மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.5.11

Astrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Astrology ரேஸ் குதிரையும், ஜட்கா வண்டிக் குதிரையும்!

இன்று எல்லாத்துறைகளிலும் பெண்கள் சிறப்பாக வேலை செய்கிறார்கள். வரவேற்க வேண்டிய விஷயம். பல இடங்களில் ஆண்களுக்கு இணையாக - ஏன் ஆண்களைவிட அதிகமான எண்ணிக்கையில் இளம் பெண்கள் வேலை செய்கிறார்கள்.

இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி என்று அனைத்துக் கல்வி விரிவாக்கங்களிலும், பெண்களின் ஆதிக்கம் உள்ளது.

கல்லூரிகளில் கற்க வாய்ப்பு இல்லாத பெண்கள் கூட, ப்ளஸ் டூ வரை அடித்துப் பிடித்துத் தேர்வு பெற்று, பலவிதமான வேலைகளில் பணி செய்கின்றார்கள்..

எங்கள் பகுதியில் (கோவை & திருப்பூர்) பனியன் உற்பத்தி, துணி உற்பத்தி, சாயப் பட்டறைகள், நூல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் பெண்களே அதிக அளவில் பணி புரிகிறார்கள்.

இந்த மாற்றம் கடந்த இருபது ஆண்டுகளுக்குள் ஏற்பட்டுள்ளது.

ஏற்பட்டுள்ள அந்த மாற்றம் பல பக்க விளைவுகளையும் (side effects) ஏற்படுத்தியுள்ளது. பக்க விளைவுகள் என்னென்ன என்பதை இன்னொரு நாள் பார்க்கலாம். இப்போது சொல்ல வந்த விஷயத்தை மட்டும் பார்ப்போம்.
-----------------------------------------------------------------------------------------------------
திருமணத்தைப் பொறுத்தவரை பெண்களுக்கு என்று சில கண்டிஷன்கள் உள்ளன!

அந்தக் காலத்தைப் போல, பெற்றோர்கள் சொல்லுகின்ற மாப்பிள்ளைக்கு, எந்தப் பெண்ணும் இப்போது சட்டென்று கழுத்தை நீட்ட மாட்டாள்.

வருகின்ற வரனை உறித்து, ஊருகாய் போடுகிற அளவிற்கு அறிந்து பார்த்துவிட்டுத்தான் திருமணத்திற்கு சம்மதிப்பாள்

பையனின் சம்பாத்தியம்தான் முதன்மையானது. பன்னாட்டு நிறுவனம் அல்லது இந்திய நிறுவனங்களில் பெரிய நிறுவனம் போன்றவற்றில் பணிபுரியும் வரன் வேண்டும்.

வியாபாரம் செய்யும் பையன் என்றால் ‘நோ’ என்று சொல்லிவிடுவார்கள். வியாபாரம் செய்யும் பையனுக்கு முதலீடும் இருக்குமாம், கடனும் இருக்குமாம். அவனுடைய மதிப்பைத் தெரிந்து கொள்ள முடியாதாம். (He may have assets and also liabilities. No one can assess his net worth) ஆகவே வேண்டாம் என்று சொல்லி விடுவார்கள்.

கறுப்பு, சிவப்பு என்ற நிற பேதம் எல்லாம் அவர்கள் பார்ப்பதில்லை. ஆசாமி ஸ்டைலாக வாட்டசாட்டமாக இருக்கவேண்டும். உங்கள் மொழியில் சொன்னால், திரைப்பட நடிகர் சூர்யா அல்லது அஜீத் அல்லது கார்த்திக்  அல்லது விஷால் போன்ற தோற்றத்துடன் இருக்க வேண்டும். அது முக்கியம்.

ஓமக்குச்சி நரசிம்மன் அல்லது பயில்வான் ரங்கநாதன் போன்ற தோற்றத்தில் இருந்தால் ‘நோ’ என்று சொல்லிவிடுவார்கள்.

அவை இரண்டையும் விட முக்கியமாக அவன் தனிக் காட்டு ராஜாவாக இருக்க வேண்டும். கிழம் கட்டைகள் உடன் இருக்கக்கூடாது. அதாவது பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள் உடன் இருக்கக்கூடாது.

உடன் என்ற வார்த்தையை நன்கு கவனிக்கவும். அவர்கள் இருக்கலாம், ஆனாலும் தள்ளி இருக்க வேண்டும்.

அவன் பெங்களூரில் வேலை பார்த்தால், மேற்படி கூட்டம், வேறு பிரதேங்களில் இருக்க வேண்டும். அதாவது கம்பம், தேனி போன்ற இடங்களில் இருக்கலாம். அவன் சென்னையில் வேலை பார்த்தால், அவர்கள், வள்ளியூர், நாங்குநேரி அல்லது ஸ்ரீவைகுண்டம் போன்ற இடங்களில் இருக்கலாம்.

அவனைத் தேடிப் பார்க்க வந்தாலும் மூன்று நாட்களில் கிளம்பிவிட வேண்டும். விருந்தும் மருந்து மூன்று நாட்கள்தான் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஒருவர் தன் நண்பரின் மகளுக்காக ஒரு நல்ல வரனைப் பரிந்துரை செய்தார். உடனே பெண்ணைப் பெற்ற புண்னியவான் கேட்டார்.

  “பையன் எங்கே இருக்கிறான்?”

  “பெங்களூரில்....”

  “அவனுடைய பெற்றோர்கள்....?”

  “அவர்களும் அவனுடன்தான் இருக்கிறார்கள். அவனுடைய தந்தை வங்கி அதிகாரியாக இருந்தார். ஒரே மகன். அவனுக்கு நல்ல வேலை கிடைத்தவுடன், தன்னுடைய வேலையில் விருப்ப ஓய்வு பெற்றதுடன், பெங்களூர் சிவாஜி நகரில் ப்ளாட் ஒன்றை வாங்கிக் கொண்டு, அங்கே போய் செட்டிலாகி விட்டார்கள்.”

  “ஓகோ கூட்டுக் குடும்பமா?”

  “மூன்று பேர் இருப்பது எப்படியடா கூட்டுக் குடும்பம் ஆகும்? பையன் தனியாக இருந்தால் தனிக்கட்டை. பெற்றோர்களுடன் இருந்தால் குடும்பம். அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, சித்தப்பன்  அல்லது அத்தை என்று ஏழு அல்லது எட்டு டிக்கெட்டுகளுடன் இருந்தால்தான் கூட்டுக் குடும்பம்.”

  “இல்லை. எனக்குச் சரிப்படாது. பையன் தனியாக இருக்கிற இடமாக வேண்டும்”

  “ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

  “என் பெண்ணைப் பற்றி உனக்குத் தெரியாது. பெற்றோர்கள் உடன் இருந்தால் பத்து நாள் கூடத் தாங்காது. சண்டை வந்துவிடும். பெட்டியைத் தூக்கிக் கொண்டு வந்து விடுவாள். ஒரே பெண் என்று செல்லமாக வளர்த்து விட்டேன். யாருக்கும் கட்டுப்பட மாட்டாள். உனக்குப் புரியும்படியாகச் சொன்னால், அவள் ரேஸ் குதிரை. ஜட்கா வண்டியெல்லாம் அவளுக்குச் சரிப்பட்டுவராது! ஜாக்கி மட்டும் இருந்தால் போதும். வண்டி வேண்டாம்”

(அலசல் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

30.5.11

Astrology பெண்ணின் நிறத்தில் என்ன(டா) இருக்கிறது?

------------------------------------------------------------------------------------
Astrology பெண்ணின் நிறத்தில் என்ன(டா) இருக்கிறது?

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
அதற்கான சுட்டி இது!
-------------------------------------------------------------------
வேலை கிடைப்பதைப் பற்றி சென்ற பதிவில் அலசியிருந்தோம்.

வேலை கிடைத்துவிட்டது. அடுத்து என்ன?

அடுத்து டும் டும்........ டும்தான். அதாவது திருமணம்!

வேலை கிடைத்தவுடன் திருமணம் நடந்தால் நல்லது. இளைஞன் அல்லது இளைஞி யாராக இருந்தாலும் முன்பு 21 வயதில் திருமணம் செய்து வைத்தார்கள்.

இப்போது, பொருளாதாரத் தேடலில், வாழ்க்கை வசதித் தேடலில் இரு பாலருமே திருமணத்தைத் தள்ளிப் போடுகிறார்கள்.

30 அல்லது 32 வயதாகியும் திருமணமாகாதவர்கள் இன்று பலர் இருக்கிறார்கள். 25 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டாமா?

கேட்டால், “இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகவில்லை, செட்டில் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறேன்” என்பார்கள்.

ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்துவதற்கு 10’ X 10' படுக்கை அறையுடன் கூடிய சின்ன வாடகை வீடு போதாதா? இதைவிடச் சின்ன வீடுகளில்  - ஏன் ஒற்றை அறை வீடுகளில் எத்தனை பேர் மும்பை போன்ற பெரு நகரங்களில் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?

தி.நகரில் வாடகை கொடுத்து மாளாது என்றால், அம்பத்தூரில் ஒரு வீட்டைப் பிடி. அல்லது போரூரில் ஒரு வீட்டைப் பிடி. ஒரு மணி நேரம் முன்பாகப் புறப்பட்டு, வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து சேர்.

சிக்கனமாக இரு. இரண்டு முளம் மல்லிகைப்பூ இருபது ரூபாய் என்றால், அதை எதற்கு வாங்குகிறாய்? ஒரு ஒற்றை ரோஜா வாங்கிகொண்டுபோய், அதை நீயே உன் மனைவி தலையில் சொருகிவிட்டு, “தேவயானி போல இருக்கிறாயடி, என்று சொல்!” கிறங்கிப் போவாள்.

நீ செட்டில் ஆகிற வரைக்கும் உன்னுடைய இளமை காத்திருக்குமா?

செட்டில் ஆகிறது என்பது மாயமானைத் தேடுவதற்கு ஒப்பாகும். அதற்கு அளவில்லை. கடலில் அலை ஓய்ந்து என்றைக்குக் குளிப்பது? அலை பாட்டிற்கு அடித்துக் கொண்டுதான் இருக்கும். நடுவில் போய் ஒரு காக்காய்க் குளியல் போட்டுவிட்டு வருவதில்லையா? அதுபோல செட்டில் ஆகிற பாடலை ஒதுக்கி வைத்துவிட்டுத் திருமணம் செய்துகொள்வதுதான் புத்திசாலித்தனம்.

“எனக்குத் தகுதியான பெண்ணைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னும் கிடைக்கவில்லை” என்று சிலர் சொல்வார்கள்.

தகுதி என்று எதைச் சொல்கிறாய்?

ஜோடிப் பொருத்தத்தைச் சொல்கிறாயா?

"Made for each other" என்று மற்றவர்கள் சொல்லும்படியாக மனைவி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா?

அதெல்லாம் சினிமாவில்தான் நடக்கும். ரியல் லைஃபில் நடக்காது.

சிலர் சிவப்பான பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பார்கள். சிலர் சிவப்பான முகக்களையான பெண்ணைத் தேடிக்கொண்டிருப்பார்கள்.

நிறத்தில் என்ன இருக்கிறது?

என் நெருங்கிய உறவினர் ஒருவர் இருந்தார். இப்போது அவர் இல்லை. அதிரடியாகப்பேசுவார். சாமர்த்தியமானவர். இருபது வருடங்களுக்கு முன்பு, அவர் தன் நண்பனின் மகனுக்கு, ஒரு பெண்ணைப் பரிந்துரை செய்தார். செய்துவிட்டு, பத்து நாட்கள் கழித்து, ஒரு திருமண வீட்டில் தன் நண்பனைச் சந்தித்த போது, கேட்டார்

“டேய் நான் சொன்ன வரன் என்னடா ஆயிற்று, பேசினாயா?”

அவர் வருத்தமுடன் சொன்னார்: “பேசினேனப்பா. அவர்கள் சம்மதிக்கிறார்கள். ஆனால் என் பையன் ஒத்துக்கொள்ளவில்லை”

இவர் விடவில்லை. “ஏன்?” என்று கேட்டார்

“பையன், பெண் கறுப்பாக இருக்கிறாளே. வேண்டாம் என்று கூறிவிட்டான்”

“அடப்பாவி, அவனைக் கூப்பிடு நான் விசாரிக்கிறேன்”

அடுத்த ஐந்து நிமிடத்தில் பையன் வந்து சேர்ந்தான். திருமண வீடல்லவா? சுற்றிலும் கூட்டம். ஆனால் நம்ம தலைவர் அதற்கெல்லாம் யோசிக்கவில்லை. அவனைத் துளைக்க ஆரம்பித்தார்.

“டேய் அந்தப் பெண்ணை நேரில் பார்த்தாயா?

“பார்த்தேன்”

“களையாக இருக்கிறாளா - இல்லையா?”

“களையாகத்தான் இருக்கிறாள்”

“பின் ஏன்டா வேண்டாம் என்று சொன்னாய்?”

“கறுப்பாக இருந்தாள். அதனால் வேண்டாம் என்று சொன்னேன்”

“மயி.......டி, நீ என்னடா ரெம்ப சிவப்பா? நீயும் கறுப்புத்தானே?”

“நான் விருப்பப்படுவதில் என்ன தவறு இருக்கிறது? கல்வி, அந்தஸ்து என்று எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கும்போது, சிவப்பான பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?”

தலைவருக்குக் கோபம் வந்து முத்தாய்ப்பாய்ப் பேசினார்:

“ சிவப்புன்னு தேடிப் பிடித்துக் கட்டிக்கிட்டவன் எல்லாம் செருப்படி பட்டுக்கிட்டு இருக்கான்டா. பெண்ணுக்கு குணம்தான்டா முக்கியம். நிறத்தில என்னடா இருக்கு? விளக்கை அணைச்சா எல்லாப் பொண்ணும் ஒன்னு தாண்டா! கட்டி அனைச்சா கிடைக்கிற சுகமும் ஒன்னுதான்டா!”

(அலசல் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

29.5.11

மனிதனை எப்படி மடக்க வேண்டும்?

 ============================================================

மனிதனை எப்படி மடக்க வேண்டும்?
=================================
ஞாயிறு மலர்

இன்றைய ஞாயிறு மலரை இரண்டு ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------------------------------------------
1
முகஸ்துதி செய்ததன் பலன் என்ன?

திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் கூறுவார்,

'யானையை குழிதோண்டி பிடிக்க வேண்டும்,
பறவைகளை வலைவைத்துப் பிடிக்க வேண்டும்,

மனிதனை முகஸ்துதி செய்து பிடிக்க வேண்டும்' என்று.

இன்று மனிதன் முன்னேறுவதற்கும், காரியங்களைச் சாதித்துக் கொள்வதற்கும் முகஸ்துதி செய்துதான் பிழைக்க வேண்டியிருக்கிறது. அப்படி முகஸ்துதி செய்யாதவன் எந்தக் காரியத்தையும் சாதிக்க முடியாது என்கிற நிலை இன்று ஏற்பட்டுவிட்டது.

தனது உயர் அதிகாரிகளால் காரியம் ஆக வேண்டியிருக்கிறது. அதனால் அவருக்குக் கீழ்படிந்து நடக்கும் ஊழியன் அவரை எப்போதும் முகஸ்துதி செய்துதான் காரியங்களைச் சாதிக்க வேண்டும். அவரை எங்கு சந்தித்தாலும்,   "ஐயா வீட்டு நாய்க்குட்டி நன்றாக இருக்கிறதா?, ஐயாவின் வீட்டுத் தோட்டத்தில் பூக்கும் ரோஜாவுக்கு இணையாக நான் வேறு எங்கும் அப்படிப்பட்ட பூவைப் பார்த்ததில்லை!" என்றெல்லாம் மனமறிந்து பொய் சொல்லுவான்.

அவ்வளவு ஏன் வீட்டில் தன் மனைவியிடம் கூட காரியம் ஆவதற்குப் பொய்யும் முகஸ்துதியும் செய்யத்தான் வேண்டியிருக்கிறது. காலையில் ஒரு காபி சாப்பிட்டிருப்பான். அன்று விடுமுறை என்பதால் மறுபடியும் மற்றொரு காபி வேண்டும். இதை மனைவியிடம் கேட்டால், எத்தனை முறை காபி சாப்பிடுவது. காபிபொடி விலை என்ன தெரியுமா என்றெல்லாம் பொரிந்து தள்ளுவாள். என்ன செய்வது? அடடா! நீ போடும் காபிக்கு இணையாக வேறு எங்கும் நான் சாப்பிட்டதில்லை என்று ஒரு பொய்யைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

வள்ளல் என்று நினைத்து ஒருவனிடம் கையேந்தி யாசகம் கேட்டு அதற்கு அவன் 'இல்லை போ' என்று சொல்லிவிட்டதற்காக மனம் வருந்தி, தான் மனசாட்சிக்கு எதிராக பொய்களைச் சொல்லி, முகஸ்துதி செய்து வாழ்ந்ததையெல்லாம் அசை போடுகிறான் ஒரு புலவன்.

அப்படி அசை போட்டதன் விளைவு அவனுக்கு ஏற்பட்ட ஞானோதயம் ஒரு பாட்டாக வெளிவந்தது. அதில் அவன் சொல்லுகிறான், படிப்பறிவு இல்லாத ஒரு பாமரனை 'கல்விக் களஞ்சியமே' என்று பொய் சொன்னேன், காட்டில் மரம் வெட்டுகின்றவனை 'நாடாளும் மன்னவனே' என்றேன், பொல்லாதவன் ஒருவனை நான் நல்லவன் என்று புகழ்ந்தேன், போர் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு கோழையைப் பகைவர் மீது பாய்கின்ற புலியே என்றேன், மெலிந்து இளைத்த தொங்கிய தோளை உடைய ஒருவனைப் பார்த்து மற்போரில் வல்லவனே என்று புகழ்ந்தேன், இரந்து கையேந்தி வந்தவருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனை நான் வள்ளலே என்றேன் இப்படி நான் என் வாழ்நாளெல்லாம் பொய்யே சொன்னதனாலோ என்னவோ, நான் கையேந்திப்போய் பரிசில் கேட்ட இடத்தில் ஒருவன் எனக்கு ஒன்றும் இல்லை 'போ' என்று கைவிரித்து விட்டான். நான் சொன்ன பொய்களின் விளைவு இது என்று வருந்துகிறான் அந்தப் புலவன். இதோ அந்தப் பாடல்.

"கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடு எறியும் மறவனை நாடு ஆள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயம் என்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் எந்தன் குற்றத்தால் ஏகின்றேனே!"


அன்புடன்
வி.கோபாலன்
தஞ்சாவூர்

++++++++++++++++++++++++++++++++++++++++++
2
ஆங்கிலேயன் செய்த அழும்பு!
---------------------------------------------------
தரம்பால்ஜி........! இந்தப் பெயரை உங்களில் எத்தனை பேர் கேட்டு இருப்பீர்கள்?

இப்பெயரை அறிந்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

"இந்தியா ஆங்கிலேய ஆட்சிக்குப் பின்னர்தான் கல்வியிலும், தொழிலிலும் முன்னேற்றம் அடைந்தது. ஆங்கிலேயர்கள் வ‌ருவதற்கு முன்னர் இந்தியர்கள் ஒரு ஒழுங்க‌ற்ற ,படிப்பறிவில்லாத,தொழில் அறியாத, பாமரக் கூட்டமாகத்தான் இருந்தனர்!" இப்ப‌டி யாராவது மேடையில் பேசினால் "ஆமாம் தானே!" என்று பெரும்பாலான இந்தியர்கள் தலையாட்டி அங்கீகரித்து விடுவர்.

ஆனால் அப்படி அங்கீகரிக்க மறுத்தவர், ஆணித்தரமான ஆதாரங்களை அளித்தவர் தரம்பால்ஜி.

சென்ற‌ தலைமுறையில் மஹாத்மா காந்திஜியின் சொல்கேட்டு ஆங்கிலக் கல்வியை உதறிக் கல்லூரியை விட்டு வெளியேறி 1942 வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டார் தரம்பால்ஜி! 1922ல் பிறந்த தரம்பால்ஜி மறைந்தது 2006. உத்திரப்பிரதேச மாநிலம் முஸாப்பூர் மாவட்டத்தில் கண்டல என்ற ஊரில் பிறந்த தரம்பால்ஜி விரும்பிய ஒரு இடம் சென்னையும் தமிழ்நாடும்தான்.காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் சிற்பங்களில் தீராத மோகம் கொண்டவர்.

சரித்திரம் என்பது என்ன?

எதை ஆட்சியாளர்கள் சொல்கிறார்களோ அதுதான் சரித்திரம்.

ஆங்கிலேயர்கள் இங்கே வந்தபோது நல்ல கட்டுக்கோப்பான அமைப்புக்கள் இந்தியாமுழுவதிலும் உள்ள கிராமங்களிலும் நகரங்களிலும் இருந்தன.மக்களை ஒற்றுமைப்படுத்துவும், பொருளியல் ரீதியில் செயலூக்கம் கொடுக்கவும் இந்த சமுதாய அமைப்பு பெரிய ஆற்றல் படைத்ததாக இருந்தது.

இதன் முதுகெலும்பை உடைக்க இந்த சமூகப் பொருளியல் அமைப்பை சீர்குலைக்க வேண்டும்.அதை நிர்வாகத்திறன் மிக்க ஆங்கிலேயர் செவ்வனே செய்தனர்.

கலகத்தை உருவாக்கி மக்களை மோதவிடுவதன் மூலம் தங்கள் அதிகார மையத்தை வலுப்படுத்திக் கொள்ளும் தந்திரம் மிக்கவர்கள் ஆங்கிலேயர்கள். ஒரு பிரிவினர் மற்றையோருக்கு கலவி பயிலத் தடையாக இருக்கின்றனர் என்ற வேற்றுமை விதையை வெற்றிகரமாக விதைத்தனர் அன்னியர். அவர்களுடைய பொய்யான பிரச்சாரத்தை ஒரு சாரார் நம்பி மற்றொரு சாரார் மீது தீராத பகைமை பாராட்டத் துவங்கினர். அதனுடைய உக்கிரகம் இன்றும் தணியவில்லை.

தரம்பால்ஜி செய்துள்ளது பல சரித்திர ஆய்வாளர்களால் செய்ய முடியாத பணி.

தரம்பால்ஜி இன்றளவும் ஒரு சரித்திர ஆய்வாளராகப் பேராசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவர். ஏனெனில் அவர் வசம் ஒரு பல்கலைகழகத்தின் பட்டப் படிப்புச் சான்றோ, முறையாகப் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்ட தற்கான அத்தாட்சியோ ஏதும் இல்லை.. ஆனாலும் அவர் பணி இந்திய சரித்திரத்தையே புரட்டிப் போட்டது.எதிர்காலத்தில் மேலும் ஆய்வுக‌ள் வரும் போது, தரம்பாலின் முன்னோடிப் பணிக்கு நிச்ச‌யமான அங்கீகாரம் கிடைக்கும்.

அப்படி என்னதான் செய்தார் தரம்பால்ஜி?

இந்திய அரசு ஆவணக்காப்பகங்களில் தன் வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தார். இலண்டன் மாந‌கரில் உள்ள ஆவணங்களையும் நுணுகி ஆராய்ந்தார்.

அவருக்குக் கிடைத்த சான்று என்ன தெரியுமா?

இந்தியாவில் ஆரம்பக்கல்வியும் உயர் கல்வியும் ஆங்கிலேயர் காலத்திற்கு முன்பு, சாதி, ம‌த பாலின வேற்றுமையின்றி எல்லோருக்கும் கிடைத்தது என்பதே.

அவருடைய ஆய்வு நூலகள் 5 புத்தகங்களாகக் கிடைக்கின்ற‌ன‌

Vol 1: Indian Science and Technology in the Eighteenth Century
Vol 2: Civil Disobedience in the Indian Tradition
Vol 3: The Beautiful Tree Indigenous Indian Education in the Eighteenth Century
Vol 4: Panchayat Raj and India's polity
Vol 5: Essays on Tradition, Recovery and Freedom (which included the Bharatiya Chit, Manas and Kaal)   

இதில் 3வது புத்தகம் "பேர‌ழகான‌ மரம்=இந்தியக் கல்வி =18ஆம் நூற்றாண்டில்" என்பது நமது மக்களுடைய கல்வி முறையைப்பற்றி,பாள்ளிகளில் மாணவர் வருகை பற்றி விரிவாகப் பேசுகிறது.

ஜூன்2011ல் சாதிவாரி மக்கட்த்தொகைக் கண‌க்கெடுப்புச் செய்யப் போகிறார்களாம். மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஆனால் 1822லேயே ஆங்கிலேயன் சாதிவாரியாகப் பள்ளிகளில் எத்துணை பேர் படிக்கிறார்கள் என்று கணக்கெடுத்து இலண்டனுக்கு அறிக்கை சமர்பித்துள்ளான்.

1857 சிப்பாய் புரட்சிக்குப் பின்னர்தான் ஆங்கில மஹாராணியின் நேரடி நிர்வாகம் வருகிறது.அதுவரை இந்தியாவிற்கான எந்த கல்விக் கொள்கையும் இல்லை. கிழக்கிந்தியக்கம்பெனி வரிவசூல் மட்டும் செய்து வந்தது, நலத் திட்டம் எதுவும் செயல் படுத்தவில்லை.  எனவே பழைய கல்வி முறைகளே கடைப் பிடிக்கப்பட்டன.

தென் இந்தியாவின் தற்போதைய 4 மாநிலங்களும் மெட்ராஸ் ப்ரெசிடென்சி என்று இருந்த காலம். அப்போது சர் தாமஸ் மன்ரோ கவர்னர். இந்த தென் மாநிலங்களில் சாதிவாரியாக பள்ளிகளில் படிக்கும் மாண‌வர்களின் எண்ணிக்கை மாவட்டக் கலெக்டர்கள் சேகரித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்று உத்திரவு போட‌ப்பட்டது. ஜூன் 1822 முதல் இந்த சர்வே நடந்தது.

கிடைத்த தகவல்கள் இன்றும் ஆவணக் காப்பகத்தில் காணலாம்.

ஒரு சில மட்டும் காண்போம்.

விசாகப்பட்டினத்தில் பிராமண‌ர்களும் வைஸ்யர்களுமாக மொத்த மாணவர் எண்ணிக்கையில் 47%. பிற்படுத்தப்பட்டோர் 21% தாழ்த்தப்பட்டவர்கள் (எஸ்சி) எண்ணிக்கை 20% முஸ்லிம்கள் 12%

திருநெல்வேலியில் பிராமண மாண‌வர் எண்ணிக்கை 21.8% பிற்படுத்தப்பட்டவர்கள் 31.2% தாழ்த்தப்படவர்கள் 38.4% மூஸ்லீம் 8.6%

தென் ஆற்காட்டில் பிராமண மானவர்கள் 16% ஏனையோர் 84%

அன்றைய பாம்பே மாகாணத்தில் பிராமண மாணவர் எண்ணிக்கை 30%மட்டுமே. ஏனையோர் 70%. வங்க‌த்தில் இது 40=60%

உயர்கல்வியில் சட்டமும், தத்துவமும்தான் பிராமணர் படித்துள்ளனர். வைத்தியம், வானியல் மற்ற வகுப்பாரே படித்துள்ளனர்.அதாவது வேலை வாய்ப்பும் வருமானமும் கூடவரும் ஃப்ரொபொஷனல் கல்வி மற்றவர்களுக்கே அதிகம் கிடைத்துள்ளது.

தரம்பால்ஜி அவர்களின் ஆய்வு நூல்கள் இணையத்தில் தரவிறக்கம் செய்து வாசிக்கலாம். தொடர்புக்கு

தட்ட‌ச்சு தெரியாத, கணினி பற்றி அறியாத தரம்பாலஜி செய்துள்ள ஆய்வு மிகவும் பயனுள்ளது.

நன்கு இருந்த நம் நாட்டை, நம் கலாச்சாரத்தை, நம் பண்பாட்டை , வாழ்வியலை சீர்குலைத்த ஆங்கிலேயன் சொன்ன சரித்திரத்தை தள்ளிவைப்போம்.

தரம்பால்ஜி போன்றவர்களின் அடிச்சுவட்டைப்பின் பற்றி சரித்தரத்தை முன் நகர்த்துவோம்.
ஆக்கம்:
முக்காலம்
++++++++++++++++++++++++++++++++++=

 தரம்பால்ஜியின் புகைப்படம்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

28.5.11

கண்ணதாசனும் வைரமுத்துவும்!

கண்ணதாசனும் வைரமுத்துவும்!

இளைஞர் மலர்

இந்தவார இளைஞர் மலருக்கு யாரும் ஆக்கங்கள் எதையும் அனுப்பாததால், வாத்தியாரே களத்தில் இறங்கியிருக்கிறார். மனதளவில் வாத்தியாரும் இளைஞர்தான் அதை மனதில் வையுங்கள்

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
 ஏன் பெண் உறங்கவில்லை!

கவியரசர் அவர்கள் எழுதிய ஒரு பாட்டைக் கேட்டுவிட்டு இளைஞர்கள்
பலர் சேர்ந்து, அவரைப் பிடித்துக் கொண்டு பல கேள்விகள் கேட்டார்கள்..

பாடலின் முதல் ஏழு வரிகளைப் பாருங்கள்.

நீ இல்லாத உலகத்திலே  நிம்மதி இல்லை
உன் நினைவில்லாத இதயத்திலே   
சிந்தனை இல்லை .. சிந்தனை இல்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
காயும் நிலா வானில் வந்தால் கண்ணுறங்கவில்லை
உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய்
பெண் உறங்கவில்லை .. பெண் உறங்கவில்லை.

இளைஞர்கள் கேட்டது இதுதான்.

"
உணர்வுகள் என்பது ஆண், பெண் என்று இருபாலருக்கும் பொதுவானதுதானே!
அப்படியிருக்கையில், உன்னைக் கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை என்று நீங்கள் பெண்ணை மட்டும் எப்படிச் சிறப்பித்துக் கூறலாம்? அதே காதல் உணர்வினால் அவளுடைய காதலனும் பாதிக்கப்பட்டிருக்க மாட்டானா? சொல்லுங்கள்! இவள் உறங்காதது போல அவனும் உறங்கியிருக்க மாட்டானில்லையா? அப்படியிருக்கும்
போது பெண் உறங்கவில்லை என்று பெண்ணை மட்டும் ஏன் உயர்த்தி எழுதினீர்கள்? காதல் உணர்வில் அதிகமாகப் பாதிக்கப்பட்டுத் தூக்கமின்றித் தவிப்பவன் ஆண்தான். அது உங்களுக்குத் தெரியாதா?"" என்று கேட்டுத் துளைத்து எடுத்து விட்டார்கள்.

அவர் நடத்திக் கொண்டிருந்த தென்றல் என்ற பத்திரிக்கை மூலமாகத்தான் இந்தக்
கேள்வியைப் பல ஆண் வாசகர்கள் கேட்டு எழுதியிருந்தார்கள். கடிதங்கள் நூற்றுக் 
கணக்கில் வந்து குவிந்து விட்டது.

நம் கவியரசர் அவர்கள் நல்லதாக ஒரு பதிலைக் கொடுத்து அனைவரையும்
சமாதானமடையச் செய்தார்.

அதற்கு முன் வெளிவந்திருந்த வானம்பாடி என்ற படத்தில், தான் எழுதியிருந்த பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பதில் எழுதியிருந்தார்.

"
கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன்
காதலித்து வேதனையில் வாட வேண்டும்!
பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன்
பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்!"

என்று துவங்கும் பாடல் அது. அந்தப் பாட்டின் இடையில்

"
அவனை அழைத்துவந்து
ஆசையில் மிதக்க விட்டு
ஆடடா ஆடு என்று
ஆட வைத்துப் பார்த்திருப்பேன்!

படுவான் துடித்திடுவான்
பட்டதே போதுமென்பான்
பாவியவன் பெண்குலத்தைப்
படைக்காமல் நிறுத்தி வைப்பான்!"

என்ற வரிகள் வரும். அதைச் சுட்டிக் காட்டிக் கவியரசர் இப்படி எழுதினார்:

"
பெண் குலத்தைப் படைபதை நிறுத்திவை" என்று ஒரு காதலன் துக்க உணர்வு
மேலோங்கிப் பாடுவதாக எழுதியிருந்தேன்.அவன் ஒருவனுடைய உணர்வுகளுக்காக மொத்த பெண் குலமும் என்ன செய்யும்? கடவுளென்ன அவன் வைத்த ஆளா? இவனுக்காக அவர் எப்படி பெண்ணைப் படைப்பதை நிறுத்துவார்?.

இதையே ஒரு பெண் குரல் கொடுத்து ஆண்களைப் படைப்பதை நிறுத்து கடவுளே என்றால் என்ன ஆகும்?

ஆனாலும் அவன் பாட்டில் தவறு இல்லை தன் உணர்வுகளின் தாக்கத்தினால்
அவன் அப்படிப் பாடுகின்றான். அவனுடைய சூழ்நிலை அப்படி.

அதே போன்ற சூழ்நிலையில் தான் அந்தப் பெண்ணும், தன் உணர்வுகள் மேலோங்கப் பெண் உறங்கவில்லை என்கிறாள்! அதைத் தவறென்று நீங்கள் சொல்வீர்கள் என்றால், இதுவும் தவறுதான். அது தவறில்லை என்றால் இதுவும் தவறில்லை. என்ன சொல்கிறீர்கள்?" என்று வந்த எதிர்ப்பிற்கு சரியான கேள்வி ஒன்றைக்கேட்டு அவர்களையே உணர வைத்தார்.

மேலும் அதன் தொடர்ச்சியாக அடுத்து வந்த தென்றல் இதழில் இப்படி எழுதினார்.

"
இந்த வானம்பாடிப் படப்பாடல் வந்த போது ஒரு பெண் கூட என்னைக் கேள்வி
கேட்கவில்லை. நீங்கள் எத்தனையோ பேர் கேட்டு எழுத நான் பதில்சொன்னேன்.
உங்களுக்கு மேலும் ஒன்று சொல்வேன். உணர்வுகள் பொதுவானவை. உணர்வுகளுக்கு ஆண், பெண் என்கின்ற பேதம் கிடையாது! திரைப்படப் பாடல்கள் எல்லாம் படத்தின் சூழ்நிலைக்கு, நாயகன், நாயகியின் மன உணர்வுகளுக்கு எழுதப்படுபவை. அவைகளை நீங்கள் அந்தப் பாத்திரங்களின் தன்மையோடு மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள்"

என்ன நிதர்சனமான உண்மை!
----------------------------------------------------------------------------


 ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பாவாடை சட்டையும் பரமசிவன் வரமும்
ஒரு சம்பவத்தைச் சுவையாகச் சொல்வதில் கதாசிரியர்களுக்கும் கவிஞர்களுக்குமிடையே மிகுந்த வித்தியாசம் இருக்கிறது. பதினைந்து வரிகளில் சொல்லவேண்டியதை, உணர்வு மேலோங்கிடச் சொல்வதற்குக் கதாசியருக்கு நாற்பது வரிகள் தேவைப்படும்.ஆனால் சிறந்த கவிஞரால் அதை நான்கே வரிகளில் அசத்தலாகச் சொல்லிவிட முடியும்.

எப்படியென்று பார்ப்போம்.

ஒரு ஏழைத் தாய். வறுமைதான் அவளுக்குத் துணைவன்.வீடுகளில் வேலை செய்து அரைவயிற்றுக் கஞ்சியோடு காலத்தை அவள் ஓட்டிக் கொண்டிருந்த நிலையில், அவளுடைய பதினோரு வயது நிரம்பிய மகள் வயதிற்கு வந்து விட்டாள். அவளுக்கு மகளாகப் பிறந்துவிட்ட அந்தப் பாவப்பட்ட சிறுமிக்கு இருப்பது இரண்டே உடைகள்தான் .ஒன்றை அவள் அணிந்து கொண்டிருக்கின்றாள்.மற்றொன்று வீட்டு வாசலில் உள்ள கொடியில் காய்ந்து கொண்டிருக்கிறது. பூப்படைந்துவிட்ட அந்தப் பெண்ணின் அவசரத் தேவைக்கு மற்றுமொரு மாற்று உடை இல்லாத நிலை. அந்த இருவருக்கும் ஒரே ஆதரவான அந்தப் பெண்மணியின் சகோதரனோ - காலக் கோளாறால் தற்சமயம் சிறையில் இருக்கிறான். அவன் இருந்திருந்தாலாவது இவர்களது வாட்டத்தைப் போக்குவான் அதை எண்ணி அந்த அன்புத்தாய் கண்ணீரோடு குடிசை வாசலில் அமர்ந்திருக்கின்றாள்.

தாயின் இந்தப் பரிதாப நிலைக்கு மனம் உருகி கவிஞர் வைரமுத்து
அவர்கள் பளிச்சென்று நம் மனதில் தைக்கும் விதமாகச் சிலவரிகளிலேயே இப்படிச் சொன்னார்

"
பாவாடை சட்டையோ பரமசிவன் தந்தவரம்!
தாவணிக்கு எங்குபோவேன்?
தாவணி வேணுமின்னா மாமன் வரவேணும்
மாமன் வரவேணுமின்னா - ஜாமீனில் வரவேணும்!"

என்ன அற்புதமான வெளிப்பாடு பாருங்கள்!

நச்' சென்று இருக்கிறதல்லவா?
----------------------------------------------------------------------------------
 அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!

27.5.11

எது தானாக வரவேண்டும்?

 -----------------------------------------------------------------------------------------
 ============================================================
எது தானாக வரவேண்டும்?

பக்தி மலர்

வங்கத்தில் ஸ்ரீகிருஷ்ண சைத்த‌ன்யரைக் கண்ணனின் ஓர் அவதாரமாகவே கொண்டாடுகின்றனர்.அவரை மஹாப்பிரபு என்பார்கள்.கெளராங்க‌ர் என்றும் கொண்டாடுவார்கள்.16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைத்த‌ன்ய மஹாபிரபு வங்கத்தில் நாடியா வட்டத்தில் நவத்வீபம் என்ற இடத்தில் அந்தணக் குடும்பத்தில் அவதரித்தார்.

கெளடியா மடம் என்று இன்று அறியப்படுவது சைத்தன்யருடைய வழி வந்த ஒரு நிறுவனமே.அதன் சென்னைக் கிளை ராயப்பேட்டையில் உள்ளது.

ஸ்ரீ பக்தி வேதாந்தப்பிரபு பாதா,  'ஹரே கிருஷ்ண இயக்கம்' என்று எல்லோருக்கும் அறிமுகமாகியுள்ள  "இஸ்கான்" இயக்கத்தை உலக அளவில் பர‌ப்பியவர். அந்த மஹான் சைத்தன்ய மார்க்கத்தைச் சார்ந்தவரே.

வடக்கில் உள்ள வைணவ சம்பிரதாய குழுக்களுக்கு நம் தமிழ்நாட்டின் ஸ்ரீரங்கம் ஒரு யாத்திரை ஸ்தலம்.அதுவும்  சைத்தன்ய மார்க்கிகளுக்கு அவசியம் தரிசிக்க வேண்டிய ஒரு கோவில் திருவரங்கம். இன்றும் கூட ஸ்ரீரங்கத்தில்  வாழும் மக்கள் அடிக்கடி வடநாட்டு பஜனை கோஷ்டிகள் டோலக் போன்ற தாள வத்தியங்களுடன் கோவிலைச் சுற்றி ஆட்டம் பாட்டத்துடன் பாடி வலம் வருவதை அடிக்கடிப் பார்க்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ண சைத்தன்யரே திருவரங்கத்துக்கு வந்துள்ளார். அவருடைய பாதம் பதிந்த ஓர் இடத்தில்  மண்டபம்  கூட உள்ளது. பெரிய கோபுரத்திற்கு எதிரில் பேருந்துகள் நிற்கும் இடத்தில் அந்தப் பாதம் உள்ளது.

ஸ்ரீ சைத்தன்ய மஹாப்பிரபு திருவரங்கத்தில் வெளிப் பிரஹாரத்தில் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டு வலம்  வந்து கொண்டிருக்கிறார்.
ஒரு ப‌க்கம் கோவில் மதிலும், எதிர் பக்க‌ம் வீடுகளும் உள்ள 4 வீதிகள் அது.இன்றும் அந்த அமைப்பு மாறாமல் அப்படியே உள்ளது.

அப்படி மஹாப்பிரபு ஆடிப்பாடிக் கொண்டு வரும் போது ஒரு  பெரிய
வீட்டு வாசலில் நிறைய வண்டிகள் மாடுகள் அவிழ்த்து விடப்ப‌ட்டு
சாய்ந்த நிலையில் நிற்கின்றன.அந்தவீட்டின் உள்ளிருந்து உபன்யாசம் நடக்கும் குரல் கேட்கிறது. ஸ்ரீ சைத்தன்யர் அந்த உபன்யாசத்தை
சற்றே ஊன்றிக் கவனித்தார். அந்த உபன்யாசம் ஸ்ரீமத் பகவத்கீதை!

பல வண்டிகள் சாய்ந்த நிலையில் நின்றன அல்ல‌வா? அந்த
வண்டிகளின் நுகத்தடிகளின் மீது அந்த அந்த‌ வண்டி ஓட்டிகள் 
அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டு இருந்தனர். முதலாளிகள்
உபன்யாசம் முடிந்து வரும் வரைவேறு என்னதான் செய்வது?
வெற்றிலை போட்டுத் துப்புவது, வம்பு பேசுவதுமாக இருந்தார்கள்.

ஸ்ரீ சைத்தன்யர் இவர்கள் எல்லாம் பகவன் நாமாவைச் சொல்லாமல் வெட்டியாகப் பொழுதைக் கழிக்கிறார்களே  என்று ஏங்கி அவர்கள்
அருகில் சென்றார்.அங்கே இருந்த ஒரு வண்டியோட்டுபவர் மட்டும் கூட்டத்தில் சேராமல் தனியே  இருந்தார். அவருடைய கண்களில்
இருந்து கண்ணீர் ஆறாகப் பெருகிக் கொண்டிருந்தது. 'சரி!

அவருக்கு ஏதோ துக்கம் போல' என்று எண்ணிய ஸ்ரீ சைத்தனயர், அழுது கொண்டிருந்த வண்டியோட்டியின்  அருகில் சென்று அமர்ந்து அவருடைய கைகளை ஆறுதலாகப் பற்றிக் கொண்டார்.

"சகோதரரே! உங்க‌ளுக்கு என்ன துக்கம்? ஏன் அழுகிறீர்கள்? என்னிடம் சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்"  என்றார் மஹாப்பிரபு.

"இது அழுகை இல்லைங்க!ஆனந்தக்கண்ணீர்!"

"அப்படியா! உங்க‌ள் ஆனந்தத்தை என்னுடன் பகிர்ந்து கொண்டால் நானும் ஆனந்தம் கொள்வேனே!"

"அந்த வீட்டின் உள்ளே பல பெரியவர்கள் உட்கார்ந்து பாடம் கேட்டுக்கிட்டு இருக்காங்க இல்லீங்களா?"

"ஆம்!அதற்கென்ன?"

"அவங்க‌ கேட்குற‌ பாடம் என்னன்னு  தெரியுமா?"

"அதுவா? பகவத் கீதை!"

"அதைச் சொன்னவரு யாரு?"

"அவ‌ர் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா!"

"அவரு அந்த கீதையைச் சொன்னப்ப‌  எங்கே இருந்தாரு?"

"யுத்தகளத்தில்.."

"அதில்லீங்க! கிருஸ்ணரு எங்க‌ன உட்கார்ந்து கீதையைச்சொன்னாரு?"

"ரதத்தின் முன்னால் உள்ள இடத்தில்..."

"அதாவது, இதைப்போல ஒரு வண்டியோட நுகத்தடியில உட்கார்ந்துதான் கீதையைச்சொன்னாரு, இல்லையா..?"

"ஆமாம் ஆமாம்...."

"கிருஸ்னரும் என்னைப் போல ஒரு வண்டியோட்டி! அவரும் இப்போ நா குந்தியிருக்கிற மாதிரி நுகத்தடியில  உட்கார்ந்து கீதையைச்சொன்னாரு இல்லீங்களா?"

"ஆமாம் சகோதரா!"

"அப்ப கிருஸ்னரும் நானும் ஒரே சாதி! ஒரே கூட்டம் !இதை நினைச்சேன் பாருங்க...! எங்காளு சொன்ன வார்த்தைய இத்தனை பெரிய ஆளுங்க கேக்கறாஙளேன்னு தோணிச்சு கண்ணுல குப்புன்னு தண்ணி வந்திடிச்சி!
நிமிந்து பாத்தா அந்த மாயக் கண்ணன் தார்க் குச்சியோட என்னைப்பார்த்து சிரிக்கிறான். அந்தக் காட்சி எனக்கு  கிடைச்சி பரவசமாயிட்டேன். ஆனந்தக் கண்ணீரு கொட்டுது...!"

ஸ்ரீ சைத்தன்யர் அந்த வண்டியோட்டியைக் கட்டிப் பிடித்து வணங்கினாராம்.

ஞானம் வந்து விடலாம். ஆனால் இது போல அனன்ய (அன்னியோன்ய) பக்தி வருவது கடின‌ம்.

இறைவன் "பக்திவலையில் படுவோன் காண்க‌"

பக்தி என்ற வலையை வீசி  இறைவனைச் மீன் பிடிப்பது போல சுலபமாகப் பிடித்துவிடலாம். அப்புறம் பாடலாம்."....சிக்கெனப்பிடித்தேன்... எங்கு எழுந்து அருளுவது இனியே..!"

இறைவா பக்தியை மட்டும் அருள்வாயாக! மற்றவைதானாக வரட்டும்!!
------------------------------------------------------------------------------------------------
நன்றி, வணக்கத்துடன்
கே.முத்துராம கிருஷ்ணன்
லால்குடி




வாழ்க வளமுடன்!

26.5.11

என்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்கலாம்?

---------------------------------------------------------------------------------
என்ன செய்தால் எல்லோரையும் நம் பதிவைப் படிக்க வைக்கலாம்?

இப்போது புதிதாகப் பதிவு எழுதுபவர்கள் நாளும் பொழுதுமாய்
அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். கடைக்குச் சென்று ஒரு
பாக்கெட் கடலை  உருண்டை வாங்கிக் கொண்டு வருவதைவிட
’வலைப்பூ’  (Blog) ஒன்றைத்  துவங்குவது மிகவும் சுலபமானது. யார் வேண்டுமென்றாலும் 15 நிமிடங்களுக்குள் ஒரு கூகுள் மின்னஞ்சல்  கணக்கையும், Blogger கணக்கையும் துவங்கி, வலைப்பூ ஒன்றை ஆரம்பித்துவிடலாம். சுயமாக எழுதலாம். அல்லது  கட் &
பேஸ்ட் செய்து எதை வேண்டுமென்றாலும் எடுத்து எழுதலாம்.

24.12.2005ல் முதன் முதலில் நான் எழுதத் துவங்கிய காலத்தில்
சுமார் 500 பேர்கள் மட்டுமே வலைப்பூக்களில்  எழுதிக்
கொண்டிருந்தார்கள்.

இப்போது எத்தனை பேர்கள் எழுதுகிறார்கள்?

தமிழ்மணம் என்னும் வலைப்பூக்களை ஒருங்கிணைக்கும் தளத்தின்   
(Tamil Blog Aggregator) புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெரியும். கீழே கொடுத்துள்ளேன்.

மொத்தப் பதிவுகள் (Blogs) : 9270
ஒரு நாளில் சராசரியாக எழுதப்படும் இடுகைகள் (Posts) : 399
ஒரு நாளில் சராசரியாக இடப்படும் பின்னூட்டங்கள் (Comments) : 3419

எழுதப்பெறும் அத்தனை பதிவுகளையும் படிக்க முடியுமா?

முடியாது. முடியவே முடியாது. வேலை வெட்டி இல்லாமல் சும்மா இருப்பவனுக்குக்கூட அது சாத்தியப்படாது.

அரசியல், சினிமா, நகைச்சுவை என்னும் தலைப்பில் வரும் பதிவுகளை பலரும் விரும்பிப் படிப்பார்கள்

அப்படி எழுதப்பெறும் பதிவுகளில் அதிகமான பேர்களை இழுக்கும் பதிவு அல்லது அதிகமான பேர்களைப்  படிக்க வைக்கும் பதிவு என்றால் ‘இட்லி வடை’ வலைப் பதிவைச் சொல்லலாம் (சுட்டி உள்ளது. பாருங்கள்)

கதை, கவிதை, இலக்கியம், ஆன்மிகம் போன்றவற்றை எழுதும்
பதிவுகளுக்கு கூட்டம் குறைவாகத்தான் வரும்.

நமீதாவைப் பற்றி எழுதினால் கூட்டம் அதிகமாக வந்து சேரும்
நாயன்மார்களைப் பற்றி எழுதினால் நாற்பது பேர்கள் கூட வந்து
படிக்க மாட்டார்கள்

அனுஷ்கா சர்மாவின் படத்தைப் போட்டால் அனைவரும் பார்ப்பார்கள். ஆண்டாளின் படத்தைப் போட்டால், நீங்கள் கூவி அழைப்பவர்கள்
மட்டும்தான் வந்து பார்ப்பார்கள்.

எப்படிக் கூவி அழைப்பது?

பலரது மின்னஞ்சலையும் சேர்த்துவைத்துக்கொண்டு, ஆண்டாளின்
அல்லது ஆழ்வார்களின் படத்தைப் போட்ட  பிறகு, அவர்களுக்கு
மின்னஞ்சல் மூலம் வேண்டுகோள் விடுத்து அழைக்க வேண்டும்.

எனக்கு தினமும் சில மின்னஞ்சல்கள் வரும். ”சார் நீங்கள் என்னுடைய பதிவை வந்து படித்து, உங்கள் கருத்தைச்  சொல்ல வேண்டுகிறேன்”

எதை எதைப் படிப்பது? என்ன கருத்தைச் சொல்வது? எல்லாவற்றிற்கும்
நேரம் வேண்டாமா?

இதுதான் நிலைமை
-------------------------------------------------------------------------
பதிவு எழுதுபவர்களுக்கெல்லாம் ஒரு உந்துதல் இருக்கும். நமது
பதிவைப் பலபேர்கள் வந்து படிக்கவேண்டும்  என்ற ஆர்வம்
இருக்கும். பாராட்ட வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு ஐம்பது பின்னூட்டமாவது விழுக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும்.

ஆனால் துவக்கத்தில் அதெல்லாம் நடக்காது.

நான் ஆறு ஆண்டுகளாக எழுதி வருகிறேன். முதல் ஆறு மாதங்களில்
தினமும் 30 பேர்கள்கூட வந்து படிக்க  மாட்டார்கள். Static Counter
வைத்திருந்தால் வருகிறவர்களின் எண்ணிக்கை தெரியும்.

நான் எண்ணிக்கைகளைப் பற்றிக் கவலைப் படாமல் எழுதிக் கொண்டிருந்தேன். என் சிந்தனைகளை,  கருத்துக்களை,
ஆவணப் படுத்துகிறோம் என்ற ஒரு நோக்கத்துடன் மட்டும்தான்
எழுதத் துவங்கினேன்.

இன்றுவரை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறேன்.

சிலர் வேறு ஒரு உபாயத்தைக் கடைப் பிடித்தார்கள். தினமும்
குறைந்தது ஒரு ஐம்பது பதிவுகளுக்காவது சென்று  பின்னூட்டம்
போட்டு விடுவார்கள். அடுத்த நாள் வேறு ஒரு 50 பதிவுகள். இப்படி
சுழற்சி முறையிலொரு 300 பதிவுகளைத் தொடர்பில்
வைத்திருப்பார்கள்.

அந்த 300 பேர்களில் ஒரு 200 பேர்களாவது வந்து இவருடைய  பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவார்கள். அதாவது உனக்கு நான்.
எனக்கு நீ என்னும் உபாயம். இதற்கு ஒரு பெயரையும் சூட்டினார்கள்.  
‘முதுகு சொறிந்து விடுதல்’ என்று பெயர். உனக்கு நான் முதுகு சொறிந்துவிடுகிறேன். எனக்கு நீ முதுகு சொறிந்துவிடு!’

நிலைமை எப்படி உள்ளது பார்த்தீர்களா?
----------------------------------------------------------
எழுதுகிறவர்களுக்கு யோசனை சொல்லும் முகமாக ஐந்து ஆண்டு
களுக்கு முன்பு நான் இரண்டு பதிவுகளை  எழுதினேன். அதை
உங்களுக்குத் தெரிவிக்கும் முகமாகக் கீழே கொடுத்துள்ளேன்.

அந்த இரண்டு பதிவுகளும் 23.8.2006 & 24.8.2006ம் தேதிகள் என்று
அடுத்தடுத்த தேதிகளில் வெளியாகின. பலரையும் அவைகள் உள்ளே அழுத்துக்கொண்டு வந்தன, அந்த வார ஆக்கங்களில் முதல் இடத்தைப் பிடித்தன.(அத்துடன் எனக்கு வாத்தியார் பட்டத்தையும் பெற்றுத் தந்தன. அத்துடன் நான் வகுப்பறை என்ற இரண்டாவது  வலைப்பூவையும்
துவக்கக் காரணமாக இருந்தன!)
==================================================
1
டெக்னாலஜி படுத்தும் பாடு - பேசும் கம்ப்யூட்டர்

(தொழில்நுட்பம் அப்படி என்னய்யா பாடு படுத்திவிடும் என்று எதிர்
மறையாக நினைப்பவர்கள் தயவு செய்து  பதிவை விட்டு விலகவும் - மற்றவர்கள் வருக! வருக!)

வருடம் 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை.

ஞாயிற்றுக்கிழமைதான் சில பல விஷயங்களுக்குச் செளகரியம் அதனால்தான் ஞாயிற்றுக்கிழமை வருடத்தை மட்டும் மறக்காமல்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

இந்த வருடத்தின் பெரிய அதிசயம் -அதிசயம் என்றவுடன் 50 கிலோ கொடியிடை அதிசயத்தையெல்லாம் நினைத்துக் கொள்ளாதீர்கள்.
இது தொழில் நுட்ப அதிசயம். எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு சொல்லக்
கூடிய கைப்பெட்டிக் கணினி முன் நான்அமர்ந்திருக்கிறேன் .

என் நண்பன் சிலிக்கன் valley சிங்காரம் பரிசாகக் கொடுத்துவிட்டுப்
போனான். மூன்று பில்லியன் (எத்தனை  ஸைபர் என்று எழுத
வெல்லாம் நேரமில்லை) பிரச்சினைகள் அதில்  வகைப்படுத்தப்பட்டிருப்ப தாகவும், எந்தப் பிரச்சினைக்கும் அது நொடியில் தீர்வுசொல்லிவிடும்
என்றும் சொல்லி விட்டுப் போனான்

மெமோ அல்லது பிங்க் ஸிலிப் ஏற்பாடு செய்து விடுவேன் என்று
மிரட்டும் டீம் மானேஜரிலிருந்து, என்னை  வழியில் இறக்கி
விட்டுட்டுப் போடா என்று கலாய்க்கும் அலுவலகத்தோழி வரை,
வீட்டில் சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடிக்கும் குழுந்தை முதல்,
பணத்தின் அருமையே இந்தக் காலத்துப் பசங்களுக்குத் தெரிய
வில்லை  என்று தொணதொணக்கும் பெரிசுகள் வரை, அது போன்ற
எந்தப் பிரச்சினையானாலும் தீர்வு சொல்லுமாம் இந்த  அதிசயம்!

நமக்கா பிரச்சினைகளுக்குப் பஞ்சம்? அடித்ததடா யோகம்! நம் பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரு முடிவு  கட்டுவதோடு, லோக்கல் நண்பர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வு சொல்லி அசத்துவோம்
என்ற குதுகலத்தோடு  கணினி முன் நான் உட்கார்ந்திருக்கிறேன்

சிங்காரம் கொடுக்கும் போதே,Very Very User Friendly System. Booting
மட்டும் நீ செய். மற்றதையெல்லாம்  கழுத்தைப்பிடித்து அதுவே சொல்லிக்கொடுக்கும் என்று வேறு சொல்லி விட்டுப் போனான்

எதற்காக உட்கார்ந்திருக்கிறேன். கணினி என்னை அடையாளம்
கண்டு கொள்ள வேண்டாமா?

அதில் உள்ள Remote Sensor கருவிகள் எல்லாம் நான்தான் User என்று
தெரிந்து கொண்டவுடன் என்னுடன் பேச  ஆரம்பித்தது. 120 மொழிகள் அதற்குத் தெரியும். தமிழிலேயே, மதுரைத்தமிழ், நெல்லைத்தமிழ், கோவைத்தமிழ் என்று ஏழு வகைத் தமிழும் தெரியம்.

"உங்கள் பிரச்சினையின் வகையைச் (category) சொல்லுங்கள்" என்றது

"என்னுடைய வலைப்பூ (Blog)" என்றேன்

"Okay! அதில் என்ன பிரச்சினை?"

"நிறைய பார்வையாளர்கள் வரமாட்டேன் என்கிறார்கள்"

"ஏன்? நன்றாக எழுதுகிறிர்களல்லவா?"

"யாராவது வந்து படித்துவிட்டுப் பின்னூட்டம் இட்டாலல்லவா அது தெரியும்!"

"இதுவரை எத்தனை பதிவுகள் போட்டிருக்கிறீர்கள்?"

"சுமார் முப்பது பதிவுகள் போட்டிருக்கிறேன்"

"ஒன்றில்கூட பின்னூட்டம் இல்லையா?"

"எதிர்பார்த்த அளவு இல்லை1"

"உங்கள் URLஐச் சொல்லுங்கள் - நான் போய் தேவையான அளவு மறு
மொழிந்து (பின்னூட்டம் போட்டு) விட்டு  வருகிறேன்"

"தமிழ் மணத்தில் அதெல்லாம் நடக்காது. சாத்தி விடுவார்கள். நேர்மையான யோசனை ஒன்று தேவை!"

"சரி, தமிழ் மணத்தில் எத்தனை பேர் எழுதுகிறார்கள் என்ற விவரம்
தெரியுமா?"

"நன்றாகத் தெரியும். சுமார் ஒரு லட்சம் பேர்கள் எழுதுகிறார்கள்.பத்து
லட்சம் வாசகர்கள் வந்து போகிறார்கள்.  நாளொன்றுக்குச் சராசரிப்
பதிவே சுமார் 20,000 த்தைத் தாண்டுகிறது."

"ஓஹோ!.........சரி அதில் எத்தனை பேர்கள் உங்கள் வலைப்பூவிற்கு வரவேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள்?"

"ஆயிரம் பேர்களாவது வந்து போனால் நல்லது!"

"வேறு ஏதாவது உப எதிர்பார்ப்பு இருக்கிறதா?"

"ஆமாம், மறந்து விட்டேன் - ஜி. கெளதம்,கில்லி, கோவி கண்ணன்,
குமரன், செல்வன், சிவமுருகன், நாமக்கல்  சிபி, சுந்தர், தம்பி, தேவ்,
ஜி. ராகவன், நாகைசிவா, வசந்த், சந்திரவதனா, மியூஸ், டால்பின், இறைனேசன், வெற்றி, வெட்டிப்பயல், விடாது கருப்பு, மாயவரத்தான், ஞானவெட்டியான், ராஜதுரை, செந்தழல்ரவி, துளசி கோபால்,  குழலி,
என்று நூறு வலைப்பதிவர்களைக் குறிப்பெடுத்து வைத்துள்ளேன்.
அவர்கள் எல்லாம் வந்து போனால்நல்லது"

"அவர்கள் ஏன் வர வேண்டும்?"

"அவர்களெல்லாம் முன்னணி மற்றும் மூத்த வலைப்பூ பதிவாளர்கள்
கடந்த 20 வருடங்களாக வலையில்  எழுதிக்குவிக்கும் நட்சத்திரங்கள். அவர்களுக்குத் தமிழ்மணம் நிர்வாகமே ஐந்து நட்சத்திர அந்தஸ்தைக்  கொடுத்திருக்கிறது. அவர்கள் எந்தப்பதிவில் நுழைந்து பார்த்தாலும்
அவர்கள் பெயருடன் Five Starகளும் சேர்ந்து  பதிவாகும். அவர்கள்
எல்லாம் வந்து போனால் என் வலைப்பூவிற்கும் கெளரவமாக
இருக்கும்"

"அதெல்லாம் ஒன்றும் பிர்ச்சினையில்லை. அவர்களையெல்லாம்
உங்கடைய வலைப்பூவிற்குள் சுலபமாக  வரவழைத்து விடலாம்:

"எப்படி?"

"முதலில் தினமும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர்களை வளைத்து வரவைக்க வேண்டும். அப்படி Heavy Traffic  உங்கள் வலைப்பூவிற்குள் ஏற்படும்போது, நீங்கள் சொல்லும் அந்த 100 ஸ்டார் பதிவாளர்களும்
என்ன நடக்கிறது  என்று பார்க்கும் ஆவலில் நுழைந்து விடுவார்கள்?

"லட்சம் பேர்களையா? அது எப்படி சாத்தியம்?"

"ஏன் முடியாது? மிகப் பெரிய பரிசுத்திட்டம் ஒன்றை அறிவித்து விடுங்கள்!"

"பரிசுத் திட்டமா - அதுவும் தினமும் ஒரு லட்சம் பேருக்கா?"

"தினமும் வந்து போகிறவர்களுக்கு மாதம் ஒரு முறை பரிசளிக்கலாம்.
வந்து போகிறவர்களைக் கணக்கெடுத்து -  அவர்கள் Blog Identification 
Number + Bank Account Number க்கெல்லாம் பணம் அனுப்புவதற்கு
Softwareஐஉங்கள் வலைப்பூவிலேயே பொருத்தி விடலாம்"

"அய்யோ சாமி..அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?"

"எங்கேயும் போகவேண்டாம். திட்டம் அறிவித்த நான்காவது நாளே
Hit Counter - Visitors Country Counter எண்ணிக்கைகளை வைத்து Sponsor
களைப் பிடித்து விடலாம்.Pepsi, Coke, Wall - Mart, Gap,Hundai, Suzuki, 
Mitsubhishi, Reliance, Atrtel, Tata, BSNL Cellular Service, Indian Oil, 
Hindusthan Lever என்று பல கம்பெனிகள்  பணத்தைக் கொட்ட
ஆரம்பித்து விடுவர்கள். அதிலிருந்து கொடுத்து விடலாம்"

"கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. நடக்க வேண்டுமே?"

"நடக்கும் - நம்பிக்கைதான் அடிப்படை. ஆம்னி பஸ்ஸில் போகும்
போது ஊரில் கொண்டு போய்ச் சேர்ப்பாயா  என்று உறுதி கேட்டு
விட்டா ஏறுகிறோம்? ஒரு நம்பிக்கையில் தானே ஏறுகிறோம். அதுபோலத்தான் இதுவும்!"

"வேண்டாம் - நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை - வேறு நல்ல
யோசனை இல்லையா?"

"இருங்கள் வருகிறேன் - Please Wait!" என்று சொல்லிய கணினி 60 செகண்டுகளூக்குமேல் எதையோ குடைந்து  படித்து (Read) விட்டு
மீண்டும் பேச ஆம்பித்தது.

"இரண்டு இறுதியான யோசனைகள் உள்ளன - ஒன்று வலைப்பூவில் எழுதுவதை நிங்கள் நிறுத்தி விடலாம்"

"அது சாத்தியமில்லை - என் எழுத்துத் தாகத்தைக் கட்டுப்படுத்த
முடியாது - இரண்டாவது யோசனை என்ன?"

"அப்படியென்றால் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் . இவ்வளவு
பேர்கள் வந்து போகவேண்டுமென்று  ஆசைப் படாதீர்கள் - எல்லாப் பிரச்சினைகளுக்கும் - துன்பங்களுக்கும் ஆசைதான் காரணமென்று
புத்தர் சொல்லிவைத்துவிட்டுப் போயிருக்கிறார் தெரியமா?"

"தெரியும்!"

"அப்புறம் என்ன? அதையே தீர்வாகக் கொள்ளுங்கள் - வரட்டுமா?"

"Okay My Dear Friend - Thank You Very Much !" என்று சொல்லிவிட்டு அந்தக்
குட்டிப் பிசாசை (என்  அகராதியில் இது செல்லமான வார்த்தை ) 
Shut Down செய்தேன்.

யோசித்துப் பார்த்தால் குட்டிப் பிசாசு சொன்ன கடைசித் தீர்வுதான்
எனக்குச் சரி என்று படுகிறது. நீங்கள் என்ன  நினைக்கிறீர்கள்?
-----------------------------------------------------------------------------------------
2
தலைப்பை நன்றாகப் போடு
தானாக வருவார்கள்

-------------------------------
எதை நீ படித்தாய்
அவர்கள் படிப்பதற்கு?

எதற்கு நீ மறுமொழிந்தாய்
அவர்கள் உனக்கு மறுமொழிவதற்கு?

எதற்கு நீ ஒழுங்காகப் பின்னூட்டம் இட்டாய்
அவர்கள் உனக்கு பின்னூட்டம் இடுவதற்கு

எத்தனைபேர் பதிவுகளைக் காணவேண்டி ஆசைப்பட்டாயோ
அத்தனை சீக்கிரம் உன் பதிவுகள் பரணுக்குப் போவிடும்

உன்னுடைய எந்தப் பதிவு முதல் பக்கத்தில் இருக்கிறதோ
அது சில மணி நேரத்தில் அடுத்த பக்கத்திற்குபோய்விடும்
அதற்கு அடுத்த நாள் பரணுக்குள் போய் விடும்
பிறகு பூமிக்குள் புதையுண்டு போய்விடும்

பதிவை மட்டும் இடு
படிக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்காதே

நாளென்றுக்கு நூறு பதிவுகள் என்றால்
நானே அவதரித்தாலும் படிக்க முடியமா?

தலைப்பை மட்டும் நன்றாகப் போடு
தானாக வருவார்கள்

பதிவை மட்டும் இடு
படிக்கப்படுமென்று எதிர்பார்க்காதே

இதுவே வலைப்பூக்களின் (Blogs) நியதியும்
வலைஞர்களின் குணாம்சமும் ஆகும்!

சம்பவாமி யுகே யுகே!

---------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்



வாழ்க வளமுடன்!

24.5.11

Astrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை?

-----------------------------------------------------------------------------------------
Astrology இளைஞனுக்கு என்ன(டா) தேவை?

இதற்கு முன் பகுதியைப் படித்திராதவர்கள், அதைப் படித்துவிட்டு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்
-------------------------------------------------------------------
ஒரு இளைஞனுக்கு - நன்றாகக் கவனிக்கவும் - ஒரு இளைஞனுக்கு என்ன தேவை?

1. தோற்றம் Appearance
2. குணம் Character - எதையும் யதார்த்தமாக எடுத்துக்கொள்ளும் குணம் மற்றும் முக்கியமாக எவரையும் அனுசரித்துப்போகும் குணம்.
3. அறிவு Skill (ங்கள் மொழியில் சொன்னால் புத்திசாலித்தனம்)
4. கல்வி Education (இன்றைய நிலைக்குக் குறைந்தது ஒரு இளங்கலை பட்டப் படிப்பு. அல்லது குறைந்த பட்சம் ப்ளஸ் 2 தேர்ச்சி பெற்ற நிலை)
5. திறமை Talent
6. அதிர்ஷ்டம் Luck

மேற்கூறிய ஆறும் தேவை.

இந்த ஆறும் அனைவரிடமும் இருக்குமா?

இருக்காது.

இந்திய ஜனத்தொகையான 121 கோடியில் 25% சதவிகிதம் இளைஞர்கள் (இளைஞிகள்) என்று ஒரு புள்ளி விவரம் சொல்கிறது.

அவர்களில் ஒரு பத்து சதவிகிதம் பேருக்குத்தான் மேற்கூறியவற்றில்
ஒரு நான்காவது இருக்கும். அந்த ஆறும் இருந்தால் அவன் infossys
நாராயண மூர்த்தியாக அல்லது Reliance முகேஷ் அம்பானி போல
இருப்பான். என்னுடைய ப்ளாக்கிற்கு வந்து பதிவுகளை எல்லாம்
படிக்கும் வாய்ப்பு அவனுக்குக் கிடைக்காது!:-))))

கல்விக்கு 4ஆம் வீடு, அறிவிற்கு ஐந்தாம் வீடு.

கல்வி வேறு ; அறிவு வேறு.

கடந்த அறுபதாண்டு தமிழக ஆட்சியாளர்களை எடுத்துக்கொண்டால், 1. ராஜாஜி, 2. காமராஜர், 3. பக்தவட்சலம், 4. அறிஞர் அண்ணாதுரை, 5. கலைஞர் கருணாநிதி. 6. புரட்சித் தலைவர். எம்.ஜி.ராமச்சந்திரன், 7. செல்வி ஜெயலலிதா ஆகியோரில் நான்கு பேர்கள் பள்ளி இறுதி வகுப்பைத் தாண்டாதவர்கள்.

பள்ளி இறுதிவகுப்பைத் தாண்டாதவர்கள் எப்படி அத்தனை ஐ.ஏ.எஸ், ஐ.எஃப்.எஸ், ஐ.பி.எஸ் படித்தவர்களைக் கட்டி மேய்த்து ஆட்சி நடத்தினார்கள் அல்லது நடத்துகிறார்கள்? தங்கள் புத்திசாலித்தனத்தால்தான் அதாவது அறிவால்தான் அவர்களுக்கு அது சாத்தியப்பட்டது. அல்லது படுகிறது. ஆகவே கல்வி வேறு அறிவு வேறு அதை மனதில் வையுங்கள்
------------------------------------------------------------------------------
யார் சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று சுட்டிக் காட்டக்கூடிய ஊர்கள் எவை?

1. திருப்பூர்
2. சிவகாசி
3. நாமக்கல்

Knitted Garments, Designer Garments, Woven Fabrics, Crackers, Match Boxes, Multi  colour Printing, Poultry Industry, Lorry operators, Lorry body building industry  என்று விதம் விதமாக சொந்தத் தொழில் செய்வோர்கள் - தொழில் செய்து, பலருக்கும் வேலை கொடுப்போர்கள் நிறைந்த ஊர் தமிழகத்தில், அந்த மூன்று ஊர்கள்தான்.

அங்கே தொழில் செய்வோர்கள் அல்லது அந்தத் தொழில்களில்
வேலையில் இருப்பவர்களில் 80 சதவிகிதம் பேர்கள் பள்ளி இறுதி
வகுப்பு வரை மட்டுமே படித்தவர்களாக இருப்பார்கள். பலருக்கு
அது கூட இருக்காது. பல  படித்தவர்கள் அவர்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள் Export document writers, 
auditors, Bank officers  என்று உதாரணங்களைச் சொல்லலாம்

30 வயதில் ஒரு பொறியாளர் (Engineer) சம்பாதிப்பதை விட, அதிகமாகச் சம்பாதிக்கும் Car & Two wheeler  Mechanics குகளை என்னால் காட்ட முடியும். இவர்களுக்கு இருக்கும் தொழில் சுதந்திரம் அவர்களுக்கு இருக்காது. Car & Two wheeler  Mechanics களில் பலர் பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டவர்கள் அதை மனதில் வையுங்கள்.

முறைப்படி தமிழ் படித்து, B.A, M.A, M.Phil, P.Hd என்று பட்டங்களைப் பெற்ற தமிழறிஞர்கள் நூற்றுக் கணக்கில் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கு, நறுக்’ கென்று 4 வெண்பாக்களை எழுதச் சொன்னால் எழுத வராது. சூழ்நிலையைச் சொல்லி, அழுத்தமாக ஒரு கதை எழுதிக் கொடுங்கள் என்று சொன்னால் எழுத வராது.

பாரதியார், பட்டுக்கோட்டையார், கண்ணதாசன், வாலி போன்ற பிரபல கவிஞர்கள் எல்லாம் முறைப்படி தமிழ் படித்துப் பட்டம் வாங்காதாவர்கள். அதை மனதில் வையுங்கள். அவர்கள் எழுதிய பாடல்களை வைத்துத்தான் இவர்கள் நோண்டி நொங்கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

படிப்பைக் குறை சொல்வதற்காக இதை நான் எழுதவில்லை.

கல்வி அவசியம். அதி முக்கியம்

அதிலும் அடிப்படைக் கல்வி அவசியம் தேவை. ஒரு வங்கிச் சலானை நிறப்புவதற்காவது தெரிய வேண்டாமா? ரயில் நிலையத்தில் பயணச் சீட்டு முன்பதிவுப் படிவத்தை நிறப்புவதற்காவது தெரிய வேண்டாமா? மான் விழியாள், தோகை மயிலாள் எழுதிய காதல் கடிதத்தை சுயமாகப் படிப்பதற்காவது தெரிய வேண்டாமா? ஆகவே கல்வி அவசியம்.

 “எண்என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்என்ப வாழும் உயிர்க்கு”


என்று கல்வியின் அவசியத்தை அழுத்தமாகச் சொன்னான் பொய்யாமொழிப் புலவன்.

"Letters and numbers are the two eyes of man" என்று அதற்கு நறுக்கென்று விளக்கம் எழுதினார் ஜி.யு. போப் என்னும் கிறிஸ்துவப் பாதிரியார்

ஆகவே கல்வி அவசியம்.

உயர் கல்வி அப்படியல்ல. எல்லோருமே பொறியாளர் ஆகவேண்டுமென்றால் முடியுமா? அல்லது எல்லோருமே மருத்துவர் அல்லது கணக்காய்வாளாரக வேண்டுமென்றால் முடியுமா?

முடியாது.

காலன் அதை அனுமதிக்க மாட்டான். உங்கள் மொழியில் சொன்னால் இயற்கை அதை அனுமதிக்காது.  Balancing Theory என்னும் சீரமைப்புக் கணக்கில் அது வரும். ஆடு, மாடு, மான் போன்றவற்றிற்குக் கொம்பைக் கொடுத்த இறைவன், குதிரைக்கு மட்டும் கொம்பைக் கொடுக்கவில்லை அல்லவா? அது எந்தக் கணக்கில் வருகிறதோ அந்தக் கணக்குத்தான் அந்த Balancing Theory. இப்போது அது புரியாது அல்லது புலப்படாது. ஆடி அடங்கும்போது புலப்படும்.

அனைவருமே ஒயிட் காலர் வேலைக்கும், குளிரூட்டப்பெற்ற அலுவலகத்திற்கும் ஆசைப் பட்டால் எப்படி?

பிறகு விவசாயம் செய்வது யார்? சென்னை டு கன்னியாகுமரி பஸ்ஸை இயக்குவது - அதாவது ஓட்டுவது யார்? விளக்குக் கம்பத்தில் ஏறி உங்கள் வீட்டு மின் இணைப்பைச் சரி செய்வது யார்? பாணி பூரி, பேல் பூரி வண்டிகளை வைத்து மாலை நேரங்களில் உங்கள் பசியைத் தீர்ப்பது யார்? டாஸ்மாக் கவுண்டர்களில் உங்களோடு மல்லுக் கட்டுவது யார்? எல்லாவற்றிற்கும் ஆட்கள் வேண்டாமா?

ஆகவே வேலை வாய்ப்புக்கள் அல்லது தொழில் வாய்ப்புக்களில் சீரான அமைப்புக் கிடையாது. ஜாதகத்திற்கு ஜாதகம் அது வேற்படும். உங்கள் ஜாதகத்தில் என்ன programme செய்யப்பட்டுள்ளதோ அந்த வேலையை மட்டும்தான் நீங்கள் செய்ய முடியும். விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது. செய்ய முயன்றால் வெற்றி கிடைக்காது. தோல்வியில்தான் முடியும்.

நீங்கள் மாட்டை வைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டுமென்றால் மாட்டைவைத்துத்தான் பிழைப்பு நடத்த வேண்டும். ஆனால் மாட்டின் எண்ணிக்கையைக் காலன் நிர்ணயிப்பது இல்லை. அது 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் முயற்சி அங்கேதான் திருவினை செய்யும்.

இல்லை வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கவியரசர் கண்ணதாசன், 5,000ற்கும் மேற்பட்ட திரைப் படப் பாடல்களையும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனிப்பட்ட பாடல்களையும், ஏராளமான மனவளக் கட்டுரைகளையும், நூல்களையும் எப்படி எழுதியிருப்பார்? அதை வெறும் அதிர்ஷ்டக் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியுமா?, விதி என்று கூறிவிட முடியுமா? கவிஞனானது மட்டும்தான் தலை எழுத்து. மற்ற அனைத்து மேன்மைகளும் அவருடைய முயற்சிகள்.

ஆகவே உங்களுக்கு விதிக்கப்பெற்ற தொழிலில் மேன்மையடைவது உங்கள் கையில் உள்ளது.

எந்த வேலை கிடைத்தாலும் செய்யுங்கள்.

செய்யும் தொழிலே தெய்வம் என்று நினையுங்கள்
----------------------------------------------------------------------------
படித்து முடித்தவுடன் வேலை கிடைக்க வேண்டும். அதுதான் முதல் வாய்ப்பு.

சிலபேர் சொல்லலாம் நல்ல வேலை என்பதுதான் முதல் வாய்ப்பு. வேலையில் நல்ல வேலை சுமாரான வேலை என்று எல்லாம் கிடையாது.

வேலை இன்றி வீட்டிற்குச் சுமையாக இருக்கக்கூடாது அவ்வளவுதான்.

முன்பு போல இப்போது இல்லை. பத்து ஆண்டுகளுக்குள் எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது. பல நிறுவனங்கள், கல்லூரி வளாகங்களுக்கே வந்து, நேர் காணல் செய்து பலருக்கும் இறுதியாண்டு படிப்பின்போதே வேலைக்கான நியமன உத்தரவைக் கொடுத்துவிடுகின்றன. கலைக் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும், பல நிறுவனங்கள் வேலை கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

எல்லோருமே படித்து ஒயிட் காலர் வேலைகளுக்குப் போகும் எண்ணத்துடன் இருப்பதால், அடி மட்ட வேலைகளுக்கு இப்போது ஆட்கள் பற்றாக்குறை.

சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களில், கட்டடப் பணி செய்து கொண்டிருக்கும் நிறுவனங்கள், மேஸ்திரி, கொத்தனார், சித்தாள் வேலைகளுக்கு பீஹாரில் இருந்து ஏராளமானவர்களைக் கூட்டிக் கொண்டு வந்து பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

கோவை அன்னபூர்ணா தொடர் உணவகத்தில் அடிமட்ட வேலைகளுக்கு நேபாளத்தில் இருந்து இளைஞர்களைப் பிடித்துக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

படித்தவர்களுக்கு வேலை என்பது ஒரு பிரச்சினைக்குரிய விஷயம் என்பது இப்போது இல்லை.

கிடைத்த வேலை பிடித்துள்ளதா? அவர்கள் தருகின்ற சம்பளம் போதுமானதா? என்பதெல்லாம் வேறு பிரச்சினை. அதைப் பிறகு அலசுவோம். அதற்கெல்லாம் ஜாதகத்தில் வேறு கட்டங்கள்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு முக்கியமான குறிப்பைத் தருகிறேன். ஜாதகத்தில் பத்தாம் வீட்டில் 30 அல்லது அதற்கு மேற்பட்ட பரல்கள் இருந்தால், மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். அதில் மேன்மையும் உண்டாகும்.

25 அல்லது அதற்குக் கீழான பரல்கள் இருந்தால், உங்கள் தகுதிக்குத் தகுந்த அல்லது உங்களுக்குப் பிடித்த வேலை கிடைக்காது. கிடைக்கின்ற வேலையைப் பிடித்துக்கொள்ள வேண்டும்

அதாவது நாம் விரும்புகின்ற பெண் கிடைக்கவில்லை என்றால், நம்மை விரும்புகின்ற பெண்னைக் காதலிக்க வேண்டியதுதான்!:-)))

என்ன புரிந்ததா? விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------------------------------------------------
(அலசல் தொடரும்)

அன்புடன்
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

23.5.11

Astrology வாய்ப்பு எப்போதடா வரும்?

----------------------------------------------------------------------------------
Astrology வாய்ப்பு எப்போதடா வரும்?

எல்லோருடைய மனதிலும் உள்ள கேள்வி இதுதான்: “வாய்ப்பு எப்போது(டா) வரும்?”

முதலில் வாய்ப்பு என்றால் என்னவென்று பார்ப்போம்.

‘வாய்ப்பு’ என்பது ஒன்றைச் செய்வதற்கு அல்லது பெறுவதற்கு உரிய அனுகூல நிலை. சுருக்கமாகச் சொன்னால் சந்தர்ப்பம்  அல்லது opportunity, opening. சாத்தியம் possibility, Chance, scope என்று நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

ஆட்சி மாற்றம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளது. அரியணை அம்மையாருக்குக் கிடைத்துள்ளது. ஐந்து ஆண்டுகள் பொறுமையாகக் காத்திருந்தார். கிடைத்தது. அதுவாகக் கிடைத்ததா? இல்லை. மக்கள் கொடுத்தார்கள். மக்களும் நினைத்தபோது கொடுத்தார்களா? இல்லை. கொடுக்கக்கூடிய சூழ்நிலையை, முந்தைய ஆட்சியாளர்களும் சமீபத்தில் நடந்த தேர்தலும் மக்களுக்கு உருவாக்கிக் கொடுத்தது. அதனால் அது சாத்தியப்பட்டது.

வாரியார் சுவாமிகள் சொல்லுவார், “உருவத்தால் உயர்ந்த மரங்களே ஆயினும் பருவத்தால் அன்றிப் பழுக்காது” அதாவது பழத்தைக் கொடுக்காது.

ஒரு குழந்தைக்கு நல்ல தாய் கிடைப்பது முதல் வாய்ப்பு. நல்ல தகப்பன் கிடைப்பது இரண்டாவது வாய்ப்பு. வளரும்போது வறுமையில்லாத வாழ்க்கை அமைவது மூன்றாவது வாய்ப்பு. படிப்பு அதற்கடுத்த வாய்ப்பு. உயர் கல்வி அதற்கு அடுத்துவரும் வாய்ப்பு. நல்ல நிறுவனத்தில் வேலை, கை நிறையச் சம்பளம், உரிய வயதில் திருமணம், திருமணமான அடுத்த ஆண்டே கொஞ்சி மகிழ ஒரு குழந்தை, நோயில்லாத வாழ்க்கை, நீண்ட ஆயுள் என்று வாய்ப்பின் வலிமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சரி, எல்லோருக்கும் இந்த வாய்ப்புக்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின் றனவா?அல்லது கிடைத்துக் கொண்டிருக்கின்றனவா?

இல்லை. ஒரு பத்து சதவிகிதம் பேருக்கு அப்படி அமையலாம். மற்றவர்களை, விதி எதாவது ஒன்றில் அல்லாட வைத்துவிடும்.

சிலர் ‘உப்புமா’ கம்பெனிகளில் வேலை பார்ப்பார்கள். அவர்களுடைய திறமை முழுவதும் அங்கீகாரமில்லாமல் வீணாகிக் கொண்டிருக்கும். சிலருக்கு உரிய வயதில் திருமணமாகாது. ஏதாவது ஒரு காரணத்தால் திருமணம் தள்ளிக் கொண்டே போகும், அழகும், இளமையும், கனவுகளும் வீணாகிக் கொண்டிருக்கும்.

சிலருக்குத் திருமணமாகி ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இருக்காது. குழந்தை இல்லாமல்  உருகிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் உருகாமல் இருந்தாலும், அவர்களுக்குத் தெரிந்தவர்கள், “என்ன விசேசம் ஒன்றும் இல்லையா?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அவர்களை உருக்கி விடுவார்கள். குழந்தையில்லாத நிலைமையைவிட இவர்களுடைய உபத்திரவம் கொடுமையானதாக இருக்கும்.

கணினியில் operating system சீராக  programme செய்யப்பெற்று உருவாக்கப் பட்டிருப்பதைப் போல, மனித வாழ்க்கைக்கும் கடவுள் ஒரு குறைந்த பட்ச operating system த்தை உருவாக்கிக் கொடுத்திருக்கலாம். அதாவது திருமணம், குழந்தைச் செல்வம் ஆகிய இரண்டிற்கும் ஒரு common programme ஐ அவர் உருவாக்கி மனிதர்களைப் படைத்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் விட்டுவிட்டார்.

அவ்வாறு செய்யப்பட்டிருந்தால், மனிதன் விடுவானா?

அடுத்ததற்கு அடிப்போடுவான். வருமானத்திற்கும் ஒரு common 
programme வேண்டும் என்று கேட்பான். இன்னொருவன் நோயில்லாத வாழ்க்கைக்கு  ஒரு common programme வேண்டும் என்று கேட்பான்.
வேறு ஒருவன் சிறிய வயது, மத்திய வயது, மரணங்களைத் தவிர்த்து அனைவருக்கும்  நீண்ட ஆயுள் கிடைக்க ஒரு common programme
வேண்டும் என்று கேட்பான்.

ஆசைக்கு அளவும் இல்லை. எல்லையும் இல்லை.

நீங்கள் நினைப்பவை எல்லாம் programme செய்யப்பெற்றுத்தான் படைக்கப்பெற்றிருக்கிறீர்கள். உங்களுடைய முன் வினைகள் காரணமாக அவற்றில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தன்னிச்சையாக அவைகள் programme செய்யப்படுகின்றன. கடவுளுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை. அதை, அல்லது அவற்றை உங்களுக்குடைய தலை எழுத்து அல்லது தலைவிதி என்று சொல்லலாம். சுருக்கமாகச் சொன்னால், வாங்கி வந்த வரம் என்று சொல்லலாம்

எல்லாம் சீராக, ஒரு ஒழுங்கு முறையில் இருந்தால் என்ன ஆகும்? வாழ்க்கையில் சுவை இருக்காது. அப்படி ஒழுங்கு முறையுடன் இருந்தால் பிரச்சினைகள் இருக்காது. மனிதன் தெய்வத்தையே நினைக்க மாட்டான்! கையில் ஜாதகத்தைத் தூக்க மாட்டான்!

ஆர்யபட்டர், வராஹி மிஹிரர், ஜெய்மானி, பராசுரர், அகத்தியர், புலிப்பாணி போன்ற முனிவர்கள் தங்களுடைய அதீத Inspiration சக்தியினால் காலத்தின் மேன்மை பற்றிய செய்திகளையும், கிரகங்களைப் பற்றிய உண்மை களையும், அவைகளின் தாக்கத்தையும், ஜோதிடத்தையும் வடிவமைத்துக் கொடுத்துவிட்டுப் போனார்கள்

Inspiration என்பது A supernatural divine influence on the prophets, apostles, or sacred writers, by which they were qualified to communicate moral or religious truth with authority; a supernatural influence which qualifies men to receive and communicate divine truth; also, the truth communicated. என்று வைத்துக் கொள்ளுங்கள்

ஜோதிடத்தில் 12 வீடுகள். ஒரு வீட்டிற்கு 3 பாக்கியங்கள். மொத்தம்
36 பாக்கியங்கள். அந்த 36ல் சரி பாதிதான் கிடைக்கும். சரிபாதி கிடைத்திருக்காது. உதாரணத்திற்கு வெல்த் இருந்தால் ஹெல்த்
இருக்காது. அப்படி.

எந்தெந்தப்  பாக்கியங்கள் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது என்பதைக்
கண்டு பிடித்துச் சொல்வதுதான் ஜோதிடம். எல்லோரும் சமமாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறோம். ஒன்று இருந்தால் ஒன்று இருக்காது. பூர்வ புண்னியத்தை (முன்வினைப் பயன்களை) வைத்து அவை வேற்படும்

இல்லை என்றால் அஷ்டகவர்க்கப்படி யாராக இருந்தாலும் கிடைக்கும் மதிப்பெண்கள் எப்படி ஒன்றாக இருக்கும்? உங்களுக்கும் 337தான். அம்மையாருக்கும் 337தான். கனிக்கும் 337தான். பசிக்கும் (ப.சி) 337தான். ராசாவுக்கும் 337தான் சைனிக்கும் 337தான். வடிவேலுக்கும் 337தான் கேப்டனுக்கும் 337தான். அதை நினைவில் வையுங்கள்.

சரி சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன். வாழ்க்கையில் அடுத்த நிலைக்கான வாய்ப்பு எப்போது கிடைக்கும்? அதை எப்படித் தெரிந்து கொள்வது?

அதை விரிவாக அலசுவோம்

நாளைவரை பொறுத்திருங்கள்

(தொடரும்)

அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்!