மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.14

நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?



நகைச்சுவை: அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

30.9.2014
------------------------------------
1
Superb Family Introduction!!!

A man is introducing his family:

1. This is my wife..... Google Raani... if u ask one question she wud give many relevant and irrelevant answers ...!!!

2. This is our son.. Facebook Kumar... he makes sure that our personal matters reaches the whole colony...!!!

3. This is our daughter .... Twitter Kumari... whole colony folow her...!!!

4. This is my
Whatsapp mother- she buzzes all day commenting on everything..!

5. And i am, Orkut Kumar... i had become irrevelant..!!!
-------------------------------------
2
படித்துவிட்டு யாரும் கோபப் பட வேண்டாம். நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளுங்கள்:

உண்மையில் ஆண்கள் ரெம்ப.. நல்லவர்கள்..!

ஏனென்றால்....

1 ) சொத்தை எல்லாம் தன் மனைவி பெயரில் வாங்கி விட்டு.. LIC மட்டும் தன் பெயரில் போட்டுக் கொள்வதால்..!

2 )ஆயாவா இருந்தாலும்..ஆன்ட்டியா இருந்தாலும்.. எத்தனை பேர் வந்து லவ் சொன்னாலும்.. சட்டுனு கோப படாமல் செருப்பை கழற்றாமல்.. பிடிக்கலை'னா.. பிடிக்கலை'னு.. பொறுமையா சொல்லிடுவோம்..!

3 ) பஸ்ல.. ஆண்கள் சீட்டுல.. பொண்ணுங்க உட்கார்ந்தா.. கண்டக்டர் கிட்ட கம்ப்ளைன்ட் பண்ன மாட்டோம்..!

4 ) மனைவி எம்புட்டு அடிச்சாலும்.. எந்த ஒரு ஆணும் வெளியே காட்டிக்க மாட்டோம்..!

5 ) லிப்ட் கேட்கிற பொண்ணுங்களை நாங்க திட்டினதே கிடையாது..!

6 ) எந்த ஒரு அப்பனும்.. மகனை தனியாக அழைத்து.. " மருமகள் உன்னை நல்லா பாத்துகிறாளாப்பா.."
என்று சந்தேகமாய் கேட்டதில்லை..!

7 ) படித்து முடித்தவுடன்.. வெளிநாட்டு வாழ் பெண்களை மணமுடிக்க தேடுவதில்லை..!

8 ) சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது.. அடுத்த தோசைக்கு.. சீரியல் முடியும் வரை பொறுமையாக காத்திருப்போம்..!

9 ) காதலியை லூசு'னு.. விளையாட்டுக்கு கூட சொன்னது கிடையாது..!

10 ) தன் மொபைலுக்கு.. தானே ரீசார்ச் செய்து கொள்வோம்..!

11 ) முக்கியமா.. எங்க கிட்ட இருக்கும் எல்லா கெட்ட பழக்கங்களை.. ஒருத்திகாக நிப்பாட்டி விடுவோம்..!

12 ) பெண்கள் மிஸ்டு கால்.. கொடுத்தவுடன் மேனேஜர் கிட்ட.. திட்டு வாங்கினாலும் பரவாயில்லை'னு.. எந்த ஒரு வேலையாய் இருந்தாலும்.. உடனே ஃபோன் பண்ணி விடுவோம்..!

13 ) பெண்கள் சீரியல் பார்கிறதுக்காக இந்தியா.. பாகிஸ்தான் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை கூட பார்க்காமல்.. விட்டு கொடுத்து விடுவோம்..!

14 ) அமேசான் காடு வரை.. போய் பெண்களுக்கு முடி வளர.. மூலிகை எடுத்து வந்து தருவோம்..!

அதனால் தான் ஆண்கள் ரெம்ப நல்லவங்க..!!!!


அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?
an imagination
அமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திருமணமாகியிருந்தால்.....?

1 ஏங்க எங்க போறீங்க?

2 யார்கூடப் போறீங்க?

3 ஏன் போறீங்க?

4 எப்படி போறீங்க?

5 என்ன கண்டுபிடிக்கப போறீங்க?

6 ஏன் நீங்க மட்டும் போறீங்க?

7 நீங்க இல்லாம நான் என்ன பண்றது?

8 நானும் உங்ககூட வரட்டுமா?

9 எப்ப திரும்ப வருவீங்க?

10 எங்க சாப்பிடுவீஙக?

11 எனக்கு என்ன வாங்கிட்டு வருவீங்க?

12 இப்படி பண்ணணும்னு எனக்குத்தெரியாம எத்தனை நாளா பிளான் பண்ணிட்டுருந்தீங்க?

13 இன்னும் வேற என்னெல்லாம் பிளான் இருக்கு?

14 பதில் சொல்லுங்க ஏன்?
1
5 நான் எங்க அம்மா வீட்டுக்கு போகட்டுமா?

16 நீங்க என்னை அம்மா வீட்டுல கொண்டுபோய் விடுவீங்களா?

17 நான் இனி திரும்ப வரமாட்டேன்

18 ஏன் பேசாம இருக்கீங்க ?

19 என்ன தடுத்த நிறுத்த மாட்டீஙகளா?

20 இதுக்கு முன்னாடியும் எனக்குத்தெரியாம இந்த மாதிரி பண்ணிருக்கீங்களா?

21 எத்தின கேள்வி கேட்கிறன் ஏன் மரமண்டமாதிரி நிக்கிறீங்க ?

22 இப்ப பதில் சொல்றீங்களா இல்லையா???

இதுக்கு அப்புறமும் அவர் அமெரிக்காவைகண்டுபிடிக்க கிளம்பியிருப்பாருன்னு நினைக்கிறீங்களா????
================================================
3
இளமையில் வருவது நட்பு

வாலிப வயதில் வருவது காதல்

முதுமையில் வருவது பக்தி !

நட்பு, காதல், பக்தி இந்த மூன்றையும்
இணைக்கும் வகையில்
ஒரு சொற்றொடரை
சொல்லுங்கள் பார்ப்போம் ?

Bar லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா நட்பு !

Beach லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா காதல் !

கோயில்லே உட்கார்ந்து சுண்டல்
சாப்பிட்டா பக்தி !

சரியா நண்பர்களே ?
=====================================
4
Show to Create d Biggest Doubt in ur Wife's Mind 4 u ?

Just Suddenly send her SMS Saying..
"I Luv u too" (GAME OVER!)

When do you know u r in love ?

Ans : When you start searching for the cheapest mobile plan

What is the Diff b/w Young Age & Old Age?

Simple : In Young Age Phone Is Full Of Darlings Numbers.

In Old Age : Its Full of Doctors Number
"Why is Facebook such a hit ?
It works on the principle that
'People are more interested in others life than their own.

A Question Asked In A Talent Test: If You Are Married To 1 Of The Twin Sisters, How would You Recognize Your WIFE?
The Best Answer : Why d Hell Should I recognize ?

We Pronounce 22 as Twenty Two,
33 as Thirty Three,
44 as Forty Four,
55 as Fifty Five,
Why not 11 as Onety One?
Doubt By last bench association.

🕚🕚🕚🕚🕚🕚🕚🕚🕚🕚
What is the diff between "GHAZAL" & "LECTURE" ?
Every word spoken by the girlfriend is "GHAZAL"
and
Every word spoken by wife is "LECTURE"
===========================================
5
Difference Between HIMAMI & TSUNAMI ?

Pappu : HIMAMI is Face Wash, TSUNAMI is Total Wash.!

When you are in love,
Wonders happen.
But once you get married,
You wonder, what happened.

Philosophy of marriage :
At the beginning,
every wife treats her husband as GOD..
Later, somehow don't know why..
alphabets get reversed..

 Secret formula for married couples...
"Love One Another"
And if it doesn't work, bring the last word in the middle.!!!!

Dont laugh alone pass it on !!!btwn Pongal n idly?
think...think..think...
Ans : U ll get a holiday for pongal but not for idly.
============================================================
எல்லாமுமே இணையத்தில் படித்தவை. அவற்றை உங்களுக்கு இன்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29.9.14

Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!


Astrology: Popcorn Post: சகல நன்மைகளையும் தரும் சந்திர மகா திசை!

Popcorn Post 55

29.9.2014

குருவைப் போலவே சந்திரனும் சுபக் கிரகம். அத்துடன் நம் நட்சத்திரம்
மற்றும் ராசிக்கு அதிபதி சந்திரன். அவருடைய மகா திசை பல
விதங்களிலும் நன்மையானதாக இருக்கும்.

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - சகல விதங்களிலும் நன்மைகள் எல்லாம் கிடைக்க
வில்லையே என்று நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம்.
அவரவருடைய ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின்
அளவு மாறுபடும். ஜாதகத்தில் சந்திர பகவான் ஆட்சி அல்லது
உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா
புத்தி நடக்கும் காலங்கள் அந்த நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று சந்திர மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு சந்திர மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
சந்திர புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம்  3,600 நாட்கள் (10 ஆண்டுகள்) வரும். அப்போது சந்திரன்
உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு சரியாக இருக்கும்.

சரி சந்திர மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும்  சுயபுத்தி, குரு புத்தி, புதன் புத்தி, சுக்கிர புத்தி,  ஆகியவைகள் (சுமார் 5 ஆண்டு காலம்) நன்றாக இருக்கும். எப்போது
நன்றாக இருக்கும்? அந்த 4 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

சந்திர மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம்
கீழே கொடுத்துள்ளேன்!


உதாரணத்திற்கு சந்திர மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய
புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

சொல்லவே சந்திர திசை வருஷம் பத்தில்
    சுகமுடைய சந்திர புத்தி மாதம்பத்து
நில்லவே யதனுடைய பலனைச் சொல்வோம்
    நிகரில்லா மன்னருடன் மகிழ்ச்சியாகும்
சொல்லவே சுயம்வரங்கள் நாட்டிவைத்து
    சுகமான கல்யாணம் ஆகும்பாரு
வெல்லவோ சத்துருவை ஜெயிக்கலாகும்
    வேணபடி நிதிசேரும் விபரந்தானே!

நிதி சேரும் என்றிருக்கிறதே - அது போதாதா நமக்கு!  எல்லா
வகையிலும் பயன் உண்டாகும் என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26.9.14

உயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை!

 
உயர்வென்ற தாழ்வென்ற பிரிவு இல்லை!   

பக்தி மலர்

இன்றைய பக்தி மலர் நவராத்திரி வாரமாக மலர்கிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் குறித்து கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கருத்தாழமிக்க பாடலை திரு.T.M. செளந்திரராஜன் அவர்களின் குரலில் அனைவரும் கேட்டு மகிழப் பதிவிட்டுள்ளேன். பாடலின் வரிகளும் உள்ளன. காணொளியும் உள்ளது.

அன்புடன்,
வாத்தியார்

-------------------------------------------------------
    கல்வியா செல்வமா வீரமா?....   

    கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
    கல்வியா செல்வமா வீரமா? அன்னையா தந்தையா தெய்வமா?
    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
    உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?
    ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? - இதில்
    உயர்வென்றும் தாழ்வென்றும் பிரிவாகுமா?

    கல்வியா செல்வமா வீரமா?

    படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
    படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
    படித்தவன் கருத்தெல்லாம் சபையேறுமா? - பொருள்
    படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?
    படித்தவன் படைத்தவன் யாராயினும்
    படித்தவன் படைத்தவன் யாராயினும் - பலம்
    படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா? - பலம்
    படைத்திருந்தால் அவனுக்கிணையாகுமா?

    கல்வியா செல்வமா வீரமா?

    ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
    ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
    ஒன்றுக்குள் ஒன்றாகக் கருவானது - அது
    ஒன்றினில் ஒன்றாகப் பொருளானது
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது?
    ஒன்றை ஒன்று பகைத்தால் உயர்வேது? - மூன்றும்
    ஓரிடத்தில் இருந்தால் நிகரேது? - மூன்றும்
    ஓரிடத்தில் இருந்தால் நிகரேது?

    கல்வியா செல்வமா வீரமா?

    மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
    முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
    மூன்று தலைமுறைக்கும் நிதி வேண்டுமா? - காலம்
    முற்றும் புகழ் வளர்க்கும் மதி வேண்டுமா?
    தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா?
    தோன்றும் பகை நடுங்கும் பலம் வேண்டுமா? - இவை
    மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா? - இவை
    மூன்றும் துணை இருக்கும் நலம் வேண்டுமா?

    கல்வியா செல்வமா வீரமா?


    திரைப்படம்: சரஸ்வதி சபதம்
    பாடியவர்: t.m. சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: k.v. மஹாதேவன்

--------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்:



our sincere thanks to the person who uploaded this song in the net!

 வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!
==========================================================

25.9.14

நகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து!



நகைச்சுவை: நல்ல கணக்கை மாத்து, கள்ளக் கணக்கை ஏத்து!

சிரிப்புப் பாடல்!

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் திரைக்காகப் பல நகைச்சுவைப் பாடல்களையும் எழுதியுள்ளார். அவற்றுள் ஒரு பாடலை இன்று உங்களுக்காகப் பதிவிடுகிறேன்.

நகைச்சுவைப் பாடல் என்றாலும் அவருடைய சொல், மற்றும் கருத்து ஆட்சி கொஞ்சமும் குறையாது அதுதான் அவருடைய மிகப்பெரும் சிறப்பு!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
தமிழகம் மறக்க முடியாத நடிகர்களில் ஜே.பி.சந்திரபாபுவும் ஒருவர்.

1932ம் ஆண்டில் தூத்துக்குடியில் பிறந்த அவர் 1974ம் ஆண்டில் காலமாகி விட்டார்

42 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த அவர், அற்புதமான நகைச்சுவை நடிப்பு, குரல், நடனம் என்று தன்னுடைய பன்முகத்திறமை மூலம் லெட்சக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்தவர்.

அவர் கைக்குழந்தையாக இருக்கும்போது நோய்வாய்ப் பட்டு மரணத்தின் விளிம்புவரை சென்று திரும்பியவர்

மருத்துவர்களெல்லாம் கைவிட்டும்கூட அவருடைய தாய் தன்னுடைய ஆறு மாதக் குழந்தையை இழக்க மனமின்றி, தான் வழக்கமாகச் செல்லும் கிறிஸ்துவ ஆலயத்திற்குப்போய், யேசுபெருமகனாரின் உருவச்சிலை முன் உருக்கமாக வேண்டிக் குழந்தையை, இறைவன் அருளால் மீட்டவர்.

அந்த நன்றிக்கடனைத் தீர்ப்பதற்காகத் தன்னுடைய அந்தக் குழந்தைக்கு யேசுநாதர் தனக்களித்த பிச்சை என்னும் சொல் வரும்படி குழந்தைக்கு
'ஜோசப் பிச்சை' என்று பெயரிட்டார். ஆமாம் சின்ன வயதில் சந்திரபாபுவின் பெயர் 'ஜோசப் பிச்சைதான்!

திரைக்கு வந்த பிறகு இயக்குனர் ஒருவர்தான் அவருக்குச் சந்திரபாபு என்னும் பெயரைச் சூட்டினார்.

ஆனாலும் அவர் தன் அன்னை வைத்த பெயரை விடாமல் சுருக்கி Joseph Picchai' என்பதை J.P என்று தன் திரைப் பெயருக்கு முன்னால் வரும்படி
வைத்துக் கொண்டார்

கவியரசர் எழுதிய "சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது' என்ற பாடலுக்குத் தன்னுடைய வசீகரக் குரலாலும், நடிப்பாலும்
உயிரூட்டியவர் அவர்!

சரி, வாருங்கள் பாடலைப் பார்ப்போம்!
----------------------------------
"சிரிப்பு வருது சிரிப்பு வருது
சிரிக்கச் சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன்
செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது

(சிரிப்பு)

லாரடி லாரடி லாரடி பாரடி
மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேச்சு
கீழே இறங்கிப் போகும்போது
சொன்னதெல்லாம் போச்சு

காசை எடுத்து நீட்டு
கழுதை பாடும் பாட்டு
ஆசை வார்த்தை காட்டு
உனக்குங் கூட ஓட்டு

(சிரிப்பு)

உள்ள பணத்தைப் பூட்டி வச்சு
வள்ளல் வேஷம் போடு
ஒளிஞ்சு மறைஞ்சு ஆட்டம் போட்டு
உத்தமன் போல் பேசு

நல்ல கணக்கை மாத்து,
கள்ளக் கணக்கை ஏத்து
நல்ல நேரம் பாத்து
நண்பனயே மாத்து

(சிரிப்பு)"

படம்: ஆண்டவன் கட்டளை - வருடம் 1969
நடிப்பு: சிவாஜி, தேவிகா, சந்திரபாபு
பாடல்: J.P.சந்திர பாபு
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
இயக்கம்: கே.சங்கர்

சமுதாயத்தில் உள்ள அவலத்தை நகைsசுவைப் பாட்டில் ஏற்றிக் கொடுத்துள்ளார் கவியரசர்.

சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலைப் பார்க்கச் சிரிப்பு வருது'
என்று பாடலைத் துவங்கியவர், மேடை ஏறிப் பேசும்போது
ஆறு போல பேசியவர்களின் பேச்செல்லாம் கீழே இறங்கிப் போகும்
போது போய்விடும் என்று சிறப்பாகச் சொல்லியிருக்கின்றார்

காசை எடுத்து நீட்டினால், கழுதை பாடும் பாட்டைக் கேட்கக்கூட
கூட்டம் சேரும் என்றும் ஆசை வார்த்தை காட்டினால் உனக்குங்கூட
ஓட்டு விழுகும் என்றும் அருமையாகச் சொல்லியிருக்கிறார்

'நல்ல நேரம் பாத்து - நண்பனையே மாத்து' என்று சொல்லி
வருத்தப்படும் நிகழ்வுகளைப் பாட்டில் வைத்து முடித்ததுதான்
முத்தாய்ப்பான வரிகளாகும்!
-----------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=====================================================

24.9.14

இதல்லவா பதில்!



இதல்லவா பதில்!

மகான்கள் எப்போதும் தன்னிகரில்லாதவர்கள். பல சமயங்களின் அவர்களுடைய செயல்களும் பேச்சுக்களும் நம் நெஞ்சை நெகிழ வைத்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வு ஒன்றை உங்களுக்காக இன்று பதிவிட்டிருக்கிறேன்!

கடவுளைப் பார்த்திருந்தால் காட்டுங்களேன்!’ என்று கேட்டவருக்கு
பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன பதில்
----------------------------------------------

ஒரு நாள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பார்க்க டாக்டர் ஒருவர் வந்தார்.

வந்தவர் கேட்டார்:

“ஐயா நீங்கள் காளியைப் பார்த்திருக்கிறீர்களா?”

பரமஹம்ஸர் சட்டென்று பதில் சொன்னார்:

“ஓ! பார்த்திருக்கிறேனே!! காலையில் கூட அவரோடு பேசினேன்”

“நீங்கள் பார்த்தது உண்மை என்றால் எனக்குக் காட்டுங்கள்”
 என்று டாக்டர் பதிலுக்குக் கேட்டவுடன் சுற்றி அமர்ந்திருந்தவர்கள் பரமஹம்ஸர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று ஆவலோடு காத்திருந்தனர்.

பரமஹம்சர் சிறிதும் அலட்டிக்கொள்ளாமல் கேள்வி எழுப்பிய
டாக்டரிடம், “நீங்கள் என்ன வேலை பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அவர் சொன்னார்: “நான் டாக்டர் வேலை செய்கிறேன்”

“டாக்டர் தொழில் உங்களுக்கு நன்றாகத் தெரியும் தானே?”

“நன்றாகத் தெரியும்”

“அப்படியானால் என்னை ஒரு டாக்டர் ஆக்குங்கள்”

“அது எப்படி? நீங்கள் டாக்டருக்குப் படிக்க வேண்டுமே?”

“டாக்டராவதற்கே ஒரு படிப்பு வேண்டும் என்றால்,கடவுளைப் பார்க்க
ஒரு படிப்பு வேண்டாமா? நான் அதைப்படித்திருக்கிறேன்.நீங்களும்
அதைப் படித்தால் கடவுளைக் காணலாம்” என்று பரமஹம்சர்
நெத்தியில் அடிப்பது போல அவருக்குப் பதில் சொன்னார்.

டாக்டர் அதிர்ந்துபோய் விட்டார். மற்றவர்கள் வியந்து மகிழ்ந்தனர்.
====================================================================
அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

23.9.14

ஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்!


ஒரு அரசியல்வாதியின் உருக்கமான கடிதம்!

மனைவியிடம் பேசுங்கள் தோழர்களே!
written by Trichy Siva ... மனைவியிடம் பேசுங்கள் !
             
திருச்சி சிவா:

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு,
பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து,
49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க
விட்டு என் மனைவி போய் விட்டாள்.
   
அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய
போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி
இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய்
ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு
போய் விட்டது.
   
இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த,
அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை.
காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.
   
ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை
வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த
நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.
       
பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு
மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்த
போதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என்
அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.
       
எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற
என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.
         
மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல்
சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.
         
1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன '
என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்
தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு
நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும்
முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும்
தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம்
கொண்ட குலமகள்.

இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக
அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ்
நிலையத்தில் காவலில் இருந்த இடத்தில் பிள்ளையை காட்டி
விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன
இலட்சியவாதியின் சரியான துணை.

 விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான  வருவோர்
அதனை பேருக்கும் அன்னபூரணி.

இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து
பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன
துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும்,
எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம்
கொண்ட உத்தமி; பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல்
நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய்,
இருந்தவள்.
           
பண்டிகைகளும், திருநாட்களும், கோலாகலமாய், கூட்டம்
கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும்
முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன
ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை.
ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால்
இந்த உறுத்தல் வந்துருக்காது.

நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம்
கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து
கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின்
வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.
   
காலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள்
மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுத்தா
விட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.
     
இத்தனை கற்றும் கடமை தவறியதாகவே கருதுகிறேன். ஒருநாள்
ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு
பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது,
உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை
பகிர்ந்து கொண்டு என்னை இலேசாக்கினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாள். கோடிரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருப்பாள்.
       
ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின்
உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட
வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.
         
நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை'
ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகா
ராணியை 'தேவி' என  அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும்
மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று
கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி
கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.
           
பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது,
இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிறவரிட மெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே
ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று
நாளும் துடிக்கிறேன்.
       
எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருத்தப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே
புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார். நான் அவரிடம்
கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிற
பொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ,
என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குறிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது. ஆனாலும்,
நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த
உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல்
கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்?
அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்
களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை
அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால்
மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என
சொன்னேன்.
           
ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிற
போதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி
கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.
           
தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை,
பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.
என் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை
திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி
வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்
உங்களுக்காகவே உங்கள் பிள்ளைகளை, உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி
நாம் வெளியே சுற்றுகிறபோதேல்லாம், காவல் தெய்வமாய்
குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம்
என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள்
தயவு செய்து பேசுங்கள்!
           
நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப்
போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்...
என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல்
தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம்
சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன்.

சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும். என்
வேதனை, நான்படும் துயரம் வேறெவர்க்கும் எதிர்காலத்தில்
வேண்டாம் அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான
தருணங்களின் நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே
சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............

இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள்
கூட  வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை
என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று!

திருச்சி சிவா
===========================================================
இணையத்தில் படித்தது. உருக்கமாக இருந்ததால், உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்.

அன்புடன்,
வாத்தியார்
=============================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

22.9.14

Astrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை!


Astrology: Popcorn Post: கோடி நன்மை தரும் குரு மகா திசை!

Popcorn Post 54

22.9.2014

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். கிரகங்களில்
முதல்நிலை சுபக்கிரகம் குரு. அதனால் ஜாதகத்தில் அவருடைய
பார்வை பலவிதத்திலும் நன்மைகளைத் தரும். அதை உயர்த்திச் சொல்வதற்காகக் கோடி நன்மைகள் என்று சொல்வார்கள்.
அவருடைய பார்வைக்கே அத்தனை வலிமை என்றால்,
அவருடைய மகாதிசையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

உடனே உங்களில் சிலர், என்னடா, நமக்கு சில நன்மைகள்தானே
கிடைத்தது - கோடிகள் எல்லாம் கிடைக்கவில்லையே என்று
நினைக்க வேண்டாம். கேட்க வேண்டாம். அவரவருடைய
ஜாதகத்தைப் பொறுத்து அந்த நன்மைகளின் அளவு மாறுபடும்.
ஜாதகத்தில் குரு பகவான் ஆட்சி அல்லது உச்சம் பெற்று இருக்கும் நிலைமையில் அத்துடன் அவர் கேந்திர திரிகோணங்களில் இருக்கும் நிலைமையில், அவருடைய தசா புத்தி நடக்கும் காலங்கள் அந்த
நன்மைகள் உண்டாகும்.  அனுபவித்தவர்களுக்குத்தான் அது தெரியும்.

இன்று குரு பகவானின் மகாதிசையின் பலன்களைப் பற்றிப் பார்ப்போம்!

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்
தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம்
என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான்
நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு
ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்
ஒன்றும் ஆகாது.

பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்
களுக்கு குரு மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்
களுக்கும் வராது.

அவர்கள் வருத்தப்பட வேண்டாம். ஒவ்வொரு மகாதிசையிலும்
குரு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 5,760  நாட்கள் (16 ஆண்டுகள்) வரும். அப்போது குரு
பகவான் உரிய பலன்களைத் தருவார். மொத்தக் கணக்கு
சரியாக இருக்கும்.

சரி குரு மகா திசையில் எல்லா ஆண்டுகளுமே சுகமாக இருக்குமா
என்றால், அதில் வரும்  குருவின் சுயபுத்தி, சனி புத்தி, புதன் புத்தி,
சுக்கிர புத்தி, சந்திர புத்தி ஆகியவைகள் (சுமார் 11 ஆண்டுகள்)
நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 5 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து
நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தாலோ அல்லது குருபகவானுக்கு 6, 8 12ல் அமர்ந்திருந்தாலோ, அதவது அஷ்ட சஷ்டம நிலைமை போன்ற
அமைப்பில் இருந்தாலோ முழுமையான பலன்கள் இருக்காது.

குரு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!

















உதாரணத்திற்கு குரு மகாதிசையின் துவக்க புத்தியான அதன்
சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

தானென்ற வியாழதிசை ஒருபத்தாறு
    தன்மையுடன் அதன் புத்தி வருஷம் ரெண்டு
நானென்ற நாளதுவும் நாற்பத்தெட்டு
    நன்றாக அதன் பலனை நவிலக் கேளு
கோனென்ற ராசாவும் குருவருளுமுண்டு
    குறைவில்லா திரவியங்கள் வெகு லாபமுண்டாம்
ஆனென்ற பெண்கொடியாள் மனமகிழ்ச்சியுண்டாம்
    மங்களமும் சோபனமும் வளருங்கலியாணம்

லாபமுண்டாம் என்றால் எல்லா வகையிலும் பயன் உண்டாகும்
என்று எடுத்துக்கொள்ளுங்கள்.

உடன் தெய்வ வழிபாட்டையும் செய்தீர்கள் என்றால் கிடைக்கும்
பலன்கள் நிலைக்கும் தன்மை உடையதாக ஆகிவிடும்!

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதையும்
மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=============================================================

19.9.14

கடன் எப்போது தீரும்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நம் கடன் எப்போது தீரும்?

கவியரசர் கண்ணதாசன்: திருமாலின் பெருமைகளைப் பாடியது

வைஷ்ணவத் தலங்களில் மிகவும் பெருமை வாய்ந்ததும், அதிகமான பக்தர்களை ஈர்க்கும் தன்மையுடையதும், எது என்று பார்த்தால் நம் மனதில் மின்னலாக இரண்டு இடங்கள் தென்படும்.

ஒன்று திருமலை என்று புகழப்பெறும் திருப்பதி. மற்றொன்று காவிரிக்கரையில் உள்ள ஸ்ரீரங்கம்.

அவை இரண்டிலும் திருப்பதிக்கு மற்றுமொரு கூடுதலான சிறப்பு உண்டு. அகில இந்திய அளவில் எல்லா மாநிலத்தவரும் அதிகமான எண்ணிக்கையில் வந்து பெருமானைத் தரிசிச்துவிட்டுச் செல்வதால் நமது நாட்டிலுள்ள இந்து ஆலயங்களில் முதலிடம் என்ற பெருமையைக் கொண்டது திருமலையில்
உள்ள ஆலயம்!

பெருமாள் சக்ரதாரியாக, நின்ற தோற்றத்துடன் தன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் திருப்பதிக்குச் சென்று திரும்புபவர்கள் மனத்திருப்தியடைந்து மீண்டும் மீண்டும் செல்கிறார்கள்.

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு இல்லாதவர்கள் கூட ஒரு முறை திருமலை சென்றுவந்தால், ஈடுபாடு கொள்ளத் துவங்கிவிடுவார்கள். பெருமானின்
வலிமை அப்படி!

அதைத்தான் நம் வீட்டிலுள்ள பெரியவர்கள் திருப்பதி சென்று வந்தால் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்படும் என்பார்கள்.

கவியரசர் கண்ணதாசன் அவர்களும் அந்தக் கருத்தை வலியுறுத்தி ஒரு பாடல் எழுதியுள்ளார்.

பாட்டைப் பாருங்கள்:
--------------------------------------
திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஓர்
திருப்பம் நேருமடா - உந்தன்
விருப்பம் கூடுமடா - நீ
திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம்
தானே திறக்குமடா - உன்னை
தர்மம் அணைக்குமடா!....

(திருப்பதி)

ஊருக்கு மறைக்கும் உண்மைக ளெல்லாம்
வேங்கடம் அறியுமடா - அந்த
வேங்கடம் அறியுமடா - நீ
உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால்
உன்கடன் தீருமடா - செல்வம்
உன்னிடம் சேருமடா!...

(திருப்பதி)

எரிமலை போலே ஆசை வந்தாலும்
திருமலை தணிக்குமடா - நெஞ்சில்
சமநிலை கிடைக்குமடா - உன்
எண்ணங்கள் மாறும் வண்ணங்கள் மாறும்
நன்மைகள் நடக்குமடா - உள்ளம்
நல்லதே நினைக்குமடா!....

(திருப்பதி)

அஞ்சலென்ற கரம் ஒன்று காவல் தரும்
வெங்கடேஸ்வரா!
சங்கு கொண்ட கரம் மங்கலங்கள் தரும்
வெங்கடேஸ்வரா!
தஞ்சமென்றவர்கள் நெஞ்சில் அன்பு தரும்
வெங்கடேஸ்வரா! வெங்கடேஸ்வரா!...

(திருப்பதி)

படம்: மூன்று தெய்வங்கள் - வருடம் 1971
----------------------------------------------------------------------
நாம் நினைக்கின்ற நல்ல காரியங்கள் உடனே கைகூடும் என்ற பொருளில் திறந்திட நினைக்கும் கதவுகளெல்லாம் தானே திறக்குமடா என்று சொன்னதோடு உன்னைத் தர்மம் அணைக்குமடா என்றும் சொன்னார் பாருங்கள் அது ஒரு சிறப்பு.

எதையும் வேங்கடத்தானிடம் மறைக்காமல் உள்ளதைச் சொல்லிக் கருணையைக் கேட்டால் உன்னிடம் செல்வம் சேருமடா என்று செல்வம் சேர்வதற்குரிய வழியைச் சொன்னதும் ஒரு சிறப்பு.

எரிமலை போலே ஆசை வந்தாலும் திருமலை தணிக்குமடா என்று சொன்னதோடு உன் நெஞ்சில் அளவோடு ஆசை கொள்ளும் சமநிலை கிடைக்கும் என்றும் சொன்னார் பாருங்கள் அதுவும் ஒரு சிறப்பு

இத்தனை சிறப்புக்களையும் உடையது அந்தப் பாடல் என்பதால், அதை இன்று பதிவு செய்தேன்.

அத்துடன் இன்று புரட்டாசி மாதம் முதல் வெள்ளிக்கிழமை. பெருமாளுக்கு உகந்த மாதம். அவரை நாம் நினைக்க வேண்டும். வணங்க வேண்டும் என்பதற்காக அப்பாடலை இன்று பதிவில் ஏற்றியுள்ளேன்

பாடலின் காணொளி வடிவம்:



our sincere thanks to the person who uploaded this song in the net

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================

18.9.14

Humour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை!


Humour: நகைச்சுவை: சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே துணை!

ஆமாம். கவலையில்லாத சிறந்த வாழ்க்கைக்கு சிரிப்பே சிறந்த துணை!
===============================================
1
ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்.

அவருக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிந்துகொள்ள ஆசையா இருந்தது.

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனார். நடுவழியிலே தண்ணிக்குள்ளே
தற்செயலாக விழுந்தது போல விழ, மருமகன் பாய்ந்து காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது.. அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

" மாமியாரின் அன்புப் பரிசு.."

ரெண்டாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்." மாமியாரின் அன்புப் பரிசாக..".

மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி....... வரை........ காப்பாற்றவே ......இல்ல.

மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' விட்டபோது சொன்னான்.. "போய்த் தொலை..பண்டாரம் ...எனக்கு காரே.... வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா..... வளர்த்து வச்சிருக்க..நீயி.... ?"

மாமியார் இறந்துவிட்டார்.

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் ஃபாரின் கார் நின்றது
" மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோடு!!
--------------------------------------------
2
நட்பும் காதலும்:

முன்னொரு நாள் ஒரு திருமணமான தம்பதிகள் தங்களது 25 வது திருமண ஆண்டு விழாவை மகிழ்வுடன் கொண்டாடினார்கள்.

அந்த ஊரில் 25 வருட திருமண வாழ்வில் ஒரு நாள் கூட அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் இருந்ததில்லை என்ற புகழுடன் அந்த நகரத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

‘அப்படி அவர்கள் ‘மகிழ்வுடன் செல்லும் வாழ்க்கை’ வாழ என்ன ரகசியம் அவர்களுக்கிடையே பொதிந்துள்ளது’ என அறியும் ஆவலுடன் பத்திரிக்கையாளர்கள் அவர்களின் வீட்டில் குழுமினர்.

ஒரு பத்திரிக்கை ஆசிரியர்,” சார்.இது ஆச்சர்யமாகவும் நம்பமுடியாததாகவும் இருக்கிறது.. நீங்கள் இதனை எப்படி சாதித்தீர்கள்...அதன் ரகசியம் என்ன.” என்று கேட்டார்.

அந்தக் கணவர் தங்களது தேன்நிலவு நாளை நினைத்துவிட்டு,”திருமணம் முடிந்தவுடன், நாங்கள் தேன்நிலவுக்கு சிம்லா சென்றோம். பல இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியாக குதிரைச் சவாரி செல்லலாம் என்று தீர்மானித்தோம்.ஆளுக்கொரு குதிரையின் மீதேறி சவாரி கிளம்பினோம். நான் அமர்ந்த குதிரை அருமையானது.அழகாகவும், மெதுவாகவும் ஓடியது. ஆனால், என் மனைவி அமர்திருந்த குதிரை கொஞ்சம் கோளாறான ஒன்று போலிருக்கிறது..அப்படி சென்று கொண்டிருக்கும்போது, மனைவியின் குதிரை திடீரென்று குதித்து என் மனைவியை கீழ விழச் செய்தது.எழுந்த அவள், அந்தக் குதிரையை தட்டிக் கொடுத்து, “இது உனக்கு முதல் தடவை!!!.” என்றாள்.மறுபடியும் அவள் குதிரை மீது ஏறி அமர்ந்தாள்.. மெதுவே சென்ற குதிரை, மனைவியை மறுபடியும் கீழே விழச் செய்தது. அமைதியாக எழுந்த என் மனைவி, “இது உனக்கு இரண்டாவது தடவை!!!” என்று சொல்லி, மறுபடியும் ஏறி அமர்ந்தாள்...அந்த குதிரை மூன்றாவது முறை அவளை கீழே விழச் செய்தபோது, அவள் அமைதியாக கைத்துப்பாக்கியை எடுத்து குதிரையைச் சுட்டுக் கொன்றாள்.நான் உடனே பதற்றமாய் என் மனைவிப் பார்த்து,”அந்த பாவப்பட்ட குதிரையை கொன்றுவிட்டாயே.ஏன் இந்த கொலைவெறி” என்று உரக்கக் கத்தினேன்.

உடனே, அவள் அமைதியாக, “இது உனக்கு முதல் முறை!!! என்றாள்…
அவ்வளோ தான்..................அன்றிலிருந்து நாங்கள் மகிழ்ச்சியாக இன்று வரை வாழ்கிறோம்..” என்றார்.
------------------------------------------------------------
உதிரி நகைச்சுவைகள்:

No : 1

நிறுத்துங்க சார்.., ஏன் படிச்சிட்டு இருக்கிற பையனை போட்டு
இப்படி அடிக்கறீங்க..?

சும்மா இருங்க சார்..,Exam-க்கு கூட போகாம ஒக்காந்து படிச்சிகிட்டே
இருக்கான்..!!!

* * * * * * * * * * * * * * * * * *
No: 2

உன் பேரு என்ன..?

" சௌமியா "

உங்க வீட்ல உன்னை எப்படி கூப்பிடுவாங்க..?

தூரமா இருந்தா சத்தமா கூப்பிடுவாங்க.,பக்கத்தில இருந்தா மெதுவா கூப்பிடுவாங்க.,

* * * * * * * * * * * * * * * * * **
No : 3
( இன்ட்டர்வியூவில் )

உங்களுக்கு பிடிச்ச ஊர் எது..?

சுவிஸ்சர்லாந்து..

எங்கே Spelling சொல்லுங்க..

ஐயையோ.. அப்படின்னா " கோவா "

* * * * * * * * * * * * * * * * * **                                                                                                              No : 4
( புயல் மழையில் ஒருத்தன் பீட்ஸா
வாங்க கடைக்குச் சென்றான்)

கடைக்காரர் : சார் உங்களுக்கு
கல்யாணம் ஆயிடுச்சா...?

வந்தவர்: பின்ன.. இந்த புயல் மழைல
எங்க அம்மாவா என்னை பீட்ஸா
வாங்க அனுப்புவாங்க...!?? அந்த லூசு பொண்டாட்டி தான் அனுப்புனா..

* * * * * * * * * * * * * * * * * **
No : 5
நடிகர்  : இனிமே நடிக்கிறதை நிறுத்திட்டு
மக்களுக்கு பொதுசேவை
பண்ணலாம்னு    இருக்கேன்..

நிருபர் : நீங்க நடிக்கிறதை நிறுத்தினாலே
அது மக்களுக்கு பண்ற
பொதுசேவை
தானே சார்..!!
* * * * * * * * * * * * * * * * * **

No : 6
டாக்டர் : உங்க கணவருக்கு இப்ப ஓய்வு
ரொம்ப முக்கியம்.,
இந்தாங்க தூக்க மாத்திரை..

மனைவி: ஒரு நாளைக்கு எத்தனை தடவை
கொடுக்கணும் டாக்டர்..

டாக்டர்: இது அவருக்கில்லை...உங்களுக்கு..

* * * * * * * * * * * * * * * * * *

No : 7 ( கல்யாண மண்டபம்.. )

"வாங்க., வாங்க..!!
நீங்க மாப்பிள்ளை
வீட்டுக்காரரா.?
பொண்ணு வீட்டுக்காரரா..? "

" ம்ம்.. நான் பொண்ணேட பழைய வீட்டுக்காரர்..!!"
* * * * * * * * * * * * * * * *
No: 8

அவர் : நேத்து உங்க காருக்கு எப்படி
Accident ஆச்சு..?

இவர் : அதோ, அங்கே ஒரு மரம்
தெரியுதா..?

அவர் : தெரியுது...

இவர் : அது நேத்து எனக்கு தெரியலை..!

* * * * * * * * * * * * * *
No : 9
( கட்சி ஆபீஸ்.. )

தொண்டர் 1 : நம்ம தலைவர் தன்னோட
எல்லா சொத்தையும்
கட்சிக்கே எழுதி
வெச்சிட்டாரு..!

தொண்டர் 2 : சந்தோஷமான விஷயம்
தானே..!

தொண்டர் 1 : அட போப்பா..,
கட்சியை அவரோட மகனுக்கு
எழுதி வெச்சிட்டாரு..!!
* * * * * * * * * * * * * *

No : 10
( Exam ஆரம்பிக்கும் முன்... )
மாணவன் : டீச்சர் ஒர் Doubt...

டீச்சர் : Exam ஆரம்பிக்க இன்னும்
அரை மணி நேரம்தான் இருக்கு..,

இப்ப போயி என்னடா Doubt..?

மாணவன் : இன்னிக்கு என்ன Exam..?
* * * * * * * * * * * * * *
No: 11
மகள் : அப்பா., நான் சாதிக்க விரும்பறேன்..

அப்பா : Very Good.., பொண்ணுங்க
இப்படிதான் இருக்கணும்..,
எந்த துறையைல சாதிக்க போற..

மகள் : ஐயோ அப்பா.., நான் எதிர் வீட்டு
பையன் " சாதிக்" -ஐ விரும்பறேன்..


=================================================================
வாட்ஸ்அப்பில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!
எது நன்றாக உள்ளது? சொல்லிவிட்டுச் செல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
===============================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.9.14

Astrology: Popcorn Post: சள்ளையான சனி மகா திசை!


Astrology: Popcorn Post: சள்ளையான சனி மகா திசை!

Popcorn Post 53

17.9.2014

சள்ளை என்றால் தொல்லை என்று பொருள்படும். ஆகவே தொல்லைகள் நிறைந்த சனி திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். தொல்லைகளுக்கு நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். உங்களுக்குத் தெரியாத தொல்லைகளா? ஆகவே சொல்லவில்லை!

அதீத தீய கிரகங்கள் மூன்றில், சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றியும், நேற்றையப் பதிவில் ராகு மகா திசையைப் பற்றியும் பார்த்தோம். அந்த வரிசையில் இன்று சனி திசையைப் பற்றிப் பார்ப்போம்.

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம் ஒன்றும் ஆகாது.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சனி மகாதிசை அநேகமாக வராது. சுமார் 100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்துவிட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும் சனி புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள். மொத்தம் 6840 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது சனி திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி சனி திசையில் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா என்றால், அதில் வரும் புதன் புத்தி, சுக்கிர புத்தி,குரு புத்தி, (மொத்தம் 8 ஆண்டுகள், 8 மாதங்கள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும். அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது ஊற்றிக் கொண்டு விடும்!

சனி மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!


















உதாரணத்திற்கு சனி மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

கேளப்பா சனிதிசையில் மார்க்கங்கேளு
    கெடியான வருஷமது பத்தொன்பதாகும்
கேளப்பா சனிபுத்தி வருஷம் மூன்று 
    கேடான நாளதுவும் மூன்றதாகும்
பாளப்பா பாவையரும் பாலன்தானும்
    பாங்கான வருஷம் மூன்றில் சாவதாகும்
ஆளப்பா அலைச்சது மெத்தவுண்டாம்
   அளவில்லா தனச் சேதமாகுந்தானே

சாவதாகும் என்றால் பயப்படவேண்டாம். சில சமயங்களில் ’செத்துப் பிழைத்தேன்’ என்று சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

16.9.14

Astrology: Popcorn Post: ரகளையான ராகு மகா திசை!


Astrology: Popcorn Post: ரகளையான ராகு மகா திசை!

Popcorn Post 51

16.9.2014

ரகளை என்றால் தகராறு, கலாட்டா என்று பொருள்படும். ஆகவே
தகராறான ராகு திசை என்று நீங்கள் வைத்துக்கொள்ளலாம். நீங்கள்
நீண்ட பயணம் செல்லும்போது பயணிக்கும் வாகனம் வழியில்
தகராறு செய்தால் பயணம் எப்படி இருக்கும்? நினைத்துப்பாருங்கள்!

சென்ற பாப்கார்ன் பதிவில் (28.8.2014) கேது மகா திசையைப் பற்றிப் பார்த்தோம்

ஜாதகத்தின் பலன்களை சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலத்தில்தான் பெறமுடியும். திருமணம் என்றாலும் சரி மரணம் என்றாலும் சரி சம்பந்தப்பட்ட கிரகங்களின் காலங்களில்தான் நடக்கும்.

மகாதிசைகளும் (Major Dasas) அதன் புத்திகளும் (sub Periods) ஒரு
ஒழுங்கு முறையில் வந்து போகும். ஆகவே அவை வரும்வரை பொறுத்திருக்க வேண்டியதுதான். நம் அவசரத்திற்கெல்லாம்
ஒன்றும் ஆகாது.

இன்று ராகு மகா திசையைப் பற்றிப் பார்ப்போம்!

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுக்கு ராகு மகாதிசை அநேகமாக வராது. சுமார்
100 ஆண்டுகாலம் வாழ்ந்தால் வரலாம். அதுபோல வேறு சில நட்சத்திரக்காரர்களுக்கும் வராது.

அவர்கள் காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு, ஆகா நான் தப்பித்து
விட்டேன் என்று மகிழ முடியாது. ஒவ்வொரு மகாதிசையிலும்
ராகு புத்தி வரும் அல்லவா? அவற்றை எல்லாம் கூட்டிப் பாருங்கள்.
மொத்தம் 6480 நாட்கள் (18 ஆண்டுகள்) வரும். அப்போது ராகு திசை தன்னுடைய வேலையைக் காட்டும். கணக்கு சரியாக இருக்கும்.

சரி ராகு திசையிலும் எல்லா ஆண்டுகளுமே மோசமாக இருக்குமா
என்றால், அதில் வரும் குரு புத்தி,  புதன் புத்தி, சுக்கிர புத்தி (மொத்தம்
8 ஆண்டுகள்) ஆகியவைகள் நன்றாக இருக்கும். எப்போது நன்றாக
இருக்கும்? அந்த 3 கிரகங்களும் ஜாதகத்தில் கேந்திர, அல்லது
திரிகோண அதிபர்களாக இருந்து நல்ல இடத்தில் இருந்தால் வரும்.
அதை விட்டு அவர்கள் 6, 8 12ஆம் இடங்களில் இருந்தால் வராது
ஊற்றிக் கொண்டு விடும்!

ராகு மகாதிசைக்கு உரிய காலத்தை ஒரு அட்டவணை மூலம் கீழே கொடுத்துள்ளேன்!


உதாரணத்திற்கு ராகு மகாதிசையின் துவக்க புத்தியான அதன் சுய புத்திக்கு உரிய பலனை ஒரு பாடல் மூலம் விளக்கியுள்ளேன்

காணவே ராகுதிசை வருஷம்பதினெட்டு
    கனதையுள்ள ராகுவினில் ராகுபுத்தி
தோணவே மாதமது முப்பத்திரெண்டு
    துகையான நாளதுவும் பனிரெண்டாகும்
யேனவே சத்துருவால் நிபந்தனையோடும்
    யெண்ணமுள்ள மனைவியரும் யிருந்தவிடம்பாழாம்
போனவே பழம்பொருளும் சேதமாகும்
    பெலமான நோயதுவும் கூடிக்கொல்லும்

கொல்லும் என்றால் பயப்படவேண்டாம். உங்களைத் துன்பப் படுத்து
பவரைப் பற்றிக் குறிப்பிடும்போது, சாகடிக்கிறான்டா’ என்று
சொல்வீர்கள் இல்லையா? அது போன்ற செயல்தான் இதுவும்!

தெய்வ வழிபாடு செய்ய வேண்டும். தாக்குப் பிடிக்கும் சக்தி கிடைக்கும்.

நன்மைகளும் தீமைகளும் கலந்ததுதான் மகாதிசைகள். அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15.9.14

Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!



Mini Story குட்டிக்கதை: குருவும், குதிரைக்காரனும்!

ஒரு பெரிய குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரைப் பிரசங்கம் செய்ய ஒரு இடத்தில் கூப்பிட்டிருந்தார்கள். பத்தாயிரம் பேர் வருவார்கள் என்றும் சொல்லியிருந்தார்கள்.

அவரை அழைத்துண்டு செல்ல  ஒரு குதிரைக்காரன் சென்றிருந்தான். அன்றைக்கு என்று பார்த்து ஊரில் பயங்கர மழை. கூட்டம் கேன்சலாகி விட்டது. எல்லோரும் கலைந்து சென்றுவிட்டார்கள்.

குரு வந்தபோது அங்கே யாருமே இல்லை.

பேசறதுக்காக நிறையத் தயார் பண்ணிட்டு வந்த குருவுக்கோ ஏமாற்றம். இருக்கிற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை.'என்னப்பா பண்ணலாம்?’னு கேட்டார்.

‘அய்யா! நான் குதிரைக் காரன்... எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்லை வெச்சிட்டுத்தாங்க திரும்புவேன்’னான்.

செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக்காரனுக்கு ஒரு ‘சபாஷ்’ போட்டுவிட்டு, அவனுக்கு மட்டும் தன் பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம்னு சரமாரியாச் சொல்லிப்  பிரமாதப் படுத்திட்டார் குரு.

பிரசங்கம் முடிந்தது. ‘எப்படிப்பா இருந்தது என் பேச்சு?’னு அவனைப் பார்த்து பெருமையாகக் கேட்டார் குரு.

‘அய்யா... நான் குதிரைக்காரன். எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க... நான் புல்லு வைக்கப் போற இடத்தில் ஒரு குதிரைதான் இருந்துச்சுன்னா, நான் அதுக்கு மட்டும்தான் புல்லு வெப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டிட்டு வர மாட்டேன்!’னான்.

அவ்வளவுதான்... மறுபடியும் செவிட்டில் அறைந்ததைப் போன்றிருந்தது குருவிற்கு!!

நீதி : மற்றவங்களுக்கு என்ன தேவையோ, அல்லது எதைச் சொன்னால் புரியுமோ அதை மட்டும் சொன்னால் போதும். புரியாத, தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்வது நம்மைத்தான் முட்டாளாக்கும் !!!
-------------------------------------------------------
வாட்ஸ் அப்பில் வந்தது. எனது நடையில் எழுதி, உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்.
---------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.9.14

பட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்!


பட்டுக்கோட்டையார் எழுதிய அசத்தலான பக்திப் பாடல்!

பக்தி மலர்

இன்றைய பக்திமலரை பட்டுக்கோட்டையார் எழுதி, டி.எம்.எஸ் தன்னுடைய கணீர்க் குரலால் பாடிய, தில்லை அம்பல நடராஜா... என்னும் பாடல் அலங்கரிக்கின்றது. அனைவரும், கண்டு, கேட்டு மகிழுங்கள். ஆமாம் பாடல் கணொளி வடிவில் உள்ளது. பாடல் இடம் பெற்ற படம் செளபாக்கியவதி (ஆண்டு 1957)

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------
பாடலின் காணொளி வடிவம்!



Our sincere thanks to the person who uploaded this video in the net
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.9.14

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!


வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்

மனவளக் கட்டுரை

11.9.2014

இனிய காலை வணக்கம் நண்பர்களே!

வாழ்வை வளமாக்கும் சிந்தனைகள்!

1. நாணயமாக இருப்பவனிடம் எப்போதும் குழந்தைத்தனம் காணப்படும்

2. உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

3. திருட்டுப் பொருளை விலைக்கு வாங்குபவன் திருடனை விட மோசமானவன்.

4. தூக்கம் எப்போது குறைய ஆரம்பிக்கிறதோ அப்போதுதான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது.

5. அறிவுக்காக செய்யப்படும் முதலீடு எப்போதுமே கொழுத்த வட்டியையே தரும்.

6. நல்ல மனைவியை விட உயர்ந்த வரமும் இல்லை. கெட்ட மனைவியை விட மோசமான சாபமும் இல்லை.

7. முதலில் மனிதன் மதுவைக் குடிக்கிறான். பின்பு மது மனிதனை குடிக்கிறது.

8. ஆயிரம் பேர் சேர்ந்து ஒரு தொழிற்சாலையைக் கட்டி விடலாம். ஒரு வீட்டைக் கட்ட ஒழுக்கமான ஒரு பெண் வேண்டும்.

9. இரண்டு கால் உள்ள எல்லோரும் நடந்து விடலாம். ஆனால் இரண்டு கை உள்ள எல்லோருமே எழுதிவிட முடியாது.

10. உழைப்பு உடலை வலிமையாக்கும். துன்பங்களே மனதை வலிமையாக்கும்.

11.ஒருவன் தான் செய்த தவறை ஒத்துக்கொள்ள வெட்கப்படக் கூடாது. ஒப்புக்கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றைவிட இன்று அதிக
அறிவு பெற்று விட்டான் என்பதே.

12. வாழ்க்கை சுவையானது. உங்கள் அறியாமையினால் அதைக் கசப்பாக்கி விடாதீர்கள்.

13. பிறரைப் பாராட்டுங்கள். பாராட்டு கிடைக்கும். பிறரை மதியுங்கள். மதிப்புக் கிடைக்கும். அன்பு செலுத்துங்கள். அன்பு தேடி வரும். இவை ஒற்றைவழிப் பாதைகள் அல்ல. இரட்டை வழிப் பாதைகள். அன்பில் வணிகத்திற்கு இடமில்லை. வணிகத்தில் அன்புக்கு இடமில்லை.

14. தனக்கென வாழ்ந்தவன் தாழ்ந்தவன் ஆகிறான். பிறருக்கென வாழ்பவன் பெருவாழ்வு வாழ்கிறான். அடக்கம் அணிகலன் மட்டுமல்ல. அறத்தின் காவலன்.

15. சொற்கள் நம் சிந்தனையின் ஆடைகள். அவற்றைக் கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக் கூடாது.

16. சோம்பேறிக்கு எல்லாமே கடினமாகத் தோன்றும். ஊக்கமுள்ளவனுக்கு எல்லாமே எளிதாகத் தோன்றும்.

17. எந்தவிதக் கொள்கையும், நோக்கமும் இல்லாத வாழ்க்கை திசைகாட்டும் கருவி இல்லாத கப்பல் நடுக்கடலில் நிற்பதற்கு ஒப்பாகும்.

18.எந்த மனிதன் தீவிரமாகவும், திடமாகவும், சிந்திக்கிறானோ அந்த சிந்தனைகளின் வளர்ச்சி கலையாகும். அவ்வாறு சிந்திக்கிறவனே கலைஞன் ஆவான்.

19. பல அறிஞர்களுடன் பழகினால் நீ அறிவாளி ஆவாய். ஆனால் பல பணக்காரர்களுடன் பழகினாலும்  பணக்காரன் ஆக மாட்டாய்.

20. இன்பத்தின் இரகசியம் எதில் அடங்கியிருக்கிறது தெரியுமா? நீ விரும்பியதைச் செய்வதில் அல்ல. நீ செய்வதை விரும்புவதில்தான்.

சொந்த சரக்கல்ல. இணையத்தில் படித்தது. நன்றாக இருந்ததால், உங்களுக்கு அதை இன்று அறியத் தந்திருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------
இரண்டு நாட்களாக எந்த அறிவிப்பும் இன்றி வகுப்பறை வெரிச் சோடிக் கிடந்தது. சென்ற ஞாயிறு & திங்கட்கிழமை (7.9.2014 & 8.9.20114ம் 
தேதிகளில்) வெளியூர் சென்றிருந்தேன். திங்கட்கிழமை இரவு திரும்பிவிடுவத்ற்குத் திட்டமிட்டிருந்தேன். வேலையின் காரணமாக நினைத்திருந்தபடி அவ்வாறு திரும்ப முடியவில்லை. அது சிற்றூர். 
கையில் மடிக் கணினியை எடுத்துச் செல்லவில்லை. ஆகவே வகுப்பறையுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. உங்களை 
இரண்டு நாட்கள் காக்க வைத்ததற்காக என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
=======================================================

8.9.14

Humour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்!


Humour: நகைச்சுவை: துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்!

சிரிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் உள்ளே வரலாம். மற்றவர்களுக்கான
பதிவு நாளை வெளியாகும்!

இன்று பதிவிடப்பெற்றுள்ள இரண்டு துணுக்குக் கதைகளுமே நகைச்சுவைக்காகப் பதிவிடப் பெற்றுள்ளது. அவற்றை நகைச்சுவைக்
கண்ணோட்டத்துடன் மட்டுமே பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------
1. துப்பாக்கியை வைத்து நடந்த திருமணம்!

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்,

அவருக்கு முன்னால் காபி இருந்தது. அவர்ஆழ்ந்த சிந்தனையில்
சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். இடையிடையே
கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று இதமாகக் கையைப்
பிடித்து “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக
அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா? 20 வருடங்களுக்கு முன்னால்
உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில்
சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து
“மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?
இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?”
என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன்: கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!!!!!

அதுக்கு அப்புறம் விழுந்த அடிகளைக் கேட்கவா வேணும்...!

------------------------------------------------------------------
2
சரியான சவுக்கடி !

ஒரு நாட்டில் ஒரு ரஷ்யர், ஒரு சீனர், ஒரு இந்தியர் ஆகிய மூவரும்
மது அருந்திய குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டனர்.

மூவருக்கும் தலா 50 சவுக்கடிகள் கொடுக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அத்துடன் அவர்கள் கேட்கும் ஏதாவது 2 கோரிக்கைகளை நிறை
வேற்றலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.

முதலில் வந்த ரஷ்யர், தனது சவுக்கடிகளை 25 ஆகக் குறைக்க
வேண்டும் என்று கோரினார். அதற்கு ஒப்புக்கொள்ளப் பட்டது.

இரண்டாவதாகத் தன் முதுகில் 2 தலையணைகளைக் கட்ட
வேண்டும் என்று கூறினார். அவ்வாறே செய்யப்பட்டது.
ஆனால் பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவர்..
பலமான காயத்துக்கு ஆளானார்.

அடுத்து சீனர்.

“எனக்கும் 50 சவுக்கடிகளைப் பாதியாகக் குறைத்து 25 அடி கொடுங்கள்” என்றார். ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரண்டாவதாகத் தன் முதுகில் 2  தலையணைகளைக் கட்டச்
சொன்னார். அவ்வாறே செய்யப்பட்டது.

15 சவுக்கடிகளில் தலையணைகள் கிழிந்து அவரது முதுகு பிளந்தது.

அடுத்து இந்தியர்.

“எனக்கு வழங்கப்பட்ட 50 சவுக்கடிகளை 75 ஆக உயர்த்துங்கள்..!” என்றார்.

அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அதற்கு

ஒப்புக்கொண்டனர்.

இரண்டாவது கோரிக்கை என்ன என்று கேட்கப்பட்டது.

“எனக்குத் தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கிக்
கட்டுங்கள்” என்றார்.

=====================================================================
மின்னஞ்சலில் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன். இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

5.9.14

எப்போதெல்லாம் திருநாள்?


எப்போதெல்லாம் திருநாள்?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம்' சகோதரிகள்  பாடிய முருகப் பெருமானின் பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
--------------------------------------------
முருகனுக் கொருநாள் திருநாள் - அந்த 
முதல்வனின் வைபவப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

கடம்பனுக் கொருநாள் திருநாள் - நல்ல 
கார்த்திகைப் பெருநாள் ஓருநாள் 
(முருகனுக் கொருநாள் ... )

வைகாசி விசாகத் திருநாள் - அந்த 
வண்ணக் கதிர்வேலன் பெருநாள் 
வடிவேல் குமரனின் திருநாள் 
சோமவாரத்தின் திங்கள் பெருநாள்

கந்த சஷ்டிக்கொருத் திருநாள் 
கந்தன் கருணைப் பொழிகின்றப் பெருநாள்
(முருகனுக் கொருநாள் ... )

சரவணன் பிறந்தத் திருநாள் - அருள் 
சந்தனம் வழங்கிடும் பெருநாள் 
செந்தூர் வாசலில் ஒருநாள் 
கந்தன் காவடி ஆடிடும் பெருநாள்

வள்ளிக் குமரனின் மண நாள் - நம் 
வாழ்வின் சுடர் ஒளிப் பெருநாள்
(முருகனுக் கொருநாள்.....)

பாடியவர்கள்: 'சூலமங்கலம்' சகோதரிகள் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
================================================

4.9.14

கவிதை: அழகு எப்போது பேரழகாகும்?


கவிதை: அழகு எப்போது பேரழகாகும்?

ஆதிகாலப் பாடல்!

இதில் கவியரசரின் பெருமை சொல்லும் ஆதிகாலப் பாடல் ஒன்றை,
அதுவும் ஆதிகாலப் பாடகர் பாடியதாக ஒன்றைப் பதிய வேண்டும்
என்று அடியவன் நினைத்தபோது, மனதில் சட்டென்று வந்து
நின்ற பாடல்:

"செந்தமிழ் தேன்மொழியாள் – நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள்"

ஆமாம், கதை, வசனம், பாடல்கள் மற்றும் தயாரிப்பாளர் என்று
முழுமையாக முன்நின்று கவியரசர் கொடுத்த படமான
 'மாலையிட்ட மங்கை' என்ற படத்தில் வரும் பாடல்தான்
அந்தப் பாடல்.

அந்தப் படத்தில் இன்னும் ஒரு குறிப்பபிடத்தக்க விஷயம்,
நகைச்சுவை நடிகை மனோரமா அவர்கள் திரையுலகிற்கு
அறிமுகமானதும் அந்தப் படத்தின் மூலம்தான்.

பள்ளத்தூரைச் சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள்
அந்தக் காலகட்டத்தில் அங்கே நாடகங்களில் நடித்துக்
கொண்டிருந்தார். அவரது திறமையை உணர்ந்த கண்ணதாசன்
அவர்கள், 'மனோரமா' அவர்களைப் பிடித்து இழுத்துவந்து தன்
படத்தில் வாய்ப்புக்கொடுத்து நடிக்க வைத்தார். அதுவும்
நகைச்சுவைப் பாத்திரத்தில்!

படத்தில் நாயகனாக நடித்தவரைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை!


ஆதிகாலத்தில் தமிழில் பின்னணிக் குரல் இன்றிச் சுயமாகவே பாடி நடித்துவந்த P.U.சின்னப்பா M.K.தியாகராஜ பாகவதர் வரிசையில்
T.R. மகாலிங்கம் அவர்களும் பிரபலமானவர்.

அப்படியொரு அசத்தலான குரல் அவருக்கு. அவர் மதுரைக்கு
அருகில் வைகை நதியைத் தொட்டாற்போல் இருக்கும்
சோழவந்தான் என்ற ஊரைச் சேர்ந்தவர்

மாலையிட்ட மங்கை கவியரசரின் சொந்தப் படமென்ற
காரணத்தாலும், கதை, வசனமும் அவரே எழுதினார்  என்பதாலும், பாடல்களை சிறப்பாக எழுதி, உரிய இடத்தில் அவரே சேர்க்க
வைத்திருந்தார்.

படம் வெளிவந்த ஆண்டு 1958

படத்தில் வந்த அத்தனை பாட்டுக்களுமே பிரபலமாகித்
தமிழகமெங்கும் படம் வந்த காலத்தில் ஒலித்து, மக்களைப்
பரவசப்படுத்தின!

அவைகளில் மிகவும் சிறந்த பாடலான
"செந்தமிழ் தேன் மொழியாள் - நிலாவெனச்சிரிக்கும் மலர்க்
கொடியாள்" என்ற பாடலை உங்களுக்காக இன்று
பதிவிட்டுள்ளேன். படித்து மகிழுங்கள்!
--------------------------------------------
"விருத்தம்:
சில்லென்று பூத்த சிறுநெருஞ்சிக் காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்திவழி போனாளே
நின்றதுபோல் நின்றாள்; நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி; நிலைக்குமோ நெஞ்சம்?
மணம் பெறுமோ வாழ்வே.........

பாட்டு
செந்தமிழ் தேன்மொழியாள் - நிலாவெனச்
சிரிக்கும் மலர்க் கொடியாள்
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிடத் தலைகுனிவாள்
(செந்தமிழ்)

காற்றினில் பிறந்தவளோ - புதிதாய்
கற்பனை வடித்தவளோ
சேற்றினில் பிறந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ - அவள்.....
(செந்தமிழ்)

மேகத்தைக் கூந்தலில் முடித்தவளோ - விண்
மீன்களை மலராய் அணிந்தவளோ
மோகத்திலே இந்த உலகம் யாவையும்
மூழ்கிடச் செய்யும் மோகினியோ - அவள்....
(செந்தமிழ்)

கண்களில் நீலம் விளைத்தவளோ - அதைக்
கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைததவளோ - அவள்...
(செந்தமிழ்)"

படம்: மாலையிட்ட மங்கை - வருடம் 1958
பாடல் வரிகள்: கவியரசர் கண்ணதாசன்
பாடி நடித்தவர்: T.R மகாலிங்கம் (நாயகி–மைனாவதி)
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் - பி.ராமமூர்த்தி
இயக்கம்: G.R.நாதன்

பாடல் எளிமையாக, பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதப் பெற்றுள்ளது. ஆகவே இதற்கு விளக்கம் எழுதுவது அறிவீனம். எழுதவில்லை.

முத்தாய்ப்பான வரிகள்:

”பெண்ணுக்குப் பெண்ணே பேராசை கொள்ளும்
பேரழ கெல்லாம் படைத்தவளோ”

என்று எழுதினார் பாருங்கள், அதுதான் இந்தப் பாடலின் முத்தாய்ப்பான வரிகளாகும்!

ஒரு பெண்ணே பேராசை கொள்ளும் அழகு ஒருத்திக்கு இருக்கும்போதுதான் அது பேரழகாகும். அதை மனதில் வையுங்கள்!
                                 
அன்புடன்,
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

3.9.14

மனதை மயக்கிய மந்திரச் சொல் - பகுதி 2



மனதை மயக்கிய மந்திர்ச் சொல் - பகுதி 2

இந்தக் கட்டுரையின் முன் பதிவைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வந்து இதைப் படிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------------------------------------
அவர் தன்னுடைய இளம் வயதில் (20 வயதில்) முதன் முதலில்
அவராகவே ஒரு மேடை அமைத்து, காங்கிரஸ் கட்சிக்காக தனியாக மேடையில் பேசியபோது கீழே அமர்ந்து கேட்டவர்கள் ஏழுபேர்கள்
தான். அந்த ஏழு பேர்களும் இவருடைய உறவினர் வீட்டுப்
பையன்கள். இவர் பேசுகிறாரே என்று கேட்க வந்தவர்கள்.

மைக் செட்டெல்லாம் இல்லாத காலம் அது.

பின்னாட்களில் ஏழாயிரம், எழுபதாயிரம் பேர்கள் அமர்ந்த பல
கூட்டங்களில் இவர் பேசினார் என்பது ஒரு தனி வரலாறு!

அந்தக்காலத்தில் காங்கிரஸ் கூட்டமென்றால் போலீஸ் கெடுபிடி அதிகம்.அராஜகம் அதிகம். இவர் பேச ஆரம்பித்ததும், உள்ளூர்
காவல் நிலையத்தலைமைக் காவல்காரர் அங்கே வந்து விட்டார். ஆங்கிலேயர்கள் நம்மை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்
அது. ஏகப்பட்ட கெடுபிடிகள் நிறைந்த சமயமும் கூட!

ஏட்டய்யாவைக் கண்டவுடன் முன்னால் அமர்ந்து கேட்ட ஏழு
பேர்களும் எழுந்து ஓடி விட்டார்கள். ஆனால் நமது நாயகர் மட்டும்
விடாமல் தன் பேச்சைத் தொடர்ந்தார்.

“நிறுத்து” என்று ஏட்டையா குரல் கொடுத்தவுடன் இவர்
நிறுத்தவில்லை. மேடையில் இருந்தவாறே குரல் கொடுத்தார்,

“ஏன் நிறுத்த வேண்டும்?”

தன் சக தோழர்களூடன் (போலீஸ்காரர்களுடன்) நின்று
கொண்டிருந்த ஏட்டு பதில் சொன்னார், ‘144 தடை உத்தரவு
இருக்கிறது”

உடனே இவர் சொன்னார், “உத்தரவைக் காட்டுங்கள்”

ஏட்டைய்யா திகைத்துப் போய்விட்டார். அந்தக் காலத்தில்
ஏட்டைய்யா என்பது பெரிய பதவி. யாரும் அதுவரை அப்படிக்
கேட்டதில்லை.

அதைத் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த அவருடைய
மேலதிகாரி சப் இன்ஸ்பெக்டர் சொன்னார்,

“காட்டச் சொன்னால் நம் வழக்கப்படி அதைக் காட்டைய்யா”

ஏட்டைய்யா உடனே மேடை ஏறிக்காட்டினார்.

எதை? உத்தரவையா? இல்லை, தங்கள் அராஜகத்தை!

அடித்து, உதைத்து, கையில் விலங்கு மாட்டி ஸ்டேசன் வரை
தெருவில் இழுத்துச் சென்று எச்சரிக்கை செய்து, பிறகு நமது
நாயகரைப் போலீசார் விட்டு விட்டார்கள்
---------------------------------------------------
1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தேதி.

இந்திய மக்களின் விடுதலைப் புரட்சி துவங்கிய நேரம்.
‘வெள்ளையனே வெளியேறு” என்ற கோஷம் நாடெங்கும்
கேட்கத் துவங்கியது.

நமது நாயகரும் சும்மா இருக்கவில்லை. தேவகோட்டை
வட்டாரத்தில் பல இடங்களில் ஆவேசமாகப் பேசிப் பெருங்
கூட்டத்தைத் திரட்டிக் கொண்டிருந்தார்.

போலீசிற்குத் தலைவலியாக இருந்தது. இவரைக் கைது
செய்து உள்ளே போட்டுவிட்டால் பிரச்சினை தீரும் என்று
எதிர்பார்த்தார்கள். பகலில் இவரைச் சுற்றி எப்போதும்
500 அல்லது 600 பேர்களுக்குக் குறையாத இளைஞர்கள் கூட்டம்

அதனால் ஒரு இரவு, நடுநிசி நேரத்தில் பத்து லாரி போலீசார்
புடைசூழ, இவரைக் கைது செய்து, தேவகோட்டையில் இருந்து
22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருவாடானை என்ற நகரத்தில்
உள்ள சிறைக்குக் கொண்டுபோய் அடைத்து வைத்துவிட்டார்கள்

அவ்வளவுதான், அடுத்த நாள் ஊரே கொந்தளித்து விட்டது.
தேவகோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற ஊர்களில் உள்ள
மக்கள் சுமார் 20,000 பேர்கள் ஒன்று திரண்டு, திருவாடானை
சிறையை உடைத்து இவரை மீட்டுக் கொண்டு வந்து விட்டார்கள்.

மக்களின் மாபெரும் எழுச்சியில் நடந்த இந்த சிறை மீட்பு, 

இந்திய அரசியலில் முதன் முறையாக நடந்ததாகும். இந்தியாவில்
வேறு யாருக்கும் கிடைக்காத பெருமை இவருக்குக் கிடைத்தது.

அதே காலகட்டத்தில் திரு.ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்கள்
சிறையில் இருந்து தப்பிச் சென்றதைப் பெருமையாகப் பேசிய
இந்திய மக்கள், இவருடைய சிறை மீட்புச்செய்தியைக்
கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்கள் என்பது வருந்த
வேண்டிய விஷயம்.

தமிழகத்தின் தென்கோடியில் நடந்த இந்த அறிய சம்பவம்,
இந்தியா முழுவதும் ஊடக விளம்பரம் இல்லாமல் அமுங்கிப்
போய்விட்டது.
---------------------------------------------------------------------------------------------------------
அதைத் தொடர்ந்து தேவகோட்டையில் நடந்த சுதந்திரப்
போரட்டத்தில், போராட்ட வீரர்கள் கட்டுக்கடங்காமல் கூட,
போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடுகள் நடத்த, பெரிய கலவரம்
ஏற்பட்டு, உள்ளூர் நீதி மன்றம் தீக்கிரையாக - பிறகு நடந்த
தெல்லாம் பெரிய கதை அதை விவரித்தால் பத்துப் பக்கங்கள்
எழுத வேண்டும். ஆகவே தவிர்த்திருக்கிறேன்
----------------------------------------------------------------------------------------------------------
1944ஆம் ஆண்டில் ‘புத்தகப்பண்ணை' என்ற பதிப்பகத்தைத் 
துவங்கி, எண்ணற்ற தமிழ்ப் புத்தகங்களைச் சின்ன அண்ணாமலை 
அவர்கள் வெளியிட்டார். இன்று சென்னையில் உள்ள அத்தனை பதிப்பகங்களுக்கும் முன்னோடி அவர்தான்.

நாமக்கல் கவிஞர் திரு.ராமலிங்கம் பிள்ளை, ராஜாஜி, கல்கி
ஆகியோர் போன்று பல பெரியவர்களின் எழுத்துக்களை வாங்கிப்
பதிப்பித்து வெளியிட்டார்.

அரசியலில் இருந்ததால், புத்தகங்களில் லாபம் பார்க்கத்
தெரியாமல், புத்தக வெளியீட்டு விழாக்களிலும், தன்னைத் தேடிவரும், தேசபக்தர்கள், எழுத்தாளர்களுக்கு உதவுவதிலும் அதிக நேரத்தைச் செலவிட்டார்.

ஒரு சமயம் ராஜாஜியின் மந்திரி சபையில் இருந்த டாக்டர்
டி.எஸ்.எஸ்.ராஜன் அவர்கள் இவரிடம் “என்ன செய்து
கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டபோது இவர் சொன்னாராம்.

“புத்தகம் போட்டுக்கொண்டிருக்கிறேன்”

“அது சரி, சாப்பாட்டிற்கு என்ன செய்கிறீர்கள்?” என்று அவர் கேட்டாராம்

“என் மனைவியின் நகைகளை விற்று சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்”
என்று இவர் பதில் சொல்ல அது அவர் மூலமாக ராஜாஜி அவர்களின்
காதிற்கு எட்ட, அடுத்த தினமே ராஜாஜி அவர்கள் இவரின் வீட்டிற்கு வந்துவிட்டாராம். வந்ததோடு இல்லாமல், இனிமேல் நகைகளை
விற்பதில்லை என்று உறுதிமொழி வாங்கிக்கொண்டும் போனாராம்.
------------------------------------------------------------------------------------------------
திரு.சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றியும், கவியரசர்
கண்ணதாசன் அவர்களைப் பற்றியும் எவ்வளவு பக்கங்கள்
எழுதினாலும் நிறைவு செய்ய முடியாது. இருவரும்
மாமேதைகள். பன்முகத் திறமைகள் கொண்டவர்கள்.

சின்ன அண்ணாமலை அவர்கள், சுதந்திரப்போராட்ட வீரர், சிறந்த,
தமிழகம் அறிந்த காங்கிரஸ்காரர், ராஜாஜி, சத்தியமூர்த்தி, காமராஜர்
போன்ற தலைவர்களை நண்பர்களாகப் பெற்றவர். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றவர்களிடமும் நட்பு பாராட்டிப்
பழகியவர். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், பதிப்பாளர்,

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களை சரித்திரப்படங்களில்
இருந்து சமூகப்படங்களுக்குக் கொண்டுவந்தவர் சின்ன அண்ணாமலை அவர்கள்தான் (படம்: திருடாதே), அதேபோல நடிகை சரோஜாதேவிக்கு
முதல் பட வாய்ப்பு வாங்கிக்கொடுத்ததும் அவர்தான் (படம்:
தங்கமலை ரகசியம், பிறகு திருடாதே படம்)

திரு. சிவாஜி கணேசன் அவர்களோடு நெருங்கிய தொடர்பு வைத்திருந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்கள், சிவாஜி ரசிகர் மன்றங்கள் அனைத்திற்கும் ஒருங்கினைப் பாளராக இருந்தார்.

சரியாக அறுபது ஆண்டுகளே இம்மண்ணில் வாழ்ந்த
சின்ன அண்ணாமலை அவர்களின் பிறந்த தேதியும், 
மறைவுத் தேதியும் ஒன்றாகும்

பிறந்தது: 18.6.1920
இயற்கை எய்தியது: 18.6.1980

ஆமாம் மணிவிழா நாளன்று, மணிவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்பொதே பல உறவினர்கள், நண்பர்கள், பிரபலங்கள்
மத்தியில் மாரடைப்பின் காரணமாக அவர் உயிர் பிரிந்தது.
(Massive heart attack)

சென்னை நல்லி சில்க்ஸ் திரு.நல்லி குப்புசாமி செட்டியார் அவர்கள்,
1944ல் சின்ன அண்ணாமலை அவர்கள் துவங்கிய புத்தகப்பண்னை'
கடைக்குப் பக்கத்துக் கடைக்காரர். அதோடு அவருடைய நெருங்கிய
நண்பர் மற்றும் அபிமானி.அவருக்குத் தமிழ்ப் புத்தகங்களின்மேல்
ஆர்வம் ஏற்பட்டதற்கு நமது நாயகரே காரணமாவார். அன்றிலிருந்து
அவர் இவருடைய குடும்ப நண்பர்

அதேபோல, இன்று சென்னையில் உள்ள பிரபல பதிப்பாளர்களான,
வானதி பதிப்பகம் திரு.திருநாவுக்கரசு அவர்கள், அருணோதயம்
பதிப்பகம். திரு அருண் அவர்கள், பாரதி பதிப்பகம் திரு.வைத்தியநாதன் அவர்கள், பதிப்பளர்.திரு சீனி விஸ்வநாதன் அவர்கள், மற்றும் பல பதிப்பாளர்கள் எல்லாம் சின்ன அண்ணாமலை அவர்களின்
சீடர்கள் ஆவார்கள்.

எழுத்தாளர் சங்கத்தலைவர் திரு.விக்கிரமன் அவர்கள்
சின்ன அண்ணாமலை அவர்களின் நெருங்கிய நண்பராவார்.

சின்ன அண்ணாமலை அவர்கள் என் தந்தையாரின் நெருங்கிய 
நண்பராவார். அவரை நான் இரண்டு முறைகள் 
சந்தித்திருக்கிறேன் (1972ல்)
-----------------------------------------------------------------------------------------------------------------
பதிவில் எழுதுவதற்காக சின்ன அண்ணாமலை அவர்களின்
சுய சரிதைப் புத்தகத்தையும், அவருடைய புகைப்படத்தையும் எனக்கு,
சின்ன அண்ணாமலை அவர்களின் பேரன் திரு. கேஆர். திலக் alias மீனாட்சிசுந்தரம் அவர்கள் தந்து உதவினார். அவருடைய
உதவியால்தான் இந்தக் கட்டுரைக்குப் பட்டை தீட்ட முடிந்தது.
அவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்


-----------------------------------------------------------

-----------------------------------------------------------------------------------------
அந்த சுய சரிதைப் புத்தகத்தை பற்றிய விவரம்:

தலைப்பு:
“சொன்னால் நம்பமாட்டீர்கள்”
வெளியீடு:
குமரன் பதிப்பகம்
எண்3, முத்துக் கிருஷ்ணன் தெரு,
பாண்டி பஜார்
சென்னை - 600 017

பக்கங்கள் 240
விலை: ரூ.60:00

புத்தகம் படு சூப்பராக - அசத்தலான நடையில் இருக்கும்
வாங்கிப் படித்து இன்புற வேண்டுகிறேன்
-----------------------------------------------------------------------------

---------------------------------------------------------------------------------------------
திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் எழுதி, குமுதம் இதழுடன் 
இணைப்பாக முன்பு ஒரு காலத்தில் வந்த புத்தகத்தில் இருந்து, 
சில சுவையான சம்பவங்களை நீங்கள் அறியத் தரவுள்ளேன்.. 
கட்டுரையின் நீளம் கருதி அதைத் தனிப்பதிவாக தரவுள்ளேன்.. 
அது இதன் பகுதி 3

அது அடுத்த வாரம் வெளிவரும்
----------------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!


2.9.14

மனதை மயக்கிய மந்திரச் சொல்


******************************************************************************
மனதை மயக்கிய மந்திரச் சொல்

விடுபட்டவைகள் - பகுதி 1

என்னுரை

தமிழ்மணம் அரங்கில் 23.3.2008 முதல் 30.3.2008 வரை நட்சத்திர வாரப் பதிவுகளாக மொத்தம் 33 இடுகைகளைப் பதிந்திருந்தேன். அனைவரும் ரசித்துப் படித்து என்னை மிகவும் ஊக்குவித்துப் பாராட்டினார்கள். என்றும் மறக்க முடியாத வாரமாக அது அமைந்தது.

இறுதிப் பதிவில் எழுத முடியாமல் விடுபட்டவைகள் என்று சில மேதைகளின்
பெயர்களையும், மற்றும் சில செய்திகளையும் குறிப்பிட்டிருந்தேன்.

அதைப் படித்த வலையுலக நண்பர்கள் திரு.வடுவூர் குமார், 
திரு.நெல்லை, திரு.இலவசக்கொத்தனார், திரு.ஆயில்யன், திரு.மதுரையம்பதி, திரு.நா.கணேசன், திரு.ராம்ஸ், 
திரு.தெக்கிக்காட்டான்,  திரு.கோவி.கண்ணன், திரு.காசி ஆறுமுகம், திரு.சுரேகா, திருமதி.துளசி கோபால், திரு.குமரன், 
திரு.நாகை சங்கர், திருமதி.மீனா, திரு.ரவி, திரு.யோகன் பாரீஸ் 
போன்று பல அன்பர்கள் விடுபட்டதையும் தொடர்ந்து எழுதுங்கள்
என்று பின்னூட்டத்தில் கேட்டுக்கொண்டார்கள்.

நட்சத்திர வாரத்தில் பல முறைகள் வந்து என்னை மிகவும் 
ஊக்குவித்த திரு.காசி ஆறுமுகம் அவர்களிடம் விடுபட்டதில் 
எதை முதலில் எழுத என்று கேட்டபோது, திரு சின்ன அண்ணாமலை அவர்களைப் பற்றி எழுதுங்கள், தெரிந்து கொள்வோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அவருடைய தெரிவு, உண்மையில் அற்புதமான தெரிவாகும்.

திருவாளர் காசி ஆறுமுகம் அவர்கள் கேட்டிருக்கிறார். ஆகவே
சிரத்தையுடன் சற்று விரிவாக எழுதுவோம் என்று என்னிடம் இருந்த பல குறிப்புகளை ஒருங்கினைத்துச் சின்ன அண்ணாமலை அவர்களின் மேன்மையை என்னால் இயன்றவரை எழுதியுள்ளேன்

இந்தக்கட்டுரையின் மொத்தப்பக்கங்கள் A4 - Sizeல் 25 பக்கங்களாகும்.
இதை எழுதுவதற்கு எடுத்துக் கொண்ட சிரத்தையின் காரணமாக
கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. காலதாமதத்திற்கு அனைவரும்
அடியவனை மன்னிக்க வேண்டுகிறேன்

என்னுடைய வியாபார அலுவல்கள் மற்றும் சொந்த அலுவல்களுக்
கிடையே உங்கள் அனைவரின் மேல் உள்ள பிரியத்தின் காரணமாகவும், எழுத்தின்மேல் உள்ள ஆர்வத்தின் காரணமாகவும் சற்று விரிவாகவே
இதை எழுதியுள்ளேன். அனைவரும் படித்து, உங்கள் கருத்தை ஒருவார்த்தையில் பின்னூட்டம் இட்டால் எழுதியதன்
பயனை அடைவேன்.

நன்றி,
வணக்கத்துடன்
SP.VR. சுப்பையா

Over to Katturai
---------------------------------------------------------------------------------
இந்தப் பதிவு அன்பர் திரு.காசி ஆறுமுகம் அவர்களுக்கு சமர்ப்பணம்
---------------------------------------------------------------------------------
இது ஒரு மீள் பதிவு. அதை மனதில் கொள்ளவும். ஆறு ஆண்டுகளுக்கு 
முன்பு எனது மற்றொரு பதிவான பல்சுவைப் பதிவில் வெளிவந்ததாகும்
இது. உங்களுக்கு அறியத்தரும் பொருட்டு அதை இன்று வலையில் 
ஏற்றியுள்ளேன்
===============================================
மனதை மயக்கிய மந்திரச்சொல்!

சின்ன அண்ணாமலை

சின்ன அண்ணாமலை - இந்த எட்டெழுத்துப்பெயர் அந்தக்காலத்தில்
ஒரு மந்திரச் சொல்

அந்தக்காலம் என்பதை 1940ஆம் ஆண்டு துவங்கி 1980ஆம்
ஆண்டு வரை என்று எடுத்துக் கொள்ளுங்கள். தமிழக அரசியல்
மற்றும், இலக்கிய மேடை ரசிகர்களை சுமார் நாற்பது ஆண்டுகள்
மதிமயங்க வைத்த பெயர் அது.

கவிதைக்கு ஒரு கண்ணதாசன் என்றால், மேடைப் பேச்சிற்கு
ஒரு சின்ன அண்ணாமலை என்றிருந்தது. அவருடைய
பேச்சிற்குப் பல தலைவர்களும், எழுத்தாளர்களும் ரசிகர்கள்.
ராஜாஜி, காமராசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா,
நாமக்கல் கவிஞர், கல்கி, என்று பட்டியல் நீளும்.

ஆவேசமாகப் பேசுவார். அசத்தலாகப்பேசுவார். பல குட்டிக்கதைகள், உவமானங்களுடன் பேசுவார். சிரிக்கச் சிரிக்கப்பேசுவார். அவர்
பேசுகின்ற மேடைகளில் மற்ற பேச்சாளர்களின் பேச்சு எடுபடாமல் போய்விடும். அப்படிப்பட்ட அற்புதமான பேச்சாளர் அவர். பேச்சை
வைத்தே பல உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

18.6.1920ஆம் தேதியன்று உ.சிறுவயல் என்னும் செட்டிநாட்டுக்
கிராமத்தில் பிறந்தவர். சின்ன அண்ணாமலை. இயற்பெயர் நாகப்பன்.
தான் பிறந்த ஊரை விட்டு செட்டி நாட்டின் மற்றொரு ஊரான தேவகோட்டைக்குச் சிறு வயதிலேயே சுவீகாரம் வந்து விட்டார்.
சுவீகாரம் வந்த இடத்தில் அண்ணாமலை ஆனார்.

பின்னாளில் காங்கிரசில் முன்பே ஒரு அண்ணாமலை இருந்ததால்,
ராஜாஜி அவர்களால் சின்ன அண்ணாமலை என்று நாமகரணம் சூட்டப்பெற்றார்.

சிறு வயதில் மலேசியாவில் 4 ஆண்டுகள் படித்தவர், பிறகு ஏழு
ஆண்டுகள் - அதாவது பள்ளி இறுதியாண்டுவரை தேவகோட்டையில்
தான் படித்துத் தேர்ந்தார்.

அந்தக் காலத்து வழக்கப்படி அவருக்குப் சிறு வயதில் திருமணம்
ஆகிவிட்டது. திருமணம் ஆகும்போது அவரின் வயது 13.
அவர் மனைவியின் வயது 12.

செட்டிநாட்டின் இன்னொரு பிரபலமான கம்பன் அடிப்பொடி
திரு.சா.கணேசன் அவர்களின் உறவினர் ஆவார் அவர்.
சிறுவயதில் சுதந்திரப்போராட்ட இயக்கத்தில் தீவிரமாக
இயங்கிய சா.கணேசன் அவர்களால் அவருக்கும் சுதந்திரப்
போராட்டத்தில் சின்ன வயதிலேயே மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டு
முழு காங்கிரஸ்காரராக மாறி, கடைசிவரை காங்கிரஸ்
இயக்கத்திலேயே இருந்தவர் அவர்.

சா.கணேசன் அவர்களின் காரைக்குடி வீட்டிற்குக் காந்திஜி
அவர்கள் வந்திருந்தபோது (வருடம் 1930), கண்ட மாத்திரத்திலேயே
அவர் மேல் பக்தி கொண்டு, காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து சுதந்திரத்திற்காகப் போராடிய எண்ணற்ற வீரர்களில் அவரும்
ஒருவர்.

----------------------------------------------------------------------------------
முதல் சொற்பொழிவு

தேவகோட்டை உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போது, மாணவர்
கூட்டத்தில்,  'செல்வம்' என்ற தலைப்பில் பேசுவதற்காக, அந்தக் காலகட்டத்தில் ஆனந்தவிகடனின் ஆசியராக இருந்த கல்கி அவர்கள் எழுதியிருந்த 'பெருளாதாரம், பணம், செல்வம்' என்ற தலையங்கத்தை மனப்பாடம் செய்துகொண்டு போய்ப் பேச, முதல் பேச்சிலேயே
பள்ளியில் பிரபலமாகிவிட்டார்.

தொடர்ந்து கல்கி அவர்களின் எழுத்துக்களை விடாமல் மனனம்
செய்ய ஆரம்பித்துள்ளார்.

பேசும் மேடைகளில் எல்லாம் ஆரம்ப காலத்தில் அது கை
கொடுத்திருக்கிறது. விஷயம் அனைத்தும் கல்கியுடையதாக
இருக்கும். குரல் மட்டும் இவருடையதாக இருக்கும்.

ஒருசமயம் ராஜாஜி அவர்கள் தேவகோட்டைக்கு வந்திருந்தபோது, அடித்துபிடித்துச் சான்ஸ் வாங்கி அந்தமேடையில் திரு ராஜாஜி
அவர்களின் முன்னிலையில் சின்ன அண்ணாமலை அவர்கள்
சிறப்பாகப் பேச, கூட்டத்தின் கரகோஷம் காதைப்பிளந்தது.
பேசி முடித்துக் குனிந்து ராஜாஜியின் பாதத்தைத் தொட்டு இவர்
வணங்க, ராஜாஜி சொன்னாராம் “நன்றாக மனப்பாடம்
செய்திருக்கிறாய்”

புத்திக்கூர்மையுள்ளவரல்லவா அவர், ஆகவே கண்டுபிடித்துவிட்டார்.
இவர் சற்றுக் கலக்கத்துடன் ராஜாஜின் பின்புறம் இருந்த இருக்கையில்
அமர, அருகில் இருந்தவர் மெதுவாகக் கேட்டாராம்.

“இதையெல்லாம் எதில் படித்தீர்கள்”

“ஏன்?”

“இல்லை, இதையெல்லாம் நானும் எதிலோ படித்தமாதிரி
இருக்கிறது!”

நமது நாயகர் சின்ன அண்ணாமல், இனி மறைக்கூடாது என்று
உண்மையைச் சொன்னார்

“ஆனந்த விகடனில் படித்தது”

“யார் எழுதியது தெரியுமா?”

“கல்கி”

“கல்கியைத் தெரியுமா?”

“தெரியாது நான் பார்த்ததில்லை”

“பார்த்தால் என்ன செய்வீர்கள்?”

“பார்த்தால் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்யலாம் என்றிருக்கிறேன்”

இதுவரை தொடர்ந்து கேட்டுக்கொண்டே வந்த அவர் சொன்னார்,
“ சரி, அப்படியானால் என்னையே நமஸ்காரம் பண்ணுங்க!”

இவர், ஏன்?” என்று அவரிடம் கேட்க, அவர் மெதுவாகச் சொன்னாராம்:

“நான்தான் அந்தக் கல்கி!”
-------------------------------------------------------------------------------------
(தொடரும்)

பதிவின் நீளம் கருதியும், உங்களின் பொறுமை மற்றும் படிக்கும் நேரம் கருதியும் இன்று இத்துடன் நிறைவு செய்கிறேன். பதிவின் தொடர்ச்சி
அடுத்து வரும்.

அன்புடன்
வாத்தியார்
=======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!