்கள் ஊழியர்கள் நேரம் தவறாமல் சரியான நேரத்திற்கு வருவதற்கு நீங்கள் கையாளும் உத்தி என்ன?

புன்னகையுடன் அவர் சொன்ன பதில்: "சிம்ப்பிள். என்னிடம் 30 அதிகாரிகள் இருக்கிறார்கள். 25 கார் நிறுத்தங்களில் மட்டுமே கட்டணம் இல்லை. மீதி உள்ள ஐந்திற்கும் கட்டணம் உண்டு!"

("It's simple; I have 30 Employees and 25 free Parking spaces & 5  paid...!)
===========================================================
3
வங்கி ஒன்றில், அதன் மேலாலருக்கும், வாடிக்கையாளருக்கும் இடையே நடந்த உரையாடல்:

Customer : நான் இன்னைக்கு பாங்க்ல Chequeஐ டெபொசிட் செய்தால், அது எப்ப sir clear ஆகும்??

பேங்க் மேனேஜர்: 3 நாள் ஆகும்

Customer : என்னோட Cheque எதிர்ல இருக்கற Bankற்கு உடையதுதானே...... ரெண்டு பேங்கும் எதிர் எதிர்லதான் இருக்கு. பின்ன எதுக்கு 3 நாள் ஆகும்?

Bank Manager : சார், Procedure ன்னு ஒன்னு follow பண்ணனும் இல்ல. யோசிச்சு பாருங்க . நீங்க வெளியில போறீங்க. வழியில ஒரு சுடுகாடு வருது. சுடுகாடு முன்னாடி திடீர்ன்னு நீங்க செத்துபோயிட்டீங்க. அப்டியே உங்கள எரிச்சிடுவாங்களா இல்லை வீட்டுக்கு எடுத்துகிட்டுப் போயி சாங்கியம் செஞ்சி முடித்த பிறகு சுடுகாட்டுக்கு எடுத்துக்கிட்டு போவாங்களா ???

Customer ????"
============================================================
இந்த மூன்றில் எது நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
=====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9.8.15

Half Quiz பாதிப் புதிர்: அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!


Half Quiz பாதிப் புதிர்: அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!

Quiz 93  பதில் 

9.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்னையோடு அறுசுவை போய்விடும், தந்தையோடு கல்வி
போய்விடும் என்பது முது மொழி. ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகருக்கு
அந்த இரண்டில் ஒன்று சின்ன வயதிலேயே போய்விட்டது. எது போனது என்பதைக் கணித்து ஒற்றைவரியில் காரணத்துடன் சொல்லுங்கள்.
அதாவது ஜாதகர் தந்தையைப் பறிகொடுத்தவரா? அல்லது தாயைப் பறிகொடுத்தவரா? என்பதை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகர் அவருடைய தந்தையைப் பறிகொடுத்தவர்.

ஜாதகத்தைப் பாருங்கள்:

தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி 6ல். போராட வேண்டிய ஜாதகம்
தந்தைக்குக் காரகன் சூரியன் லக்கினத்தில் இருந்து 8ல். உடன் ராகு மற்றும் ஆறாம் வீட்டுக்காரனான சுக்கிரன். ஒன்பதாம் வீட்டிலிருந்து பார்த்தால்
அந்த வீட்டுக்குரிய சூரியன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். ஆகவே தந்தையில்லாமல் வளரவேண்டிய சூழ்நிலை.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------
கேள்வி சிம்ப்பிளான கேள்வி. ஆகவே பலரும் சரியான பதிலைக் காரணத்துடன் எழுதியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும்
பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும்
பாராட்டுக்கள். கலந்து கொண்டவர்கள் 38 பேர்கள் அவர்களில்
33 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்!
நல்ல எண்ணிக்கைதான்!

அன்புடன்
வாத்தியார்
===================================================================
1
///////Blogger Dallas Kannan said...
Respected Sir
Father
9th lord and pitrukarahan sun is in 12 place from its house with 6th lord and Rahu and Sani's look and 8th lords look.
Friday, August 07, 2015 9:08:00 AM //////
---------------------------------------------
2
///////Blogger slmsanuma said...
Karagan Suriyan is at 12th place to his house (Simma Rasi) with Raghu. Simma Rasi is also the bavagam for Father for this native. Karagah and

Bhavagathipathi is at 8th place to Laknam. These are the reasons for the loss of the father of the native in illness.
Friday, August 07, 2015 9:29:00 AM //////
-------------------------------------------
3
//////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.93
தந்தை.
காரணம்: சூரியன் எட்டில் மற்றும் கேது செவ்வாயின் பிடியில் பாபகர்தரி யோகத்தில்.
மு.சாந்தி.
Friday, August 07, 2015 9:41:00 AM //////
-------------------------------------------
4
///////Blogger RameshG Samy said...
He had lost his father because of the placement of 'Sun' and 'Raku' in the 8th house. Also, I think, it has the effect of Kala-Sarpa-Dhosam.
Friday, August 07, 2015 9:43:00 AM //////
-----------------------------------------
5
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்..........
அன்பருக்கு 9ஆம்அதிபதி 8ல்! 9க்கு12ல்!
அங்கு வில்லன்சுக்கிரன்+ கேடிராகுவும் சேர்ந்து அப்பனைபோட்டு விட்டார்கள்.......
கொடுப்பினையில்லாத ஜாதகம்
bye.........
Friday, August 07, 2015 10:08:00 AM //////
----------------------------------------
6
//////Blogger valli rajan said...
Dear Guruji,
Native would have lost is father.
Reason: 1. 9th Lord is 12th from its house
2. Sun is in 8th house with 6th lord with rahu.
Friday, August 07, 2015 10:48:00 AM ///////
---------------------------------------------
7
//////Blogger Govindasamy said...
ஜாதகர் தந்தையை பறிகொடுத்தவர்.
தகப்பனுக்குரியவனும் ஒன்பதாம் வீட்டுக்குரியவனுமாகிய சூரியன் லக்கினத்திற்கு எட்டில் மறைவு. அது மட்டுமல்ல சூரியன் தனது வீட்டிலிருந்து 12ம்

இடத்தில் இருப்பதும் இழப்பிற்கு காரனம். ஆறுக்குரிய சுக்கிரனும் சூரியனுடன் கூட்டு அதுவும் கேதுவின் பார்வையில்.
ஜாதகர் சந்திர தசை சூரிய புத்தியில் தந்தையை இழந்திருப்பார்.
Friday, August 07, 2015 10:55:00 AM ///////
----------------------------------------------
8
//////Blogger Ravichandran said...
Ayya,
This person would have lost his father. The reasons are: 9th house owner(Sun) is sitting in 12th house from 9th house. Basically 9th house

denotes about father. Moreover Sun is karaka for Father. Sun is having below 3 parals in astavargam. His father would have died either Ketu

Puthi or Sun Puthi of Moon dasa. His father would have died during Tamil Ani month.
Your Student,
Trichy Ravi
Friday, August 07, 2015 11:44:00 AM //////
----------------------------------------------
9
//////Blogger Goutham Mylsamy said...
Loss of Father indicated
9th lord in 8th house ,12th of 9th house and 9th lord and Karaka sun with 6th lord sukran and rahu (poisonous combination )in 8th house
Friday, August 07, 2015 11:52:00 AM /////
-------------------------------------------------
10
//////Blogger Gpbarathi P said...
Due to ninth place of sun in eighth place along with rahu and six the place lord sukran
So the native has lost his father in his earlier age.
Nellai padmanaban
Friday, August 07, 2015 1:24:00 PM //////
------------------------------------------------
11
/////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 93 இற்கான பதில் !!!
ஜாதகர் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி குரு 6இல் பகை வீட்டில். ஜாதகர் தனது 8ஆம் வயதில்

தனது தந்தையை பறிகொடுத்தவர். 9ஆம் அதிபதி அதன் 12 ஆம் வீட்டில் (எட்டில்) வர்கோதமம். உடன் வில்லன் ஆறாமதிபதி சுக்கிரன் மற்றும் ராகு.

9ஆம் வீட்டின் பரல்கள் வெறும் 24 மட்டுமே. 8ஆம் வயதில் நடந்த 8ஆம் அதிபதி சந்திர திசை ஆறாமதிபதி சுக்கிரன் புத்தியில் தந்தையை

பறிகொடுக்க நேர்ந்து இருக்கலாம்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, August 07, 2015 1:48:00 PM //////
-----------------------------------------------
12
/////Blogger Arul said...
9ம் அதிபதி மற்றும் தந்தை காரகன் சூரியன் 9க்கு 12மிட‌மான 8ல் மறைந்து விட்டார்.அவருடன் பகைவர்கள் ராகு மற்றும் சுக்கிரன். சனியின் பார்வை

8மிடத்துக்கு உள்ளது. 8மிட அதிபதியின் பார்வை 8க்கு உள்ளது. தகப்பனார் இறந்திருப்பார்.
4மிட காரகன் சந்திரனுக்கு 4மிட அதிபதி குருவின் பார்வை உள்ளது.தாய்க்கு சேதமில்லை.
சரியா ஐயா?
Friday, August 07, 2015 2:06:00 PM //////
-----------------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
ஒன்பதாம் இடத்தானும், தந்தைக்கான கார‌கனுமான சூரிய பகவான் எட்டாம் இடத்திலும்,தன் வீட்டிற்கு பனிரண்டாம் இடத்திலும் மறைந்ததாலும்

ராகுவால் பாதிக்கப்படதாலும், ஆறாம் இடத்துக்காரனான சுக்கிரனுடன் சேர்ந்ததாலும்,
இழந்தது தந்தையையே என்று கணிக்கிறேன்.
kmrk1949@gmail.com
Friday, August 07, 2015 2:15:00 PM //////
------------------------------------------------
14
/////Blogger VM. Soosai Antony said...
குருவே வணக்கம்,
எனது பதில்: தன் தந்தையை இழந்திருப்பார். பாக்யாதிபதியும், தந்தைக்கான (காரகன்) அதிபதி 8ல் மறைந்தது, உடன் வில்லன் 6க்கு உடைய

சுக்ரன் + ராகு. 8ம் அதிபதியின் பார்வையும்.
கொஞ்சமாவது தேறியிருக்கேனா?
Friday, August 07, 2015 4:16:00 PM //////
----------------------------------------
15
///////Blogger S Balaji said...
ஐயா,
தந்தைக்குரியவன் மற்றும், தந்தைக்கான ஒன்பதாம் வீட்டின் அதிபதி சூரியன் லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்திலும் மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு

12 லும் அமர்ந்து மறைந்து விட்டான். எனவே ஜாதகர் தந்தையை இழந்து இருப்பார்.
நன்றி
Friday, August 07, 2015 4:24:00 PM /////
---------------------------------------------
16
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 93 ற்கான பதில்,
ஜாதகர் தந்தையை இழந்தார்.
ஜாதகர் பிறந்த நேரம்: 17July2000 18:07
தனுசு லக்கினம், தந்தையை குறிக்கும் 9ம் வீட்டு அதிபதி சூரியன் 8ல் ராகுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டார், மேலும் 8ம் இடம் மீது 6ல் உள்ள சனியின்

பார்வை. முதலில் தந்தையை இழந்தார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, August 07, 2015 5:27:00 PM //////
--------------------------------------------
17
///////Blogger ponnusamy gowda said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் க்விஸ் 93 க்கு பதில்.
ஜாதகருக்கு தந்தையோடு கல்வி போனது.
17 ஜூலை 2000 அன்று மாலை 6-10 மணிக்கு பிறந்தவர்.
தனுசு லக்கினம்.லக்கினாதிபதி குரு 6ல் அமர்வு.கூடவே ஆயுள்காரகன் சனியும் அமர்ந்து தன் மூன்றாம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் வீட்டின்

மேல் வைத்து கெடுத்துவிட்டார்.
9ம் அதிபதி சூரியன் தந்தைக்கும் காரகன் 8 ம் வீட்டில்.தந்தை காரகன் சூரியன் தன் வீட்டிற்க்கு 12மிடமான விரயஸ்தானத்தில். 2006ல் நடந்த

சந்திரன் தசை கேது புத்தியில் (கேது உத்திராடம் நட்சத்திரத்தின் முடிவில்)தந்தையை இழந்திருப்பார்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, August 07, 2015 7:04:00 PM //////
----------------------------------------------
18
////Blogger Thangaraj said...
sooriyan is in 8th house and it is 12th house of 9th house owner sooriya ie., referring its father- hence he should lost his father.
Friday, August 07, 2015 7:09:00 PM //////
----------------------------------------------
19
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The native has lost his Father.
9th lord Sun in 8th place (12th place from 9th place) with Rahu and aspected by Saturn.
Thanking you,
C. Jeevanantham.
Friday, August 07, 2015 7:17:00 PM /////
-----------------------------------------------
20
/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா,
9க்குடையவன் சூரியன் அதற்கு 12ல் மற்றும் லக்னத்திற்கு 8ல் மறைந்ததால் தந்தையை இழந்தவர். சனி பார்வை,ராகு சேர்க்கை மற்றும்

6க்குடையவனும் பாதகாதிபதியின் இணைவும் சூரியன் பெற்றுள்ளார்.
எம்.திருமால்
பவளத்தானூர்
Friday, August 07, 2015 8:02:00 PM //////
-------------------------------------------------
21
/////Blogger trmprakaash@gmail.com said...
ayya, jaadhagar siru vayadhil thandhaiyai izhindhavar. Kaaarnam, thandhaikkaanaa graham, Suriyan 9-irkku 12il. Matrum 6m athibathi sukkiranudan

matrum rahuvadan. Adhumattumallamal, Saniyin neradi paarvaiyil Surian. 9-m veettirkku, endha subha graha paaarvaiyum illai. Thanks.

Mu.Prakaash.
Friday, August 07, 2015 8:29:00 PM //////
-----------------------------------------
22
/////Blogger MVK said...
குயிச் 93: பாதிப்புதிர்
அய்யா,
கல்விக்கதிபதி புதன் பாதகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை .
மேலும் தந்தையை சுட்டிக்கட்டும் 9ம் அதிபதி சூரியன் 9க்கு 12ல் மறைவு. யெனவெ, தந்தையோடு கல்வி போயிட்ரு.
அன்பன்
யெம்.வி. கிருட்டினமூர்த்தி
Friday, August 07, 2015 9:11:00 PM /////
-------------------------------------------
23
/////Blogger thozhar pandian said...
ஜாதகர் சிறு வயதிலேயே தந்தையை பறி கொடுத்தவர். 9ம் வீட்டு அதிபரும் தந்தை காரகருமான சூரியன் 9ம் வீட்டுக்கு 12ல் அதாவது 8ம் வீட்டில்

இருக்கிறார். உடன் இராகு. இலக்கினாதிபதியும் 4ம் வீட்டு அதிபருமான வியாழன் 6ம் வீட்டில் இருந்தாலும் அவரது பார்வையில் மாத்ரு கிரகமான

சந்திரன் இருப்பதாலும் சந்திரன் தனது பார்வையில் தனது வீடான கடகத்தை வைத்திருப்பதாலும் தாயை இழந்திருக்க மாட்டார்.
Friday, August 07, 2015 11:04:00 PM /////
---------------------------------------------
24
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ஜாதகர் சிறு வயதிலேயே தந்தையை இழந்திருப்பார். காரணங்கள், ஒன்பதுக்கு டையவனும் காரகனுமாகிய சூரியன் லக்னத்திற்கு எட்டில் அமர்ந்து

ராகுவுடன் கிரகண தோஷத்தில் சிக்கி சனியின் பார்வையிலும் ஆறாம் அதிபதி சுக்கிரனின் சேர்க்கையிலும் வலுவிழந்தார். இந்த துயரம் சந்திர தசை

சுக்கிர புக்தியில் நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்
Friday, August 07, 2015 11:12:00 PM //////
----------------------------------------
25
/////Blogger Siva Radjane said...
ஜாதகர் தந்தையை இழந்தவர்.
தனுசு லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும்,தந்தைக்கு காரகனுமான சூரியன் ,லக்கினத்திற்கு 8-ம் இடத்தில், 9-க்கு 12-ம் இடமான கடகத்தில்

மறைவு.மேலும் 8-ம் ராசியாதிபதியான ‘சந்திரனின் நேரடி பார்வை மற்றும் ‘சனி’யின் 3-ம் பார்வை.சூரியனுடன் பகை கிரகங்களான ராகு,சுக்கிரன்

இணைவு. ஜாதகர் சந்திர திசை, ராகு புத்தியில் தந்தையை இழந்திருப்பார்.
Saturday, August 08, 2015 1:09:00 AM ///////
-------------------------------------------
26
/////Blogger selvaspk said...
If one of them is gone, then its Dad.
Reason: 1) Sun astamanam with Raghu,Saturn special 3rd aspect with Attamathipathi Moons direct aspect.
2) Lords of father karaka 1St and 9th asthamam, being Sun comes as 9th confirm the karaka dosha.
He should either lost in accident but if his chart is strong, he is separated from family. Either way karaka for father is damaged.
3)Moon in second house with 5/9 on Guru indicates mother is taking care of family as everything being Guru, father, source of income for family.
Saturday, August 08, 2015 2:34:00 AM /////
--------------------------------------------
27
////Blogger SSS CONSTRUCTION said...
SIR, THE PERSON WAS LOST IS FATHER IN YEARLY AGE BECAUSE THE 9TH LORD THAT IS SUN IS IN 8TH PLACE. 9THE LORD THAT IS SUN IS

IN WITH RAGU THAT INDICATES HE LOST HIS FATHER.
Saturday, August 08, 2015 8:54:00 AM //////
----------------------------------------------
28
////Blogger Sundararajan Rajaraghavan said...
Respected sir,
Father would have lost . Because 9 th planet sun is in 12th of that. It is also in 8th place combined with Rahu and is also aspected by Saturn.

Moreover sun with 2 parals in cancer. R.Sundararajan.
Saturday, August 08, 2015 9:36:00 AM /////
--------------------------------------------
29
/////Blogger bg said...
Dear Sir,
Ninth lord in eighth house in conjunction with Rahu .
Not good for father.
He may lost his father at the early stage.
Additional facts
1. Venus lord of 6 also in eighth house and also aspected by moon ( eighth lord)
Regards
Balamurugan
Saturday, August 08, 2015 11:10:00 AM /////
----------------------------------------------------
30
/////Blogger மகேஸ் said...
எட்டாம் இடததில் தந்தைக்குரிய சூரியன். ஆகவே ஜாதகன் / கி தந்தையை இழந்தவர்
Saturday, August 08, 2015 11:13:00 AM//////
-------------------------------------------------
31
//////Blogger Anpalagan N said...
தந்தை. சூரியன் ராகுவுடன் எட்டில் (ஒன்பதிற்கு பன்னிரெண்டில்)
Saturday, August 08, 2015 3:06:00 PM /////
------------------------------------------------
32
//////Blogger Sakthivel Duraiswamy said...
வணக்கம் ஐயா,
இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும் 4 க்கும் அதிபதி குரு ,குடும்ப ஸ்தானாதிபதியும் தைரியஸ்தானாதிபதியுமான சனி சேர்க்கை பெற்று 6ல்.குடும்பம்

வறுமையில் தவழும். காரணம் சந்திர தசை முடிவில் தகப்பனை இழந்த அமைப்பால் .தாயின் மன நிலை பாதிக்கப்பட்டது .தாய் வழி உறவினர்கள்

மூலம் ஏதோ சிறிது உதவி கிடைக்கும்.தந்தை வழி உறவினர்கள் ஆகாது. பலன் இல்லை.
தகப்பனார் தற்கொலை முயற்சியில் மரணம் எய்திருப்பார்.காரணம் 9ககு உரியவன் சூரியன் 8ல் மறைந்து உடன் 6க்கு உரியவன் சுக்கிரன் இணைவு

உடன் ராகு.
நன்றி. .
Saturday, August 08, 2015 3:26:00 PM /////
--------------------------------------------------
33
/////Blogger Dr Muralisrinivasan Natamai Subramanian said...
அன்புள்ள வகுப்பறை ஆசிரியருக்கு,
தந்தையோடு கல்வி போகும் என்பதை இந்த சாதகம் உணர்த்துகிறது. தந்தை கிரகம் சூரியன் ராகுவுடன் இணைந்தும் இரண்டாம் இடத்தில்

சந்திரனுடன் கேதுவும் இருப்பது சாதகரின் சந்திரனின் தசையில் சூரிய புத்தியில் தந்தையை இழந்து கல்வியையும் இழப்பார்.
நமசிவாய
Saturday, August 08, 2015 8:53:00 PM ///////
=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

7.8.15

Half Quiz: பாதி புதிர்: அன்னையோடு அறுசுவை போகும், தந்தையோடு கல்வி போகும்!


Half Quiz: பாதி புதிர்: அன்னையோடு அறுசுவை போகும், 
தந்தையோடு கல்வி போகும்!

Quiz.93

7.8.2015

அன்னையோடு அறுசுவை போய்விடும், தந்தையோடு கல்வி போய்விடும் என்பது முது மொழி. கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகருக்கு
அந்த இரண்டில் ஒன்று சின்ன வயதிலேயே போய்விட்டது. எது போனது என்பதைக் கணித்து ஒற்றைவரியில் காரணத்துடன் சொல்லுங்கள்.
அதாவது ஜாதகர் தந்தையைப் பறிகொடுத்தவரா? அல்லது தாயைப் பறிகொடுத்தவரா? என்பதை எழுதுங்கள்.



பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரே வரியில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6.8.15

கவிதை: புதிய பாப்பா பாட்டு


கவிதை: புதிய பாப்பா பாட்டு

"ஓடி விளையாடு பாப்பா
நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா
ஒரு குழந்தையை வையாதே பாப்பா."

என்று அன்று பாரதியார் பாட்டு எழுதினார்.
இன்றைய நிலைமை என்ன?
தொடர்ந்து பாடியுங்கள்:

ஓரமா விளையாடு பாப்பா - நீ 
ஒண்டிய விளையாடனும் பாப்பா
வீட்டுக்குள்ள விளையாடனும் பாப்பா- நீ
வெளியவே வரக் கூடாது பாப்பா,

காலை எழுந்தவுடன் ஸ்கூலு - பின்பு
கண்ணை கட்டும் கம்ப்யூட்டர் கிளாசு,
மாலை முழுவதும் டியுசன் என்று - நீ
வழக்கப்படுத்தி கொள்ளு பாப்பா,

எல்லா விளையாட்டும் விளையாடனும் பாப்பா
அதை மொபைல மட்டும் விளையாடனும் பாப்பா
சாதிகள் இருக்குதடி பாப்பா - அது
பணக்காரன் சாதி, ஏழை சாதி பாப்பா

பணத்தை மட்டும் சம்பாரிக்கனும் பாப்பா - அதை
நீ மட்டும் வச்சுகணும் பாப்பா
அன்பு எல்லாம் எதுக்குடி பாப்பா - நீ
ஆதாயம் வருதான்னு பாருடி பாப்பா
==========================================
2
பணக்காரனும் கஞ்சி குடிக்கிறான் ;
பரம ஏழையும்  கஞ்சி  குடிக்கிறான்.
என்ன... அது  ஓட்ஸ் கஞ்சி ;
இது ஓல்டு (பழைய) கஞ்சி!

சின்ன  வயசில  சில்லறைக்  காசு இருந்தா சாக்லெட் வாங்கித்
தின்போம். இப்ப சில்லறை இல்லைன்னா  சாக்லெட் திங்க
வேண்டியதா  இருக்கு!

விழுந்த மலர்களையும் உதிர்ந்த இலைகளையும்  இயற்கை
என்று  கடக்கிறேன். ஆனால், நாலு முடி விழுந்தால்  கவலை
வருகிறது.

சதுரங்கத்தில் கூட' மந்திரிகள் ' நேர்வழியில்  பயணிப்பதில்லை.

தலையில் கொஞ்சமாவது எண்ணெய்  தேயுடான்னு அம்மா
சொல்லும்போது  முடியாதுன்னு  சொன்னவன்  எல்லாம்
இப்ப எர்வாமாட்டின் (Ervamatin oil) வாங்கி  தேச்சுகிட்டு இருக்கான்.

எஞ்சினீயரிங் பைனல் இயர் பசங்களுக்கு  கேம்பஸ்
இண்டர்வியூவாம். சம்பளம் ஏழாயிரமாம் .
எல்கேஜிக்கு எண்பதாயிரம்  கட்டும்  அப்பாக்களே  கேட்டுக்கோங்க!
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.8.15

நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா?


நகைச்சுவை: இன்றைக்கும் இட்லியா?

அதாவது, இன்றைக்கும் நகைச்சுவையா? ஆமாம் சாமி ஆமாம்!
---------------------------------------------------------------------
சர்வதேச அறிவியல் மாநாட்டில் ஐந்து நாடுகளை சேர்ந்த மாணவர்களிடத்தில் கேட்கப்பட்ட கேள்வி ..

வெப்பமாக்கப் படும்போது திரவ நிலையில் இருந்து திட நிலைக்கு மாறும் பொருள் எது ..?

🇨🇳 சீனா : வாய்ப்பே இல்லை அது போன்ற கேள்விக்கு எந்த புத்தகத்திலும் பதில் இல்லை.

🇬🇧 லண்டன் : எந்த இணைய தளத்திலும் பதில் இல்லை.

🇫🇷 பிரான்ஸ் : அர்த்தமற்ற கேள்வி.

🇺🇸 அமெரிக்கா : பதில் தெரியாது.

🇮🇳 இந்தியா : லூசு பசங்களா இதுக்கூடவா தெரியாது ?  " தோசை "  டா !!
--------------------------------------------------------------------------------------
2
A small argument between a couple turns violent.

Husband says: Don’t let the animal in me come out.
Wife replies: Who’s afraid of a mouse!!!            
-x-x-x-x-x-x-x-x-x-x-
If wife wants husband’s attention,  she just has to look sad & uncomfortable.
If husband wants wife’s attention, he just has to look comfortable & happy.            
-x-x-x-x-x-x-x-x-x-x- 
A Philosopher HUSBAND said:- Every WIFE is a ‘Mistress’ of her Husband…
“Miss” for first year & “Stress” for rest of the life…            
-x-x-x-x-x-x-x-x-x-x- 
Do you remember the tingling feeling when you took the decision to get married? That was common sense leaving your body.            
-x-x-x-x-x-x-x-x-x-x- 
Pappu: Dad, l got selected for a role in a play for annual day! 
Dad: What role are you playing? 
Pappu: A husband! 
Dad: Stupid, ask for a role with dialogues!            
-x-x-x-x-x-x-x-x-x-x- 
Man outside phone booth: “Excuse me you are holding phone since 29 minutes and you haven’t spoken a word”.
Man inside: “i am talking to my wife”           
 -x-x-x-x-x-x-x-x-x-x- 
A very intelligent girl was asked the meaning of marriage.. She said- “sacrificing the admiration of hundred guys, to face the criticism of one idiot”           
 -x-x-x-x-x-x-x-x
Position of a husband is just like a Split AC, No matter how loud he is outdoor, He is designed to remain silent indoor!            
-x-x-x-x-x-x-x-
The sweetest msg -
Husband to wife : U should learn to embrace ur mistakes…..
She hugged him immediately. ..… 
👏👏
Have a nice day!
-------------------------------------------------------
3
தமிழர்களின் பெயரை வைத்துதான் உலகமே இயங்குகிறது.!

Doctor -- வைத்தியநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist--கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்கியசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சைப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- சவுரிராஜன்
Beggar -- பிச்சை
Alcoholic -- மதுசூதனன்
Exhibitionist -- அம்பலவானன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால் ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகராஜன்
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எத்திராஜ்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருப்பதி
Female Spin Bowler -- திரிபுரசுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்த சாரதி...

எப்படி சாமிகளா உள்ளது?
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4.8.15

முதல் வேலை எது?


முதல் வேலை எது?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப்பெருமானின் பாடல் வரிகள் அலங்கரிக்கின்றன.
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
========================================================
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே
காலமும் துணையை நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுரமும்
மான்மகள் வள்ளி மறுபுரமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
முருகா முருகா முருகா.

சூலமங்கலம் சகோதரிகள் - முருகா உனக்கு புகழ் மாலை
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.8.15

நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?


நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?

படித்துப் பாருங்கள். மொழிமாற்றம் செய்தால் ஒரிஜினலில் உள்ள கிக் மிஸ்ஸாகிவிடும். ஆகவே அப்படியே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
Once a Bright and Intelligent young man went for an IAS (Indian Civil Service) interview. 

He was asked -

Q 1. When did India get Independence?

He answered - The efforts started long back; but could succeed in 1947.

Q 2. Who were the persons, who played important role in this fight for Independence?

Answer - There are many people, who were involved and contributed in this. If I give a name, it will be injustice to others.

Q 3. Do you think, Corruption is the greatest enemy of the country?

Answer - A committee is investigating in this matter. I can give a correct reply to this only after seeing the report.

The Interview Board was impressed by his original ideas. They asked him to wait outside; but also advised him not to reveal the questions, as they may ask the same questions to other candidates also.

When the young man went out of the room, Sardar inquired about the questions asked. The young man said that he had promised the interview board not to disclose the questions.

But, Sardar found a way out. "Tell me the answer you gave."

The young man, thought it to be okay, as he was not going back on his words of "not disclosing the QUESTIONS". So he gave him the three answer which Sardar quickly learnt by heart.

When Sardar went in for interview, this is what happened.

Q 1. When were you born?

Sardar:- The efforts started long back, but could succeed in 1947.

Interviewers got confused...they asked next question.

Q 2. What is your father's name?

Sardar :- There are many people, who were involved and contributed in this. If I give a name, it will be injustice to others.

The board members were shocked at the reply..they said.

Q 3. Are you mad?

Sardar :- A committee is investigating in this matter. I can give a correct reply to this only after seeing the report.
===================================================
2
கணவன், மனைவி நகைச்சுவை;  சிரிக்க மட்டும்:

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!!

கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

மனைவி: ???
xxxxxxxxxxxxzxxx
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நான்தானே

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம்  தெரியும்

மனைவி:???
xxxxxxxxxxxxzxxx

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

மனைவி:????
xxxxxxxxxxxxzxxx
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே

கணவன்:????
xxxxxxxxxxxxzxxx
ஒருவன்:  "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

மேனேஜர் :"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
xxxxxxxxxxxxzxxx
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

ஜோதிடர்: ????
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!