மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.9.12

Devotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்?

 Devotional: ஈறாறு கண்ணில் எதைப் பொழிகின்றான் அவன்?
பக்தி மலர்

திருச்செந்தூரில் உறையும் சண்முகநாதனை யார் பாடினாலும், கேட்பவர்களின் மனம் குளிரும். இன்று புஷ்பவனம் குப்புசாமி சண்முகனைப் பாடி நம் மனதைக் குளிர வைக்கின்றார். கேட்டு மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்

----------------------------------
காணொளி
Our sincere thanks to the person who uploaded this video clipping in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கவிதைச் சோலை: காலத்தின் போக்கிலே பொழுதைக் கழிப்பவன் யார்?

பொய்யான கற்பனைப் போக்கிலே போனவன்
    புகழையும் இழப்ப துண்டு
         புகழெனும் போதையில் உண்மையை மறப்பவன்
    புத்தியை இழப்ப துண்டு
மெய்யான ஞானியும் விதிவிட்ட காற்றிலே
    விலையாகிப் போவ துண்டு
         விவரமே இல்லாமல் காலத்தின் போக்கிலே
    வீணர்கள் வாழ்வ துண்டு
மையாருங் கண்ணினால் மைந்தர்க்குச் சரியான
    வழிகாட்டும் வஞ்சி மயிலே!
         மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

                   - கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27.9.12

உன்னால் முடியும் ராசா!

உன்னால் முடியும் ராசா! 

முயன்றால் முடியாதது என்ன இருக்கிறது?

கீழே உள்ள படங்களைப்  பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். நம்மால் முடியாதது என்ன இருக்கிறது?

+++++++++++++++++++++++++++++++++++++++++
Don't have a spoon
                                                    You can fix that!



Seatbelt broken? You can fix that!


 

New TV too big for the old cabinet? you can fix that!





Electrical problem? You can fix that!

 



Car stereo stolen?  You can fix that!
 


Bookshelf cracking under the weight? You can fix that!




Can't afford a real GPS?
You can fix that!


 

No ice chest?  
You can fix that!








Can't read the ATM screen?
You can fix that!







Car imported from the wrong country? 
You can fix that!

 
Satellite goes out in the rain?
I can fix that!



Electric stove broken and can't heat coffee?
you can fix that.




Wiper motor burned out?
you can fix that!
 
Exhaust pipe dragging? 
You can fix that!

 
Gotta feed the baby AND do the laundry?
you can fix that!




 Cables falling behind the desk?
                                                   You can fix that!



Out of diapers? You can fix that! 




ஜோதிடத்தையே படித்துக்கொண்டிருந்தால் அலுத்து விடாதா? ஒரு மாறுதலுக்காகத்தான் இந்தப் பதிவு!

இறக்குமதிச் சரக்கு
மின்னஞ்சலில் வந்தது!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

26.9.12

Astrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா?!

Astrology: தலைமைப் பதவி என்ன தானாகக் கிடைக்குமா?!

எல்லா மனிதர்களுக்குமே ஒரு பொதுவான மனக்குறை உண்டு!

எவ்வளவுதான் உழைத்தாலும் அல்லது பாடுபட்டாலும் நாம் நினைத்த அளவிற்கு முன்னுக்குவர முடியவில்லையே என்பதுதான் அந்தக் குறை!

இங்கே முன்னுக்கு என்பது பணத்தைமட்டும் வைத்து அல்ல!

தலைமைப் பதவிக்கு வந்து அமர்வது. செல்வாக்கு, மற்றும் புகழோடு இருப்பது. பதவி, பட்டங்களைப் பெறுவது. அதை மனதில் வையுங்கள்

சிலர் வெளியே சொல்வார்கள். சிலர் சொல்லாமல் மனதிற்குள் வைத்திருப்பார்கள்.அது இல்லாமல் இருப்பவர்கள் அபூர்வம்! அது
இயற்கையானதுதான்.

”கடுமையாக உழைக்கிறேன் என்று சொல்லி பதினெட்டு மணி நேரம் தினமும் மண் வெட்டுவதால் ஒரு பிரயோஜனமுமில்லை. உழைப்போடு அறிவும் சேரும்போதுதான் முன்னுக்கு வரமுடியும்!” என்று ஒரு சிந்தனையாளன் சொன்னான்.

சிலர் அறிவோடும், திறமையோடும் வேலை செய்வார்கள். ஆனால் எப்போதுமே இரண்டாம் நிலையில்தான் இருப்பார்கள். அவர்களுடைய
உழைப்பால் விளைந்தவற்றையெல்லாம், அவனுக்கு மேலே உள்ளவன் சமர்ப்பித்து தான் வேலை பார்க்கும்  நிறுவனத்தில் நல்ல பெயரைத்
தட்டிக்கொண்டு செல்வதுடன், அதனால் கிடைக்கும் உயர்வையும் அவனே அனுபவிப்பான். நம்ம ஆளுக்கு ஒன்றும் கிடைக்காது.

இது ஒருவகை!

சிலர் இப்படிச் சொல்வார்கள், “நான் வீட்டிற்கு முத்தவன். பெரிய குடும்பதைச் சேர்ந்தவன். வீட்டில் உள்ள அனைவருக்காகவும் பாடுபடுகிறேன். ஆனால் ஒரு பிரயோஜனமும் இல்லை. எங்கள் வீட்டில் உள்ள இரண்டாவது மகனுக்கு எல்லாம் போய்விடுகிறது. எனக்கு வீட்டில் உரிய மதிப்பும் இல்லை. மரியாதையும் இல்லை”

அதற்கு வேறு சில காரணங்களும் இருக்கலாம். ஆனால் குறைகுறைதான். இது இரண்டாவது வகை!

ஊருக்காகப் பாடுபடுபவர்களுக்கும் இதே கதிதான். உண்மையாக உழைப்பவன் பஞ்சாயத்து ஒன்றியத்திற்குத் தலைவனாக வரமாட்டான்.
ஒன்றும் இல்லாத டகால்டி ஆசாமி தலைமைப் பதவியில் வந்து அமர்ந்து கொண்டு விடுவான்.

மாங்கு மாங்கு என்று அருமையாக எழுதிக்குவித்தவனுக்கு விருது கிடைக்காது. ஒன்றும் இல்லாமல் ஒரே ஒரு புத்தகத்தை எழுதியவன்,
விருதை வாங்கிக் கொண்டு  போய்விடுவான்.

சுமார் 250 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு  ஒரு முறை கூட சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்ததில்லை.

அதைவிட அருமையான உதாரணம் ஒன்று சொல்லலாம்.

மகாத்மா காந்தியை எடுத்துக்கொள்வோம். 1869ஆம் ஆண்டு பிறந்த காந்திஜி சுமார் 50  ஆண்டுகாலத்திற்கு மேல் (அவருடைய இளமைக் காலத்தைக் கழித்து விடுங்கள்) இந்த நாட்டிற்காகப் பாடுபட்டிருக்கிறார். பல துன்பங்களை அனுபவித் திருக்கிறார். அவர்  கடைபிடித்த அஹிம்சைப் போராட்டம்தான் நமக்கு சுதந்திரத் தைப் பெற்றுத் தந்தது. அனால் அவருக்குக் கிடைத்தது ஒன்றே ஒன்றுதான் -

தேசத்தந்தை என்ற பெயர் ஒன்றுதான் அவருக்குக் கிடைத்தது.

ஒரு போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய அத்தனை பேர்களுமே, போராட்டத்தின் முடிவில் பதவியில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால்
காந்திஜி அமரவில்லை. இந்தியாவின்  முதல் பிரதமராக அவர் மர்ந்திருக்க வேண்டுமா இல்லையா?

அவருக்கு மனம் இல்லை, அதனால் அமரவில்லை. அதனால் கட்சியில் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள்
பதவியில் அமர்ந்தார் என்று சொல்லலாம்.

சரி, அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். அவர்க்கு ஏன் மனம் வரவில்லை?

அவருடைய ஜாதகப்பலன் அதுதான்.

அவருடைய ஜாதகத்தில், லக்கினத்தில் உள்ள பரல்கள் வெறும் 22 மட்டுமே. அதாவது  சராசரிக்கும் 6 பரல்கள் குறைவாக உள்ளது.

அதனால்தான் அவர் பதவியில் அமர முடியவில்லை. அதற்கான சூழ்நிலை உண்டாகவில்லை.

நேருஜியின் ஜாதகத்தில் 30 பரல்கள் உள்ளன

சீரியஸாகி அரசியல் பேச வேண்டாம். எனது நோக்கம் அதுவல்ல! இருவருடைய ஜாதகத்தையும் வைத்து உங்களுக்கு ஒரு முக்கியமான
குறிப்பைத் தர விரும்புகிறேன். லக்கினத்தில் 30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளவர்கள்தான் தலைமைப் பதவிக்கு வரமுடியும். புகழ்,
செல்வாக்கு ஆகியவற்றை அனுபவிக்க முடியும்.

337 வகுத்தல் 12 = 28 பரல்கள் என்பது சராசரி.

இந்த சராசரி அல்லது சராசரிக்கும் கீழே உள்ளவர்கள் மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான். என்னதான் முக்கி வேலை செய்தாலும் தலைமைப் பதவி அல்லது தலைமை இடம்  என்பது கனவாகத்தான் இருக்கும்.

அது பொதுவாழ்க்கை அல்லது குடும்ப வாழ்க்கை அல்லது சொந்த வாழ்க்கை என்று  எதுவாக இருந்தாலும் இரண்டாம் இடம்தான் கிடைக்கும்.

குடும்பவாழ்க்கை என்றால் உங்கள் மனைவியின் கை ஓங்கியிருக்கலாம்  (அவருக்கு சராசரிக்கும் மேலான பரல்கள் அல்லது உங்களைவிட அதிகமான பரல்கள் இருக்கும்போது):-))))) குழந்தைகளின் மத்தியில் உங்களைவிட அவருக்கு செல்வாக்கு அதிகம் இருக்கலாம்.

ஆகவே உங்கள் ஜாதகத்தைப் பாருங்கள். 28ற்கும் அதிகமாக இருந்தால் சந்தோஷப் படுங்கள். இல்லையென்றல் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்.

லக்கினத்தை அலசும் குறுக்குவழி இதுதான்.

இது மேல்நிலை வகுப்பிற்கான பாடம் (classroom2012) அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பொதுவகுப்பில் வலை
ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார் 

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++

25.9.12

Short Story: வினைப் பயன்!




சிறுகதை: வினைப் பயன்!

சிங்காரம் செட்டியாரின் ஒன்று விட்ட தங்கச்சி, அதாவது அவருடைய சின்னத்தாள் மகள் சாலா, அதிகாலையிலேயே வந்து கண்ணைக் கசக்கிக் கொண்டிருந்தாள்.

அவள் கணவனுக்கு கேன்சர் நோயாம். ஆரம்பக்கட்டமாம். கழுத்தில் புறப்பட்டிருந்த கட்டியைச் சிறிது வெட்டி பயோப்ஸி சோதனை செய்ததில் உறுதியாகி உள்ளதாம். முப்பது சிட்டிங் கதிர்வீச்சு சிகிச்சையும்,  எட்டு டோஸ் ஹீமோதெரபி ஊசி மருந்தும் போட வேண்டுமாம். மொத்தம் அறுபதாயிரம் ரூபாய் செலவாகுமாம். முதலில் 25,000 ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி மருத்துவமனையில் சொல்லிவிட்டார்களாம்.

பாவம் இல்லாதவள். கஷ்ட ஜீவனம். பணத்திற்கு எங்கே போவாள்?

அதுதான் உதவி கேட்டு சிங்கார அண்ணனைப் பார்க்க வந்திருக்கிறாள்.

அண்ணனின் மனைவி சிந்தாமணி ஆச்சி, வந்தவளுக்கு அருமையான ஃபில்டர் காப்பியைப் போட்டுக் கொடுத்துவிட்டு, அவள் அருகில் அமர்ந்து, அவள் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

அண்ணனின் மனம் பேச்சில் லயிக்காமல், என்ன காரணம் சொல்லி அவளை அனுப்பலாம் என்பதில் முனைப்பாக இருந்தது.

அண்ணன் நினைத்தால், ஒன்றும் சொல்லாமல் அந்தப் பணத்தைக் கொடுத்து உதவியிருக்கலாம். அவருக்கு அது ஒன்றும் பெரிய தொகை அல்ல! ஆனால் அப்படிச் செய்வதில் அவருக்கு சுத்தமாக விருப்பம் இல்லை.

அவள் பேசி முடித்தவுடன், குரலைச் சற்றுக் கடுமையாக்கிக்கொண்டு, ”அவ்வளவு பணம் தற்சமயம் என்னிடம் இல்லை சாலா. நீ திருப்பித்தர வேண்டாம். நான் மூவாயிரம் ரூபாய் தருகிறேன். மீதிப் பணத்திற்கு எங்காவது நீ ஏற்பாடு செய்துகொள்” என்று சொன்னவர், உள் அறைக்குச் சென்று தன்னுடைய அலமாரியில் இருந்து மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மட்டும் கொண்டு வந்து கொடுத்தார்.

முதலில் அதை மட்டும் வாங்கிக் கொள்ளத் தயங்கியவள், சிந்தாமணி ஆச்சியின் கண் ஜாடையைப் பார்த்துப் புரிந்து கொண்டு, கை நீட்டி அதை வாங்கிக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டாள்.

அவள் சென்றவுடன், ஆச்சி செட்டியாரை ஒரு பிடிபிடித்து விட்டார்கள்.

“உங்களிடமென்ன பணமா இல்லை? அவள் கேட்ட தொகையை நீங்கள் கொடுத்திருக்கலாம்”

“புரியாமல் பேசாதே! அந்த இருபத்தையாயிரத்துடன் பிரச்சினை முடியாது. அடுத்தடுத்து அவள் வருவாள்!”

“அவள் இந்த ஊருக்கு வந்து இருபது வருஷமாகுது. இதுவரை ஒரு தடவையாவது, பணம் கேட்டு நம் வீட்டு வாசப்படியை  மிதித்திருக்கிறாளா - சொல்லுங்கள்! இப்போது, கஷ்டத்திற்குத்தானே வந்து கேட்கிறாள்”

”கஷ்டம் வருவதெல்லாம் வினைப்பயனால் வருவது. அடுத்தவன் அதை வாங்கிக் கொள்ள முடியாது. பட வேண்டிய கஷ்டத்தை அவள் பட்டுத்தான் ஆகவேண்டும். அதை நீ புரிந்துகொள்!”

"அவள் கணவனுக்கு வந்துள்ளது, இவளுக்கு எப்படி வினைப்பயனாகும்?”

“அவள் கணவனே இவளுடைய வினைப்பயன் காரணமாக வந்தவன்தான். இல்லாவிட்டால் இவளுக்கு நல்ல கணவன் கிடைத்திருக்க மாட்டானா?”

“நல்ல கணவன் கிடைப்பதெல்லாம் அமையும் வாய்ப்பைப் பொறுத்தது. அவளுடைய கணவன் மிகவும் நேர்மையானவன். அதை முதலில் உணருங்கள். நல்லவர்களுக்குத்தான் அடுத்தடுத்து சோதனைகள் வரும். அவர் தீவிர முருக பக்தர். பழநியப்பன் அவருக்கு நிச்சயம் உதவி செய்வான்” என்று சொன்ன ஆச்சி, அதற்கு மேல் பேச வேண்டாம் என்று எழுந்து உள்ளே போய் விட்டார்கள்.

அடுத்து என்ன நடந்தது?

அன்று காலை பதினோரு மணிக்கு, சரவணம்பட்டியில் உள்ள தங்கள் வீட்டிலிருந்து காந்திபுரம் வரை சென்று வருவதாகக் கூறிப் புறப்பட்டுச் சென்ற ஆச்சி, சாலாவை அவள் வீட்டில் சந்தித்து, இருபத்தையாயிரம் ரொக்கத்தைக் கொடுத்து மருவத்துவமனைச் செலவிற்கு வைத்துக் கொள்ளும்படி கூறியதோடு, தான் பணம் கொடுத்துள்ளது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று சொல்லிவிட்டுத் திரும்பினார்கள்

                              +++++++++++++++++++++++++++++++++++++++++

ஒரு மாதம் சென்றிருக்கும். எதிர்பாராத ஒன்று சிங்காரம் செட்டியார் வீட்டில் நடந்து விட்டது.

அதில், சிந்தாமணி ஆச்சிக்கு ஒருபக்கம் வருத்தமாக இருந்தாலும் ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தது.

இரண்டு மணிவிழாக்கள், ஒரு கல்யாணக்கார வீடு, என்று மூன்று நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, ஒரு வாரம் வீட்டைப் பூட்டிக் கொண்டு, ஆச்சியும், செட்டியாரும் ஊருக்குப் போய்விட்டு, திரும்பக் கோவைக்கு வருவதற்குள், யாரோ சில களவாணிப் பயல்கள், பூட்டை உடைத்து, வீட்டிற்குள் இருந்த முக்கியமான, விலை உயர்ந்த  சாமான்களை எல்லாம் அள்ளிக் கொண்டு போயிருந்தார்கள்.

போனவைகளில் சிங்காரம் செட்டியாரின் உடைமைகளே அதிகம்.

கழுத்துச் செயின், கைச் செயின், இரண்டு கேரட் வைர மோதிரம், பஞ்சு வியாபாரி ஒருவருக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த ஐந்து லட்ச ரூபாய் ரொக்கம், சட்டை தைப்பற்காக வைத்திருந்த இருபது மீட்டர் உயர்ரக வெள்ளைத் துணி, புது வேஷ்டிகள் ஆறு, ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில் மூன்று என்று செட்டியாரின் பீரோவில் இருந்த பெரும்பாலான பொருட்கள் களவு போயிருந்தன. களவுபோனது பண மதிப்பில் மொத்தம் பத்து லட்சம் இருக்கும்

ஆச்சியின் பீரோவை அவர்கள் உடைக்கவில்லை. அந்தக் காலத்து லண்டன் பீரோ. உடைக்க முடியவில்லை போலும். ஆச்சி பயன் படுத்தும் பொருட்களில், டேபிள் டாப் வெட் கிரைண்டர் ஒன்றும், சி.டி ப்ளேயர் ஒன்றும் காணாமல் போயிருந்தது.

இது வருத்தப்பட வேண்டிய சம்பவம்தானே? சற்று மகிழ்வதற்கு என்ன இருக்கிறது?

ஆச்சி தன் இருபத்தைந்து வருட மண வாழ்க்கையில் செட்டியாரிடம் அதிகமாகக் கண்டதெல்லாம் அவருடைய கருமித்தனம்தான். கோவில் குருக்களின் தட்டில் ஒரு ரூபாய்க்கு மேல் தட்சணை போடமாட்டார். உண்டியலில் பத்து ரூபாய்க்கு மேல் போட்டதில்லை!

அக்கம் பக்கத்தில் உள்ள அண்ணாச்சி கடைகளில் மளிகைச் சாமான்கள், காய்கறிகள் எல்லாம் விலை அதிகம் என்று அங்கே வாங்க மாட்டார். ராஜவீதி மார்க்கெட்டில் உள்ள மொத்தவிலைக் கடைகளில்தான் வாங்குவார். கோவையில் தையற்கூலி மிக அதிகம் என்று சட்டை, துணிமணிகளை செட்டி நாட்டிலுள்ள தனது ஊரிலேயே வருடத்திற்கு ஒருமுறை தைத்துக் கொண்டு வந்துவிடுவார்,

இரவு சமையல் கூடாது. கேஸைப் பிடித்த கேடு என்று சொல்லி, மதியமே இரவிற்கும் சேர்த்து சமைக்கச் சொல்லிவிடுவார். அவருக்கு தயிர் சாதமும், மாங்காய் ஊறுகாயும் இருந்தால் போதும். ஆச்சி சற்று ருசியுடன் சாப்பிடக்கூடியவர்கள் தனக்கு வேண்டியதை மதியமே விதம் விதமாக சமைத்து வைத்துக்கொண்டு விடுவார்கள்.

உயர்ரக வெள்ளைத் துணிகள், புது வேஷ்டிகள், ஈரிழைத்துண்டுகள், ஜமுக்காளங்கள் போன்ற துணிமணிகள் எல்லாம் அவர் செய்யும் பஞ்சு, மற்றும் நூல் வியாபாரத்தின் மூலம் பழக்கமான துணி உற்பத்தியாளர்களிடம் ஓசியில் வாங்கிக்கொண்டு வருவதாகும். ஜோவன் மஸ்க் சென்ட் பாட்டில்கள், வாசனை சோப்புக்கள், ஷேவிங் க்ரீம்கள், லோஷன்கள் என்று மேனி அலங்காரப் பொருட்கள் எல்லாம் துபாயில் பணியில் இருக்கும், அவருடைய உடன்பிறப்பு வாங்கிக் கொண்டுவந்து தருவதாகும்.

செட்டியார் ஆடிப் போயிருந்தார். அவரைச் சமாதானப் படுத்தி, சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு வாருங்கள் என்று ஆச்சிதான் அனுப்பிவைத்தார்கள்.

புகார் கொடுத்துவிட்டு வந்தவர், காலைப் பலகாரத்தைக்கூடச் சாப்பிடாமல், உட்கார்ந்து புலம்ப ஆரம்பித்துவிட்டார்.

ஊருக்குப் போவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வங்கிகள் ஸ்ட்ரைக்கில் இருந்ததால், புதிதாகச் செய்து வந்த நகைகளை லாக்கரில் வைக்க முடியாமல் போனதைப் பற்றியும், பணத்தைப் பஞ்சு வியாபாரிக்கு அனுப்ப முடியாமல் போனதைப் பற்றியும், திரும்பத் திரும்பச் சொல்லி, புலம்பிக் கொண்டிருந்தார். தன்னிலை விளக்கம் கொடுத்துக் கொண்டிருந்தார்.

ஆச்சி ஒரே போடாகப் போட்டு அவருடைய புலம்பலுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தார்கள்.

“நீங்கள் இப்படி புலம்பிக் கொண்டிருப்பதால், போன சாமான்கள் திரும்பி வரவா போகிறது? எல்லாம் வினைப்பயன் என்று உங்களை நீங்களே சமாதானம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத்தான் வினைப்பயனைப் பற்றி நன்றாகத் தெரியுமே! போக வேண்டிய நேரம் போய்விட்டது. அவ்வளவுதான்!”

ஆனாலும் அவர் விடவில்லை.

“ஆண்டிற்கு இரண்டு தடவை நடைபாதப் பயணம் சென்று  பழநியப்பனையும், குழந்தை வேலாயுதசாமியையும் தொடர்ந்து கும்பிட்டு வருகிறேனே, அவர் ஏன் இதைத் தடுக்கவில்லை?”

“தெய்வத்தை எல்லாம் நிந்தனை செய்யாதீர்கள். உங்களுக்குப் பெரிதாக ஏதோ வர வேண்டியதைக் குறைத்து, இந்த அளவோடு நஷ்டத்தைக் கொடுத்துத் தப்பிக்க வைத்திருக்கிறார் முருகப் பெருமான் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.”

“இதைவிடப் பெரிதாக என்ன வரவேண்டும்?”

“ சாலை விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில், மாதக் கணக்கில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். நஷ்டம் எந்த ரூபத்தில் வேண்டுமென்றாலும் வரலாம். அந்த நிலைமை எல்லாம் இல்லாமல், இந்த அளவோடு போனதே என்று மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள்”

“அப்போ, நான் வருடத்திற்கு இரண்டு முறை பாதயாத்திரை செல்வதற்கு இவ்வளவுதான் பயனா?”

“நீங்கள் மட்டும்தான் போகிறீர்களா? ஆயிரக் கணக்கான மக்கள் போகிறார்கள். எல்லோரும் ஒவ்வொரு பிரார்த்தனையோடு போகிறார்கள்.  வேண்டுதல் களோடு போகிறார்கள்.  அப்படி செல்லும் மக்களுக்கு, பல நகரத்தார் பெருமக்கள், ஆயிரம், இரண்டாயிரம் பேர்களுக்கு வேளாவேளைக்கு சாப்பாடு செய்து போடுகிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். வழியில் நடப்பவர்கள் தங்குவதற்குப் பெரும் பொருட் செலவில் கொட்டகை போட்டுக் கொடுக்கிறார்களே, அவர்களை நினைத்துப் பாருங்கள். தண்ணீர் பந்தல்களை வைத்து தாகத்தைத் தணிக்கிறார்களே அவர்களை நினைத்துப் பாருங்கள். கைக்காசை செலவழிப்பதற்கு எத்தனை பெரிய மனது வேண்டும்? பரந்த மனப்பான்மை வேண்டும்? முருகப் பெருமான் உங்கள் கால்களைப் பார்த்து உதவுவதில்லை. உங்கள் மனதைப் பார்த்துத்தான் உதவுவார்.அதைப் புரிந்து கொள்ளுங்கள்”

செட்டியாருக்கு செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது.

ஆச்சியின் தெளிவான வார்த்தைகளைக் கேட்டதால், செட்டியாரின் கண்கள் கலங்கிவிட்டன!

அன்று மதியம், வங்கிக்குச் சென்று, தன் கணக்கில் இருந்து இருபத்தை யாயிரம் ரூபாய் பணத்தை எடுத்தவர், அந்தப் பணத்துடன் தன் சின்னத்தா மகள் சாலா வீட்டிற்குச் சென்றார். சாலா வீட்டில்தான் இருந்தாள். அவளுடைய கணவன் சிகிச்சை முடிந்து வீட்டிற்கு நலமுடன் வந்துவிட்டவன்,  கவலை தோய்ந்த முகத்துடன் கட்டிலில் அமர்ந்திருந்தான்.

சிங்காரம் அண்ணனைப் பார்த்தவுடன், இருவரும் முகம் மலர ’வாருங்கள்’ என்று வரவேற்றார்கள். சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தவர், தன் கைப் பையில் இருந்து அந்தப் பணத்தை எடுத்து சாலாவிடம் கொடுத்த போது, அவள் வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டாள்.

“இல்லை அண்ணே! தேவையான பணம் கிடைத்து விட்டது. இவர்களும் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிட்டார்கள். ஆகவே இப்போது பணம் எதுவும் வேண்டாம் அண்ணே!” என்றாள்.

“கிடைக்கிற பணத்தை வேண்டாம் என்று சொல்லாதே ஆத்தா! சிகிச்சை முடிந்து விட்டாலும், இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்கு உன் கணவன் வேலைக்குச் செல்ல முடியாது. ஆகவே நடப்புச் செலவுக்கு இந்தப் பணத்தை வைத்துக்கொள். மேலும் தேவைப் பட்டாலும் வந்து கேள். தருகிறன்” என்று சொன்னதுடன், கட்டாயப் படுத்தி அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்துவிட்டு வந்தார்.

வந்தவர், அதைத் தன் மனைவியிடம் சொல்லவும் இல்லை. ”செய்யும் உதவியை, வெளிச்சம் போட்டுக் காட்டினால், அதற்குப் பலன் கிடையாது” என்று ஆச்சி சொல்வார்கள்.

அவர் ஆச்சியிடம் சொல்லாததற்கு அதுதான் காரணம்.

                                    +++++++++++++++++++++++++++++++++++++
அடியவன் எழுதி., இந்த மாதம்,  இலக்கிய மாத இதழ் ஒன்றில் வெளிவந்த சிறுகதை  இது. நீங்கள் அனைவரும் படித்து மகிழ அதை இன்று வலை ஏற்றியுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

24.9.12

Astrology - Popcorn Post தோஷம் எத்தனை தோஷமடா?

 
Astrology - Popcorn Post தோஷம் எத்தனை தோஷமடா?

Popcorn Post No.26

பாப்கார்ன் பதிவுகள் - எண்.26


தேதி 24.9.2012 திங்கட்கிழமை
-----------------------------
சென்றவாரம் மின்னஞ்சலில் எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் அன்பர் ஒருவர் தன் ஜாதகத்தில் லக்கினத்தில் ராகுவும், ஏழில் கேதுவும் இருப்பதை வைத்து தனக்குக் காலசர்ப்ப தோஷம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார். அத்துடன் தனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்றும் கேட்டிருந்தார்.

காலசர்ப்ப தோஷத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். அதை மீண்டும் எழுதி, பல பேர்களுடைய சாபத்தை வாங்கிக்கொள்ள விரும்பவில்லை. இப்போது அந்த அன்பர் புதிதாகக் குறிப்பிட்டுள்ள நாக தோஷத்தை மட்டும் பார்ப்போம்!
--------------------------------------------------------------------------
நாக தோஷம் என்பது லக்கினம், சந்திரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தால் ஏற்படக்கூடியது. அத்தோடு லக்கினம், சுக்கிரன், ராகு ஆகிய மூன்றும் ஒன்றாக இருந்தாலும் ஏற்படக்கூடியது. அது எல்லா லக்கினத் திற்கும் பொருந்தும். ராகுவிற்குப் பதிலாக கேது அந்த இடத்தில் இருந்தாலும் அத்தோஷம் உண்டு.

அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்ன?

உடல் உபாதைகள், நோய்கள்
எல்லாச் செயல்களிலும் ஒரு மந்தமான நிலைமை, தாமதம்
திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள்.
இம்மூன்றில் ஒன்று உண்டாகும். அது ஜாதகத்தில் அததற்கு உரிய காரகர்களின் நிலையைப் பொறுத்து உண்டாகும்

பரிகாரம் உண்டா?
உண்டு!

கசை வைத்துச் செய்யும் பரிகாரங்கள் அல்ல!
உங்கள் காசு யாருக்கு வேண்டும்? அதுவும் கிரகங்களுக்கு எதற்காக?
மந்திரம், யந்திரம், பரிகாரத் தகடுகள் என்று காசையும் நேரத்தையும் வீணாக்குவதை விட, பிரார்த்தனை செய்யுங்கள்.
கடுமையாகப் பிரார்த்தனை செய்யுங்கள்.
பாதிப்புக்கள் குறைந்துவிடும். நீங்கிவிடும். உங்கள் வாழ்க்கை ஒளிரும்!

யாரை வணங்க வேண்டும்?

ராகு, கேதுக்களை வணங்குங்கள். அவர்களுடைய ஸ்தலத்திற்குச் சென்று வணங்குங்கள் அல்லது அதைவிட மேலாக உங்கள் நட்சத்திரத்தன்று உபவாசம் இருந்து சிவபெருமானை வணங்குங்கள். ஒன்பது மதங்கள் அவ்வாறு தொடர்ந்து செய்யுங்கள். அவர் கருணை வைப்பார். அவர் கருணை வைத்தால் என்னதான் நடக்காது?

அன்புடன்,
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

21.9.12

கவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்?

பக்தி மலர்

ஆசையின் ஓசை எப்போது அடங்கும் என்பதை ஒரு அருமையான பாடல் மூலம் திருமதி அனுராதா ஸ்ரீராம் பாடியிருக்கின்றார். அதை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்


காணொளியுடன் பாடல்:
Our sincere thanks to the person who uploaded the video clipping!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2

கவிதைச் சோலை: எதெதில் முன்னேற வேண்டும்?

முன்னேறு

குதிரைவண் டியிலுமோர் கொடிபடை அணியிலும்
    கூட்டத்து மேடை தனிலும்
       குடும்பத்து வாழ்விலும் கொள்முதல் வாணிபம்
    குவித்திடும் செல்வ மதிலும்
மதியிலும் நோயிலா வாழ்விலும் ஆனதன்
    மானத்தைக் காப்ப ததிலும்
       மாற்றார்தம் நடுவிலே மாலை மரியாதைகள்
    வளர்த்திடும் மாண்பு தனிலும்
முடியழகு மங்கையின் மோகக் கலப்பிலும்
    முன்னேற வேண்டும் நீயே!
       முத்துமுக மீதுவியர் முத்துவிளை யாடிடும்
    மோனமீ னாட்சி துணையே!

                    - கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20.9.12

Astrology நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!

Astrology  நிரந்தரக் கஷ்டங்களும், தற்காலிகக் கஷ்டங்களும்!

அலசல் பாடம் (மேல்நிலைப் பாடம்)

எனது கஷ்டங்கள் எப்போது தீரும்? என்னும் தலைப்பில் முன்பு ஒரு முறை சூரியனை வைத்து அலசுவதைப் பற்றி எழுதியிருந்தேன்.

இன்று சந்திரனை வைத்து எப்படி அலசுவது என்று பார்ப்போம்!

சந்திரன் மனகாரகன் அதோடு தாய்க்குக் காரகன்.

(He is the authority for mind and Mother)

ஜாதகத்தில் சந்திரன் வலுவாக இருந்தால் பெரிய மனக்கஷ்டங்கள் இருக்காது.

வலு அல்லது வலிமையாக இருப்பது என்றால் என்ன?

1. சந்திரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருக்கும் நிலைமை

2. தீய கிரகங்களின் கூட்டணி மற்றும் பார்வை பெறாத நிலைமை

3. கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் இருக்கும் நிலைமை

4. சுய அஷ்டகவக்கத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருக்கும் நிலைமை.
++++++++++++++++++++++++++++++
அப்படி வலுவாக இல்லாவிட்டால் என்ன ஆகும்?

தேவையில்லாத மனக்குழப்பங்கள், கவலைகள் மனதை அரித்துக்கொண்டே இருக்கும்.

தீய கிரகங்களுடன், குறிப்பாக சனி அல்லது ராகுவுடன் சந்திரன் சேர்ந்திருந்தால், மனம், போராட்டங்கள் மிகுந்ததாக இருக்கும்.
வாழ்க்கை எதிர் நீச்சல் போடும் படியாக இருக்கும்.

எதற்கெடுத்தாலும் கவலைப்படத்தோன்றும். உப்புப் பெறாத விஷயத்திற்குக் கூட ஜாதகன் கவலைப் பட்டுக்கொண்டிருப்பான். எதிலும்  சந்தேகம் தோன்றும். யாரையும் நம்ப முடியாத சூழ்நிலை உருவாகும்.

உதாரணத்திற்கு பஸ்ஸில் ஏறி, பஸ் புறப்பட்ட பிறகு, வீட்டைச் சரியாகப் பூட்டிவிட்டு வந்தோமா என்று சந்தேகம்  தோன்றும். ஜாதகத்தின் வேறு அம்சங்களை வைத்து, சிலருக்குக், கணவன் அல்லது மனைவியுடன் கருத்து  வேற்றுமை தோன்றி, சண்டை சச்சரவுகள் நிறைந்திருக்கும். மொத்தத்தில் சந்திரன் வலுவாக இல்லையென்றால்  மனதில் நிம்மதியாக இருக்காது.

ஐந்தாம் வீடு மனதிற்குள்ள வீடு. (House of mind).ஜாதகத்தில் ஐந்தாம் வீடும் ‘வீக்’ காக இருந்து, சந்திரனும்  வீக்’காக இருந்தால், மனதிற்குள் நிரந்தரமான கவலை குடிகொண்டுவிடும். அது எதைப்பற்றியதாக  வேண்டுமென்றாலும் இருக்கலாம். வீடு, வாசல், கணவன் அல்லது மனைவி, குழந்தைகள், உடல் நலம் என்று  எதைப்பற்றியதாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்

மேற்கூறிய அனைத்தும் நிரந்தரக் கஷ்டத்தில் வரும். இப்போது சந்திரனை வைத்துத் தற்காலிகக் கஷ்டத்தைப்  பார்ப்போம்!

சந்திரன் 27 நாட்களுக்கு ஒருமுறை தனது சுற்றை முடிக்கும். சராசரியாக ஒவ்வொரு நாளுக்கும் ஒரு நட்சத்திரம்.

நட்சத்திரம் ஆரம்பிக்கும் நேரமும், முடியும் நேரமும், ஒரே மாதிரியாக இருக்காது. ஒரு நாளிற்கு உரிய நட்சத்திரம்  எப்போது ஆரம்பிக்கும் மற்றும் எப்போது முடியும் என்பது பஞ்சாங்களிலும் குறிக்கப் பெற்றிருக்கும், அத்துடன் செய்தித்தாள்களிலும் அதைக் குறிப்பிட்டு எழுதுவார்கள்.

உதாரணத்திற்கு இன்று (31.3.2010) சித்திரை நட்சத்திரம் இரவு 9:30 மணி வரை, அதற்குப் பிறகு சுவாதி நட்சத்திரம் நாளை (1.4.2010) இரவு 9:10 மணி வரை. இப்படியே அடுத்தடுத்து நட்சத்திரங்கள் மாறிக்கொண்டிருக்கும்.

உங்கள் நட்சத்திரத்தைவைத்து நீங்கள் என்ன ராசிக்காரர் என்பதை மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள். அன்றையத்  தேதியில் என்ன நட்சத்திரம் என்று பாருங்கள். அதை வைத்து உங்கள் ராசிக்கு  எத்தனையாவது ராசியில் அன்றையச் சந்திரன் இருக்கிறார் என்று பாருங்கள்.

அது உங்களுடைய ராசிக்கு எட்டாம் இடம் அல்லது 12ஆம் இடமாக இருந்தால் அன்று உங்களுக்கு நல்ல  பலன்கள் கிடைக்காது. நினைத்த காரியம் நடக்காது. வெட்டி அலைச்சலாக இருக்கும். முக்கியமான காரியங்களை  அன்று செய்தால்  அது தோல்வியில் முடியும். சுருக்கமாகச் சொன்னால் That will not be your day!
அதை வைத்துத்தான் ஒவ்வொரு ராசிக்காரருக்கும் பத்திரிக்கைகளில் தினப்பலன்களை எழுதுகிறார்கள்.

ஒரு ராசிக்காரருக்கு அன்றைய நட்சத்திரம் 2ஆம் ராசியில் இருந்தால் தன லாபம் என்று எழுதுவார்கள். ஏழில்  இருந்தால், மனைவியுடன்
அந்நியோன்யம் என்று எழுதுவார்கள். 5ல் இருந்தால் மனமகிழ்ச்சி என்று எழுதுவார்கள். கோச்சார சந்திரன் (Transit Moon) உங்கள் ராசிக்கு 6, 8, 12 ஆம் இடங்களில் இருக்கும் அல்லது நகரும்  நாட்களில், உங்களுக்கு காரிய சித்தி (காரிய ஜெயம்) இருக்காது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு அவற்றைக் கண்டறிந்து ஒதுக்குவது நல்லது.

உதாரணத்திற்கு ஒரு இடம் வாங்குவதற்கோ அல்லது ஒரு மருத்துவரிடம் பரிசோதனைக்குப் போவதற்கோ  அல்லது பெண்பார்க்கப் போவதற்கோ அல்லது முக்கியமான வெளியூர்ப் பயணங்களுக்கோ அந்த தினங்களை  விலக்குவது நல்லது.

1. The transiting Moon in houses from the natal Moon will show the attitude a person has on any given day.
2. It is ideal to have the Moon in a good position from the natal Moon for daily events to run smoothly.


ராசிக்கான நட்சத்திரங்கள்:

மேஷம்: அஸ்விணி, பரணி , கார்த்திகை (1 பாதம்)
ரிஷபம்: கார்த்திகை (2, 3 & 4),ரோகிணி, மிருகசீர்ஷம் (1 & 2)
மிதுனம்: மிருகசீர்ஷம் (3 & 4) திருவாதிரை, புனர்பூசம் (1, 2 & 3)
கடகம்: புனர்பூசம் (4ம் பாதம்) பூசம், ஆயில்யம்

சிம்மம்: மகம், பூரம், உத்திரம் (1ஆம் பாதம்)
கன்னி: உத்திரம் (2, 3 & 4) ஹஸ்தம், சித்திரை (1 & 2)
துலாம்: சித்திரை (3 & 4), சுவாதி, விசாகம் (1,2 & 3)
விருச்சிகம்: விசாகம் (4ஆம் பாதம்) அனுஷம், கேட்டை

தனுசு: மூல, பூராடம், உத்திராடாம் (1ஆம் பாதம்)
மகரம்: உத்திராடம் (2, 3 & 4) திருவோணம், அவிட்டம் (1 & 2)
கும்பம்: அவிட்டம் (3 & 4), சதயம், பூரட்டாதி 1, 2 & 3)
மீனம்: பூரட்டாதி (4ஆம் பாதம்), உத்திரட்டாதி, ரேவதி

என்ன பாடம் புரியும் படியாக உள்ளதா?

அன்புடன்
வாத்தியார்


பின் குறிப்பு:  இது பெண்களுக்கு மட்டும்:  மாதவிடாய் (periods) அதாவது மாதத்தில் 3 நாட்கள் வீட்டு விலக்கு, இந்தச் சந்திரனின் சுற்றை வைத்துத்தான் ஒவ்வொரு மாதமும் உண்டாகும். சந்திரனும் செவ்வாயும் வலுவாக  இல்லை என்றால் மாதவிடாய்க் கோளாறுகள், அதைவைத்து அடிவயிற்றில் வலி போன்ற பிரச்சினைகள் பெண்களுக்கு ஏற்படும்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19.9.12

Happy Birth Day Ganesha!

சகல காரியங்களையும் சித்தியடையச் செய்யும் விநாயகருக்கு இன்று பிறந்த நாள். அவரை வணங்கி மகிழ்வோம்!

Ganesha Chaturthi (Marathi: गणेश चतुर्थी, Konkani: चवथ, Gujarati: ગણેશ ચતુર્થી, Hindi: गणेश चतुर्थी, Malayalam: വിനായക ചതുര്‍ത്ഥി, Tamil: விநாயகர் சதுர்த்தி, Kannada: ಗಣೇಶ ಚತುರ್ಥೀ, Telugu: వినాయక చవితి), also known as Vinayaka Chaturthi, also called Vinayagar in Tamil Nadu, is the Hindu festival celebrated on the occasion of birthday of Lord Ganesha[2], the son of Shiva and Parvati, who is believed to bestow his presence on earth for all his devotees in the duration of this festival. It is the day Shiva declared his son Ganesha as superior to all the gods. Ganesha is widely worshipped as the god of wisdom, prosperity and good fortune and traditionally invoked at the beginning of any new venture or at the start of travel.- information from wiki Maharaj
---------------------------------------------------------------------



கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் .................அடிபேணிக்
(கைத்தல)

கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை ...............கடிதேகும்
(கற்றிடும்)

மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய ............மதயானை
(மத்தமும்)

மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு ...........பணிவேனே
(மத்தள)

முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய ...............முதல்வோனே
(முத்தமிழ்)

முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடிசெய்த ..........அதிதீரா
(முப்புரம்)

அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை........... இபமாகி
(அத்துய)

அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் .............பெருமாளே.
(அக்குற)

பாடல்: திருப்புகழ்
ஆக்கம்: அருணகிரிநாதர்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++=======

18.9.12

Astrology - Popcorn Post ஆடும்வரை ஆட்டம்!!

Astrology - Popcorn Post ஆடும்வரை ஆட்டம்!!

Popcorn Post No.25
பாப்கார்ன் பதிவுகள் - எண்.25


"வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?
"

என்று பிரபலமான பாடல் ஒன்றின் பல்லவியில் எழுதிய கவியரசர், அதே பாடலின் சரணத்தில் இப்படி எழுதியிருப்பார்:

"ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா?"


செவிட்டில் அறைவதைப்போன்று என்ன ஒரு கேள்வி பாருங்கள்

நம்மோடு தொடர்ந்து சுற்றியவர்கள், சாப்பிட்டவர்கள், நமது பணத்தைக் கூட இருந்தே கரைத்தவர்கள், வலது கை என்று நாம் நம்பிக்கொண்டிருந்தவர்கள்,  மாலை நேரங்களில், கூட இருந்து நமக்கு சரக்கை ஊற்றிக்கொடுத்தவர்கள், கொஞ்சம் அதிகமான நேரங்களில் வீடுவரை கொண்டுவந்து விட்டு விட்டுப் போனவர்கள், உயிர் காப்பான் தோழன் என்று கவிஞர்களால் வர்ணிக்கப் படுகிறவர்கள் - இப்படிச் சொல்லிக்கொண்டே போகக்கூடிய எண்ணற்ற வர்கள், நமக்கு மிகவும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்கள் இருந்தாலும், ஒரு நாள் நாம் சிதையில் வேகும் போது “ அடேய், நம் சுப்பிரமணி கொள்ளியில் தனியாக வேகிறானடா! அவன் தனியாக வேகக்கூடாது. நானும் அவனோடு போகிறேன்” என்று சொல்லியவாறு எரியும் சிதையில் எவனாது ஏறிப் படுத்துகொள்வானா?

மாட்டான்!. மாட்டான்! மாட்டான்!

அதைத்தான் கூடிவரும் கூட்டம் கொள்ளிவரை வருமா? என்று கவியரசர் கேட்டார்
------------------------------------------------------------------
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அவற்றை ஒரு கிரக்கத்துடன் தேடி அலைபவர்கள்  நிறையப் பேர்கள் உள்ளார்கள்.

அவற்றில் ஏதாவது ஒன்று கிடைத்தாலும் போதும் என்று தனியாக அலைபவர்களும் உள்ளார்கள். ஒருவித போதை அது!

வாழ்க்கை ஒரு மாயை (illusion) என்பதை உணர்ந்தவன் அதற்கு அலைய மாட்டான்!

கிடைப்பது முக்கியமில்லை. கிடைத்தால் அது கடைசிவரை நம்மோடு இருக்க வேண்டும். நம்மை அது மேன்மைப் படுத்த வேண்டும். அந்த நிலைமை இல்லை என்றால் அது கிடைத்தும் பிரயோஜனமில்லை

ஜாதகப்படி அது கிடைப்பதற்கும், கிடைத்தது  நிலைப்பதற்கும் என்ன காரணம் என்று இன்று பார்ப்போம்
------------------------------------------------------------------------------------

மேலே உள்ள ஜாதகம் உலகையே கலக்கிய மனிதனின் ஜாதகம்
ஆமாம். ஹிட்லரின் ஜாதகம்

ஹிட்லரைப் பற்றி முன்பு விவரமாக எழுதியுள்ளேன். ஆகவே அதைத் தவிர்த்துவிட்டு சொல்ல வந்த செய்தியை மட்டும் சொல்கிறேன்
பணம், பதவி, புகழ், செல்வாக்கு, அதிகாரம் என்று அனைத்தையும் எட்டிப் பிடித்தவர் அவர்.

ஆனால் அவைகளே அனைத்தையும் கொட்டிக் கவிழ்த்து அவருடைய முடிவைத் தற்கொலையில் கொண்டுபோய் நிறுத்தின!

ஜாதகப்படி என்ன காரணம்?

கஜகேசரி யோகம் இருந்து, அந்த யோகத்தைக் கொடுக்கும் குரு பகவான் தன்னுடைய  பார்வையில் ஏழாம் வீட்டை வைத்திருந்தால் ஜாதகனுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் அந்த அமைப்பில் குருவுடன், கேது அல்லது ராகு வந்து ஒட்டிக்கொண்டிருந்தால், முடிவு அவலமாக இருக்கும். கஜகேசரி யோகம் கிடைத்தும் பிரயோஜனமில்லாத நிலை அது!

சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் என்று 4 கிரகங்களை தன்னுடைய கஜகேசரி யோகத்தால் ஆட்டிவைத்த குருவை, (ஆட்டிவைத்த பதம் எதற்கு? துலாம் லக்கினத்திற்கு குரு நம்பர் ஒன் வில்லன். அதை மனதில் வையுங்கள்) அவர் ஜாதகனுக்கு வாங்கிக் கொடுத்தவற்றை, கூடவே இருந்த கேது, கடைசியில் கொட்டிக் கவிழ்த்தான்.

ஹிட்லரின் படையில் எத்தனை அதிகாரிகள், வீரர்கள் இருந்தார்கள். அவனுடன் சேர்ந்து சுகப்பட்டவர்கள் எத்தனை பேர்கள். ஒருவனாவது ஹிட்லர் புதையுண்டபோது, கூடச் சேர்ந்து புதையுண்டானா?
அதை வலியுறுத்தத்தான் பதிவின் முகப்பில் உள்ள பாடல் வரிகள்

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

17.9.12

Astrology யாரடா மேன்மக்கள்?




Astrology  யாரடா மேன்மக்கள்?

Key Points
முக்கியவிதிகள்


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே;
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!


1
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது & தேய்பிறைச் சந்திரன் மற்றும் தீய கிரகத்துடன் கூட்டாக இருக்கும் புதன் ஆகியவை  தீமைகளையே செய்யக்கூடியவை. குரு, சுக்கிரன், வளர்பிறைச் சந்திரன் மற்றும் சுபக்கிரகத்துடன் கூட்டணி சேர்ந்திருக்கும் புதன் ஆகியவை எப்போதும் நன்மைகளையே செய்யக்கூடியவை.

2.
குரு மிகவும் வலிமையான கிரகம். நம்பர் ஒன் சுபக்கிரகம். தீமைகளைக் குறைக்கூடிய கிரகம். வாழ்வில் செழுமையை  உண்டாக்கக்கூடிய கிரகம் (Prosperity in ones life) சுக்கிரனுக்குக் குருவைப்போன்று முழு வலிமை இல்லாவிட்டாலும், அதுவும் வலிமையான கிரகம்தான். நன்மைகளைச் செய்யும்  கிரகம்தான். புதனுக்குக் குருவைப்போல வலிமை இல்லை யென்றாலும், சுபனோடு கூட்டணி போட்டால் வலிமை உடையதாகிவிடும்.

3.
குரு ஜாதகத்தில் நீசம் பெற்றிருந்தாலும், ஜாதகனுக்கு நன்மைகளைச் செய்யும்.

4.
குரு ஜாதகனுக்குப் பல விதங்களில் நன்மைகளையும், உதவிகளையும் செய்யக் கூடியது. சுக்கிரன் ஜாதகனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய வகையில் செயல்படும். வாழ்க்கையில் சொகுசை (Luxury)  உண்டாக்கும். குருவிற்கு தேவகுரு என்று பெயர். சுக்கிரனுக்கு அசுர குரு என்று பெயர்.

5.
தீமை செய்யக்கூடிய கிரகங்களில் சனி முதன்மையானது. ஜாதகனுக்குப் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கொடுக்கக்கூடிய  கிரகமும் அதுதான். வாழ்க்கையின் பல பரிமாணங்களை உணரவைக்கக்கூடிய கிரகமும் அதுதான். இறையுணர்வை அதிகமாக்கும்  கிரகமும் அதுதான்!

6.
செவ்வாய் அதற்கு (சனிக்கு) நேர்மாறானது. ஜாதகனுக்குக் கோபம், பழிவாங்கும் தன்மைகளை ஏற்படுத்தும். சில ஜாதகர்களை தீவிரவாதி யாக்கும். கலவரங்களில் ஈடுபடவைக்கும். ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் அமைப்பை வைத்து அவைகள் உண்டாகும்.

மேலே கூறியவற்றில் விதிவிலக்கும் உண்டு. சில தீய கிரகங்கள், சில லக்கினக்காரர்களுக்கு, இயற்கையாகவே நன்மை செய்யக்கூடிய
கிரகமாக இருக்கும்.

உதாரணத்திற்கு ரிஷப லக்கினக்காரர்களுக்கு சனி யோககாரகன். அந்த லக்கினக்காரர்களுக்கு சனி, ஒன்பது மற்றும் பத்தாம் இடத்திற்கு உரியவன். யோகங்களைக் கொடுக்கத் துவங்கிவிடுவான். திகைக்க வைக்கக்கூடிய அளவிற்கு யோகங்களைக் கொடுப்பான்.

இடத்தைவைத்து, தீய கிரகங்கள் நன்மை செய்வதைப்போல, நன்மை செய்யக்கூடிய கிரகங்கள், தீய இடங்களில் இருந்தாலும், தன்னுடைய இயற்கையான குணத்தை இழக்காமல், ஜாதகனுக்கு நன்மைகளையே செய்யும். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

7.
கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் நல்ல நிலைமையில் வலுவாக இருக்கும் ராகுவும், கேதுவும், தங்களுடைய தசாபுத்திகளில்,  ஜாதகனுக்கு நன்மைகளையே செய்வார்கள்.

8.
கேந்திரம் அல்லது திரிகோணத்தில் இருக்கும் குரு பகவான், ஜாதகனுக்குத் தன்னுடைய தசா புத்திகளில் அதிகமான அளவு நன்மைகளையே செய்வார். தனது 5, 7 & 9 ஆம் பார்வையால் பார்க்கும் வீடுகளுக்கு உரிய நன்மைகளை வாரி வழங்குவார். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்குத் திருமணத்தை நடத்திவைப்பார். குழந்தை இல்லாதவர்களுக்கு, குழந்தை பாக்கியத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். குறிப்பாக லக்கினத்தைப் பார்க்கும் குரு ஜாதகனுக்கு மொத்தமாக நன்மைகளை வாரி வழங்குவார்.சுபக்கிரகங்கள் நன்மை செய்யும் அமைப்புக்கள்:

9. இருக்கும் இடத்தைவைத்து நன்மைகள் கிடைக்கும்

10. பார்வையை வைத்து நன்மைகள் கிடைக்கும்

11. அமர்ந்திருக்கும் இடத்தின் அதிபதியோடு கூட்டு அல்லது பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.

12. அமர்ந்திருக்கும் இடத்திற்கான காரகனோடு ஆன பார்வையைவைத்து நன்மைகள் கிடைக்கும்.

13. ஒரு சுபக்கிரகம் மற்றொரு சுபக்கிரகத்துடன் கூட்டாக இருந்தாலும் அல்லது பார்வையோடு இருந்தாலும் இரண்டு மடங்கு நன்மைகளை வாரி வழங்கும்.

14. அதே அமைப்பில் ஒரு தீய கிரகம் இன்னொரு தீய கிரகத்துடன் கூட்டு அல்லது பார்வையுடன் இருந்தால் இரண்டு மடங்கு தீமைகளையே செய்யும்!

15. நன்மையான கிரகங்கள், தீமையான இடத்தில் அமரும்போது தீமைகளைச் செய்ய மாட்டார்கள். உதாரணத்திற்கு, ரிஷப  லக்கினத்திற்கு குரு தீயவன். எட்டாம் இடத்து அதிபதி. எட்டாம் இடத்து அதிபதி லக்கினத்தில் அமர்ந்தால், ஜாதகனுக்கு விபத்துக்களை ஏற்படுத்துவார் என்பது பொதுவிதி. ஆனால் ரிஷப லக்கினத்தில் அமரும் குரு அதைப் பொய்யாக்கிவிடுவார். அந்தப் பொதுவிதியைப் பொய்யாக்கிவிடுவார், ஜாதகன் பாதிப்பு அடையமாட்டான். குரு பகவானின் இயற்கத்தன்மை அது. அதை மனதில் வையுங்கள்.

மேல்நிலை வகுப்புப் பாடம். அனைவருக்கும் பயன் படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

14.9.12

கவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்!



பக்திமலர்

இன்றைய பக்தி மலரை புதுக்குரலால் பாடப் பெற்ற பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. கேட்டு மகிழுங்கள். பாடியவர் இளம் பாடகர் மது பாலகிருஷ்ணன்.

அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------


காணொளியுடன் பாடல்
our sincere thanks to the person who uploaded the video clipping!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவிதைச் சோலை: மதியை விதியினால் மாய்க்கின்றவன்!
 
முதுகிலே கண்வைக்க முயலாத இறைவனோ
    முகத்திலே கண்ணை வைத்தான்
       முகம்பார்க்க விரும்பாது பகையான மனிதனோ
    முதுகையே பார்த்து நின்றான்
சதிகாரர் கையிலே பலியாக அஞ்சுவான்
    தர்மத்தை வேண்டி நின்றான்
       தர்மத்தின் தேவனோ தன்மையும் பிறரையும்
    சதிகாரர் கையில் வைத்தான்;
மதியையே விதியினால் மாய்க்கின்ற சொக்கனை
    மடியிலே வைத்த மயிலே!
       மலர்கொண்ட கூந்தலைத் தென்றல்தா லாட்டிடும்
    மதுரைமீ னாட்சி உமையே!

                   - கவியரசர் கண்ணதாசன்
++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

13.9.12

Astrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்!

 Astrology: கொடிபிடித்துச் செல்பவரின் முக்கியத்துவம்!

காலசர்ப்ப தோஷம் என்பது என்னவென்று உங்கள் அனைவருக்கும் தெரியும். பாடம் நடத்தியுள்ளேன். ராகு & கேதுவிற்குள் அத்தனை கிரகங்களும் அடங்கிவிடும் நிலைமை அது. அதன் கால அளவு பற்றி இருவேறான கருத்துக்கள் உள்ளன.

சிலர் 30 அல்லது 33 வயதுவரை காலசர்ப்ப தோஷம் இருக்கும். அதற்குப்பிறகு அந்த தோஷமே யோகமாக மாறிவிடும் என்பார்கள்.

வேறு சிலர் கால சர்ப்ப தோஷம் லக்கினத்தில் எத்தனை பரல்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள் நீடிக்கும் என்பார்கள்.

ஆனால் கால சர்ப்ப தோஷத்தில் இரண்டு வகைகள் உள்ளன.

1. காலமிரித யோகம்: ராகு முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், கேது கடைசியாக வரும் அமைப்பு. இது கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது நன்மை பயக்கக்கூடிய அமைப்பு.

2. விலோமா யோகம்: கேது முன்னால் நின்று கொடி பிடிக்க மற்ற கிரகங்கள் அதன் பின்புறம் நின்று வரவும், ராகு கடைசியாக வரும் அமைப்பு. இதுவும் கடிகாரச் சுற்றில் ஜாதகத்தில் இருக்கும். இது தீமை பயக்கக்கூடிய அமைப்பு.

There are two types of Kala Sarpa Yogas. One is when all of the seven grahas that are caught in the axis are moving toward the mouth of the serpent, Rahu. This is called kalamrita yoga and is considered the main formation. The other is when all of the planets are moving towards the tail Ketu and is known as viloma.
அது சம்பந்தமாக இப்போது ஒரு ஜாதகத்தை அலசுவோம்.
-----------------------------------------------------------------------------------



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

மேலே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

இது ஒரு பெண்மணியின் ஜாதகம். திருமணவாழ்வு, அதிருப்தியுடன் துவங்கிக் கடைசியில் சோகத்தில் முடிந்தது. ஆமாம். திருமணமான சில மாதங்களிலேயே கணவர் இறந்துவிட்டார். கணவர் உடல் நலமில்லாதவர் என்பது திருமணத்திற்குப் பிறகுதான் அம்மணிக்குத் தெரியவந்தது.

அதற்குப் பிறகு என்ன செய்வது?

மனதைத் தேற்றிக்கொண்டு அம்மணி வாழ்ந்தார். சமூக சேவைகளைச் செய்து தன் வாழ் நாட்களைப் பயன் உள்ளதாக்கிக் கொண்டார்.

என்ன காரணம்?

ஜாதகத்தைப் பாருங்கள். கேது கொடிபிடித்துக் கொண்டு செல்கிறது. மற்ற கிரகங்கள் அனைத்தும் அதன் பின்புறம் உள்ளன. ஏழுக்குரிய சுக்கிரன் ஏழாம் இடத்திற்குப் பன்னிரெண்டில் விரையத்தில் அமர்ந்தார். உடன் ஜோடி சேர்ந்த எட்டாம் அதிபதி புதன் கணவரைக் காலி செய்து விரையத்தைப் பூர்த்தி யாக்கினார். 2ஆம் அதிபதி குரு நீசமானதால் குடும்ப வாழ்க்கையைக் கொடுக்கவில்லை.

பத்தாம் அதிபதி சூரியன் அந்த வீட்டிற்குப் பத்தில். அத்துடன் பாக்கியாதிபதி சந்திரன் அந்த வீட்டிற்கு எட்டில் அமர்ந்து ஜாதகியின் பாக்கியங்களைக் கெடுத்தாலும், பத்தாம் இடத்தைத் தன் பார்வையில் வைத்து, ஜாதகியைச் சமூக சேவைகளில் ஈடுபட வைத்தார்.

ஆகவே காலசர்ப்ப தோஷ ஜாதகர்கள், தங்கள் ஜாதகத்தில் கொடி பிடித்துச் செல்வது யார் - ராகுவா அல்லது கேதுவா என்று பார்ப்பது அவசியம்.

விளக்கம் போதுமா?

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12.9.12

Astrology செவ்வாயும் அதன் தோஷங்களும்!

Astrology செவ்வாயும் அதன் தோஷங்களும்!

மேல்நிலைப் பாடம்
முக்கியமான விதிகள்
தலைப்பு: செவ்வாய் தோஷம்


செவ்வாய் தோஷம் என்ற சொல் திருமணச் சந்தையில் சில சிக்கல்களை உண்டு பண்ணும்!

தோஷம் இல்லாத சுத்த ஜாதகத்தையுடைய குழந்தைகளுக்கு வரன் பார்க்கும் போது, அவர்களின் பெற்றோர்கள், செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் என்றால் வேண்டாம் என்று மறுத்துவிடுவார்கள்.

செவ்வாய் தோஷம் என்றால் என்ன?
அது உண்டா அல்லது இல்லையா?
அதனால் பாதிப்பு உண்டா அல்லது இல்லையா?

இந்தக் கேள்விகளுக்கான பதிலை இன்று பார்ப்போம்!
---------------------------------------------
ஒரு ஜாதகத்தில் லக்கினம், நான்காம் வீடு, 7ம் வீடு, 8ம் வீடு மற்றும்12ம் வீடுகளில் செவ்வாய் இருந்தால் ( If mars is placed in those houses) அந்த ஜாதகம் செவ்வாய் தோஷமுள்ள ஜாதகம் ஆகும். அதிலும் ஒரு கணக்கு உண்டு. 7ல் அல்லது 8ல் செவ்வாய் இருந்தால் அது முழு தோஷம் என்றும் மற்ற இடங்களில் இருக்கும் செவ்வாய்க்கு கால், அரை, முக்கால் என்று அளவையும் சொல்வார்கள். சில ஜோதிடர்கள் இரண்டாம் வீட்டையும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்வார்கள்

பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருந்தால், அந்தப் பெண்ணிற்கு வரன் பார்க்கும் போது, அதே போன்று அல்லது அதைவிட அதிகமாக தோஷமுள்ள பையனைத் தேடுவார்கள்.

அப்படி தோஷப் பொருத்தம் இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் அவலத்தில் முடிவதுண்டு. பிரச்சினையில் முடிவதுண்டு.

உதாரணத்திற்கு ஒரு பெண் ஜாதகத்தில் எட்டில் செவ்வாய் இருந்தால், அது மாங்கல்ய ஸ்தானம் என்பதால், கடுமையான தோஷம் என்பார்கள். அதற்குப் பலன், ஒன்று அவள் விதவையாகி விடுவாள் அல்லது அவளூடைய கணவனுக்கு ஆயுள் அதிகமாக இருக்கும் அமைப்பில், அவள் தன் கணவனை விட்டுப் பிரிந்து வந்து விடுவாள் என்பார்கள்.

ஆனால் சில ஜோதிடர்கள் அதற்கு விதிவிலக்கு என்று சில கணக்குகளைச் சொல்வார்கள்.

மேஷ லக்கினத்திற்கும், விருச்சிக லக்கினத்திற்கும் செவ்வாய் அதிபதி. ஆகவே அந்த லக்கினக்காரர்களை செவ்வாய் தோஷம் ஒன்றும் செய்யாது. செவ்வாயே லக்கினாதிபதியானதால், அவன் தனக்குத் தானே எப்படி தோஷத்தைச் செய்வான்? ஆகவே அந்த இரு லக்கினக்காரகளும் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட்டவர்கள் ஆவார்கள் என்பார்கள். ஜாதகத்தில் உச்சம் பெற்றுள்ள செவ்வாயும் தோஷத்தைக் கொடுக்காது என்பார்கள்.

தோசம் உண்டு என்று சொல்லும் ஜோதிடர்கள் எல்லாம் தங்கள் அனுபவத்தை வைத்து அவ்வாறு சொல்வார்கள். ஆகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்! அதாவது அனுபவமிக்க ஜோதிடர்சொன்னால், தோஷத்தை எடுத்துக் கொண்டு ஒழுங்கு மரியாதையாக தோஷமுள்ள ஜாதகத்தையே இணைக்க வேண்டும்.

இல்லாவிட்டால் ரிஸ்க் எடுப்பதற்குத் தயாராக இருக்க வேண்டும்

எனக்குத் தெரிந்த பெண்கள் இருவரின் வாழ்வில் அவ்வாறு நடந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் எட்டில் செவ்வாய். அதுவும் உச்சம் பெற்ற செவ்வாய். ஆனால் அவர்கள் செவ்வாயால் திருமண வாழ்வில் பலத்த அடி வாங்கிக்கொண்டு திரும்பி வந்துவிட்டார்கள். மேட்டர் நீதி மன்றம் வரை சென்று விவாகரத்தும் ஆகிவிட்டது.

சில பெண்கள் இந்த செவ்வாய் தோஷத்தால், தங்கள் கணவனைப் பறி கொடுத்திருக்கலாம். ஆனால் அது செவ்வாயின் இருப்பிடத்தை மட்டும் ஏற்பட்டதாக இருக்காது. செவ்வாய் ஜாதகத்தில் வேறு ஏதாவது தீய கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் வலிமை கெட்டு இருக்கும் நிலைமையால் அவ்வாறு ஏற்பட்டிருக்கலாம். ஆகவே முழு ஜாதகத்தையும் அலசிப் பார்ப்பது அவசியம்.

செவ்வாய் தோஷத்தால் வாழ்க்கையே முடிந்து விடாது. முதலில் கவலைப் படுவதை அல்லது பயப்படுவதை நிறுத்த வேண்டும். அந்த தோஷம் காலாவதியாகிவிடும் என்று பல உப விதிகள் சொல்லப்பட்டுள்ளன. அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதையும் பார்க்க வேண்டும். உலகில் விதிகளும் உண்டு. விதிவிலக்குகளும் உண்டு. அதை மனதில் கொள்க!

சில ஜோதிடர்கள், கடுமையான செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகங்களுக்கு (கடுமை என்பது 7 அல்லது 8ல் செவ்வாயுடன், ராகு, கேது அல்லது சனி சேர்ந்து இருக்கும் நிலைமை) சில பரிகாரங்களைச் சொல்வார்கள். அவ்வாறான அமைப்பு உள்ள பெண்ணிற்கு திருமணம் செய்ய முனையும்போது, மனைவியை இழந்த இளைஞனுக்கு, இரண்டாம் தாராமாக அப்பெண்ணைத் திருமணம் செய்யச் சொல்வார்கள்

இன்றைய கால கட்டத்தில் இரண்டாம் தாரமாகக் கழுத்தை நீட்ட எந்தப் பெண்ணும் ஒப்புக்கொள்ள மாட்டாள். எடுத்துச் சொன்னாலும் அவளுக்குப் பிடிபடாது. அவ்வாறு அமைப்பு இருப்பதால் மட்டுமே அவள் விதவை யாகிவிடுவாள் என்று சொல்லிவிட முடியாது. ஜாதகத்தில் உள்ள மற்ற சுப அமைப்புக்களையும் பார்க்க வேண்டும்.

ஜாதகத்தில் செவ்வாய் இருக்கும் இடத்தை வைத்துப் பலன்கள்:

லக்கினத்தில் செவ்வாய் இருந்தால்: சிறு விஷயங்களுக்குக்கூட விவாதம் செய்யக்கூடியவர். உறவுகளின் மேல் தன் அதிகாரத்தைச் செலுத்தக்கூடியவர்.

இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: கேட்பவைனைக் கோபப்பட வைக்கும் பேச்சை உடையவர்.

நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்: மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர். அதன் காரணமாக அடிக்கடி அவருடைய வேலை அல்லது தொழிலில் சிக்கல்கள், மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏழில் செவ்வாய் இருந்தால்: அதீதமான செயலாற்றல் உடையவர். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் உடையவர். பல சமயங்கள் மற்றவர்களுடன் ஒத்துப்போக மாட்டார்.

எட்டில் செவ்வாய் இருந்தால்: இளம் வயதிலேயே கணவன் அல்லது மனைவியைப் பறிகொடுக்க நேரிடலாம்.

பன்னிரெண்டில் செவ்வாய் இருந்தால்: பண இழப்புக்கள். அதிகமான விரோதிகள். அடக்கமுடியாத கோப மனப்பான்மை உடைய ஜாதகம்.

இவை அனைத்தும் பொது விதிகள். சுபக் கிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கையால் இவைகள் குறையலாம் அல்லது இல்லாமல் போகலாம்.

பண்டைய நூல்களில் குறிப்பாக பிருஹத் பாரசார ஹோர சாஸ்திர நூலில் செவ்வாய் தோஷத்தைப் பற்றிக் குறிப்பிடப் பெற்றுள்ளது. 1, 4,7, 8 & 12ல் சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையுடன்  இருக்கும் செவ்வாய்,  தோஷத்தைக் கொடுக்காது என்கிறது அந்த நூல். அதுபோன்ற சுபகிரகங்களின் சேர்க்கையோ அல்லது பார்வையோ இல்லாமல் தனித்திருக்கும் செவ்வாய் தோஷத்தை உண்டாக்குமாம். அவ்வாறு 7 அல்லது 8ல் செவ்வாய் இருக்கும் பெண் தன் கணவனை இளம் வயதிலேயே பறி கொடுக்க நேரிடும் என்று அந்த நூல் கூறுகின்றது.

தோஷத்திற்கான சில விஷேச விதிவிலக்குகள்

ரிஷப லக்கினக்காரர்களுக்கும் சிம்ம லக்கினக்காரர்களுக்கும் இரண்டாம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மகர லக்கினக்காரர்களுக்கு 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மகர லக்கினத்திற்கு 7ல் அல்லது கடக லக்கினத்திற்கு 7ல் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

சிம்ம லக்கினத்திற்கு எட்டில் இருக்கும் செவ்வாயால் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

மிதுன லக்கினத்திற்கு 12ல் இருக்கும் செவ்வாயாலும், விருச்சிக லக்கினத்திற்கு 2ல் இருக்கும் செவ்வாயாலும் கெடுதல் இல்லை என்பது விதி (rule)

கடக, மற்றும் சிம்ம லக்கினக்காரர்களுக்கு செவ்வாய் யோககாரகன், ஆகவே அவர்களுடைய ஜாதகத்தில் செவ்வாய் எங்கே இருந்தாலும் தோஷம் இல்லை என்பது விதி (rule)

லக்கினத்தில் குரு அல்லது சுக்கிரன் அமர்ந்திருக்கும் ஜாதகர்களுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்பது விதி (rule)

குரு அல்லது சந்திரனுடன் சேர்ந்திருக்கும் அல்லது அவர்களின் நேரடிப்பார்வையில் இருக்கும் செவ்வாயால், தோஷம் இல்லை என்பது விதி (rule)

செவ்வாய் தோஷம் இருந்தாலும் 28 வயதிற்கு மேல், அந்த தோஷம் வலிமை இழந்து விடும் என்பவர்களும் உண்டு. பொதுவாக 30 வயதில் ஜாதகத்தில் உள்ள எல்லா தோஷங்களும் காலாவதியாகிவிடும்.

தோஷம் உள்ள ஜாதகர்கள் அவ்வாறு தோஷம் உள்ள ஜாதகரையே தேடிப் பிடித்து மணந்து கொள்வது நல்லது.

முருகப் பெருமானின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளவர் செவ்வாய். ஆகவே முருகப் பெருமானை வழிபடுவது தோஷத்தைக் குறைக்கும்.
--------------------------------------------------------------
என்ன படிக்கப் படிக்க தலையைச் சுற்றுகிறதா?

ஜோதிடம் என்றால் சும்மாவா? அப்படித்தான் சுற்றும்.

அதை போக்க அஷ்டகவர்க்கம்337 சரக்கில் இரண்டு பெக் அடித்துவிட்டு, நிம்மதியாக இருங்கள்.

இது மேல்நிலை வகுப்பிற்காக எழுதப்பெற்ற பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

11.9.12

Astrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள் (Border births between 2 lagnas)

 Astrology லக்கின சந்திப்புக்களில் ஏற்படும் பிறப்புக்கள்  
(Border births between 2 lagnas)

இது நேற்றைய பதிவின் தொடர்ச்சி. அதைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு, இதைப் படிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பஞ்சாங்க வகைகள்

பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன.
1. திருக்கணித பஞ்சாங்கம்
2. வாக்கிய பஞ்சாங்கம்.
வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணிதப் பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். தமிழகக் கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது.

திருக்கணித பஞ்சாங்கம்
சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும்.

திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. திருக்கணிதப் பஞ்சாங்கள்:
வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,
ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம்,
குமரன் திருக்கணித பஞ்சாங்கம்,
பாலன் திருக்கணித பஞ்சாங்கம்,
ராஷ்ட்ரீய பஞ்சாங்கம்,
சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம்,
ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம்,
ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம்.
ஆகியவைகள் புகழ்பெற்ற திருக்கணிதப் பஞ்சாங்களாகும்.

வாக்கிய பஞ்சாங்கம்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ரிஷிகள் ஒன்று கூடி எழுதிய சுலோகங்களில் உள்ள கணித முறைப்படி அப்படியே எழுதப்படும் பஞ்சாங்கம் வாக்கிய பஞ்சாங்கமாகும். வாக்கியம் என்பது மாறுதல் இல்லாமல் ரிஷிகளின் வாக்கை அப்படியே பிரதிபலிக்ககூடியதாகும்..

தமிழ்நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம்தான் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.

ஆற்காடு ஸ்ரீசீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,
திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம்,
ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம்,
பாம்புப் பஞ்சாங்கம்,
ஸ்ரீகாஞ்சி மடத்து பஞ்சாங்கம்,
சிருங்கேரி மடம் பஞ்சாங்கம்,
ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம்,
ஆகியவைகள் புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்கங்களாகும்!.

இந்த வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் திருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.
----------------
சரியான கணக்குகளுக்கு என்றால் திருக்கணிதம் சிறந்தது. சரியான ஜாதகத்திற்கு என்றால் வாக்கியம் சிறந்தது. (நமது பெற்றோர்கள் கணித்துவைத்துள்ள ஜாதகம் இதன் அடைப்படையில்தான்) ஆகவே கணினியில் திருக்கணிதத்தில் கணித்துவிட்டு, எங்கப்பா எழுதி வைத்ததுபோல இல்லையே என்று சொல்லாதீர்கள்
--------------------------------
உங்க அப்பா எழுதியதுபோல வேண்டுமென்றால், ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக் கொள்ளுங்கள். ராமன் அயனாம்சத்திலும்
360 நாள் கணக்கை வைத்துக் கணித்துக்கொள்ளுங்கள். அதற்கான படம் கீழே உள்ளது


எனக்கு அப்படித்தான் எழுதிவைத்திருக்கிறேன். சரியாக உள்ளது. என் தாத்தா எழுதி வைத்திருப்பதைப் போல இருக்கிறது.

சிலருக்கு வித்தியாசம் வருகிறது என்று ஏன் சொல்கிறார்கள் என்று ஆராய்ந்தபோது. கால சந்திப்பில்  (Border Birth) பிறந்தவர்களுக்கு அதுபோன்று வரும். அவர்கள் ராமன் அயனாம்சத்தில் கணித்து வைத்துக்கொள்வது நல்லது. ராமன் அவர்கள்தான் ஜோதிடத்திற்கு அத்தாரிட்டியாக எல்லோராலும் போற்றப்பட்டு வந்தவர். அதை மனதில் வையுங்கள்.

பொதுவாக லக்கின சந்திப்புக்களில் (Border birth between 2 lagnas) பிறந்தவர்களுக்கு ஜாதகங்களில் லக்கினக் குழப்பம் இருக்கும். அதுபோல் கிரகங்கள் ராசி சந்திப்பில் நகரும் காலத்தில் (Border between 2 rasis for planets) பிறந்தவர்களுக்கு கிரகங்கள் அமர்ந்திருக்கும் இடக் குழப்பம் ஏற்படும். அவைகள் தவிர்க்க முடியாது. அவர்கள் தங்கள் ஜதகத்தைக் கணித்து வைத்துக்கொண்டு, வேறு முறைகளுடன் தங்கள் ஜாதகத்தை நோண்டிப் பார்ப்பதை அல்லது தோண்டிப் பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிரச்சினை இருக்காது. குழப்பம் இருக்காது.
---------------------------------------------
பிரச்சினை தீர வேண்டுமென்றால், உங்க அப்பா எழுதிவைத்துள்ளதை உங்களுடைய ஜாதகமாக வைத்துக்கொள்ளுங்கள். அதில் அஷ்டகவர்க்கம் இல்லை என்றால், அஷ்டகவர்கத்தை மட்டும் தனியாகக் கணித்து அதனுடன் சேர்த்துவைத்துக்கொள்ளுங்கள்.
------------------------------------------------------
ஜோதிட மென்பொருட்களில் லஹிரி, ராமன், கிருஷ்ணமூர்த்தி முறை என்று இருப்பதைப் போல, வாக்கியத்திற்கும் option உள்ள மென் பொருள் இருக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கீழே ஒரு புதிய மென்பொருளைக் கொடுத்துள்ளேன். அதில் வாக்கியமுறைக்கான சாய்ஸ் உள்ளது.அதைப் பயன் படுத்திக் கொள்ளூங்கள். பயன் படுத்திப் பார்த்து விட்டு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள். அந்த மென் பொருளுக்கான சுட்டியை நமது வகுப்பறைக் கண்மணி ஒருவர் கொடுத்தார். அவருக்கு நம் நன்றிகள் உரித்தாகுக!


image

அதற்கான சுட்டி  (URL) http://www.astraura.org/Charter2/CharterVak3.aspx

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

10.9.12

Astrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்

Astrology எங்கும் இலவசம். எதிலும் இலவசம். எல்லாம் இலவசம்

ஜாதகத்தைக் கணித்து வைத்துக்கொள்வதற்கு, பஞ்சாங்கமும், ஜோதிடர்களும் இன்றைய காலகட்டத்தில் தேவையில்லாமல் போய்விட்டது. கணினி அந்த வேலையைச் செய்து தருவதால், எல்லாம் சுலபமாக ஆகிவிட்டது.

10 ஆண்டுகளுக்கு முன்பு,  கணினி ஜாதகத்திற்குக்கூட, மையங்களுக்குச் சென்று, காசு கொடுத்து, அவர்கள் கணித்து, பிரதி எடுத்துக் கொடுப்பதை வாங்கிக் கொண்டு வரவேண்டும்.

இப்போது அந்த வேலையும் இல்லை.

வீட்டில் கணினி இருந்தால் நாமே கணித்துக் கொள்ளலாம். அதற்குத் தேவையான மென்பொருள்கள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

இலவசம் என்றால்தான் நமக்கு மிகவும் பிடிக்குமே. அதைப் பற்றி இன்று பார்ப்போம்!
---------------------------------------------------
இந்தியாவின் தேசியப் பறவை மயில்
இந்தியாவின் தேசிய மலர் தாமரை
இந்தியாவின் தேசியக் குணம் இலவசம்

ஒரு குடிமகனின் ஆதங்கம்: “டாஸ்மாக் சரக்கு இலவசமாகக் கிடைத்தால் எத்தனை ஆனந்தமாக இருக்கும்?”
----------------------------------------------------
1.
மிகவும் விவரமாக உள்ள ஜோதிட மென்பொருள் ஜகந்நாத ஹோரா
அதற்கான சுட்டி (URL)
http://www.vedicastrologer.org/jh/
அதைத் தரவிறக்கம் (Download) செய்து, உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் (install it in your computer)



Basic calculation
Complete calculation
என்று எல்லா வசதிகளும் உள்ளன.
------------
Chakras (Rasi chakra, Navamsa chakra)
Basics
Strengths > Ashtakavarga
Dasas

என்று எல்லாவற்றிற்கும் வசதி உள்ளது. மெனு பாரைப் பாருங்கள். அதை க்ளிக்கி அல்லது நோண்டி அல்லது தோண்டிப் பாருங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ளலாம். எதாக இருந்தாலும் தோண்டிப் பார்த்துக் கற்றுக்கொள்வேன். அதுதான் என்னுடைய பழக்கம். அவ்வாறே செய்யுங்கள்.
---------------------------
சரி, ஜாதகத்தை எப்படி அதில் உருவாக்குவது? மெனு பாரில் ஆறாவதாக Data என்னும் பட்டன் இருக்கும் அதை அமுக்கிப் பாருங்கள். கீழே குறிப்பிட்டுள்ளபடி ஒரு புதிய ஜன்னல் வரும். அதில் உங்கள் பிறப்பு விவரங்களை உள்ளிடுங்கள். உங்களுக்குத் தேவையான ஜாதகத்தை அது கண் இமைக்கும் நேரத்திற்குள் தயாரித்துக் கொடுத்துவிடும்.
----------------------------
இதைச் சொல்லிக் கொடுத்தும் ஒருவர் என்னை விடவில்லை. ஜோதிடத்தில் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாக்கியப் பஞ்சாங்கம் என்று இரண்டு சனியன்கள் உள்ளதே! அவற்றிற்கிடையே இரண்டு பாகைகள் வித்தியாசம் இருந்து ஆளையும் கொள்கிறதே. அதைப் போக்குவதற்கு  இதில் என்ன வழி?

வழி இல்லாமல் இல்லை! இருக்கிறது.

Menu Bar > Preferences > Related to calculations > Ayanamsa > select ayanamsa இங்கே உங்களுக்கு கீழ்க் கண்ட அமைப்பில் ஜன்னல் கிடைக்கும்




”என் ஜன்னல் நிலவுக்கு என்னாச்சு - என்
கண்ணில்பட்டு ரொம்ப நாளாச்சு”


 என்று பாடிக்கொண்டே அதில் உங்களுக்குத் தேவையான அயனாம்சத்தைத் தெரிவு செய்து கொள்ளூங்கள்

Lahiri = திருக்கணிதம்
Raman = வாக்கியம்


இப்போது நீங்கள் விரும்பியபடி உங்கள் ஜாதகம் கிடைக்கும்!
++++++++++++++++++++++++++++++++
இந்த உதவி செய்யப்போய், ஒருமுறை, பல்கலைக் கழகம் ஒன்றில் ஜோதிடப் பாடம் படிக்கும் மாணவர் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு விட்டேன். என்னை அவர் பிலு பிலுவென்று பிடித்துக்கொண்டுவிட்டார்.

”ராமன் அயனாம்சத்தை நம் ஊர் வாக்கியப் பஞ்சாங்களோடு ஒப்பிட முடியாது. என் பெற்றோர் எழுதி வைத்துள்ளது போலவே அச்சு அசலாக ஒரு ஜாதகம் கிடைக்க வழி சொல்லுங்கள்” என்றார்

சொன்னேன்

அது நாளை

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

7.9.12

கவிதைச் சோலை: கால விளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!


 Devotional கலியுக வரதன் காட்சியளிப்பது எங்கே?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை இளம் பாடகி மஹதியின் குரல் அலங்கரிக்கிறது. கேட்டு மகிழுங்கள்
-------------------------------------------------------

கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்க்
காட்சியளிப்பது பழனியிலே

(கலியுக)

மலைமகள் அருளிய சக்திவேல் முருகன்
மரகத வண்ணனாம் திருமால் மருகன்

(கலியுக)

கண்முதற் கடவுளின் கண்மணியாய் வந்தான்
கார்த்திகைப் பெண்டிர் அணைப்பில் வளர்ந்தான்
விண்ணவர் குறையெல்லாம் நொடியில் களைந்தான்
வேண்டுவோர் வேண்டுமுன் வரமெல்லாம் தந்தான்

(கலியுக)

கானொளி
Our sincere thanks to the person who uploaded this video clipping

++++++++++++++++++++++++++++++++++++++
2

கவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு!

ஐந்தொகை

நீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்
    நிழலையான் காண வில்லை;
    நிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்
    நெஞ்சைநான் காண வில்லை;
காலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்
    கருத்திலே கண்ட தில்லை;
    கைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்
    கணக்கினைப் புரட்டு கின்றேன்;
சால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று
    சத்தியம் செய்கின் றேனே;
    தமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்
    தந்தமலை யரசி தாயே!
         -கவியரர் கண்ணதாசன்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++===